Related Posts with Thumbnails

சற்றுமுன்னர் இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருமே எதிர்பார்க்காதவகையில் ஒரு அறிமுகக் காட்சியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த வீடியோவைப் பார்த்தபோது அதில் நம் ஹீரோ ஆக்ரோசமாக தோன்றும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. 

அறிமுகத்தைத் தொடர்ந்துவரும் அதிரடி சண்டைக்காட்சியில் தன்னைச் சுற்றிவளைத்த வில்லன் குறூப்பை ஹீரோ வேட்டையாடும் காட்சி லாஜிக் மீறலின்றி தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. 

இதோ உங்களுக்காக அந்த வீடியோ…


இந்தக் காட்சிக்குத்தான் வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெத்த புள்ள என்ற பாட்டைப் போடுவார்களோ?


COPY, PASTE


எனது நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் மரத்தைத் தாண்டி வருவாயா ஆகிய பதிவுகளை மூஞ்சிப்புத்தகம் (ஒரு நண்பர் மட்டும் தனது குழுமத்தில் போட அனுமதி கேட்டார்), தங்களது சொந்த வலைப்பூ என அனைத்து இடங்களிலும் COPY PASTE செய்து பிரபலப்படுத்தியமைக்கு நன்றி. நானும் நல்லா எழுதிறேன் என்று முதன்முறையாக எனக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.:p


ஆரம்பத்தில் இந்தவிடயம் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும் நாம எழுதிறதும் நல்லா இருக்குப்போல அதுதானே COPY PASTE பதிவு போடுறாங்க என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே COPY அடிக்கிறாங்க தலைப்பைக்கூட மாத்தாம அதுவும் GOOGLEல போய் தலைப்பைக் கொடுத்து SEARCH பண்ணினா COPY அடிக்கப்பட்ட பதிவுகள் 4 பக்கத்துக்கு வருகிறது. இன்றிலிருந்து நானும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன் நானும் ரைளடிதான்.
******************************************************
இனிய சந்திப்பு
மொக்கை போட்டவர்கள்..:p


அன்று மாலை காலிமுகத்திடலில் பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. கடந்த பல சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியாமலிருந்த எனது ஏக்கம் பூர்த்தியாக்கப்பட்டது. இனியதொரு சந்திப்பாக அமைந்தது. ப்ப்பிளீஸ் புல்லட் அண்ணா, சின்ன வந்தி கோபி, ஓஃப்லைன் அச்சு அண்ணா, ஏழுமணி சதீஸ் அண்ணா, காமப்பதிவர் வரோ, மது அண்ணா, ஆதிரை அண்ணா, லோசன் அண்ணா பெட்டி சுபா அண்ணா ஆகியோருடன் மொக்கை போட்டபடி இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.
******************************************************


ஏன் திருத்தமுடியாது
அம்மா பகவான் அழுக்கைக்கழுவும் பேஸ்புக் குழுமத்துக்கு நன்றி
அண்மையில் மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு நண்பர் அம்மா பகவானின் படத்தை ஒரு நடிகை போல EDIT பண்ணிப்போட்டிருந்தார். அதற்குள் நாங்கள் எதிர்பார்த்தபடி ஒரு அம்மா பகவான் பக்தர் வந்து சராயச்சாமிக்கு சார்பாக கருத்துரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் இல்லை என்று பிடிவாதமாக இருந்தார்.

இவர் ஒருவரை நாம் ஒரு நான்கைந்து பேர் சேர்ந்தே திருத்தமுடியவில்லை பிறகு எப்படி லட்சக்கணக்கான பக்தர்களைத்திருத்துவது. இதுதவிர இதுபற்றி கலந்துரையாடிய போது நண்பரொருவர் கூறியது கல்கி பகவானும் பக்கா பிசினஸ்மான்தானாம் இப்படி அனைவருக்கும் பாதம் அசையுது, பகவான் தெரியுது என்று மட்டும் பித்தலாட்டம் செய்யாமல் அவர்களுக்கு அம்மா பகவான் டீ-சேட் கான்ராக்ட், வித்யா மாலை கொன்ராக்ட் என கொடுத்திருப்பிறாராம். பிறகு அவர்கள் எப்படி பகவானை எதிர்ப்பார்கள்.

