Related Posts with Thumbnails
Showing posts with label சினிமா. Show all posts




சில பாடல்களைக் கேட்ட உடனேயே அடடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல் என்று மெய்சிலிர்த்துப் போய் அப்பிடியே மீண்டும் மீண்டும் வரிகளைக் கேட்கத் தூண்டும். அந்த வகையில் "ஓ மகசீயா.." பாடலுக்குப் பிறகு எனக்கு பிடித்துப் போன(கிட்டத்தட்ட பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்துப் போச்சோ என்று நினைக்க வைத்த) பாடல் கலியுகம் படத்தில் இடம்பெற்ற "அஜல உஜல மசாலா கம்பனி" என்ற பாடல். என்ன ஒரு தத்துவமான வரிகள், அதுவும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வித்தியாசமான கோணங்களில் அர்த்தங்களை அள்ளித் தெளித்து அப்படியே வயிறு வெடித்து பல்லு எல்லாம் கொட்டி, தாடைகளில் எல்லாம் வலியெடுக்கும் அளவுக்கு சிரிப்பை ச்சா சிந்தனையை தரும் பாடல்.

"வாழ்வு என்ன மாயமான வாழ்வுதானடா - உன்
ஆட்டமெல்லாம் முடிந்த பின்னே ஓட்டம் தானடா"

என்று வாழ்க்கை திருக்குறள் போல இரண்டு வரிகளில் தெளிவாகச் சொல்லிவிடுகிறது இந்த வரிகள். அதற்குப் பிறகு வரும் வரிகளின் அர்த்தம் தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரிகள்.

"அஜல உஜல மசாலா கம்பனி
பல்பலா ரஸ்கோலா பிஸ்கோத்துக் கம்பனி"

அதாவது அஜல உஜல என்ற மசாலா தயாரிக்கும் கம்பனியில் வேலை செய்யும் பற்பல ஊழியர்களுக்கு கோலாவும் பிஸ்கோத்தும் கொடுக்க வேண்டும். அதாவது இந்த வரிகளில் ஏழைகளுக்கு வேலை நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் மரண கானா விஜி.

வானத்தில தேவதை போல மனசில வச்சேன்
உள்ள ஓடும் உசிர நானும் கையில புடிச்சேன்
உன் மூக்கிலக்கீர முன்முத்து மூக்குத்தி மூளையைப் பிரட்டுது
டப்பா சோறு போல மனசு டான்சு ஆடுது

மரண கானா விஜியின் அற்புதமான குரலில், சலனமில்லாமல் ஆரம்பித்து மெதுவாக அழகாக நகர்ந்து வரும் பாடலின் அடுத்து வரும் இந்த வரிகள் இன்னும் சில காலங்களில் காதல் காவியங்களில் இடம்பிடித்து தமிழ் இலக்கிய உலகை உலுக்கி ஆட்டிப்படைக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

தேவதைகள் பூமிக்கு வருவதில்லை எனவே தேவதையை கவிஞர் மனதிலே வைத்துக் காதலிப்பதாகவும், நாடித்துடிப்பை அறிய வைத்தியர்கள் கையில் நாடி பிடித்துப் பார்ப்பதை கருத்தில் கொண்டு உள்ள ஓடும் உசிரை கையில புடிச்சேன் என்று சொல்லும் கற்பனை அபாரம்.

பெண்களின் மூக்குக்கும் மூக்குத்திக்கும் மூளைக்கும் ஆரம்ப எழுத்து மட்டுமல்ல ஆண்களின் மூளையைப் பிரட்டி யோசிக்க வைக்கக் கூடிய அற்புத ஆற்றல் இருக்கிறது என்பதை எதுகை மோனையுடன் சொல்லியிருப்பதும், சோற்று டப்பாவை கொண்டு செல்லும் போது டப்பாவுக்குள் இருக்கும் சோறு எப்படியெல்லாம் பாடுபடுமோ அப்படிப் பாடுபடுவதாகக் குறிப்பிடுவது வரை பிரமாதம்.

