மு.கு - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல முழுக்க முழுக்க மொக்கையாகவே எழுதப்பட்டது
ஊர்வலம் முடிந்து விழா மண்டபத்தை அனைவரும் அடைகிறார்கள். செம்மொழி மாநாட்டுக்கு பதிவுத்தாத்தா, கலைஞர் லோசன் , கனத்ததம்பி, உல்டா அரசு, வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா, பேராசிரியர் சதீஸ் உட்பட பலர் கூடியிருக்கின்றனர்.
பேராசிரியர் சதீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்ற ஆரம்பிக்கிறார்.
இங்கு கூடியிருக்கும் எமது தமிழ்ச்சிங்கம், கண்ணாடித்தாத்தா, கிறிக்கற் கில்லி, எதையும் தாங்கும் இதயம் தமிழ் தாத்தா லோசன் ஐயா அவர்களையும் மற்றைய கவைஞர்களையும் வருக வருக வருக என வரவேற்கிறோம்.
எமது செம்மொழி மாநாடானது அழிந்துகொண்டிருக்கும் தமிழை உரம் போட்டு வளர்த்து 150 வருடமானாலும் எங்கள் கலைஞர் ஐயா போல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறது. முதலாவதாக பேராசிரியர் கனத்த தம்பி கன்கொன் அவர்கள் உரையாற்றுவார்
என்று கூறி சதீஸ் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட 7 நிமிடங்களைப் பூர்த்தி செய்து அமர்கிறார்.
முதல்வர் தமிழ் மொழியில் பதிவெழுதலில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ்ப்பதிவுலகு பிரபஞ்சத்தின் தொன்மையான உலகம், மத, சமயச் சார்பற்ற ஒரே உலகு. இவ்வுலகில் தமிழ் மட்டும் பெருமைவாய்ந்தது. உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
இலக்கிய, கலாச்சார மரபுகளையும், இன்றைய கணினியுக சொல்லாட்சியையும் வளர்க்கும் ஒரே உலகம் பதிவுலகம் மட்டுமே. இத்தமிழ் பதிவுலகின் பெருமை உலக மக்களுக்குத்தெரிய வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் பதிவுலகின் பெருமைகளை அறியும் வகையில் உலக மொழிகளில் தமிழின் மாண்பை விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் எழுதப்பட வேண்டும். அப்புத்தகம் எல்ல உலகமொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும். இப்பணியை முதல்வர் ஐயா செய்ய வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலகப் பொது நோக்கினைக் கொண்ட ஒரே உலகு தமிழ்ப்பதிவுலகு. ஆதலால், இம்மொழியின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல முதல்வர் ஐயா உடனடி நடவடிக்கை செய்ய வேண்டும்.
அடுத்து வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா அவர்கள் தனது உரையை ஆற்ற வருகிறார்.
என்று ஆரம்பித்து தனது பேருரையை முடித்துக்கொண்டு இருக்கையில் அமர்கிறார்.
என் இனிய டமில் மக்களே, MY SWEET TAMIL PEOPLE.எம் பதிவர்களின் உள்ளங்களிலெல்லாம் கிறிக்கறி காக்கும் தலைவனாக, புள்ளிவிபரத்தலைவனாக,மொழி காக்கும் தலைவனாக,தாய்க்கும் மேலாக, தந்தைக்கும் மேலாக சகோதரனுக்கும் மேலாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்த்தாத்தாடாக்டர் கலைஞர் ஐயா அவர்களே..உங்களுக்கு உறுதுணையாக பக்கபலமாக தூணாக நின்று கொண்டிருக்கும் புன்னகை மன்னன் மொக்கை கன்கொன் அவர்களே,பதிவுலக பெருமக்களே,அனானிகளே வாழவைக்கும் தெய்வங்களாகிய பின்னூட்டவாதிகளே..
அடுத்து முதுநிதி மது அவர்கள் தனது உரையை ஆற்றுவதற்காக மேடைக்கு வருகிறார்
பதிவுக்கு blog என்று பேர், இந்த பதிவு இன்பப் பதிவெங்கள் கலைஞருக்கு நேர், என்பதற்கேற்ப இன்றும் இனிய ஒரு உலகாக பதிவுலகம் விளங்குகிறது. உலகம் முழுவதும் 6கோடி ப்ளாக்குகள் இருந்தாலும் வாரத்துக்கு 3000 ப்ளாக்குகள் செயலிழந்து வருகின்றன. ஆனால் எம் உயிருக்கு நிகரான நமது பதிவுலகு வளர்ச்சியடைந்தே செல்கிறது. அதற்கு யார் காரணம்? நமது கலைஞர் ஐயாதான். கிறிக்கற் பதிவோ புட்பால் பதிவோ தொழிநுட்பப்பதிவோ ஏன் மொக்கைப்பதிவோ அனைத்துத்துறைகளிலும் இவர் தலைசிறந்து விளங்குகிறார்.