இதிலிருந்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரிகிறது. மனிதாபிமானம் செத்துவிட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனது தொழிலுக்காக கஞ்சா சாமியாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருக்கும்வரை போதைக்கு அடிமையாகி சீரழியும் மக்களை காப்பாற்றமுடியாது.

******************************************************
பக்தி,சிறுவன், அங்கப்பிரதட்சணம்

திருகோணமலையில் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக இக்காலகட்டத்தில் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள், ஆனால் பக்தி என்ற பெயரில் 6 வயதுச் சிறுவன் ஒருவனை அழஅழ போட்டு உருட்டிக்கொண்டிருந்தார் ஒரு தாயார். என்னதான் பக்தியாக இருந்தாலும் ஒரு 6 வயதுச்சிறுவனைப் அங்கப்பிரதட்சணம் செய்விப்பது. தப்புத்தானே??
உங்கள் குழந்தைக்காக என்றால் நீங்களே செய்யலாம்தானே எதற்கு அந்தக் குழந்தையைப் போட்டு வதைக்கிறீர்கள்.

******************************************************
சுறா 

நேற்று சுறா பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாடல்களை வைத்துப்பார்த்தால் வழக்கம்போல விஜயின் அதிரடி பஞ்ச்சுடன்தான் இந்தப்படமும் வெளிவரும் போல இருக்கிறது, விண்ணைத்தாண்டி வருவாயா இசையைக் கேட்டுப்பழகிவிட்டு இப்போது இந்தப்பாடலைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் சுறா பாடல் வரிகள், அதுவும் அந்தக்காதல் பாட்டு சான்சே இல்ல..:p, அதுகாதல்ப்பாட்டுத்தான் என்று கண்டுபிடிக்க பாட்டைநான்குதரம் கேட்க வேண்டுமென்றால் பாருங்களேன்

******************************************************

நடுச்சாமம் 6 மணி (அதிகாலை 9 மணிக்கு எழும்பும் எங்களுக்கு அது நடுச்சாமம் தானே..:p) நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


அந்தநேரம் அந்திநேரம் கண்பார்த்து........(ஹிஹி நம்ம ரிங்டோன்)


ஹலோ என்னடா சொல்லு....(தூக்கக்கலக்கத்துடன்)
டேய் வெளிக்கிட்டியா?
என்ன? எங்க??
டேய் காளிகோயில் தேர் வரலயா நீ?... ஓ... இதோ வெளிக்கிட்டன் நீ டக்கெண்டு வா..
சரிசரி... 6.30க்கு வருவன் ரெடியா இரு..
ok bye..


ஒருவாறு 7.15க்கு வந்தவன் என்னையும் ஏற்றிக்கொண்டு காளிகோயிலுக்குச்சென்றான். அங்கே கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு கோயிலுக்குப் போகலாம் என்று கோயில் வீதியில் காலடி வைத்தால் கமகம என ஒரு வாசனை, என்னடான்னு பார்த்தா யாரோ மப்பும் மந்தாரமுமாக அடித்த வெயிலும் பட்டுத்தெறித்துக் கண்ணைக்குத்தும் அளவுக்கு மினுமினுப்பான சாறியுடன் ஒரு அம்மணி வந்து இறங்குகிறார். 
ஹச்சும்....
வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த சென்ட் வாசனை முக்கில் ஏறி, தாங்கமுடியாமல் தும்மிய நண்பனின் தும்மல் கலைத்தது.


