Related Posts with Thumbnails
Showing posts with label நித்தியானந்தா. Show all posts

ருவீட்ஸ் || Tweets #007

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:23 PM | 9 பின்னூட்டங்கள்
 
 -1-
காலம் கடந்த ஞானத்தை maturity என்று சொல்லலாமா? #டவுட்டு
-2-
ஆங்கிலப்பரீட்சையில் நாம் எழுதும் பதில்கள் புதுக்கவிதை மாதிரி, இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளாதீங்க #பின்குறிப்புINஎக்ஸாம்PAPER
-3-
கண்ணை முடு, மூக்கைப்பார், இப்போ கண்ணைத்திற... எழுந்து நில் கைகளைத்தூக்கு, இப்போ 2கால்களையும் தூக்கு..:P #நித்தியிசம்:P
-4-
ஒருவரை கோபப்படுத்த 2வழிகள்,1-அவரின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கலாம் 2-அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்
-5-
காதலிக்குறவங்க எல்லாரும் அரசியல்வாதிகள் மாதிரி, எந்த நேரத்தில என்ன செய்வாங்க,அதை எதுக்கு செய்யுறாங்கன்னே யாருக்குமே தெரியாது...:P
-6-
அபிராமி,கண்ணம்மா,சந்தியா,ரோஜா,அஞ்சலை,மல்லிகா,சிந்து,மாலினி,ரசிகா,நகுமா,ஊர்வசி,நிலா,செண்பகம்,தாமரை ஆகிய பெயர்களிளைக்காதலியின் பெயராகக் கொண்டவர்களுக்கு RINGTONE போடுவதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது..:P #ஆராய்ச்சி_முடிவு
-7-
ஒரே பாட்டில் பணக்காரனாகவும், ஒரே பாட்டில் அனைத்துப் பணத்தையும் செலவழிக்கவும் ரஜனியால் மட்டுமே முடியும். #சூப்பர்ஸ்டார்டா..!
-8-
தவறு செய்தவர்களே அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக கவலைப்படும் போது எந்தத்தவறுமே செய்யாத நான் என் மீது போலியாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எண்ணி கவலைப்படுவதிலோ, கோபப்படுவதிலோ எந்தத்தவறும் இல்லை
-9-
ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் 7 காதல் வருமாம், அது இதுதானா?1-அம்மா 2-அப்பா 3-சகோதரம் 4-நட்பு 5-காதலி 6-மனைவி 7-பிள்ளை #டவுட்டு

-10-
5நிமிடம்தான் என்று ஆரம்பிக்கும் விளையாட்டுக்கள் 5மணிநேரமானாலும் முடிவதில்லை.அட்லீஸ்ட் 1/2 மணிநேரமாவது என்று ஆரம்பிக்கும் படிக்கும் முயற்சிகள் 5 நிமிடம் கூட தொடர்வதில்லை.

-11-
இணையம்,மொபைல்,உறவினர்கள்,வீடு,வாகனம்,தூசு,பஸ்,கவலை, எதுவுமில்லாமல் ஒருநாளாவது எங்காவது ஒரு அமைதியான இடத்தில் போய் இருக்கவேண்டும் #பேராசை

-12-
சோகமான தருணங்களை உணரவைக்க பல வார்த்தைகள் உண்டு, இன்பமான தருணங்களைச் உணரவைக்க ஒரே வழி அதை அனுபவித்து அறிவதுதான் #அனுபவம்

-13-
சொன்னதை செய்யணுமாம், சொல்லாததையும் செய்யணுமாம், bt சொன்ன சிலதைசெய்யவும் கூடாதாம், சொல்லாத சிலதையும் செய்யக்கூடாதாம் #போங்கடாஇந்தஅரசியல்புரியவேஇல்ல

-14-
யாரிலாவது கோபமிருப்பின்அவர்களை நினைத்து வெறுமனே பல்லை கடிப்பதை விட,வாயில் ஏதாவது உணவைப் போட்டுவிட்டுக் கடிக்கலாம். உடம்புக்கும் நல்லது :P

-15-
'முதன்முதலாக' என்ற வார்த்தைக்குள் தான் அதிக மகிழ்ச்சிகளும், சோகங்களும குடியிருக்கின்றன.

