Related Posts with Thumbnails

நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரபல பதிவர்(:P) பின்னூட்டாவாதி


கருத்துச்சுரங்கம்
  
பச்சிளம் பாலகன் (ச்சும்மா)

எதிர்கால இலங்கை... இல்லை இல்லை அமெரிக்க ஜனாதிபதி

ருவிட்டர் 12000 ருவிட்டுகளுக்கு மேல் கடந்த பராக்கிரமபாகு
அஞ்சாநெஞ்சன்

கறுப்பு வைரம் 

இலங்கை அணி தவறவிட்ட கிறிக்கற் ஆல்ரவுண்டர்

சினிமாத்துறை தவறவிட்ட சின்னத்தளபதி

HTML கோடிங்குகளை அநாயாசமாக அள்ளித்தின்னும் அற்புத மனிதன்

வழுக்குமரத்தில் ஏறியும் வழுக்காத கிறீஸ்

காதலுக்கு பள்ளிக்கூடம் கட்டிய கன்னங்கரா

நொக்கியா 1100விலும் GPRS பாவித்த வள்ளல்

டிங் டிங் சங்கத்தலைவர்

இலங்கையின் விடிவெள்ளி

பச்சை மஞ்சள் கறுப்புத்தமிழன்
 
ஏன்ஜலினா ஜோலியையே ஏங்க வைத்த அழகன்

த கிரேட் மீ த பர்ஸ்ட் கன்கொனின் சரித்திர காவியம் இன்று மாலை லோசனின் களம் லோசன் அண்ணாவின் வலைப்பூவில்



குத்த ரெடியா?

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:10 PM | 8 பின்னூட்டங்கள்


சென்றமுறை சதீஸ் அண்ணா தனது சினிமாத்தாகத்துக்கு தீனிபோடும் விதமாக திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கும்முயற்சியில் ஈடுபட்டு அது அனைவரதும் நல்லாதரவைப்பெற்றதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இம்முறை ஒரு குழுவாக செயற்பட்டு நாம் இம்முறையும் திரையுலகுக்கு விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடாத்த எண்ணியே இப்பதிவு சதீஸ் அண்ணாவின் கில்லி ஸ்டைலில்......

வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம். 
எனவே நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் கலந்து எமது திரையுலகக் கலைஞர்களுக்கு உங்கள் வாக்குகளை போட்டு சிறந்த தெரிவுக்கு வித்திடுவீர்களாக... 
வாக்குக் குத்த ரெடியா?? 

மு.கு - இணையத்தில் படித்த கதை ஒன்றின் தமிழ் வடிவம், நல்ல கருத்துள்ள கதை என்பதால் பகிர்கிறேன். கதையின் சுட்டியைப்பகிர்ந்த கன்கொனுக்கு நன்றிகள்

ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.

உடனே ஆற்றைநோக்கிவிரைந்த சீடர் தண்ணீர் எடுக்க முயற்சித்த தருணத்தில்தான் கவனித்தார், ஒரு எருமை மாட்டு வண்டி ஆற்றைக்கடந்துகொண்டிருந்தது. அதன் விளைவாக ஆற்று நீர் கலங்கி அழுக்காகிப்போயிருந்தது. அந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு எடுத்துச்செல்வது என்று யோசித்த சீடர் மீண்டும் புத்தரிடம் வந்து அந்த நீர் குடிப்பதற்கு உகந்தல்ல அழுக்காக இருக்கிறது என்றார்.

மீண்டும் அரைமணிநேரத்தில் அதே சீடரை தண்ணீர் எடுத்துவரும்படி பணித்தார் புத்தர். மீண்டும் ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர் ஆனால் ஆறு அப்போதும் அழுக்காகத்தான் இருந்தது. மீண்டும் புத்தரிடம் திரும்பிவந்த சீடர் ஆறு இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது என்றார்.

இன்னும் அரை மணிநேரம் கழித்துச் மீண்டும் அதே சீடனை அனுப்பினார் புத்தர். இந்தத்தடவை தண்ணீர் தெளிவாக இருந்தது. சீடன் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.

புத்தர் சொன்னார் இது போலதான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும் போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விடயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அதுதானாக அமைதியடையும்.