அங்கு ஒரு சிங்கள இளைஞர் தண்ணீர்ப்பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழகூரில் பூத்தவளே.... என்று கர்ணகொடூரமாகப்பாடி பெண்களுக்கு நக்கலடித்துக்கொண்டிருந்தார்


அங்கே மூன்று தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இன்னும் சாமி வெளியே வரவில்லை. சரி இருக்கிற கூட்டத்தைப்பார்த்தால் இப்போதைக்கு உள்ளே போக முடியாது. அன்னதான மண்டபப்பக்கம் சற்று காத்தோட்டமாக இருக்கவே அங்கே போய் உட்கார்ந்தோம்.(தேர் சுத்தின பிறகுதான் சாப்பாடு போடுவாங்க...:p)
என்னா கூட்டம் என்னா கூட்டம்...அவ்வ்


அங்கு இளம்வயதினர், என்போன்ற பச்சிளம்பாலகர்கள், நடுத்தர வயதினர் என பலரும் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. நகைக்கடை விளம்பரத்தில் வரும் சினேகா கூடப்போட்டிராத அளவுக்கு நகைகள் போட்டிருந்தனர், பளபளக்கும் ஆடைகள், அட இதுகூடப்பரவாயில்லை அவர்கள் யாரென்றுகூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கலர்கலராகப் பல பெளடர்களை கொண்டு முகத்தை மூன்று இஞ்ச் பெரிதாக்கக்காட்டியிருந்தனர்.(ஹீஹீ மேக்கப்புங்க..) மனதுக்குள் பாடிக்கொண்டேன் ஒரு கூடை சன்லைட் ஒருகூடை மூன்லைட்..


அன்று முதன்முறையாக கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்.ஆனால் கடவுளுக்கு என்மீது கோபமோ, அல்லது மழைபெய்தால் மேக்கப் போட்டவர்கள் எல்லாரும் மழையில் நனைந்து கலைந்த மேக்கப்புடன் கோயிலுக்குள் ஓடிவந்துவிட்டால் கடவுள் தன்நிலை என்னவாகும் என்று பயந்தாரோ தெரியல கடைசிவரை மழைபெய்யவில்லை.


ஆனால் சூரியன் மழைபெய்து மேக்கப் கலையும் கொடுமையை சற்று தாமதமாக வேறுவிதமாகச் செய்தாலும் கச்சிதமாக செய்தார். நான் கோயிலுக்கு போகும் போது பார்த்த யாரையும் திரும்பி வரும்போது காணவில்லை, அடித்த வெயிலில் மூன்று இஞ்ச் மெலிந்த முகத்துடன் பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர் ஹீஹீ மேக்கப் கலைஞ்சிடிச்சுப்பா.


திரும்பிவரும்போது அதே சிங்கள இளைஞர் பாடிக்கொண்டிருந்தார் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
 சர்வதேச கிறிக்கறிறிலிருந்து மொஹமட்யூசுப் ஓய்வுபெற்றது அனைவரும் அறிந்ததே, அவருக்கு PCB தண்டனை வழங்கியதும் அணியிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. அவர் சர்வதேச கிறிக்கற்றில் தனது வாழ்க்கைப்பாதையில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன பாடல் பாடியிருப்பார் என்று சின்னக்கற்பனை...


சர்வதேச கிறிக்கற்றில் காலடி வைத்த போது
முதலாவது சதமடித்தபோது


அணியில் நிரந்தர இடம்பிடித்தபோது


ICLலில் விளையாடப்போனபோது


ICLல்லிலிருந்து விலகி மீண்டும் அணிக்குள் வந்தபோது


அணித்தலைவரானபோது


தனது தலைமையில் வெற்றிகள் பெற்றபோது


அவுஸ்திரேலிய தொடரில் மோசமாகத் தோற்றபோது


தன் மீது தடை விதிக்கப்பட்டதை கேள்விப்பட்டபோது


ஓய்வை அறிவித்தபோது


இன்று


நாளை

தற்போது IPL போட்டிகளில் புதிதாக இரு அணிகள் வாங்ப்பட்டது அனைவரும் அறிந்ததே இந்த வகையில் எமது பதிவர்களும் அந்த அணிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர். அடுத்தமுறை ஏலத்தில் இவர்களும் பங்குபற்றுவர்.


எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். அதிரடி ஆட்டக்காரர் எப்படிப்பட்ட பந்துகளையும் பயமின்றி அடித்து ஆடுபவர். பின்னூட்ட பந்துகளை அநாயாசமாக வெளுத்து வாங்குபவர். அண்மையில் ருவிட்டருடன் ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கிய இவர் குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து இப்போது பல ஆனந்தா சுவாமிகளால் பதிவணிக்குள் திரும்பியிருக்கிறார். ஆனால் தான் போர்மை இழந்து தவிப்பதாக அறிவித்திருந்த போதிலும், தற்போது சில நாட்களுக்கு முன்னர் இவர் ஆடிய ஆட்டம் இவர் போர்முக்குத்திரும்பியதைக்குறிப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆனால் கிறிக்கற்டையும் தொடர்வேன் என்றும் அண்மையில் இவர் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இவரும் எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்டத் துடுப்பாட்ட வீரர். பல செஞ்சரிகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர். ஆனால் தற்போது விஷேட பயிற்சிக்காக லண்டனுக்கு சென்றிருக்கிறார். இவரை அனைவரும் ஹாட் பிளேயர் என அழைப்பார்கள். தனது வேகமான துடுப்பாட்டத்துக்கு காரணம் சூப் அருந்துவதுதான் என்று அடிக்கடி கூறும் இவருக்கு சிவப்பு சட்டை என்றால் ராசியாம். தனது இரகசியங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் உளறி அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்.


இவரின் துடுப்பாட்டத்தைக்கண்ட STB(Srilanks Tamil Blogger) தற்போது வளர்ந்துவரும் அதிரடிதுடுப்பாட்ட வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. அணிக்கு ஒரு பக்கம் விக்கட்டுகள் சாய்கின்றபோதிலும் தனது அதிரடி மூலம் அணியை தூக்கி நீறுத்தக்கூடியவர். ஆனால் இவர் அடிக்கடி டயர்டாகுவது இவரின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என இவரின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.


புளொக்கர்ஸ் அணித்தலைவர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். மஹேல ஜயவர்தன போன்ற கிளாஸ் பிளேயர்.(:p) அணி விக்கட் சரிவுகளை எதிர்கொள்ளும் போது தனிமனிதனாக நின்று போராடுபவர். இவரை அனைவரும் மினி ஸ்கோர் போர்ட் என்று அழைப்பார்கள் காரணம் போட்டி நடைபெறும் போது ரன்னில் ஏதாவது குழறுபடி நடந்தால் உடனடியாக முதலாவது பந்திலிருந்து விஜயகாந் பாணியில் ஸ்கோர்களை அள்ளிவீசுவார்.


கடவுள் பக்தி அதிகம் நிரம்பிய இவர், எமது அணியின் மிடில் ஓடர் பாட்ஸ்மன். ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வதற்கு முன்னர் சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து நேரத்தை வீணாக்குவதால் STB அதிகாரிகளால் தண்டிக்கப்படுபவர், வீரர்களுக்கு ஐஸ் கிறீம் வாங்கிக்கொடுப்பவர். கிறிக்கற் தனது பார்ட்டைம் வேலைதான் டாக்டராகுவதே (போட்டுத்தள்ளுவதே)எனது குறிக்கோள் என்று தற்போது படிக்கச் சென்றுவிட்டார்.


இவர் மலையகம் தந்த மைந்தன்(:p). இவர் தூரத்தில் இருப்பதால் அணிக் கூட்டங்களுக்கு வரும் போது நூடில்சையே இவரது பிரதான உணவாகக் கொண்டுள்ளார். அதனால் இவரை அனைவரும் யோவ் நூடுல்ஸ் என்று செல்லமாக அழைப்பார்கள். இவர் தான் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள மங்குஸ் BATஐ வைத்து எதிரணியை வெட்டிசாய்க்க தயாராக உள்ளதாக அறிக்கை விட்டுள்ளார்.