-16-
மானம் என்பதன் எதிர்ச்சொல் அவமானம் என்றால் டேய் என்பதன் எதிர்ச்சொல் ஏன் அடேய் என்று இருக்கக்கூடாது. #டவுட்டு..:P

-17-
பழையபாடல்களின்BGMகுதிரைவண்டியில் போவதுபோலவும், புதியபாடல்கள் விமானத்தில் போவதுபோலவும் எண்ணத்தையும்கொடுக்கிறது#அவதானிப்பு

-18-
தூக்கமில்லா இரவுகளில்தான் தத்துவங்கள் பிறக்கின்றன, உடனே அதை பக்கத்திலிருப்பவனுக்கு சொல்ல முற்படும்போது உதைகளும் பிறக்கின்றன..:P

-19-
தத்துவம் என்பதில் தத்=சிங்களத்தில் பல் என்று பொருள். து=துப்பு என்பதை குறிக்கிறது. வ(அ)ம்=மழலை மொழியில் சாப்பாடு என்று பொருள். ஆகவே 'பல்லு விளக்கிட்டு சாப்பிடு என்று பொருள் #தத்துவம்பற்றியதத்துவம் :P

-20-
"புதியது" என்ற ஆண்டாண்டு காலமாய் பயன்படுத்தப்படும் பழைய சொல் மட்டும் பழையதாக இருந்தாலும் புதியவற்றைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

-21-
உயர் அதிகாரி குடிகாரனாக இருந்தால்,அவனிடம் திட்டு வாங்குவதை விட அவனை அறைந்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் குடிகாரர்களுக்கு நீங்கள் அறைந்தது ஞாபகமிருக்கப்போவதில்லை..:P

-22-
மழை+ குளிர்+ பஸ்+ ஜன்னலோரசீட்+ இதமானகாற்று=சொர்க்கம் #அனுபவம்

-23-
தேவையானவற்றுடன் பிடிக்காத ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுவதில்லை,தேவையில்லாத ஒன்றுடன் தேவையான ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுகிறது
-RT-
:Facebook - வில்லங்கம் தானா தேடி வாற இடம் Twitter - நாங்களே வில்லங்கத்திட்ட போய் மாட்டுற இடம் :P
அண்மையில் பிரபல கமரா+டான்ஸ் புகழ் சாமியார் நித்தியானந்தா அவர்கள் குண்டலினி சக்தியைக் கண்டுபிடித்து, புவியீர்ப்பு விசைக்கு எதிராக எங்கள் எல்லாரையும் அந்தரத்தில் பறக்க விட்டிருக்கிறார். இவரின் இந்த திறமையான விடயத்தை எப்படி இவரால் மட்டும் செய்ய முடிந்தது என்று நாம் நேரடியாகச் சென்று கேட்டிருந்தோம், அதற்கு அவர் திருவிளையாடல் தனுஷ் ரேஞ்சுக்கு லெந்தா ஒரு டயலாக் பேசினார். அதை எடிட்டிங் பண்ணாம அப்பிடியே போட்டிருக்கிறோம்..:P



"காலைல மூணு, நாலு மணிக்கு அலாரம் வச்சு அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிச்சு, அடிக்கிற அலாரம் பக்தகோடிகளுக்கு கேக்காம நிறுத்திட்டு, அமுதம்னு சொல்லி கமண்டலத்துல ஊத்தி வச்சு நேத்து நான் குடுத்த பியரை அடிச்சிட்டு குப்புறப்படுத்துக்கிடக்கிறவன் பாக்கட்ல அஞ்சு பத்துன்னு ஆட்டையப் போட்டுகிட்டு, பிளைட் புடிச்சுகிட்டு போனா பிளைட்டு டிலேன்று வரும்...

சரி ரெஸ்ட் எடுக்கலாமேன்னு பக்கத்துல உள்ள லாட்ஜீக்குப் போயி அரை மணிநேரத்துக்கு ரூம் வேணும் சார்னா அவன் நம்மளை ஏலியன் மாதிரிப்பாப்பான், அந்த அசிங்கத்தையெல்லாம் தாங்கிட்டு ரூமைப்போட்டு உள்ளபோயி உக்காந்தா, நாம அங்க போனதைத் தெரிஞ்சுகிட்டு நமக்கு முன்னாடியே எவனாச்சும் ரூம் வாசல்ல வந்து நிப்பான்.

அப்பிடியே பக்குன்னு இருக்கும் நெஞ்சுக்குள்ள...

