Related Posts with Thumbnails
யாரையாவது பன்னி என்று அல்லது நாயே என்று திட்டுயிருக்கிறீர்களா? அல்லது திட்டு வாங்கியிருக்கிறீர்களா? அப்படி திட்டு வாங்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் திட்டியவர்கள் வயது போனவனே என்று அழைப்பதற்குப்பதில் அவ்வாறு அழைத்திருக்கிறார்கள். என்னடா இவன் கதைக்கிறான் என்று விளங்கவில்லையா? அதாவது நான் கூறவந்த விடயம் என்னவென்றால் நான் இப்போதெல்லாம் விலங்குகளின் பெயரைச்சொல்லி என்னை யாராவது திட்டினால் அவர்களுக்கு நன்றி சொல்கின்றேன். என்னைப்பார்த்து அவர்கள் ரொம்ப நல்லவன் என்று சொல்லும்போது நானெப்படி பேசாமலிருப்பது. இந்த பதிவை எழுதத்தூண்டியது நான் அண்மையில் படித்த வைரமுத்துவின் கவிதைதான்.

மனிதனாக இருக்கும் நாங்கள் குரங்கு வந்தால் வெடி போடுகின்றோம், நாய் வந்தால் "அடிக்..." என்று கலைக்கின்றோம், மாட்டை"போ.. போ.." என விரட்டுகின்றோம். அட இதிலென்ன ஆச்சரியம் இதுதான் இன்று முதியவர்களின் நிலையும் பெற்றவள் நம் அம்மா, நாம் வளர்ந்ததும் அவள் சும்மா என்றுதானே இருக்கின்றது நம் இளைய நாகரிக சமுதாயம். அந்தக்கவிதையில் வைரமுத்து "மனிதா!! நீ விலங்கை வணங்கு குறிப்பாக குரங்கை கும்பிடு" என்று கூறியிருப்பார், அட நமது மூதாதையர்தானே குரங்கு.
இந்தப்படத்தைப்பாருங்கள் கடைசியில் கம்பீரமாக நடக்கும் நீங்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள் என்று. ஆனால் இப்போது உங்களுக்கும், உங்களுக்கும்(குரங்கு) கண்ணுக்குத்தெரிந்த வித்தியாசம் அந்த வால் மட்டும்தான்.
அந்தக்குரங்கு எவரிடமும் கையேந்தி நிற்பதில்லை, யாருக்கும் அடிமை வாழ்க்கை வாழ்வதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை, எவரையும் நீ அந்த மதம், நான் இந்த மதம் என்று கூறி கழித்து வைப்பதில்லை, ஏன் மக்களை ஏமாற்றி போலிச்சாமி, போலி பொருட்கள், கலப்படம் என்று எதுவும் செய்வதில்லை. ஏன் தனது சகாவைப்பார்த்து பொறாமைகூடப்பட்டதில்லை. அதற்கு பசித்தால் உண்ணத்தெரியும், நித்திரை செய்யும், மனிதரைப்போல் பணம் சேர்த்து வைத்துவிட்டு நித்திரை கொள்ளமுடியாமல் தவிக்காது. அதற்கு பதவி, பட்டம், பணம் என்றால் என்ன என்றே தெரியாது. 

இன்று சுதந்திரம் சுதந்திரம் என்றும், நாங்கள் வல்லரசு என்றும் சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் உண்டா? இந்த விலங்குகளுக்கு உண்டு, ஆனால் வானமே அவற்றுக்கு கூரை, மண் அல்லது புல் தரையே அவற்றின் நிலம், இலைகுழைகளே அவற்றின் உணவு. 

அடுத்து ZOO என்ற பெயரில்அவற்றை அடைத்து வைத்திருக்கிறீர்கள், சுதந்திரம் சுதந்திரம் என்று வாய்கிழியப்பேசிவிட்டு அவற்றுக்கு மட்டும் ஏன் சுதந்திரம் இல்லை. ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வசிப்பது யாரின் இடம் தெரியுமா? அந்த விலங்கு மகான்களின் இடம்தான். அவர்களின் இடத்தை அழித்துத்தானே வீடு அமைத்தீர்கள்? அவற்றின் இடத்தில் புகுந்து கொண்டு நீங்கள் அவர்களையே துரத்துகிறீர்கள், அடிமைப்படுத்துகிறீர்கள்.அந்த விலங்குகள் உங்கள் பெயரில் வழக்குப்போட்டால் என்ன செய்வீர்கள்? (உங்களைவிட அவர்களுக்குத்தான் உரிமை அதிகம்) எனவே விலங்குகளை பற்றிய கீழ்த்தரமான எண்ணத்தைக்கைவிடுங்கள், உங்களுக்கு இருக்க இடம் கொடுத்த தெய்வங்கள் அவை

இனியாவது சிந்திதத்து செயற்படுங்கள் எருமை என்று யாரையும் திட்டும் முன் யோசியுங்கள் அவன் நான்தான் உன் மூதாதையன் உன் வீட்டைக்காலி பண்ணு என்று சொல்லிவிடப்போகிறான்.