ஆடிய ஆட்டமின்னும் அரைகூட முடியவில்லை
அதற்குள்ள என்னை ஏன் வீடுபோகச்சொல்லுறாங்க
அடித்த அடிகள் எல்லாம் அந்தரத்தில் தொங்கிவிட
அதை எடுக்கப்போனவனோ வீடு வந்து சேரவில்லை

தொண்ணுற்று ஆறு முதல் ஆறு ஆறாய் அடிக்கின்றேன்.
அப்பப்ப தொட்டுக்க நான்கைந்து நாலுகளும்
இப்பத்தான் கொஞ்சம் இயலாமல் இருக்கிறது
ஆனாலும் அமைச்சரென்னை போவென்று சொல்வானேன்

எத்தனை போலர்களை ஓட ஓடு அடித்திருப்பேன்
அத்தனை பாவமும்தான் என்னைச்சும்மா விட்டுடுமா
ஏழாம் இடத்திலிருந்து ஒண்ணுக்கு வந்தவன் நான்
அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே

தொண்ணுற்று ஆறில்மட்டும் T20 இருந்திருந்தால்
சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன்
இப்பமட்டும் என்னை என்ன சப்பை என்றா நினைக்கிறீங்க
போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள்


இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது போஃயாக்கள் பற்றிய ஒரு தளம் கண்ணில் மாட்டியது, அங்கு போய்ப்பார்த்தால் பயம் என்ற நோய்க்கு A-Z நோயின் பெயருடன் விளக்கம் கொடுத்திருந்தார்கள். சில வித்தியாசமான நகைக்கத்தோன்றும் போஃபியாக்கள் மட்டும் நான் தெரிவு செய்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  

Ablutophobia - துவைத்தல் மற்றும் குளிப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Achluophobia - இருட்டைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Acousticophobia - சத்தத்தைக் கேட்டு ஏற்படும் பயம்.
 
Agyrophobia - வீதியைக்கடக்க ஏற்படும் பயம்.
 
Ailurophobia - பூனையைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Allodoxaphobia - அபிப்பிராயங்களால் உருவாகும் பயம்.
 
Ambulophobia - நடப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Anablephobia - மேலே பார்ப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Androphobia - ஆண்களைக்கண்டால் ஏற்படும் பயம்.
 
Anuptaphobia - திருமணமாகாமலிருப்பதால் ஏற்படும் பயம்.

Arithmophobia -இலக்கங்களைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Atychiphobia - தோல்விகளால் ஏற்படும் பயம்
 
Automysophobia - சுத்தமற்றிருப்பதால் ஏற்படும் பயம்.
 
Bibliophobia - புத்தகங்களால் ஏற்படும் பயம்
 
Caligynephobia - அழகான பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்
 
Catoptrophobia - கண்ணாயைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Chaetophobia - தலைமுடியால் ஏற்படும் பயம்.
 
Chronophobia - நேரப்பயம்.
 
Clinophobia - படுக்கைக்கு செல்வதற்கான பயம்.
 
Cyberphobia - கணணியில் வேலைசெய்வதற்கு ஏற்படும் பயம்.
  
Didaskaleinophobia - பாடசாலை செல்ல ஏற்படும் பயம் 

Domatophobia - வீட்டில் இருப்பதால் ஏற்படும் பயம்.

Epistemphobia - அறிவுக்கான பயம்.

Eremophobia - தனிமைப்பயம்.

Ergophobia - வேலை செய்வதற்கான பயம்.

Euphobia - நல்ல செய்தி கெட்பதற்கான பயம்.

Gamophobia - திருமணப்பயம்.

Gerascophobia - வயது போவதால் உண்டாகும் பயம்.

Gynephobia - பெண்களைக்கண்டு உண்டாகும் பயம்.

Ideophobia - கருத்துக்களுக்கு ஏற்படும் பயம்.

Kathisophobia - கீழே உட்காருவதற்கு ஏற்படும் பயம்.

Myrmecophobia - எறும்புகளைப்பார்த்து ஏற்படும் பயம்.

Nostophobia - வீடு திரும்புவதற்கான பயம்.

Parthenophobia - இளம்பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்.

Pedophobia - குழந்தைகளைப்பார்த்து ஏற்படும் பயம்.

Philemaphobia - முத்தமிடுவதற்கான பயம்.

Phronemophobia - யோசனை செய்வதற்கான பயம்.

Scriptophobia - பொது இடத்தில் எழுதுவதற்கான பயம்.

இந்த போஃபியாக்களின் பற்றித்தெரிந்ததும் பயப்படுறீங்களா? உங்களுக்கு Phobophobia என்ற போஃபியா இருக்கு..ஹீஹீ

  

அன்பே!!!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:32 AM | 19 பின்னூட்டங்கள்

 கவிதைக்குப் பொய்யழகு
அன்பே
உன் அழகுக்கு நிகரானவளா கிளியோபாட்ரா
உன் வீரத்துக்கு நிகரானவளா ஜான்சிராணி
உன் அன்புக்கு நிகரானவளா அன்னை திரேசா
உன் காதலுக்கு நிகரானவனா அனார்க்கலி
இல்லை இல்லவே இல்லை
அன்பே
என்னை மன்னித்துவிடு கவிதையை
அழகாக்க பொய்யுரைத்துவிட்டேன்.