ஓட்ட மைதானத்தில வெளையுதடா நெல்லு
நீ சண்டை வந்தா எடுக்காதடா கல்லு
பீல் பண்ணாதடா லச்சை நான் காறி உமிழ்வேன் எச்சை
நீ சாராயத்தைக் குடிச்சா நான் சண்டையில புலி
சென்ரல் ஜெயில்ல அண்ணன் தம்பிக்கு குடுக்கிறான்டா கழி
கழியின்னா கெவரு இது கவர்மன்டு பவரு
அட என்னா தம்பி நிக்குற இடத்த விட்டு நவரு
கஞ்சித்தண்ணி புல்லாவுக்கு
பழக்கத்திலுள்ள பாப்பாவுக்கு ஊத்தினான்டா தேரு
மச்சான் அவ போறா அவ எனக்கு மொற
கையால விட்டேன் பாரு அறை
வாயில மூக்கில தள்ளப் போவுது நொரை
அது வரை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த பாடல் திடீரென்று வேகம் பிடித்து பள்ளத்தில் இறங்கிய பிரேக் இல்லாத சைக்கிள் போல வேகமாகச் செல்கிறது.

ஒவ்வொரு வரியும் ஆச்சரியங்களையும், வியப்பையும், மரண கானா என்ற பெயர் ஏன் தனக்கு வைக்கப்பட்டது என்பதையும் பாடலாசிரியர் காட்டுவதாகவும் அமைகிறது. இந்தப்பாடல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்து அனைவது தலையையும் பிய்த்துக் கொண்டு கட்டாயம் தெருத்தெருவாகஅலைய வைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. =P

என்னமோ ஏதோ...

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:07 AM | 7 பின்னூட்டங்கள்
என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
என்னமோ ஏதோ..
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!

 கோ படத்தின் என்னமோ ஏதோ - இந்தப்பாடலைக் கேட்டுக்கும் போது இவை மட்டுமல்ல இன்னும் என்னமோ ஏதோ எல்லாம் செய்கிறது இதன் இசை. ஹாரிஸ் ஜெயராஜ் அப்படியே மனதில் தேனைப் பிழிந்து ஊற்றி என்னமோ ஏதோ செய்துவிட்டார். எனது மொபைல் ரிங்டோன், அலாரமிலிருந்து, நீங்கள் அழைப்பெடுக்கும் போது போகும் Caller tune வரை அனைத்தையும் என்னமோ ஏதோ ஆட்கொண்டுவிட்டது. தினமும் ஆலாப் ராஜுவின் குரல் என்னைச்சுற்றி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.





ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

இரண்டாவது விடயம் இப்பாடலின் வரிகள். மதன் கார்க்கியின் இந்த வரிகளுக்கு சல்யூட். என்ன ஒரு நவீனத்துவமான கற்பனை. படத்தில் போட்டோகிராபராக வரும் ஹீரோவுக்கு காதல் வந்தால் மனதில் Out of focus ஆக விம்பம் தோன்றுவதாக கூறுவது போல் எழுதிய வரிகள் மனதைச் சிலிர்க்க வைக்கிறது.

Let’s Go..
Wow.. Wow..
உங்களின் தமிழச்சி .. என்னமோ ஏதோ You’re looking too Black,
மறக்க முடியலையே என் மனம் அன்று..
உன் மனசோ Lovely,
இப்படியே இப்போ
உன் அருகில் நான் வந்து சேரவா இன்று
Lady Looking Like a Cindrella Cindrella,
Naughty look-u vita தென்றலா
Lady Looking Like a cindrella cindrella,
என்னை வட்டம் இடும் வெண்ணிலா
Lady Looking Like a Cinderella Cinderella,
Naughty look-u vita தென்றலா..
Lady Looking Like a Cinderella Cinderella,
என்னை வட்டம் இடும் வெண்ணிலா

பாடலில் அடுத்து பிடித்தது என்னமோ எம்சிஜாஸ், ஸ்ரீசரணின் இந்த RAPதான், அமைதியாக பெருவிரலையும் தலையையும் ஆட்டியபடி கண்ணைமூடி ரசித்துக் கொண்டிருக்கும் போது வரும் பாடலில் இந்த இடம் பவர்பிளேயில் சிக்ஸர்கள் பறக்கும் போது ஏற்படும் உணர்வைக் கொடுக்கிறது.

