வானெங்கும் ஒளி அலையில் வண்ணங்கள் ஏனோ!
அழகிய ஒரு வண்ணக்கனவு என்னுள்ளே தானோ!
ஆற்றோரம் கீற்றொன்று என்மீது மோதும்
குழலூடு பரவும் இசை புது ரத்தம் பாய்ச்சும்
குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்
அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!
மலரே உன்னைக் காணாதிருந்தால்
விழி காணும் நிறமெல்லாம் காணாமல் போகும்
அன்போடு நீ என்னை அணைக்காதிருந்தால்
அழகான கனவெல்லாம் கலைந்தேதான் போகும்
நான் எந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே
எவரெனும் அறியாமல் வரைகின்ற என் காதல்
இசையாகி மொழியாகி கவிதைகளாகி
ஒவ்வொரு வண்ணங்களாகும்!
உடைகின்ற போதே உள் நெஞ்சின் உள்ளே
மழை போல வந்தென்னில் வழிகின்ற ஊற்றே!
தளர்கின்ற போதே துணையாக நின்றே
தாய் போல எனை என்றும் தாங்கும் மலரே!
அழகே!
குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்
அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!
-Bavananthan
Music (Re-Composed) - Arunprasath
Tamil Lyrics: Bavananthan