நமது பதிவர்கள் அதிகாரமையத்தலைவர் பதவிக்கு தேர்தல் ஒன்று இடம் பெறுகிறது. அவர்கள் போட்டியிட்டிருந்தால் எப்படி பிரசாரம் செய்திருப்பார்கள் ஒரு சின்னக்கற்பனை..:P
முதலாவதாக மிஸ்டர் பூமி
தினந்தோறும் லட்சங்களில் புரளும் அன்புப்பிச்சைக்காரலட்சாதிபதிகளே, என்னில் ஏறிவிளையாடி என்னை உருட்டியெடுக்கும் எனதருமைப் பாசப்பசுங்கிளிகளே, எனக்குப் பெரிய பெரிய கான்களில் தண்ணீர் தந்து எனது தாகத்தை அடக்கும் தண்ணிலாறிகளே! பிள்ளைகளே, குட்டிகளே, கீரைப்புட்டுச் சட்டிகளே! அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இதுவரை காலமும் எனது ஆட்சியில் பசுமையாக இருந்த அனைவரையும் எதிர்க்கட்சித்தலைமை தன்பக்கம் ஈர்க்க முற்படுவது கேவலமான செயலாகும். எனது ஆட்சிக்காலத்தில்தான் பதிவர்கள் காத்திரமான , தொக்கையான ச்சா.. மொக்கையான, அழகான பதிவுகளை எழுதிவந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை பூமிச்சின்னத்தில் குத்தி எதிர்க்கட்சியின் கனவுக் கோட்டையை தகர்த்தெறியுங்கள்.
"எங்க தல பூமி, வேற ஆளிருந்தாக் காமி" என்ற கோசத்துடன் பூமி உருண்டோடுகிறது.
வந்தி மாமா
ஆ... இஆ... ஆ... பேசணும்னு நினைக்கும்போது வார்த்தை அருவியா கொட்டுது.. ஆனா.. இந்த மைக்கு முன்னாடி வந்து நின்னதும் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை எல்லாம் அப்பிடியே காணாமப்போயிருது..ஆ...இஆ...
யோவ் அந்த மைக்கை எடுங்கையா பேசிட்டு போகட்டும்(கீழிருந்து ஒரு குரல்) மைக் அகற்றப்பட்டதும்.
அலைகடலென திரண்டிருக்கும் வாக்காளப்பெருமக்களே, எதிர்கட்சிக்காரர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்?
முன்னபின்ன சொந்த செலவில சூனியம் வைத்திருக்கிறார்களா?
எவ்வளவு அடித்தாலும் தனியா நின்று வாங்கிக் கொள்ளும் தாங்குதிறன் அவர்களுக்கு இருக்கிறதா?
அல்லது ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம்தான் போட்டிருக்கிறார்களா? எனவே உங்கள் வாக்குகளைக் வேறு யாருக்கும் போடமுதல் ஒன்றைச் சொல்லி விடைபெறுகிறேன்
"சாம தான பேத தண்டம் நாலும் தோத்துப் போகும் போது, தகிடதத்தோம், செய் தகிடதத்தோம்"
அதாவது சாமத்தில் என்றால் இரவில கூட தானம் செய்ய பேதம் பார்க்கும் தண்டங்களுக்கு வாக்குப் போடாம இரவில் தகிடதத்தோம் எண்டு இளையராஜா பாட்டுக் கேட்கும் என் போன்ற நல்லுள்ளங்களுக்கு வாக்குகளைப் போடவும். நன்றி..
உலகநாயகனே.. கண்டங்கள் கண்டு வியக்கும், இனி ஐ.நாவே உன்னை அழைக்கும் என்று பாடல் ஒலிக்க மாமா கோயிங்கு.
அடுத்து நம்ம லோசன் அண்ணே
அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய காலை வணக்கங்கள், மலர்ந்திருக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக அமையட்டும். சரி நாங்கள் விடயத்துக்க வருவோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நாம் 3181 தடவைகள் வாக்களித்திருக்கிறோம், ஆனால் அதில் 698 நல்லவோட்டு, 1291 செல்லாத வோட்டு, மிகுதி வாக்குகளுக்க என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதெல்லாம் எதிர்கட்சியின் சதி, அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சூப் வைத்துக் குடுத்து அவர்கள் சாக் கான நேரத்தில் வாக்குகளை சோக்காக அள்ளிவிட்டார்கள். எனவே உங்கள் வாக்குகளை எஸ்.எம்.எஸ் ஊடாகவோ, தொலைபேசியூடாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு, விடைபெறும் முன்னர் தேர்தலுக்கு அனுசரணை வழங்கும் அனுசரணையாளர்களையும் ஒரு தடவை ஞாகப்படுத்திக் கொள்கிறேன். என்று எஸ்கேப்பாகிறார்.