 என்னமோ ஏதோ... இப்பாடல் சிக்கி தவிக்குது மனதில், ரெக்கை விரிக்குது கனவில், விட்டுப் பறக்க மட்டும் மாட்டேன் என்கிறது தொலைவில். என்னமோ ஏதோ நீங்களும் இன்னொருமுறை கேளுங்களேன்.


எந்திரன் இந்தப்படத்திற்கு விளம்பரம், விழாக்கள், ஏன் ட்ரெயிலருக்குக்கூட டிக்கெட் என்று எதிர்பார்ப்புகளை அள்ளிக்குவித்திருக்கிறது. ஆனால் எந்திரன் கற்பனை விழா அட்டவணையும் அந்த விழாவில் என்ன பஞ்ச் டயலாக் போடுவார்கள் என்றும் சின்ன கற்பனை வருமாறு..:P

Endhiran-Movie-Latest-Unseen-Photo-Gallery-Stills-01

எந்திரன் படபூஜை AND படபூஜை உருவான விதம்- ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்

எந்திரன் போஸ்டர் வெளியீடு AND போஸ்டர் உருவான விதம்- போஸ்டருங்கதான்டா கூட்டமா வரும் படம் சிங்கிளாத்தான் வரும்

எந்திரன் போஸ்டர் ஒட்டும் தினம் - கஷ்டப்படாம எதுவுமே ஒட்டாது கஷ்டப்படாமக் ஒட்டுப்படுறது என்னைக்குமே நிலைக்காது

எந்திரன் இசை வெளியீடு AND இசை வெளியீடு உருவான விதம் - நான் ஒரு தடவை பாடினா நூறு தடவை பாடின மாதிரி

எந்திரன் ட்ரெயிலர் டிக்கெட் வெளியீடு AND ட்ரெயிலர் டிக்கெட் உருவான விதம்– அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது என் பாலிசி(டிக்கெட்)

endhiran-music-review

ட்ரெயிலர் வெளியீடு AND ட்ரெயிலர் உருவான விதம்- கண்ணா இது ச்சும்மா ட்ரெயிலர்தாம்மா மெயின் பிச்ச நீ இன்னும் பாக்கல

எந்திரன் கட்டவுட் வெளியீடு AND கட்டவுட் உருவான விதம்–  கட்டவுட் பாத்தாலே சும்மா அதிருதில்ல…

எந்திரன் கட்டவுட் திறப்புவிழா - நான் ஒரு கட்டவுட் தொறந்தா 100 கட்டவுட் திறந்த மாதிரி

எந்திரன் திரைப்படம் வெளியிடும் திகதி அறிவிப்பு விழா – ஒக்டோபர் ஒண்ணாந்தேதி படம் வராமப் போச்சு இந்தப்படையப்பன் மூச்சு நின்னு போச்சு.

எந்திரன் திரைப்படம் வெளியீடு AND திரைப்படம் உருவான விதம்- நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில கரக்டா வருவேன்

press-bg11

இந்த எல்லா நிகழ்ச்சிகளும் மறு ஒளிபரப்பு – கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு..:P

தமிழுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பாடசாலையில் சிறுபிள்ளைகள் ஆசிரியரிடம் முறையிடுவது போல குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் புத்திசாலிகளின்(:P) எதிர்காலத்திட்டங்கள்

1

 2

 3

 4

 5

 6

10

 7

 8

 9

அண்ணனுக்காக...(:P)

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:54 AM | 27 பின்னூட்டங்கள்
vijay-wallpaper
நடிப்போ அக்டிங்கோ
தெரியாத விஜய் பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?


சந்திரசேகரன் பெத்த
அண்ணே! தமிழ்மகனே!
அழகாய் டான்ஸ் ஆட
இடுப்புல்வலி பொறுத்தவனே!


கில்லிவிஜய் பிறப்பான்னு
கனவிலயும் நீ நினைச்சதில்ல
விளையாட்டாய் நடிச்ச ஒண்ணு
கில்லிவிஜய் ஆயிருச்சு


கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
காமடி பண்ணும்போது
எப்பிடியெப்பிடி சிரிச்சிருப்பேன்?


கத்தி நடிப்பவனோ
சூப்பர் ஸ்டாராகப் பிறந்தவனோ?
தரணி படத்தில் நடிக்க வந்த
காமடி ஹீரோ இவந்தானோ?


இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
காமடிப்படத்தையும் ரசிச்சு நடிச்ச ஒன்ன
நெனச்சா அழுகவரும்


கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
குனிஞ்சு நிமிந்து ஆடுவியே
குத்தாட்டம் போடுவியே

மண்டையில கிர்ர்ரெங்கும் 
கால்விரல்கள் கதிகலங்கும்
உன்னைப்போல் ஆடப்போயி
கால் சுழுக்கி நிக்குதுங்ணா

கைவிரலை மடிச்சு முறுக்கி
நரம்ப பொடைக்க வச்சு
எள்ளும் கொள்ளும் ஒண்ணா
வெடிக்கவைக்கும் உன்னழகு 


பாத்தாலே பயம் வருமே
பச்சைத்தண்ணி பத்திக்குமே
அம்மி போல் நீ அடிச்சா
அடுத்ததெரு போய் விழுவான்


பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சாலும்
பாதத்தாலே அடிச்சாலும்
உன் மனதில் நெய்வடியும்
அன்பில் தேனொழுகும்

பி.கு - வைரமுத்து ஐயா ப்பிளீஸ் மன்னிக்கவும்
நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் -2010க்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக எமது வாக்கெடுப்பில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. முடிவுகளை அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

இந்த வாக்கெடுப்பு நிகழ்வை நடாத்தி முடிக்க பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பதிவர்கள் பல்வேறு வகையான உதவிகளைச் செய்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது பதிவுலகில் நாங்கள் முன்னெடுத்த ஒரு சிறு முயற்சி. வெற்றியடைந்திருக்கிறோம். நாங்கள் வி்ட்ட நிறைகளை விட குறைகள், பிழைகள் இருப்பின் கட்டாயம் சுட்டிக்காட்டுங்கள் அடுத்தமுறை கட்டாயம் திருத்திக்கொள்வோம். 

மீண்டும் எமக்க ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..:)





திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் வாக்கெடுப்பு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.அனைவரும் தமது ஜனநாயக கடமைகளை செவ்வனே செய்து வருகிறார்கள். இதுவரை மூஞ்சிப்புத்தகம், ருவிட்டர், இணையமூலம் இவ்விடயத்தை அறிந்து பலர் தங்கள் பொன்னான வாக்குகளை குத்தி வருகிறார்கள். எனவே இதுவரை வாக்களிக்காதவர்கள் உடனடியாகச் சென்று http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html இங்கே வாக்குகளை செலுத்துங்கள்.

கமலா சிம்புவா? அஞ்சலியா,த்ரிசாவா? முத்துக்குமாரா,தாமரையா? அங்காடித்தெருவா,விண்ணைத்தாண்டி வருவாயாவா? முடிவு உங்கள் கைகளில். உடனடியாகச்சென்று வாக்களியுங்கள்.


குத்த ரெடியா?

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:10 PM | 8 பின்னூட்டங்கள்


சென்றமுறை சதீஸ் அண்ணா தனது சினிமாத்தாகத்துக்கு தீனிபோடும் விதமாக திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கும்முயற்சியில் ஈடுபட்டு அது அனைவரதும் நல்லாதரவைப்பெற்றதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இம்முறை ஒரு குழுவாக செயற்பட்டு நாம் இம்முறையும் திரையுலகுக்கு விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடாத்த எண்ணியே இப்பதிவு சதீஸ் அண்ணாவின் கில்லி ஸ்டைலில்......

வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம். 
எனவே நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் கலந்து எமது திரையுலகக் கலைஞர்களுக்கு உங்கள் வாக்குகளை போட்டு சிறந்த தெரிவுக்கு வித்திடுவீர்களாக... 
வாக்குக் குத்த ரெடியா?? 
இருபது வருடங்களுக்குப்பிறகு எப்படி இருப்பார்கள் என்று காட்டும் ஒரு தளம்(http://www.in20years.com/) தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே, அந்தத்தளத்தின் சுட்டி நேற்றுத்தான் என்கண்ணில் பட்டது உடனே சில பிரபலங்களின் படங்களை போட்டுப்பார்த்தேன் எப்படி இருந்திச்சு தெரியுமா? அட நீங்களே பாருங்க

இருபது வருடங்களுக்குப்பிறகும் இலங்கையின் ஓப்பினிங் பாட்ஸ்மன் இவர்தானாம்

மிஸ்டர் கூல்(COOL)

மிஸ்டர் கிறிக்கற்

மிஸ்டர் டைமிங்

மிஸ்டர் ஸ்பின்

மிஸ்டர் கிளாஸ்(CLASS)

ஐயோ இது காவல்காரனின் கெட்டப் சேஞ்ச் இல்லைங்கோ...