இவர் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் தனது பந்து எறி போலொ என்று அடிக்கடி சந்தேகப்படுபவர். அதனாலே UMPIREடம் ப்ப்பிளீஸ்... நோபால் பிடிச்சுறாதீங்க நோபால் பிடிச்சுறாதீங்க என்று அடம் பிடிப்பவர். பெண்கள் என்றால் இவருக்கு ஆகாது, எனவே IPL போன்ற T20 போட்டிகளில் ஆண்களுக்கு சொந்தமான அணியில் மட்டுமே ஆடுவேன் என்று சபதமெடுத்துள்ளவரை புல்லட் வேகப்பந்து வீச்சாளர் என்று அழைப்பர்.


இவர் எமது அணியின் சிறந்த களத்தடுப்பாளர். மைதானத்தின் மின்கம்பத்துக்கு அருகில் செல்லும் பந்தைக்கூட பறந்து பறந்து பிடிக்கக்கூடியவர். அண்மையில் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்தைப்பிடிக்கப்பாய்ந்தவர் கடலுக்குள் விழுந்து சுறாவைப்பிடித்து வந்ததாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை 7மணிக்குமேல் இவரால் விளையாட முடியாது(கண்ணில ஒரு பிரச்சனையும் இல்ல) ஏழுமணியானாலே என்னமோ போல ஆகிடுறார்.


இவர் தனக்கென ஒரு சொந்த பாணியை உருவாக்கி விளையாடி வருபவர். பஸ்சில் போகும் போது பார்க்கும் பலவிடயங்களைக்கூறி சிரிக்கவைத்து எதிரணி வீரர்களை ஆட்டமிழக்க வைப்பதில் வல்லவர். இதுதவிர கண்ணைக்குத்தும் கலர் ஆடைகளை அணிவதன் மூலம் எதிரணி வீரர்கள் பந்தை எதிர்கொள்வதைக் கட்டுப்படுத்தும் உத்தியைக்கண்டுபிடித்திருப்பவர். இதனால் STB இவரை மதுயிசம் என்ற புத்தகத்தை எழுதுமாறு கேட்டுக்கொண்டமைக்கிணங்க தற்போது புத்தகத்தை எழுதிவருவதால் போட்டிகளில் இவரைக்காண முடியவில்லை.


இவரும் அணியின் மூத்த வீரர், இவர் எப்படி அடிக்கப்போகிறார் என்று யாராலும் ஊகிக்க முடியாத நேரத்தில் ஒன்றுமே புரியாமல் அடித்தாடக்கூடியவர். தற்போது மதுயிசம் மது போட்டிளில் விளையாடாத காரணத்தால் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ஆதிரையஜசம் எனப்பெயரிட்டுள்ளார். கடந்தமுறை இலகுவாக ரன் அவுட்டான இவர் தான் போட்டிருந்த டீ-சேட்டில் யானைப்படம் போடப்பட்டிருந்ததால் ஓடமுடியாமல் போனது என ஆதிரையிசப்பதிலை வெளியிட்டுள்ளார்.


இவர் எமது அணியில் சிறந்த ஆல்ரவுண்டர். ஆனால் தனது பெட்டியில் சரக்கு வைத்திருந்து டுபாய் விமான நிலையத்தில் பிடிபட்டவர். ஆனால் அவர் அதைப்பாவிக்கவில்லை எனத் தெரிந்தது மீண்டும் அணிக்குள் இடம்பெற்றிருக்கிறார். இவர் பந்து வீசும் போது எதிரணி சிக்ஸ் அடித்தாலோ, சிங்கிள் எடுத்தாலோ I JUST... CAN'T BELIEVE THIS என்று கூறுபவர். அதற்கான காரணம் அவர் விண்ணைத்தாண்டி வருவாயோ போபியாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்று மருத்துவ அறிக்கைகள் முலம் தெரியவந்திருக்கிறது. இந்த போபியாவின் விளைவாக தற்போது பீமர் பந்துகளை வீசிவிட்டு மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று BATSMANனிடம் கேட்கிறாராம்.


