Related Posts with Thumbnails




சில பாடல்களைக் கேட்ட உடனேயே அடடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல் என்று மெய்சிலிர்த்துப் போய் அப்பிடியே மீண்டும் மீண்டும் வரிகளைக் கேட்கத் தூண்டும். அந்த வகையில் "ஓ மகசீயா.." பாடலுக்குப் பிறகு எனக்கு பிடித்துப் போன(கிட்டத்தட்ட பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்துப் போச்சோ என்று நினைக்க வைத்த) பாடல் கலியுகம் படத்தில் இடம்பெற்ற "அஜல உஜல மசாலா கம்பனி" என்ற பாடல். என்ன ஒரு தத்துவமான வரிகள், அதுவும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வித்தியாசமான கோணங்களில் அர்த்தங்களை அள்ளித் தெளித்து அப்படியே வயிறு வெடித்து பல்லு எல்லாம் கொட்டி, தாடைகளில் எல்லாம் வலியெடுக்கும் அளவுக்கு சிரிப்பை ச்சா சிந்தனையை தரும் பாடல்.

"வாழ்வு என்ன மாயமான வாழ்வுதானடா - உன்
ஆட்டமெல்லாம் முடிந்த பின்னே ஓட்டம் தானடா"

என்று வாழ்க்கை திருக்குறள் போல இரண்டு வரிகளில் தெளிவாகச் சொல்லிவிடுகிறது இந்த வரிகள். அதற்குப் பிறகு வரும் வரிகளின் அர்த்தம் தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரிகள்.

"அஜல உஜல மசாலா கம்பனி
பல்பலா ரஸ்கோலா பிஸ்கோத்துக் கம்பனி"

அதாவது அஜல உஜல என்ற மசாலா தயாரிக்கும் கம்பனியில் வேலை செய்யும் பற்பல ஊழியர்களுக்கு கோலாவும் பிஸ்கோத்தும் கொடுக்க வேண்டும். அதாவது இந்த வரிகளில் ஏழைகளுக்கு வேலை நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் மரண கானா விஜி.

வானத்தில தேவதை போல மனசில வச்சேன்
உள்ள ஓடும் உசிர நானும் கையில புடிச்சேன்
உன் மூக்கிலக்கீர முன்முத்து மூக்குத்தி மூளையைப் பிரட்டுது
டப்பா சோறு போல மனசு டான்சு ஆடுது

மரண கானா விஜியின் அற்புதமான குரலில், சலனமில்லாமல் ஆரம்பித்து மெதுவாக அழகாக நகர்ந்து வரும் பாடலின் அடுத்து வரும் இந்த வரிகள் இன்னும் சில காலங்களில் காதல் காவியங்களில் இடம்பிடித்து தமிழ் இலக்கிய உலகை உலுக்கி ஆட்டிப்படைக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

தேவதைகள் பூமிக்கு வருவதில்லை எனவே தேவதையை கவிஞர் மனதிலே வைத்துக் காதலிப்பதாகவும், நாடித்துடிப்பை அறிய வைத்தியர்கள் கையில் நாடி பிடித்துப் பார்ப்பதை கருத்தில் கொண்டு உள்ள ஓடும் உசிரை கையில புடிச்சேன் என்று சொல்லும் கற்பனை அபாரம்.

பெண்களின் மூக்குக்கும் மூக்குத்திக்கும் மூளைக்கும் ஆரம்ப எழுத்து மட்டுமல்ல ஆண்களின் மூளையைப் பிரட்டி யோசிக்க வைக்கக் கூடிய அற்புத ஆற்றல் இருக்கிறது என்பதை எதுகை மோனையுடன் சொல்லியிருப்பதும், சோற்று டப்பாவை கொண்டு செல்லும் போது டப்பாவுக்குள் இருக்கும் சோறு எப்படியெல்லாம் பாடுபடுமோ அப்படிப் பாடுபடுவதாகக் குறிப்பிடுவது வரை பிரமாதம்.

ஓட்ட மைதானத்தில வெளையுதடா நெல்லு
நீ சண்டை வந்தா எடுக்காதடா கல்லு
பீல் பண்ணாதடா லச்சை நான் காறி உமிழ்வேன் எச்சை
நீ சாராயத்தைக் குடிச்சா நான் சண்டையில புலி
சென்ரல் ஜெயில்ல அண்ணன் தம்பிக்கு குடுக்கிறான்டா கழி
கழியின்னா கெவரு இது கவர்மன்டு பவரு
அட என்னா தம்பி நிக்குற இடத்த விட்டு நவரு
கஞ்சித்தண்ணி புல்லாவுக்கு
பழக்கத்திலுள்ள பாப்பாவுக்கு ஊத்தினான்டா தேரு
மச்சான் அவ போறா அவ எனக்கு மொற
கையால விட்டேன் பாரு அறை
வாயில மூக்கில தள்ளப் போவுது நொரை
அது வரை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த பாடல் திடீரென்று வேகம் பிடித்து பள்ளத்தில் இறங்கிய பிரேக் இல்லாத சைக்கிள் போல வேகமாகச் செல்கிறது.