அடுத்து எங்கள் தன்மானச்சிங்கம், கறுப்பு நமீதா, பிரச்சார சூறாவளி, கன்கோன் கோபி அவர்கள் மேடை ஏறுகிறார்,
எனதருமை வாக்காள ருவிட்டர்களே...ச்சீ... பெருமக்களே.. உங்கள் வாக்குகளை எனக்கு அளிப்பது மட்டுமல்லாது மற்றவர்கள் போடும் வாக்குகளையும் எனக்கு ரீ-ருவிட் செய்யுங்கள். நான் உங்களுக்க இலவசமாக ருவிட்டர் காலனியில் குடியிருக்கும் வசதியை அளிக்கிறேன். இதுவரை 21121 ருவிட்டுகளை கடந்திருக்கும் என்னைத்தவிர வேறு யாரையும் நீங்கள் தெரிவு செய்யவோ, ஏன் அப்படி நினைக்கக்கூட முடியாது, இறுதியாக ஒன்று கூறி விடை பெறுகிறேன், அனைவரும் கூட்டம் முடிந்ததும் கட்சி அலுவலகத்தில் வந்து லெமன்பப்பை வாங்கிக்கொள்ளவும். #விடைபெறல்#நன்றி#வணக்கம்#பிரச்சாரம்#அதிகாரமையம்
அடுத்து புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... என்று ஒரு சத்தம் கேட்க எல்லோரும் அலேர்ட் ஆகிறார்கள். கார்க்கண்ணாடி அளவு கூலிங் கிளாசுடன் (PAYMENTல் வாங்கியது) கையில் கமராவோடு ஒருத்தர் வருகிறார். சனக்கூட்டமே இல்லாத மேடையில் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த சில சல்வார் போட்ட பாட்டிகளுக்கு ஸ்டைல் காட்டப்போய் கால் தடக்கிவிழுந்தவர், படக்கென எழும்பி ஒன்றுமே நடக்காதது போல கோட்டுப்போட்ட ஓட்டாண்டிகளுக்கும், பாட்டுப்போட்ட பரதேசிகளுக்கும், வேட்டு வைக்க வந்துட்டாண்டா இந்த சுப்பு...இஹாஹாஹாஹா... தரங்கம் சுப்பு என்று பஞ்ச் டயலாகைப் பேசி கண்ணா, வீ மீட்டு, யு வோட்டு, ஐ நோட்டு, நவ் அப்பீட்டு என்று விடைபெறுகிறார்.
அடுத்து மிஸ்டர்.ஹாட்
அடேய் அடேய் என்னடா நடக்குதிங்க என்னடா நடக்குதிங்க.. டேய் டேய் டேய்.. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள் அதிகாரமையத்தலைமை மாற்றத்தை நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் ஆனந்தமாகக இருக்கின்றது ஆனால் இங்கு வாக்குக் கேட்டவர்கள் தங்களின் வாக்குறுதிகளை நடாத்த முன்வரவில்லை, எனவே எனக்கு வோட்டுப்போட்டு என்னுடன் இணைந்து சூடாட பதிவுலகைப் பேணுவதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் என்னால் மட்டும் தனி
யே வோட்டுப் போட்டு தல ஆகமுடியாது எனவே
யாரெல்லாம் என்னோடு இணைந்து எனக்கு வோட்டுப்போட்டு என்னைத் தலயாக்க முன்வருகிறீர்கள் என்று சொன்னால் அவர்களுடன் இணைந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நகரலாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
"ஐ ஆம் ஆல்வேய்ஸ் ஒன்லைன், Using 24 hours mobile internet But எவனாச்சும் Disturb பண்ணினிங்க பிச்சுப்புடுவன்... நான் பிஸி with Cricket" என்று சொல்லிச் சூடு பறக்கிறது.
(தொடரும்)