இதுதான் கார்த்திக் சாரி சிம்பு, 

நயன்தாரா டுவென்டிநைன் தாராவாகும் போது

இருபது வருடத்துக்குப்பிறகு ஜெசி ஜெசி

இந்தப்படம் பதிவர் சுபாங்கன் அண்ணாவுக்கு சமர்ப்பணம்

NO COMMENTS

வைகைப்புயல் வடிவேலுவின் சிறப்பான நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் "சுறா" படத்தை இன்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆரம்பத்திலேயே கடலுக்குள்ளிருந்து கையைக்கூப்பிய படியே ஒருவர் வெளியே வருவதும், நாம் அவர் ஹீரோ வடிவேலுதான் என்று நினைத்துப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒருவரும் எதிர்பாராத விதமாக ஹீரோ வடிவேலுவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயை காட்டி புதிதாக ஒரு முயற்சியை எடுத்திருக்கும் இயக்குனரை எப்படிப்பாராட்டுவதென்று தெரியவில்லை. 

அதன் பின்னர் படகுப்போட்டிக்கு இல்லாத மீசையை முறுக்கியபடி கிளம்பும் வடிவேலுவை ஊரே சேர்ந்து வாழ்த்தி அழைத்துக்கொண்டு செல்வதும் அவர்களுக்கு வடிவேலு தனது மீன்பிடி வலையை விற்று ஆளுக்கு 50 ருபா கொடுப்பதும் அவரின் இரக்க குணத்தைப்பறைசாற்றும் காட்சிகளாக அமைந்துள்ளன. ஆனால் வழக்கமாக தனது படங்களில் மீசையை வரைந்து வரும் வடிவேலு இந்தப்படத்தில் கெட்டப் சேஞ்ச் பண்ணி மீசை வரையாமல் வருகிறார். அதன் பின்னர் நாய்க்குட்டி இறந்தமைக்காக தற்கொலை செய்ய கடலுக்கு வரும் தமன்னா மீது வடிவேலு காதல் கொள்வதும் ஆனால் தமன்னா விஜயைத்தான் காதலிக்கிறார் என்று தெரிந்து வடிவேலு தனது காதலை மனதுக்குள்ளேயே போட்டு பூட்டுப்போட்டுப் பூட்டி சாவியைக்கடலுக்குள் எறிந்திருப்பதும் தியாகத்துக்கு அச்சாணி போடும் காட்சிகளாக அமைந்திருக்கிறது. 

அடுத்ததாக தான் காதலித்த காதலி தன்னிடமே வந்து விஜயைத் தான் காதலிப்பாதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டபோது, நட்புக்காக தனது UMBRELLA என்ற பெயருக்கு ஏற்றாற் போல் மனதைக் குடையாக விரித்து உதவுவது குறிப்பிடத்தக்கது. விஜய்க்காக ஏணி தூக்கிக் கொண்டு போவதும், அதன் பின்னர் அவரைத் தேடி வரும் ஒரு கொலைக் கைதிக்குகூட டீ(TEA), சிகரட் என எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் அவரது இளகிய மனதைக் காட்டுவதாக உள்ளன.