ஒவ்வொரு வரியும் ஆச்சரியங்களையும், வியப்பையும், மரண கானா என்ற பெயர் ஏன் தனக்கு வைக்கப்பட்டது என்பதையும் பாடலாசிரியர் காட்டுவதாகவும் அமைகிறது. இந்தப்பாடல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்து அனைவது தலையையும் பிய்த்துக் கொண்டு கட்டாயம் தெருத்தெருவாகஅலைய வைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. =P

உண்மையில் நடந்தது என்ன?
அன்று அதிகாலை 9 மணிக்கு 'ஈடா ஈடா ஈடா..' என்று ஃபோன் அடிக்க யார்ரா அது காலக்காத்தாலயே கொசுத்தொல்லை என்று சலித்துக் கொண்டே கண்ணை மூடிய படியே ஹலோ என்றேன். மறுமுனையில்

"மச்சி நான்தான்டா, இப்ப TRINCOல தான் வந்து நிக்குறன், Main Street Nation trust Bankல நிக்கிறன் வாறியாடா செட் ஆவம்" என்று ஒரு குரல்.

"சும்மா போ மச்சி, தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. நீ எங்க வீட்டுக்கு வாடா, என்றேன்

"டேய் எனக்கு இடம் எல்லாம் தெரியாதுடா, நீ வாடா. என்றான் நண்பன் மறுபடியும்.

இன்னாடாது வம்பாப் போச்சுன்னு சரி பத்து நிமிஷம் என்று ஃபோனைக் கட் பண்ணினேன்.

*******

10 நிமிடங்களின் பின்னர் (அதாவது 35 நிமிடங்களின் பின்)

இது திருகோணமலையில் நேஷன் ட்ரஸ்ட் வங்கி திறப்புவிழாவாம், அதற்குத்தன்னை அழைத்ததாகவும், அதனாலேதான் தான் வந்ததாகவும், நண்பன் சொன்னான். ஓகே மச்சான் அப்பறம் கை எப்பிடி இருக்கு என்று கேட்டேன், உடனே கடுப்பாகி, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

அதன் பிறகு விவிஎஸ் லக்ஸ்மன் ஓய்வு அறிவிக்கப் போவதாக சொன்னான், எப்ப அறிவிக்கப் போறானோ தெரியல முதல் அசாட் ராஃப், ஆன்ரியா வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். அதன் பிறகு "இண்டைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மச்சி, கோவிக்காத அடுத்த முறை வீட்டுக்கு இன்வைட் பண்ணுறன்" எண்டு சொல்லிட்டு நான் விடைபெற்று வந்திட்டேன்.

கற்பனையில் நடந்தது என்ன?

அன்று சங்கா Nations trust Bank திறப்பு விழாவுக்கு வருவதாக கேள்விப்பட்ட உடனேயே அடித்துப் பிடித்து ஓடிப்போய் Bank வாசலில் நின்று கொண்டோம். ஆனால் அங்கே ஏற்கனவே கூட்டம் அலை மோதியது. வெளியெ நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து உள்ளே முட்டி மோதி நுழைந்தால் சங்கா சாப்பிடப் போய்விட்டார்  என்றார்கள்.

காத்திருந்து பார்க்கலாம் என்று பார்த்தால் பாங்க் ஊழியர்கள் ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே Account திறக்க வேண்டும் என்று சொல்லி form வாங்கி கையில் வைத்துக் கொண்டோம். சங்கா வர அரைமணி நேரத்துக்கு மே ஆகும் போல் தெரியவே, Account formமில் பின் பக்கத்தில் பின்வருமாறு எழுதி வைத்திருந்தோம்.

சங்கா வந்ததும் உடனடியாக அதைத் தூக்கிக் காட்டி போட்டோ எடுக்க வேண்டும் சங்கா என்று கேட்க உடனடியாக கட்டாயம் எடுப்போம் வெளியே வாருங்கள் என்று எங்களை அழைத்துக் போய் ரசிகர்கள் அனைவரையும் நான்கு நான்கு பேராக அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம். அப்போதுதாக் புரிந்தது சங்கா எப்பயுமே 4க்கு ட்ரை பண்ணுவதால் தான் அடிக்கடி 100, 200 என்று அடிக்கிறார் என்று...

டிஸ்கி: பதிவில் SUBTITLE எல்லாம் சரியாகத்தான் போடப்பட்டுள்ளது =P
வாய மூடி சும்மா இருடா!
ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை சலிக்கும் வரை திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்துவிடுவேன். அந்த வகையில் சமீபகாலமாக கேட்கும் பாடல் முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா..."

வாய மூடி சும்மா இருடா என்று ஆரம்பிக்க இது ஏதோ வை திஸ் கொலைவெறி மாதிரிப் பாடல் என்று நினைத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப்பிறகு ஆலாப் ராஜுவின் குரவில் வரும் மதன் கார்க்கியின் வரிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொண்டு அப்பிடியே கண்ணை மூடி வேறு உலகத்துக்குத் தூக்கிப் போய்விடுகிறது.

"கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!"
 என்பதில் தொடங்கி நேற்று இன்று நாளை என்று காதலைப் பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம். அதுவும் ஆலாப் ராஜுவின் குரலில் கோர்வையாக வந்து விழும் வரிகள் மனதுக்க இதம்.

"என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?"

என்னமோ ஏதோவிலிருந்து மதன் கார்க்கியின் வரிகளுக்கு ரசிகனாகிப் போனேன். இன்னும் புதிதுபுதிதாய் ரசிக்க வைக்கிறார். இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரிகள்
"கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!"
தலைவா யு ஆர் கிரேட்!!!

*************
விதி (குறும்படம்)


எனது நண்பர்களின் முயற்சியில் உருவான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்திரைப்படம். பார்த்து உங்கள் கருத்துங்களை அவர்களுப்பு வழங்குங்கள்.

No Comments =P



Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்