Related Posts with Thumbnails
 
எம் இனிய உலகமே
இன்றுடன் முடிந்தது உன்
மாயன் கலண்டர் கலகமே!

கவியரங்க மேடையிலோ
நீதான் கனல் கண்ணன்
இன்று முதல் நீயோ
வடிவேலுவின் அண்ணன்

பஸ் வண்டி கார் வண்டி
நீயொரு புகை வண்டி
இன்று முதல் நீயோ
வெறும் காய்கறி மண்டி

கிரிக்கெட்டில் நீயோ
சிங்கிள் ரன் சிங்கக்குட்டி
எனதருமை அர்ஜீன ரணதுங்கவே!

பீப்பீ ஊதி பீப்பீ ஊதி
பட்டம் பெற்றாய் பீப்பீமாமா
அடுப்பு ஊதி அடுப்பு ஊதி
கற்றுக்கொள் போட காப்பி மாமா

பார்ட்டி என்று வந்துவிட்டால்
நீதான் அதி(ல்)விஷேடம்
நிரூஜாவைக் கரம் பிடித்தாய்
அதுதான் உனக்கு இனி விஷேடம்

அதிகாரமையமே
ஆட்டம் கண்டதுவே!
உன் இதயத்தில் புதிதாக
அம்பொன்று துளைத்ததுவே!

நேற்றுவரை உன் வாழ்க்கையிலே கவிதை இருந்தது
இன்று முதல் உன் வாழ்க்கையே கவிதையாகிறது!

வாழ்த்துக்கள் மாலவன் அண்ணா, நிரூஜா அண்ணி
"எக்ஸாமைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா"
இதுதான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப்போகாத ஒரு பஞ்ச் டயலாக்.

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம். கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்லவேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்.

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் "நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை" என்று சொல்லுவார்கள். அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
க.பொ.த சாதாரண தரம் வரை நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்.

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும்போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது. அதாவது
  • What are the advantages of bla bla bla?
  • What are the disadvantages of bla bla?
  • Briefly explain the following?
  • Definitions
இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது. பாடமாக்கி எழுதினால் மட்டுமே இதுமாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது.


புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage,Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனாக்கேக்கிறார்கள். Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.
 வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வாற விசயத்தை அரைமணிநேரம் பாடமாக்கி எழுதணுமா? 
ப்படிக்கு 
ப்பாவி மாணவர்களுள் ஒருவன் =)

WHATEVER HAPPENS LIFE GOES ON...

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:26 PM | 0 பின்னூட்டங்கள்
பஸ்ஸில் தனிமையில் பயணிக்கும் போது, இரவு நேரத்தில் Laptop, Mobile எல்லாத்தையும் தூக்கி துரப் போட்டுவிட்டு கண்ணை மூடாமல் கண்ணை மூடியது போல உணரும் போது மனதில் தோன்றிய விடயங்கள் அடங்கிய பதிவு. சுவாரஸ்யமாக எதுவும் இருக்காது. சுய புலம்பல் மட்டுமே!

***

திடீரென ஒருநாள் விழித்துப் பார்க்கும் போது கண்டது எல்லாம் கனவாகிப் போய் நாம் இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையுமே மீள நினைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். வாழ்க்கை என்பது ஒரு நேரான பாதையில் ஓடுவதைப் போன்றது. பலர் கூட ஓடி வருவார்கள் சிலர் இடையிடையே வரும் திருப்பங்களில் திரும்பிவிடுவார்கள். சிலர் இன்னுமொரு திருப்பத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார்கள். சிலர் இடையில் புதிதாக இணைந்து கொள்வார்கள். ஒரு சிலர் கடைசி வரை எம்முடனேயே ஓடி வருவார்கள். கடைசி வரை வருவார்கள் என்று நினைத்தவர்கள் கடைசிவரை வருவதுமில்லை. இடையிலேயே திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாரும் இடையிலே விலகிவிடுவதுமில்லை.

