புது மேகம் தாண்டி நாம்
புதிய கரை காண்போமே
வலி கொண்ட வாழ்க்கை தாங்கி
விடியல் தேடிச் செல்வோமே!
கனம் கொண்ட நெஞ்சம் தான்
கண்ணீரில் கரைகிறதே அதன்
கவலைகள் தேங்கிட வீழ்ந்திட
விதையாய் மோதி வெல்வோமே!
வாழ்க்கை ஒற்றைக் கோடு
பல தடைகள் முட்டி மோது!
விழி ஈரம் காயும் போது
நீ காற்றின் மீது ஏறு!
உன் வேட்கை தாங்கி ஓடு
வரும் நரிகள் வேட்டையாடு!
பழி தீர்க்கும் நேரம் பார்த்து
நீ பாதை நீங்கி தாக்கு!
வானோடு மழை நீங்கிப் போகலாம்
வேரோடு மரம் மாண்டு போகலாம்
நெஞ்சோடு கதை மோதி வீழலாம்
போராடு தினம் மீண்டு மோதலாம்
-Bavananthan
Music: Vidushan
Lyrics: Bavananthan