கடைசியில் தனது நண்பனைக்காப்பாற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் கஞ்சா கொண்டு போய் வைப்பது அவரது புத்திசாலித்தனத்தை பறைசாற்றியுள்ளது. ஆனால் தமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படியான ஒரு படம் இனி வருமா என்பது சந்தேகம்தான், ஏனெனில் இந்தளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. படத்தின் தலைப்பைக்கூட அம்பிரல்லா என்று வைக்காமல் சுறா என்று ஹீரோவின் நண்பர் கதாபாத்திரத்தின் பெயரைவைத்து அது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அதுதவிர ஹீரோவுக்கு ஒரு பாட்டுக்கூட இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது, இன்னுமொரு வித்தியாசமான விடயம். அதுவும் அந்த துணை நடிகர் வரும் அந்த டூயட் பாட்டு கர்னாடக சங்கீதத்தையும், வெஸ்டேர்னையும் கலந்து அப்பிடியே கானாவுக்குள் தொட்டுத் தொட்டு வரும் இடங்கள் அற்புதம். ஒரு தடவை அந்த "நான் நடந்தால் அதிரடி" பாடலைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

சுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+அம்பிரல்லா +:P


போட்டி

**********************************************************
சுறாவை வெற்றிபெறச்செய்த திமிங்கிலத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து

அவர் இளைய தளபதி, இவர் இளைய வலைப்பதி..

அவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..

அவர் பாடுறதில குருவி, இவர் அறிவில அருவி..

அவர் ஆதி, இவர் அவரில பாதி

அவர் பிரியமுடன், இவர் அவரை பிரிச்சு மேய்வதுடன்

அவர் சுறா, இவர் சுபா..

BIRTHDAYக்கு TREAT கேட்டா அவர் ஆயிடுவார் போக்கிரி, 
ஆனா இவர் கூட்டிகிட்டுப்போவார் பேக்கரி... பேக்கரி... பேக்கரி..


IPL கலாட்டா - 03

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:10 PM | 14 பின்னூட்டங்கள்










தயவு செய்து இந்தப்பதிவைப்படிக்காதவர்கள் படித்துவிட்டு வரவும், சத்தியமா இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவல்ல


தமிழ்ப்படத்தின் ஓ.. மகசீயா பாடல் - இந்தப்பாடலை இதுவரை எத்தனை தடவை கேட்டிருப்பேன்? ஹீஹீ அதையெல்லாம் எண்ணிகிட்டிருக்க முடியுமா..:p அப்படியே கண்ணை முடிக்கொண்டு ஏன் திறந்துகொண்டு கேட்கும் போதுகூட என்னை சிரிப்புலகுக்கு கூட்டிக்கொண்டு போய் காமடி மன்னர்களின் மத்தியில் நிற்க வைத்தது போல ஒரு உணர்வு. மீண்டும் மீண்டும் கக்கபிக்கே கக்கபிக்கெ என்று சிரிக்கத்தூண்டும் பாடல். இந்தப்பாடலைக் கேட்டும்போது அடிவயித்திலிருந்து ஒரு சிரிப்புபெடி அப்படியே மேலே ஏறி கபாலம்வரை சென்று அங்கிருக்கும் முடியை கம்பிபோல எழுப்பிவிட்ட பின்னர், வாய்பழியாக வெடித்துப்பீறீ கலகலவென சிரிப்பு கொட்டுகிறது.  


ஸ்வேதாவின் குரலில் சலனமில்லாமல் ஆரம்பித்து அப்படியே கீபோர்ட் இசை மற்றும் ஹரிஹரன் FEEL பண்ணிப்பாடும் குரல் ஆகியன அப்படியே ஒரு மொக்கையர் உலகத்துக்குள் இழுத்துப்போட்டுவிடுகிறது. பாடல் முழுவதும் உறுத்தாமல் வந்துபோகும் அர்த்தமுள்ள வரிகள் பாடலின் சிறப்பம்சம்.  


பாடல் படமாக்கப்பட்ட விதம்தான் இந்தப்பாடலின் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் வெளிப்படுத்தி மப்பும் மந்தாரமுமான காலைவேளையில் ஆரம்பிக்கும் பாட்டு கூவம் ஆற்றங்கரையோரமாக கதாநாயகியை நாயகன் விட்டு துரத்துவதும் அதன்பின்னர் தனது மந்திரஜாலத்துக்குள் நாயகியைக்கட்டுப்படுத்திய நாயகன் நாயகியை பாடும்படி செய்யும் சைகையை உணர்ந்து அவர் பாட ஆரம்பிக்கும் காட்சி அற்புதம்.  


ஓ.. மகசீயா.. ஓ.. மகசீயா.. 
நாக்கமுக்க நாக்கா ஓ.. சக்கலாக்கா... 
ஓரண்டக்கா..  


