தாகம் தான் எடுத்ததோ!
மழை நாடி மலர்ந்ததோ!
இருளுக்குப் பயந்ததோ!
ஒளிதேடி மலர்ந்ததோ!
எவர் கூறி இணைந்ததோ
யார் கூறி பிரிந்ததோ!
உண்மைகள் தெரியாமல்
உலகத்தை உணராமல்
விரித்த வலையினிலே
விரும்பியே விழுந்ததோ!
தேன் திருடன் தன் உடலைக் கண்டதுண்டமாய் வெட்டி வீழ்த்தி
தேனினைக் கவர்ந்து செல்ல
ஏமாந்து போய்ப் பாவம்
கதறித்தான் அழுததோ!
கவலையில் கிடந்ததோ!
தேன் வேட்டைக்காரன் தன்
கால் பட்டு ஒட்டியதோர்
தன் சக ஏமாளியின்
மகரந்தத் துகள் கொண்டு
அதிகமாய் தேன் கொண்டு
மறுபடி மலருமோ! - தேன்
திகட்டிட கொடுக்குமோ!
தேன் திருடனைப் பிடிக்குமோ!
அல்லது...
தான் மறுபடி இறக்குமோ!
-Bavananthan (27/01/2018)