Related Posts with Thumbnails
Showing posts with label கல்கி. Show all posts
COPY, PASTE


எனது நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் மரத்தைத் தாண்டி வருவாயா ஆகிய பதிவுகளை மூஞ்சிப்புத்தகம் (ஒரு நண்பர் மட்டும் தனது குழுமத்தில் போட அனுமதி கேட்டார்), தங்களது சொந்த வலைப்பூ என அனைத்து இடங்களிலும் COPY PASTE செய்து பிரபலப்படுத்தியமைக்கு நன்றி. நானும் நல்லா எழுதிறேன் என்று முதன்முறையாக எனக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.:p


ஆரம்பத்தில் இந்தவிடயம் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும் நாம எழுதிறதும் நல்லா இருக்குப்போல அதுதானே COPY PASTE பதிவு போடுறாங்க என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே COPY அடிக்கிறாங்க தலைப்பைக்கூட மாத்தாம அதுவும் GOOGLEல போய் தலைப்பைக் கொடுத்து SEARCH பண்ணினா COPY அடிக்கப்பட்ட பதிவுகள் 4 பக்கத்துக்கு வருகிறது. இன்றிலிருந்து நானும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன் நானும் ரைளடிதான்.
******************************************************
இனிய சந்திப்பு
மொக்கை போட்டவர்கள்..:p


அன்று மாலை காலிமுகத்திடலில் பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. கடந்த பல சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியாமலிருந்த எனது ஏக்கம் பூர்த்தியாக்கப்பட்டது. இனியதொரு சந்திப்பாக அமைந்தது. ப்ப்பிளீஸ் புல்லட் அண்ணா, சின்ன வந்தி கோபி, ஓஃப்லைன் அச்சு அண்ணா, ஏழுமணி சதீஸ் அண்ணா, காமப்பதிவர் வரோ, மது அண்ணா, ஆதிரை அண்ணா, லோசன் அண்ணா பெட்டி சுபா அண்ணா ஆகியோருடன் மொக்கை போட்டபடி இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.
******************************************************


ஏன் திருத்தமுடியாது
அம்மா பகவான் அழுக்கைக்கழுவும் பேஸ்புக் குழுமத்துக்கு நன்றி
அண்மையில் மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு நண்பர் அம்மா பகவானின் படத்தை ஒரு நடிகை போல EDIT பண்ணிப்போட்டிருந்தார். அதற்குள் நாங்கள் எதிர்பார்த்தபடி ஒரு அம்மா பகவான் பக்தர் வந்து சராயச்சாமிக்கு சார்பாக கருத்துரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் இல்லை என்று பிடிவாதமாக இருந்தார்.

இவர் ஒருவரை நாம் ஒரு நான்கைந்து பேர் சேர்ந்தே திருத்தமுடியவில்லை பிறகு எப்படி லட்சக்கணக்கான பக்தர்களைத்திருத்துவது. இதுதவிர இதுபற்றி கலந்துரையாடிய போது நண்பரொருவர் கூறியது கல்கி பகவானும் பக்கா பிசினஸ்மான்தானாம் இப்படி அனைவருக்கும் பாதம் அசையுது, பகவான் தெரியுது என்று மட்டும் பித்தலாட்டம் செய்யாமல் அவர்களுக்கு அம்மா பகவான் டீ-சேட் கான்ராக்ட், வித்யா மாலை கொன்ராக்ட் என கொடுத்திருப்பிறாராம். பிறகு அவர்கள் எப்படி பகவானை எதிர்ப்பார்கள்.

இதிலிருந்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரிகிறது. மனிதாபிமானம் செத்துவிட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனது தொழிலுக்காக கஞ்சா சாமியாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருக்கும்வரை போதைக்கு அடிமையாகி சீரழியும் மக்களை காப்பாற்றமுடியாது.