மகசீயா என்று அக்கறையுடன் காலையில் எழுந்ததும் நாக்கு மூக்கு கழுவினியா? பல்லுவிளக்கி ஓரமாச்சப்பித்துப்பினியா என்று காதலன் காதலி ஆகியோர் அக்கறையுடன் விசாரிப்பத்துக்கொள்வது போல ஆரம்பிக்கும் வரிகள் நாமும் பல்லுவிளக்கினோமா என்று ஒருதடவை சிந்திக்கவைக்கிறது. 


ஓ..லாகி ஓ..லாகி 
ஆயக யகியகி மெஹோ மெஹோ 
டைலாமோ டைலாமோ 
ரஹதுல்ல சோனாலி..ஓ..  


லாகி என்று காதலனை அழைத்து ஆயா வந்து யகீஈ.. யகீஈ.. என்று ஈ என்ன பல்லை விளக்கிவிட்டார் என்று குறிப்பிடுவது முதல் ஆமாம் ரஹத்துல்ல சோனாலி என்ற ஆயா தைலம் கூடத்தடவி விட்டார் என்று குறிப்பிடுவது, தைலத்தின் வாசனையை அப்படியே மூக்கின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.


சாம்ப சம்பாலே..
ஓ சூசே சாயோ சாயோ..
ஹசிலி பிசிலி..
இல்லாகி..
யப்பா ஜிப்பா



சாம்பலாலே நீ பல்லு விளக்கினியா? இல்லை காலையிலெழுந்து சாயா(தேனீர்) குடிச்சியா? கசக்கிப்பிழிஞ்சு உன் ஜிப்பா துவைச்சியா என காதலி கேட்க அதற்கு காதலன் பதில் சொல்லும் காட்சி நாற்றமடிக்கும் துவைக்காத எமது சட்டையை நினைவில் கொண்டுவந்து நிறுத்துகிறது.


டைலமொ டைலமொ..பல்லெலக்க..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க



பாடலை முதன்முறை கேட்ட போதே என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை, தைலம் தன் பல்லில் பட்டுவிட்டதாக காதலியிடம் காதலன் உருகித் தெரிவிக்கும் காட்சி எமது பல்லையும் ஒரு தடவை கூசச்செய்கிறது. அதன் பின்னர் காதலி கவலைப்படாதே நாக்கில மூக்கில படலத்தானே என்று சமாதானப்படுத்துவது, அவர்களின் அன்பை எரிச்சலின்றிக் காட்டுகிறது.


ஏ சல சாலா..
இஸ்க்கு பரா(ட்)ரா..
ஒசாக முராய..
பூம் பூம் ஜக்காக்கா..
முக்கால்லா..
மய்யா மய்யா



இந்தவரிகளை எவ்வாறு விபரிப்பது? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது, உங்களுக்கு வைக்கப்படட் பராட்டாவையும் சால்னாவையும் பூனை தின்றது போன்ற உணர்வைத் ஏற்படுத்துகிறதா? வரிகளில் சொல்லப்படும் பராட்டாவை பூனை திருடிவிட்டது என்று பசியுடன் காதலன் சொல்லும் இந்த வரிகளில் வரும் பராட்டாவை வாயால் சாப்பிடவே முடியாது.


கலாட்டாவுடன் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்...



சற்றுமுன்னர் இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருமே எதிர்பார்க்காதவகையில் ஒரு அறிமுகக் காட்சியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த வீடியோவைப் பார்த்தபோது அதில் நம் ஹீரோ ஆக்ரோசமாக தோன்றும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. 

அறிமுகத்தைத் தொடர்ந்துவரும் அதிரடி சண்டைக்காட்சியில் தன்னைச் சுற்றிவளைத்த வில்லன் குறூப்பை ஹீரோ வேட்டையாடும் காட்சி லாஜிக் மீறலின்றி தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. 

இதோ உங்களுக்காக அந்த வீடியோ…


இந்தக் காட்சிக்குத்தான் வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெத்த புள்ள என்ற பாட்டைப் போடுவார்களோ?