வைரமுத்துவின் விலங்கு கவிதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    //யாரையாவது பன்னி என்று அல்லது நாயே என்று திட்டுயிருக்கிறீர்களா? //

    இல்லையே

    //அல்லது திட்டு வாங்கியிருக்கிறீர்களா? //

    ஹி ஹி

    //அப்படி திட்டு வாங்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை//

    அப்பாடா

    //ஏனெனில் திட்டியவர்கள் வயது போனவனே என்று அழைப்பதற்குப்பதில் அவ்வாறு அழைத்திருக்கிறார்கள்//

    திரும்பவும் இடிக்குதே

    //என்னைப்பார்த்து அவர்கள் ரொம்ப நல்லவன் என்று சொல்லும்போது //

    அப்ப வடிவேலு மாதிரி நிறைய அடிவாங்குவீங்களோ?

    /இந்த பதிவை எழுதத்தூண்டியது நான் அண்மையில் படித்த வைரமுத்துவின் கவிதைதான்.
    //

    அட ஆச்சரியக்குறி

    //வைரமுத்துவின் விலங்கு கவிதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.//

    நல்ல கவிதை, பகிர்வுக்கு நன்றி பவா

  1. Abi Says:

    wonderful post. You have written the same Ideas of mine. It's Great. A million doller post.

  1. நல்லாயிருக்கு மனுசனே!

  1. யாரையாவது பன்னி என்று அல்லது நாயே என்று திட்டுயிருக்கிறீர்களா? அல்லது திட்டு வாங்கியிருக்கிறீர்களா? அப்படி திட்டு வாங்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை,

    அப்பிடியா நீங்க கவலைப்பட மாட்டீங்கன்னா நான் திட்டவா...
    போடா...ஆ.ஆ..ஆ...

    ஹி..ஹி... அருமையான பதிவு பவன்...

  1. :-) அருமை....

  1. :)) இவர் லொள்ளு தாங்கல சாமி:))

  1. டேய் பன்னி....
    பதிவு நல்லா இருக்கடா குரங்கே....

    நல்ல பகிர்வு நாயே.... ;)

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    //அப்ப வடிவேலு மாதிரி நிறைய அடிவாங்குவீங்களோ?//

    அண்ணே ஊருக்குள்ள போய்க்கேட்டுப்பாருங்க நாங்க (நாங்க means நீங்களும்தான்)அடி வாங்காத ஏரியாவே கிடையாது...:p

    //அட ஆச்சரியக்குறி//

    அதுசரி பவனை மாதிரி பெரிய கவிஞரெல்லாம் வைரமுத்துவின் கவிதைய வாசிக்கிறது ஆச்சரியமாத்தான் இருக்கும்...:p

    //நல்ல கவிதை, பகிர்வுக்கு நன்றி பவா//

    நன்றி சுபா அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    @Abi,

    //wonderful post. You have written the same Ideas of mine. It's Great. A million doller post.//

    ohh thanks Abi, thanks for the comments...;)

    ******

    யோ அண்ணா,

    //நல்லாயிருக்கு மனுசனே!//

    நன்றி மனிதனே..:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    பாலா அண்ணா,

    //அப்பிடியா நீங்க கவலைப்பட மாட்டீங்கன்னா நான் திட்டவா...
    போடா...ஆ.ஆ..ஆ...//

    "ஆ" அப்ப நீங்க என்னை பசு எண்டுறீங்க.. நன்றி.. நன்றி..ஹீஹீ

    //ஹி..ஹி... அருமையான பதிவு பவன்...//

    நன்றி பாலா அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்....;)

    ******

    சிங்கக்குட்டி,

    நன்றி சிங்கமே வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    வானம்பாடிகள்

    //:)) இவர் லொள்ளு தாங்கல சாமி:))//

    ஹீஹீ நன்றி வானம்பாடிகள் சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ******

    கோபி

    //டேய் பன்னி....
    பதிவு நல்லா இருக்கடா குரங்கே..//

    //நல்ல பகிர்வு நாயே.... ;)//

    பன்னியா? குரங்கா? நாயா? ஏதாவது ஒன்றைச்சொல்லவும்...:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:p..;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்