இங்கு வாழ்க்கைப் பாதை பிரியும் இடங்கள் அவரவர் நிலைகளைப் பொறுத்து வேறுபடும். பாடசாலைக் காலம், கல்லூரிக் காலம், வேலைக்குச் செல்லும் காலம், திருமணம் நடக்கும் காலம் என்று பொதுவாக வரையறுக்கலாம். பாடசாலை அல்லது கல்லூரியில் படிக்கும் காலங்களில் வரும் பிரிவுகள்தான் மிகுந்த கவலையை தருகிறது. ஏன் என்று அதை உற்று நோக்கிப் பார்த்தால் பாடசாலை அல்லது கல்லூரிக் காலங்களில் எமக்குக் கிடைத்தது அதிகம் அதனால் அந்தக் காலத்தை இழக்கும் போது இழப்பதும் அதிகம். அதற்குப் பிறகு கொஞ்சம் இயல்பிலிருந்து விலகி நடிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் போல் உணருகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் 11 வருடங்கள் படித்த பாடசாலையிலிருந்து திடீரென விலகிய போது நண்பர்கள், எமது பாடசாலை இசைக்குழுவில் இருந்த எனக்கான இடம், இன்றும் மெதுவாகச் செல்லும் 155 பஸ், பிறந்து வளர்ந்த இடம் இன்னும் சில விடயங்கள் என்று அனைத்தையும் இழக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு புதிய பாடசாலை, புதிய நண்பர்கள் புதிய இடம் என்று இன்னுமொரு பாதையில் ஓடவேண்டியிருந்தது. அதாவது கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறி வந்து உச்சியை எட்டும் போது யாரோ கீழே பிடித்துத் தள்ளிவிட்டு திரும்ப ஏறி வா என்று சொன்னது மாதிரியான ஒரு உணர்வு. ஆனால் தள்ளிவிட்டது நல்லதுக்குத்தான் என்று அன்றுதான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறை ஏறும் போதுதான் எத்தனை விடயங்களை பார்க்க, அனுபவிக்கத் தவறிவிட்டோம் என்று அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் "அடுத்தது என்ன?" என்ற ஒரு கேள்வி மனதில் மிகப்பெரிய கேள்விக்குறிடன் விடைக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு முறை எதையாவது எதிர்பார்த்து ஏதாவது முடிவுகளை எடுக்கும் போதும் அது "நீ யார்டா முடிவெடுக்க என்று" கைகொட்டிச் சிரிக்கும்.

ஆனால் இதுவரை கிடைத்த அனுபவங்கள் சகிப்புத்தன்னையை வளர்த்துக் கொள்வது எப்படி?, எதிர்பார்ப்புக்களை குறைப்பது எப்படி?, விமர்சனங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று கற்றுக் கொடுத்திருக்கிறது. தவிர பல நண்பர்களையும், எதிரிகளையும், சில மனிதர்களையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இன்னும் சம்பாதித்துக் கொடுக்கப் போகும் மனிதர்கள், நண்பர்கள், எதிரிகளுக்காகவும், அனுபவங்களுக்காகவும், அடுத்தது என்ன என்ற கேள்வியுடனும் காத்திருக்கிறேன்.
WHATEVER HAPPENS LIFE GOES ON... =)
படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும் =))


 







ALT+3

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:34 PM | 0 பின்னூட்டங்கள்
பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிக்கும் நாட்களில் புத்தகத்தைத் திறந்து 10வது நிமிடத்தில் தோன்றிய கவிதை(அப்படியும் சொல்லலாம் =P) இவை.இவற்றை உங்கள் காதலன்/காதலிக்குக் கொடுத்து உங்கள் காதல் FAIL ஆனால் அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.


பரீட்சைக்குப் படிக்கும் போது
எங்கிருந்தோ ஓடி வந்து
கண்ணுக்குகள் புகுந்துகொள்ளும்
அதிவேக தூக்கத்தின்
வேகத்தையும் முறையடித்து
கண்களுக்குள் புகுந்து
கனவாக வந்துவிடுகிறாய் நீ

உன்னிடம் காதலை சொல்ல -
நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்
இறுதிப் போட்டியில் தோற்கும்
இலங்கை அணி போல் ஆகிறதே
என்ன காரணம்?

தூக்கமும் பேஸ்புக்கும் போல
இருக்கும் நம் காதல்
எக்‌ஸாமும் தூக்கமும் போல்
சேர்வது எப்போது?

Crack file கிடைக்காத Software ஆக
தினம் தினம் தேய்ந்துகொண்டிருக்கிறேன்
Crack ஆக வருவாயா? இல்லை
Uninstall செய்துவிட்டுப் போவாயா?

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்