சோவாக் - அது பவுண்டரி சார்


முதலில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்சால் வெற்றியீட்டியது அனைவரும் அறிந்ததே, அதில் சிறப்பாகப் பந்து வீசிய ஹர்பஜனுக்கு என் வாழ்த்துக்கள். நேற்றைய போட்டியை பார்த்தவர்கள் கடைசிக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை காணத்தவறியிருக்கமாட்டீர்கள்.


சச்சினின் வீசிய பந்தை OFF திசையில் அடித்த அம்லாவின் பந்தைப்பிடிக்க முயற்சி எடுக்காத சேவாக் மெதுவாக ஓடிச் சென்றார், அப்பந்து அவர் எதிர்பார்த்தது போல பவுண்டரியை கடக்காமல் போகவே அதை காலால் பவுண்டரிக்குள் தட்டிவிட்டு நடுவருக்கு 4 ஓட்டம் எனச்சைகை காட்டினார், இச்சம்பவம் நகைப்பை ஏற்படுத்தினாலும் இவ்வாறு பல பவுண்டரிகளை கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் சட்டை செய்யாமல் போகட்டும் என்று விட்டுக்கொடுத்ததையும் காணக்கூடியதபக இருந்தது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் கடைசிவரை ஒரு கம்பீரத்துடன் இதுமாதிரியான விரும்பத்தகாத விடயங்களை இனியாவது இவர்கள் திருத்திக்கொள்ளலாம்.


இதை அவதானித்த நடுவர் தண்டனையாக 5 ஓட்டங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


***********************************************************************************************


அம்லா - சிங்கமே!!!


நேற்றைய போட்டியில் சிங்கமாக என் கண்ணில் பட்டவர் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா , என்ன ஒரு ஆட்டம் அதுவும் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்து கொண்டு போக அவர் கடைசிவரை மைதானத்தில் காத்த பொறுமை, நிதானம் பதிவை எழுதும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவர் அதிகமாக பந்துகளை டொட் பண்ணும் போது எரிச்சல்ப் பட்டிருக்கிறேன் நேற்று தான் ஏன் அப்படி என்று காட்டிவிட்டார் மனுசன்.


இரண்டு போட்டிகளில் மற்றும் தொடரில் சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற இவரை சிங்கம் என்று பாராட்டலாம், ஏனென்றால் சிங்கம் சிங்கிள் தான் அடிக்கும் அதுவும் சிங்கிளா நின்றுதான் அடிக்கும்.




****************************************************
*******************************************


கோவா


நேற்று முன்தினம்கோவா படம் பார்த்தேன், அதிகம் இரட்டை அர்த்த வசனங்கள். 100% இளைஞர்களுக்கான படம். கட்டுப்பாடான கிராமத்தலிருந்து ஓடிப்போகும் இளைஞர்கள் பற்றிய கதை. படம் முழுவதும் காணப்படும் கவர்ச்சி சற்று நேரத்தில் பழகிப்போய் முகம் சுளிப்புக்குபெரிதாக இடம் கொடுக்கவில்லை. ஆனால் சென்னை 600028 போல எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மற்றது பிரேம் ஜீ அமரனுக்கு சுப்பிரமணியபுரம் பின்னணி இசை, வைபவ் ரெட்டிக்கு பழங்கப்படும் பின்னணி இசை என இசையில் கலக்கலையும், காமடியையும் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது, கடைசியில் சிம்பு வருவதுதான். அடஅடஅட என்னமா யோசிச்சிருக்காங்க, அதுவும் சிம்பு வந்த அந்த கடைசி சீன் கலக்கல்.

*********************************************************
*****************************************

சுஜா(ஆ)தா

இப்போதுதான் புத்தகங்கள் பல படிக்கத்தொடங்கியிருக்கிறேன். முதலில் படித்தது சுஜாதாவின் "ஆ" குரல்கள் பற்றிய கதை, என்ன ஒரு எழுத்தாளர். ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்கத்தூண்டும் வகையில் இருக்கிறது. அடுத்து சுஜாதாவின் கொலையுதிர்காலம் படிக்க ஆசை, ஆனால் தேடிக்களைத்துவிட்டேன். யாராவது படிப்பதற்கு லிங் இருந்தால் பின்னூட்டத்தில் தந்துவிட்டுப்போங்கள்.


*******************************************************
*****************************************

NO COMMENTS
            நடுவரைப்பாருங்கள்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்