அவனையெல்லாம் சமாளிச்சு ஆசிங்கிற பேர்ல ஏதோ நாலு புரியாத பிட்டப்போட்டு அனுப்பி வச்சா, அப்பறம் ஒரு பொண்ணு டான்ஸ் கத்துக்க வாறேன்னு அடம்புடிக்கும். சரி வாம்மான்னு சொல்லிட்டு கதவைத்திற காற்று வரட்டும், காலைப்புடி, கையப்புடி, கட்டிப்புடி, பல்ட்டி அடின்னு டீ.ஆர் ரேஞ்சுக்கு வசனம் பேசினா பின்னாடியிருந்து ஒருத்தன் கமரா வைச்சிருப்பான், அதுகூடத் தெரியாம டான்ஸ் கத்துக்குடுத்திட்டு, திரும்பிப்பாத்தா போலீசு கேட்டா போலிச்சாமி டீசிங்கும்பான்...

அந்த கேஸ் எல்லாம் பேஸ் பண்ணி அதுக்கப்பறமும் கதவே இல்லாத ரூமாப் பாத்து, ஏணிலயெல்லாம் ஏறி இறங்கி பறக்குற டான்ஸ் கத்துக் குடுக்கறேன்னு நாலு ஃபிகரைக் கரக்ட் பண்ண ட்ரை பண்ணினா,


அங்க ஒரு ரிப்போர்ட்டர்,
"சீ பொறுக்கி ராஸ்கல், நாயே நீயேல்லாம் திருந்தே மாட்டியா,சோறு திங்கிறியா வேற ஏதும் திங்கிறியா, உனக்கு வெக்கமே கிடையாதா...!#$@%^$^&**(()&(_&%, "

அப்பிடீன்னு கெட்ட கெட்ட வார்த்தைல என்னை மட்டுமில்லாம என் போலிச்சாமியார் கும்பலயே சேத்துத்திட்டுவான். அதெல்லாம் கொஞ்சங்கூட காதுல வாங்கிக்காம கொஞ்சங்கோஞ்சமா அடுத்த கட்டமா நாலு ஃபிகரைக் கரக்ட் பண்ணி, காசு காசாக் கொள்ளையடிச்சு, நாம எத்தனை தடவை மாட்டிகிட்டாலும் நம்மளையே நம்புற மடைப்பயலுகளை வச்சு தப்பிச்சு...

சாமி நீதான் என் உயிரு, மத்தவங்கெல்லாம் _____ன்னு சொல்ல வைக்கிறதுக்குள்ள நாங்க படுறபாடு இருக்கே கேட்டா சேத்துப் பன்னி கூட குரவளையக் கடிச்சுத்துப்பும்.
மறதி - குட்டிக்கதை
ஒரு 65 வயது மூதாட்டிக்கு அனைத்து புதிய தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்து குழந்தை ஒன்றைப்பிறக்கச்செய்தனர். சிலநாட்களில் அவரும் தனது குழந்தையுடன் வீடு திரும்பினார்.


அவரின் குழந்தையை பார்க்க சில விருந்தாளிகள் வந்திருந்தனர். உடன அவர்களை வரவேற்று உபசரித்தார், சிறிது நேரத்தில்விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
"இல்லை, தேனீர் இருந்திவிட்டுப்பார்க்கலாம் என்று அனைவருக்கும் தேனீர் கொடுத்தார். தேனீர் குடித்து முடித்த பின்னர் மீண்டும் விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
இல்லை சிற்றுண்டி உண்ணுங்கள் பிறகு பார்க்கலாம், என்றார். சரியென சிற்றுண்டி உண்டுவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
மீண்டும் மூதாட்டியும் இல்லை கொஞ்சம் கொறுங்கள் பார்க்கலாம் என்றார்.


ஏன் உங்கள் குழந்தையை நாங்கள் பார்க்கக்கூடாதா? அதன் வளர்ச்சி அவ்வளவு முக்கியமா? நாங்கள் பார்த்தால் அது வளராதா? என்று சற்று கோபத்துடன் கேட்க, இல்லை குழந்தையை நீங்கள் பார்க்க வேண்டுமானால் அது அழவேண்டும் என்றார்.


உங்களை மாதிரியே விருந்தாளிகளும் குழப்பத்துடன் பார்க்க..


குழந்தையை எங்கேயோ வைத்துவிட்டேன், அது அழுதால்தான் கண்டு பிடிக்கலாம் என்றார்.


*********************************************

IPLலும் இலங்கை வீரர்களும்


3வது IPL போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு ஆதரவளித்து வருகிறேன். ஆனால் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியுஸ், பந்துவீச்சாளர்கள் மலிங்க மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.


நேற்றைய சென்னையுடனான போட்டியின் வெற்றிக்கு முதல் மூன்று ஓவர்களிலேயே மூன்று விக்கட்டுகளைச்சாய்த்து சமிந்தவாஸ் டெக்கன் சார்ஜசின் வெற்றிக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.