******************************************************
பக்தி,சிறுவன், அங்கப்பிரதட்சணம்

திருகோணமலையில் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக இக்காலகட்டத்தில் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள், ஆனால் பக்தி என்ற பெயரில் 6 வயதுச் சிறுவன் ஒருவனை அழஅழ போட்டு உருட்டிக்கொண்டிருந்தார் ஒரு தாயார். என்னதான் பக்தியாக இருந்தாலும் ஒரு 6 வயதுச்சிறுவனைப் அங்கப்பிரதட்சணம் செய்விப்பது. தப்புத்தானே??
உங்கள் குழந்தைக்காக என்றால் நீங்களே செய்யலாம்தானே எதற்கு அந்தக் குழந்தையைப் போட்டு வதைக்கிறீர்கள்.

******************************************************
சுறா 

நேற்று சுறா பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாடல்களை வைத்துப்பார்த்தால் வழக்கம்போல விஜயின் அதிரடி பஞ்ச்சுடன்தான் இந்தப்படமும் வெளிவரும் போல இருக்கிறது, விண்ணைத்தாண்டி வருவாயா இசையைக் கேட்டுப்பழகிவிட்டு இப்போது இந்தப்பாடலைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் சுறா பாடல் வரிகள், அதுவும் அந்தக்காதல் பாட்டு சான்சே இல்ல..:p, அதுகாதல்ப்பாட்டுத்தான் என்று கண்டுபிடிக்க பாட்டைநான்குதரம் கேட்க வேண்டுமென்றால் பாருங்களேன்

******************************************************

தான்தான் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் கல்கிபகவான் சாரயச்சாமியாரின் அம்பலங்கள் நேற்று சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ளன. இது பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டோம்.

ஏற்கனவே தெலுங்கு டிவி ஒன்றில் இவரது மன்னிக்கவும் இவனது அட்டூளியங்கள் வெளியானது, ஆனால் தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் அவை வெளியாகவில்லை. ஆனால் தற்போது சன்டிவியில் இதுபற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது பராட்டத்தக்கது. எனவே இதுபற்றி மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் மின்னஞ்சலில் வந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறேன். "மனம் திடமாக இருந்தால் மட்டும் பாருங்கள்."







போலிச்சாமிகளின் பற்றிய பல பதிவுகள் செய்திகள் வந்து அவர்களின் பெயர்கள் நாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்? அது அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் ராதையும் போல விளையாடினார்கள் அப்படி இப்படி பல கதைகள் அதை மக்களும் நம்பி நித்தியானந்தா நல்லவர் தெய்வம் என்று இன்றுவரை நம்பும்கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.


போலிகள் பிழைத்துக்கொள்வதற்கான காரணம்?
இந்தப்போலிச்சாமிகளுக்குப்பின்னால் ஒவ்வொரு ஊடகம் இருப்பது போல தோன்றுகிறது. அண்மையில் போதை கொடுத்து மாட்டிய கல்கிபகவான், நித்தியானந்தா உட்பட இருவர் ஒரே தினத்தில் மாட்டுப்பட்டனர். ஆனால் நித்தியானந்தாவின் வீடியோவை மட்டும் அரைமணிக்கொருதடவை போட்டுக்காட்டிய ஊடகங்கள், அதைவிடப்பாரதூரமான விடயத்தில் மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை? 


வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு போதை கொடுத்து அவர்களை வெறியாட்டம் ஆடவிட்டு ரசித்த பகவானை ஏன் காட்டவில்லை. மாறாக அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. பத்திரிகைகளில் கூட அவர்கள் மாட்டுப்படும் வரை முழுப்பக்கத்தில் வந்த விளம்பரங்கள் மாட்டிய பின்னர் அவர் கெட்டவர் என்ற செய்தி அரைப்பக்கம் கூட பிடிக்கவில்லை.


