ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாடசாலை அல்லது கல்லூரி என்ற காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரமயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.
அதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டு மறந்துபோகும் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.
ஏன் திடீரென்று இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது? இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா? என்று இரவு நேரத்தில் நித்திரை வருவதற்கு முன் சில மணித்துளிகளில் பின்னோக்கி கட்டம் கட்டடமாக யோசித்துப் பார்த்ததில் சில விடயங்கள் தோன்றியது.
நட்பு வட்டம்
முதல் கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை பாடசாலையில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்து ஒரு 10 வயதுவரை பார்த்தோம்என்றால் பெற்றோரின் கட்டுப்பாடுதான் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக நண்பன் தொடக்கம் ஆசிரியர் வரை யாரும் ஏதாவது கேட்டால் அம்மாவிடம் கேட்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லும் மனநிலையில்தான் இருப்போம். ஆக இந்த வயதில் நிறைய பாடசாலையில் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அம்மா அப்பாதான் Best Friends என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள்.
இரண்டாவது கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கை 13வது வயதிலிருந்து அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு படிகளும் மிகவும் முக்கியமானவை. நட்பு என்ற ஒரு விடயத்துக்கு மிகவும் அதிஉயர் முக்கியத்துவம் வழங்கும் ஒரு காலகட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை வீட்டில் பெற்றோரிடம் Request பண்ணிக்கொண்டிருந்தவர்கள் Informationஐ மட்டும் வழங்கிவிட்டுப் போகும் மனநிலைக்கு மாறிவிடுகிறோம்.
நண்பனுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் பயமின்றிச் செய்யும் ஒரு மனநிலையும் யாராவது உங்கள் மீது வீண்பழிகளைச் சுமத்தினால் உடனே எதிர்த்துப் பேசும் அல்லது மறுக்கும் மனநிலையும் அதையும் மீறி உங்கள் மீது தண்டனைகளைப் வழங்கும் போது அதை எதிர்க்கும் மனநிலையும் அதிகமாக இருப்பது இக்காலகட்டத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு தன்மானமுள்ள மனிதனாக நாம் உணரும் காலகட்டமாக இதைச் சொல்லலாம். காதலில் தொடங்கி பலவிடயங்களை முதல்முதலாக முயற்சித்துப் பார்க்கும் ஒரு கட்டம் இது. இக்காலகட்டத்தில் இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் போல் இருக்கும் ஒற்றுமையைப் போல் வேறெங்கும் இருப்பதில்லை.
தன்மானமுள்ள தைரியமுள்ள ஒற்றுமையான ஒரு மனநிலையுடன் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிப் போகிறார்கள். இந்த இடத்தில்தான் ஒற்றுமையில் பிளவு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மனிதன் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி அல்லது வேலை என்ற பிரிவுக்குள் செல்கிறான்.
உயர்அதிகாரி கட்டளையிடுகிறார், இவர் அது சரியாக வராது என்கிறான், இல்லை அப்படிச் செய் என்கிறார், அவர் அப்படியே செய்கிறார், அது பிழையாகிறது. அதே அதிகாரியால் இவன் தண்டிக்கப்படுகிறார். ஆனால் எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும் என்ற பயத்தால் எதிர்த்துப் பேசவில்லை. இங்கு தன்மானம் என்பது கருவறுக்கப்பட்டு சகிப்புத்தன்னை பூட்டப்படுகிறது. ஆனால் அந்த சகிப்புத்தன்மை கோபமாக மாறி திருமணமானவர்களுக்கு மனைவியிடமும் ஆகாதவர்களுக்கு பேஸ்புக்கிடமும் வந்து வெடிக்கிறது.
இப்போது நான் சகிப்புத்தன்மைக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த இடத்திலிருந்து யோசித்துப் பார்த்த போது எனக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை விட தெரிந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தன்மானக் கட்டத்திலிருந்து சகிப்புத்தன்மைக்குப் பயணிக்க இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப்பார்க்கவும் செய்கிறது.
இதைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறோமா? என்ற விடையில்லாக் கேள்வியுடன் நண்பர்கள், எதிரிகள், தெரிந்தவர்கள் என்று என்னைச்சுற்றிப் இருக்கும் பாரிய வட்டத்தில் மையத்தை அண்மித்திருப்பவர்களை இழக்கத் தயாராக இல்லை. இருந்தபோதிலும் வாழ்க்கை இன்னும் எப்படியெல்லாம் மாற்றும் என்ற மாற்றங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் எத்தனை கட்டங்கள் வந்து முதிர்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் மாற்றினாலும் கடைசியில் பெற்றதும் இழந்ததும் மனிதர்களைத்தான்..
அதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டு மறந்துபோகும் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.
ஏன் திடீரென்று இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது? இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா? என்று இரவு நேரத்தில் நித்திரை வருவதற்கு முன் சில மணித்துளிகளில் பின்னோக்கி கட்டம் கட்டடமாக யோசித்துப் பார்த்ததில் சில விடயங்கள் தோன்றியது.
நட்பு வட்டம்
முதல் கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை பாடசாலையில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்து ஒரு 10 வயதுவரை பார்த்தோம்என்றால் பெற்றோரின் கட்டுப்பாடுதான் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக நண்பன் தொடக்கம் ஆசிரியர் வரை யாரும் ஏதாவது கேட்டால் அம்மாவிடம் கேட்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லும் மனநிலையில்தான் இருப்போம். ஆக இந்த வயதில் நிறைய பாடசாலையில் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அம்மா அப்பாதான் Best Friends என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள்.
இரண்டாவது கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கை 13வது வயதிலிருந்து அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு படிகளும் மிகவும் முக்கியமானவை. நட்பு என்ற ஒரு விடயத்துக்கு மிகவும் அதிஉயர் முக்கியத்துவம் வழங்கும் ஒரு காலகட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை வீட்டில் பெற்றோரிடம் Request பண்ணிக்கொண்டிருந்தவர்கள் Informationஐ மட்டும் வழங்கிவிட்டுப் போகும் மனநிலைக்கு மாறிவிடுகிறோம்.
நண்பனுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் பயமின்றிச் செய்யும் ஒரு மனநிலையும் யாராவது உங்கள் மீது வீண்பழிகளைச் சுமத்தினால் உடனே எதிர்த்துப் பேசும் அல்லது மறுக்கும் மனநிலையும் அதையும் மீறி உங்கள் மீது தண்டனைகளைப் வழங்கும் போது அதை எதிர்க்கும் மனநிலையும் அதிகமாக இருப்பது இக்காலகட்டத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு தன்மானமுள்ள மனிதனாக நாம் உணரும் காலகட்டமாக இதைச் சொல்லலாம். காதலில் தொடங்கி பலவிடயங்களை முதல்முதலாக முயற்சித்துப் பார்க்கும் ஒரு கட்டம் இது. இக்காலகட்டத்தில் இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் போல் இருக்கும் ஒற்றுமையைப் போல் வேறெங்கும் இருப்பதில்லை.
தன்மானமுள்ள தைரியமுள்ள ஒற்றுமையான ஒரு மனநிலையுடன் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிப் போகிறார்கள். இந்த இடத்தில்தான் ஒற்றுமையில் பிளவு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மனிதன் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி அல்லது வேலை என்ற பிரிவுக்குள் செல்கிறான்.
உயர்அதிகாரி கட்டளையிடுகிறார், இவர் அது சரியாக வராது என்கிறான், இல்லை அப்படிச் செய் என்கிறார், அவர் அப்படியே செய்கிறார், அது பிழையாகிறது. அதே அதிகாரியால் இவன் தண்டிக்கப்படுகிறார். ஆனால் எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும் என்ற பயத்தால் எதிர்த்துப் பேசவில்லை. இங்கு தன்மானம் என்பது கருவறுக்கப்பட்டு சகிப்புத்தன்னை பூட்டப்படுகிறது. ஆனால் அந்த சகிப்புத்தன்மை கோபமாக மாறி திருமணமானவர்களுக்கு மனைவியிடமும் ஆகாதவர்களுக்கு பேஸ்புக்கிடமும் வந்து வெடிக்கிறது.
இப்போது நான் சகிப்புத்தன்மைக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த இடத்திலிருந்து யோசித்துப் பார்த்த போது எனக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை விட தெரிந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தன்மானக் கட்டத்திலிருந்து சகிப்புத்தன்மைக்குப் பயணிக்க இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப்பார்க்கவும் செய்கிறது.
இதைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறோமா? என்ற விடையில்லாக் கேள்வியுடன் நண்பர்கள், எதிரிகள், தெரிந்தவர்கள் என்று என்னைச்சுற்றிப் இருக்கும் பாரிய வட்டத்தில் மையத்தை அண்மித்திருப்பவர்களை இழக்கத் தயாராக இல்லை. இருந்தபோதிலும் வாழ்க்கை இன்னும் எப்படியெல்லாம் மாற்றும் என்ற மாற்றங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் எத்தனை கட்டங்கள் வந்து முதிர்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் மாற்றினாலும் கடைசியில் பெற்றதும் இழந்ததும் மனிதர்களைத்தான்..