தவிர முரளிதரனும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இலங்கை அணியில் மத்தியூசைத் தவிர மற்ற ஒருவரும் அண்மைய போட்டிகளில் இலங்கை சார்பில் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது. இனியாவது இலங்கை கிறிக்கற் இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்புமா? பார்க்கலாம்.



*********************************************



விண்ணைத்தாண்டி வருவாயா



மூன்று முறை பார்த்துவிட்டேன். A.R.ரஹ்மானை எப்பிடிப்பாராட்டுறதோ தெரியவில்லை. அப்பப்பா என்ன ஒரு இசை, படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களையும் ஆராய்ந்து இசையமைத்திருக்கிறார்கள்.

உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன். அதுதவிர பக்கா காதல் கதை. படமாக்கப்பட்ட விதம், சலிப்புத்தட்டாத கதையோட்டம், அடிக்கடி பேசப்படும் ஆங்கில வார்த்தை என அனைத்தும் அற்புதம். இடைவேளை விடாமல் படத்தை போட்டிருக்கலாம். அடுத்தகெளதம் மேனன் படத்துக்கு நான் முதல் SHOWக்கு போவதென்று முடிவுபண்ணிவிட்டேன்

சிம்புவைக்கு அடுத்து எனக்கு படத்தில் பிடித்த கதாபாத்திரம் காக்க காக்க காமராமேன் என்று சிம்புவுன் கூடவே வரும் கணேஷ். தலைவர் சிரிக்காம சாதாரணமா கதைச்சாலே சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் அவர் "உஸ்ஸ்...." என்று விடும் பெருமூச்சைப்பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்ததுதான் மிச்சம்.

இன்னும் எத்தனை தடவையும் படத்தைப்பார்க்க நான் தயார், யாராவது போகிறீர்களா? போனா சொல்லுங்க அடியேனும் வருகிறேன்.



*********************************************
சாமியார் சிரிப்பு சாமியார்


அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவையடுத்து ஆசாமி நித்தியானந்தா தலைமறைவாகி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அண்மையில் அவரின் சீடர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஆசாமி நித்தியின் வலதுகை பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு "I CAN'T SPECULATE ANYTHING" என்று கூறிக்கொண்டிருந்தார். பிறகு ஏன் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார்களோ. 45 நிமிட நேரம்தான் மாநாடு என்று கூறியவர்கள், மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை தெரிவித்துக்கொண்டிருந்தமையும், வீடியோ போடுகிறேன் என்று கூறி 5 நிமிடங்களை வீணடித்து கடைசிவரை வீடியோ போடாமல் விட்டும் அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முயற்சியெடுத்தததும் 45 நிமிடம் முடிய ஆள விடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகியதும் சிரிப்பை வரவழைத்தது.


இதுதான் இப்படியென்றால் நேற்று ஆசாமி நித்தியானந்தா தான் ரஞ்சிதாவுடன் வெளியான வீடியோவில் பாலியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தாராம். ஐயோ இது உலக நடிப்புடா சாமி...





*********************************************
NO COMMENTS



போலிச்சாமிகளின் பற்றிய பல பதிவுகள் செய்திகள் வந்து அவர்களின் பெயர்கள் நாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்? அது அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் ராதையும் போல விளையாடினார்கள் அப்படி இப்படி பல கதைகள் அதை மக்களும் நம்பி நித்தியானந்தா நல்லவர் தெய்வம் என்று இன்றுவரை நம்பும்கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.


போலிகள் பிழைத்துக்கொள்வதற்கான காரணம்?
இந்தப்போலிச்சாமிகளுக்குப்பின்னால் ஒவ்வொரு ஊடகம் இருப்பது போல தோன்றுகிறது. அண்மையில் போதை கொடுத்து மாட்டிய கல்கிபகவான், நித்தியானந்தா உட்பட இருவர் ஒரே தினத்தில் மாட்டுப்பட்டனர். ஆனால் நித்தியானந்தாவின் வீடியோவை மட்டும் அரைமணிக்கொருதடவை போட்டுக்காட்டிய ஊடகங்கள், அதைவிடப்பாரதூரமான விடயத்தில் மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை? 


வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு போதை கொடுத்து அவர்களை வெறியாட்டம் ஆடவிட்டு ரசித்த பகவானை ஏன் காட்டவில்லை. மாறாக அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. பத்திரிகைகளில் கூட அவர்கள் மாட்டுப்படும் வரை முழுப்பக்கத்தில் வந்த விளம்பரங்கள் மாட்டிய பின்னர் அவர் கெட்டவர் என்ற செய்தி அரைப்பக்கம் கூட பிடிக்கவில்லை.


மக்கள் ஏமாறக்காரணம்?
பிரச்சினைகள் இல்லாத யாரும் உலகத்தில் இருக்கமுடியாது. பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் உதிக்கும் உடனே அங்கு போகிறவன் அவர்களின் மாடமாளிகைகள், அமைதியான சூழல் ஆகியவற்றைப் பார்த்து சுருக்கமாகச் சொன்னால் மூழளச்சலவை (BRAIN WASH) பண்ணப்படுகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியவனிடம் சென்று உடனே அதை விடு என்றால் விடமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடவைக்க வேண்டும். அது போலதான் மக்களையும் மாற்ற வேண்டும். 


வலைப்பதிவெழுதுவதால் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்ய முடியாத எதையும் நாம் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை ஆனால் நண்பனை விட எதிரி எம்மை அவதானித்துக்கொண்டிருப்பான், எனவே நமது வலைப்பதிவை நித்தியானந்தாவையோ, பகவானையோ பின்பற்றும் ஒருவன் படித்துத் திருந்தத்தேவையில்லை, படித்தால் மட்டும் போதும் அதுவே அவன் மனதில் மக்கள் நமக்கு எதிரிகளாகிவிட்டனர் என்று ஒரு பயத்தை உருவாக்கும்.


ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். 


ஒரு சிறுவன் அம்மா அங்கே சுனாமியடித்து 1000 பேர் பலியாம் என்கிறான், அதற்கு அம்மா போடா பொய் சொல்லாதே, இல்லை அம்மா பேப்பரில் போட்டிருக்கிறார்கள் என்கிறான். பத்திரிகை மக்களிடையே பிரபல்யம் அடைந்த அளவுக்கு வலைப்பதிவு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. தொலைக்காட்சியில் அழுகை நாடகங்களையும் குடும்பநாடகங்களையும் போடும் நாடகங்கள்தொலைக்காட்சி சேவைகள் இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ? ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.


நினைத்தவுடம் மாறு என்றால் மாறமாட்டார்கள் கொஞ்சம் கோஞ்சமாக மாற்ற வேண்டும், அதற்கு ஊடகங்கள் அனைத்தும் உதவவேண்டும். 
ஏற்கனவே நான் பதிவிட்ட இந்தப்பதிவை மீள்பதிவிட்டிருக்கிறேன், ஆசாமி நித்தியானந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். தன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் பதிலளிக்கிறார்


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..  

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....




கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்




ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

****************************************************








போலி போலி போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. நேற்றிரவு 8.30 சன் செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கும். யாருமே பெரிதும் எதிர்பார்க்காத சாமியார் ஒருத்தர் மாட்டுப்பட்டார். நித்தியமும் ஆனந்தமாக இருக்க வேண்டும், கதவைத்திறவுங்கள் காற்று வரட்டும் என்றவருக்கு கதவைத்திறந்தால் ஊடகங்களின் கமராவும் வரும் என்று தெரியவில்லைப்போலும்.


இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார் கண்டுபிடிப்பது? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா? 


கட்டாயம் இல்லை, இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான், இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான், இன்னொருத்தன் மஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புகிறார்கள், காசை வாரி இறைப்பார்கள். அவன் ஏன் கதவைத்திறக்கச் சொல்லுறான் உங்களிடமிருந்து அப்பதானே கொள்ளையடிக்கலாம். இவர்களை மக்கள் நம்பக்காரணம் ஒன்றே ஒன்று இவர்களின் பேச்சு, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். ஆனந்தம் என்பான், வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.


புத்தர், யுசு, நபிகள் இப்படியும் மகான்கள் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை,மாலைபோடும் நிகழ்வு நடத்தவில்லை, ஏன் தாங்கள் அவதாரம் என்றோ கூறவோ மஜிக்கோ ஒன்றுமே செய்யவில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள்.


அவர்களின் வழியில் வருகிறேன், நான் சாமி என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது. இப்படி எத்தனையோ பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளை சனம் போகத்தானே செய்யுது. அரசாங்கம் இருக்குத்தானே போலீஸ் இருக்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாத படி மேலிடத்து அதிகாரிகள் போலீசின் கைகளை கட்டிப்போடுகிறார்கள், அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்ற பயம்.


இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்