மக்கள் ஏமாறக்காரணம்?
பிரச்சினைகள் இல்லாத யாரும் உலகத்தில் இருக்கமுடியாது. பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் உதிக்கும் உடனே அங்கு போகிறவன் அவர்களின் மாடமாளிகைகள், அமைதியான சூழல் ஆகியவற்றைப் பார்த்து சுருக்கமாகச் சொன்னால் மூழளச்சலவை (BRAIN WASH) பண்ணப்படுகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியவனிடம் சென்று உடனே அதை விடு என்றால் விடமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடவைக்க வேண்டும். அது போலதான் மக்களையும் மாற்ற வேண்டும். 


வலைப்பதிவெழுதுவதால் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்ய முடியாத எதையும் நாம் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை ஆனால் நண்பனை விட எதிரி எம்மை அவதானித்துக்கொண்டிருப்பான், எனவே நமது வலைப்பதிவை நித்தியானந்தாவையோ, பகவானையோ பின்பற்றும் ஒருவன் படித்துத் திருந்தத்தேவையில்லை, படித்தால் மட்டும் போதும் அதுவே அவன் மனதில் மக்கள் நமக்கு எதிரிகளாகிவிட்டனர் என்று ஒரு பயத்தை உருவாக்கும்.


ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். 


ஒரு சிறுவன் அம்மா அங்கே சுனாமியடித்து 1000 பேர் பலியாம் என்கிறான், அதற்கு அம்மா போடா பொய் சொல்லாதே, இல்லை அம்மா பேப்பரில் போட்டிருக்கிறார்கள் என்கிறான். பத்திரிகை மக்களிடையே பிரபல்யம் அடைந்த அளவுக்கு வலைப்பதிவு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. தொலைக்காட்சியில் அழுகை நாடகங்களையும் குடும்பநாடகங்களையும் போடும் நாடகங்கள்தொலைக்காட்சி சேவைகள் இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ? ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.


நினைத்தவுடம் மாறு என்றால் மாறமாட்டார்கள் கொஞ்சம் கோஞ்சமாக மாற்ற வேண்டும், அதற்கு ஊடகங்கள் அனைத்தும் உதவவேண்டும். 
ஏற்கனவே நான் பதிவிட்ட இந்தப்பதிவை மீள்பதிவிட்டிருக்கிறேன், ஆசாமி நித்தியானந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். தன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் பதிலளிக்கிறார்


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..  

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....




கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்




ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

****************************************************








போலி போலி போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. நேற்றிரவு 8.30 சன் செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கும். யாருமே பெரிதும் எதிர்பார்க்காத சாமியார் ஒருத்தர் மாட்டுப்பட்டார். நித்தியமும் ஆனந்தமாக இருக்க வேண்டும், கதவைத்திறவுங்கள் காற்று வரட்டும் என்றவருக்கு கதவைத்திறந்தால் ஊடகங்களின் கமராவும் வரும் என்று தெரியவில்லைப்போலும்.


இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார் கண்டுபிடிப்பது? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா? 


கட்டாயம் இல்லை, இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான், இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான், இன்னொருத்தன் மஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புகிறார்கள், காசை வாரி இறைப்பார்கள். அவன் ஏன் கதவைத்திறக்கச் சொல்லுறான் உங்களிடமிருந்து அப்பதானே கொள்ளையடிக்கலாம். இவர்களை மக்கள் நம்பக்காரணம் ஒன்றே ஒன்று இவர்களின் பேச்சு, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். ஆனந்தம் என்பான், வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.


புத்தர், யுசு, நபிகள் இப்படியும் மகான்கள் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை,மாலைபோடும் நிகழ்வு நடத்தவில்லை, ஏன் தாங்கள் அவதாரம் என்றோ கூறவோ மஜிக்கோ ஒன்றுமே செய்யவில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள்.


அவர்களின் வழியில் வருகிறேன், நான் சாமி என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது. இப்படி எத்தனையோ பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளை சனம் போகத்தானே செய்யுது. அரசாங்கம் இருக்குத்தானே போலீஸ் இருக்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாத படி மேலிடத்து அதிகாரிகள் போலீசின் கைகளை கட்டிப்போடுகிறார்கள், அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்ற பயம்.


இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்