இறுதியாக இவர்......... இவரைப்பற்றி நானே சொன்னா நல்லாவா இருக்கும்..ஹிஹி



IPL கலாட்டா

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:17 PM | 12 பின்னூட்டங்கள்







தான்தான் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் கல்கிபகவான் சாரயச்சாமியாரின் அம்பலங்கள் நேற்று சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ளன. இது பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டோம்.

ஏற்கனவே தெலுங்கு டிவி ஒன்றில் இவரது மன்னிக்கவும் இவனது அட்டூளியங்கள் வெளியானது, ஆனால் தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் அவை வெளியாகவில்லை. ஆனால் தற்போது சன்டிவியில் இதுபற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது பராட்டத்தக்கது. எனவே இதுபற்றி மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் மின்னஞ்சலில் வந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறேன். "மனம் திடமாக இருந்தால் மட்டும் பாருங்கள்."







உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??..

இதுதான் வாழைப்பழம்
அவ்ளோ அழகு
yellow 
இனிப்பானது 
EATABLE
அவகிட்ட ஒரு SMELL இருக்கு...... 
AND SWEET TOO.. 
அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். 
ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை 

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை 
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?
வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…

அது வளரணும்… அதுவா பழுக்கணும்…
மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்…

அதான் ட்ரூ வாழைப்பழம்…

அது எனக்கு கிடைச்சுது! 

SO அட்சுவலா நான் வாழைப்பழத்தை சூஸ் பண்ணினன்,

என்ன கடிக்க வச்சது இந்தப்பழம்

இதான் நான்

என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட ட்ரைபண்ணிக்கிட்டிருந்த பண்ணிக்கிட்டிருந்த நேரம்,

பழம்தான் சாப்பாடே எனக்கு.. 
MY AMBITION IS TO BE A BANANA EATER  
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம்
தொங்கிட்டிருந்த டைம் 
அப்பதான் அந்தப்பழத்தை முதன்முதல்ல பாத்தேன். 


பழத்தைப்பறிக்க எவ்வளவோ ட்ரை பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு,
ஆனா கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் சொன்னாரு


உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த ட்ரை பண்ணினன்..
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் மங்கி சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா, நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..



உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது, வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி(கொறங்கு) ஒரு நிமிசம் யோசிச்சன் நான் அவன தின்ன வரலயே வாழைப்பழத்தைதானே, பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு கடிக்கரோட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல கடிக்கிங் சாம்பியன், JUMPING,RUNNINGகோட சேத்து கடிக்கிங்கையும் கத்துகிட்டேன்.

ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல, வேற அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANAவ மறக்க முடியல, 1st BANANAங்க எப்பிடி மறக்க முடியும்.

BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே...

V

V

V

V

V

V

V

V

V

V

V


V

V

V





கவிதை கவிதை

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:49 AM | 19 பின்னூட்டங்கள்


நீயா? நானா? 
போட்டி போட்டு
தினமும் வெல்கிறது 
செக்கன் கம்பி



செத்தவீட்டிலும்
சேர்ந்து அழுகிறது
டிவி சீரியல்



தினந்தினம் தேய்வது 
நிலா மட்டுமல்ல நானும்தான்
தினக்கலண்டர்



பூமிக்கு வரும்வரை
நானும் சுத்தமானவள்தான்
மழைத்துளி




பிழைக்கு 
துணைபோகிறது
பரீட்சையில் பேனா




தினமும் எனக்குமுன் 
சுறுசுறுப்பாய் எழுகிறது
சூரியன்




என்னைப்பார் 
யோகம்வரும்
கழுதை வீட்டில் 
மனிதனின் படம்




வானம் அழுகிறது
மனிதா 
இன்றாவது குளித்துவிடு




நீ சிரித்தால் நான் 
சிரிப்பேன்
நீ முறைத்தால் நான்
முறைப்பேன்
புரியாத மொழி




தினமும் எனக்கேன்
பலத்த அடி
குமுறுகிறது
ENTER விசை

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்