மைக்கிரோசெப்ட், ஆப்பிள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் பணிபுரிந்தார்கள் ஆனால் அவர்கள்கூட பதிவெழுதவில்லை. எங்கள் ஐயா எழுதினார். ஆனால் எங்கள் தமிழை வளர்க்க அனைவரும் பதிவெழுத வேண்டும். அனானி வருவார் என்று பயப்படக்கூடாது.
அடுத்து கவியரங்கம் ஆரம்பமாகிறது. கவிஞர் தாடிவைக்காத வாலி ஆதிரை, கவிதாயினி கீர்த்தி, மற்றும் உல்டாஅரசு பப்புமுத்து ஆகியோர் கவியரங்கத்தை வழங்க தயாராகிறார்கள்.
முதலில் உல்டாஅரசு பப்புமுத்து அவர்கள் தனது செம்மொழிக் கவியை வழங்க மேடைக்கு வருகிறார்.
மேற்குத்தொடர்ச்சி மலை மேகங்களே நீங்கள் அங்கிருந்தே பின்னூட்டுங்கள்இங்கே பின்னூட்ட பதிவர்கள் இருக்கிறார்கள்ஏ அனானியே உன் பின்னுட்டங்களைக் காணோம் என்று எங்கேயும் முறையிடாதேஎல்லாம் இப்பதிவுக்குக் கீழே கூடிவிட்டனஇது கனவா நனவாஇது பந்தலுக்குள் பதிவுலகமாஒரே பதிவின் கீழ் பதிவுலகாஓடோடி வந்த உள்ளூர்ப் பதிவர்களேஉலகப்பதிவர்களேசிறு சிறு மொக்கைகள் கொண்டு உங்கள் திருமனதை சிரிக்கவைக்கிறேன்நகைச்சுவைக்கவிகொண்டு உங்கள் திரைமுன்னே நகைக்க வைத்தேன்நாமெல்லாம் ஒருவர்க்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்குயாருக்குஎங்கே வோட்டுப்பட்டை கிளிக்கப்படுவதை திரட்டிகள் கேட்கட்டும்கலைஞருக்காக ஒருமுறை வோட்டுப்போடுங்கள்விளையாட்டு விமர்சகரேஎங்கள் மூத்த பதிவரேசெம்மொழித்தங்கமே(:P)எங்கள் செல்லச்சிங்கமே..
அடுத்து கவிதாயினி கீர்த்தி அவர்கள் தனது கவிதையை வழங்குகிறார்
மேசை விளிம்பில்வைக்கப்பட்டிருக்கும்மெல்லிய கண்ணாடிக்குவளையைப் போல உள்ளதுபதிவுவிபரீதமான ஒரு தருணத்தைஎதிர்நோக்கிக் காத்திருக்கிறதுதிரவம்எங்கு போனாலும் நகர்ந்துதமிழில் உட்கார்ந்து கொள்கிறதுபதிவுஅவசரத்தில் எறியப்படும்வாழ்த்துக்களையும்நழுவி விழும் பின்னூட்டங்களையும்அறியப்படாதுபோகும் அனானிகளையும்எதிர்நோக்கிதமிழ் வளர்த்தலை வேண்டியபடிஆனால்என்றுமேகாலியாய் இருப்பதில்லை மேசைஉன் உமிழ் நீருக்குள் வாழும் கலைஞரின் தமிழ் நீர் போல
இறுதியாக கவியரங்கத்தை தலைமைவகித்த தாடியில்லாக்கவி ஆதிரை அவர்களின் தனது கவியை இறுதியாக வழங்க வருகிறார்.
பதிவுக்கு மொக்கையென்று பேர்!கடைசியாக சுபாங்கன் அவர்கள் நன்றியுரை வழங்க மேடைக்கு வருகிறார்.
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள பதிவர்கட்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!
இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...
பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பதிவுலகில் பாடிய-
பதிவர்களில் ஒருவன்!
யாத்த பதிவுகள்யாவையும்...
பந்துபந்தாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
ப்ரட் லீயின் பந்துப்பரிமாற்றமே!
ஆனால் ஒன்று;
இவனால்...
பதிவு அவுட்டாகவில்லை;
பவுன்சர் போகவில்லை;
இவனால்...
பந்து சுவிங் ஆகிறது;
சுவிங் சிக்ஸ் ஆகிறது; -அப்
பந்தின்-
சுவிங்கில்-
கண்மூடித்தனமாக
முகக்காப்பு முட்டி விழுகிறது!
இவன்விளையாட்டை விமர்சிக்க-
யாழில் உதித்த
புதுப்புயல்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல விளையபட்டென்றுகூவப் பிறந்த பூங்குயில்!
தகவலுக்கு நன்றி