சகுனம் சரியில்லை
அணைந்த விளக்கு
விரிந்த தலை
ஓடிய பூனை
தடக்கிய கால்
இடித்த முகடு
கத்திய பல்லி
பேசத்தெரிந்தால் 
இவையும் சொல்லும்
மனிதன் நிற்கிறான் 
சகுனம் சரியில்லை
 
புலம்பல்
சின்ன வயசு,
சுட்டிப்பொண்ணு
அழகிய முகம்
இளகிய மனம்
கண் குருடாச்சு
காது செவிடாச்சு
கால் துண்டாச்சு 
ஏன் ஏன் ஏன்
டிவி சீரியல் பார்த்த
பெண் புலம்பல்

இலங்கையின் மூத்த பதிவர் வந்தியத்தேவன் என்ற மாமனிதரைப்பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. அந்தவகையில் அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் இன்று காலை அவருடன் மெயிலில் அரட்டை அடிக்கும் பொன்னான வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் நகைச்சுவையுணர்வுடைய மனிதர் அவர். ஆனால் மிகுந்த அறிவாளி, சந்தேகங்களை தேங்காய் உடைப்பதுபோல் சல்லிசல்லியாக உடைத்துக் கூறக்கூடியவர்.

முதலில் பின்நவீனம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்று எப்படி அறிந்தாரோ தெரியவில்லை. அதைப்பற்றி சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தார். அவரின் விளக்கத்தில் இருந்த தெளிவு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதன் பின்னர் ஐந்தாம் வகுப்பில் தனக்கு ஏற்பட்ட சில இளநீர் குடித்த அனுபவங்களை சற்று பின்நவீன முறையில் குறிப்பிட்டு நான் அறிந்தும் அறியாத வகையில் பின்நவீனம் எனக்கு விளங்கியிருக்கிறதா என பரீட்சித்த முறையில் அவருக்கு நிகர் அவரே.

ஆனால் வந்தியண்ணாவுக்கு சின்ன வயதில் தான் தென்னக்குருத்தை வைத்து கிறிக்கற் ஆடியதாகக்குறிப்பிட்டவருக்கு இளநீரில் காணப்படும் மருத்துவ குணாம்சங்கள் மற்றும் சின்னச்சின்ன விடயங்களை வைத்து எப்படிப்பதிவெழுதுவது என்று வந்தியண்ணா கூறிய விடயங்கள் இன்னும் என்ன மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கின்றது.

அதன் பின்னர் கிறிக்கற் பற்றிய கதை அப்படியே சர்வதேச மட்டத்துக்கு திசை திரும்பியது. தற்போது கிறிக்கற் போட்டிகளுக்கு தயாரிக்கப்படும் தட்டையான ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டி மற்றும் பந்துவீச்சாளர்களைப் பாதிப்பது பற்றி கவலை வெளியிட்டவர். ஆனால் அடித்தாடுவதற்கும் ஏற்ற ஆடுகளங்கள் அவைதான் தற்போதைய இளம் சந்ததியினர் வேகமான அடித்தாடும் ஆட்டத்தையே விரும்புகின்றனர் என்ற கருத்தை இறுதியாகக் கூறி படங்களுடன் விளக்கிய முறையில் கிறிக்கறிலும் இவர் ஒரு மேதாவி என்பதை அறிந்து வியந்தேன்.

இவ்வாறான ஒரு சகலகலவல்லவனுடன் அரட்ரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து விட்டு நேரத்தைப்பார்த்தேன் பகல் 1.30 அடக்கடவுளே 5 மணிநேரம் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறேனா? இப்படி ஒரு பதிவரை, சகலகலாவல்லவரை, விளையாட்டு, அனுபவம், சினிமா, போன்ற எல்லா விடயங்களையும் அதைவிட பதிவுலக விடயங்களை தனது விரல் நுனியில் வைத்திருந்த வந்தி அண்ணாவை என்ன சொல்லிப்பாராட்டினாலும் தகும்.இப்படியான ஒரு மனிதரின் நட்புக்கிடைக்க நான் கொடுத்து வைத்திரக்க வேண்டும். ஆனால் இன்னும் இவரை நேரில் சந்திக்காதது பெரும் குறையே...
 
எல்லாத்துக்கும் நன்றி வந்தியண்ணா...

வட போச்சே...

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:23 PM | 15 பின்னூட்டங்கள்

 

இருபது வருடங்களுக்குப்பிறகு எப்படி இருப்பார்கள் என்று காட்டும் ஒரு தளம்(http://www.in20years.com/) தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே, அந்தத்தளத்தின் சுட்டி நேற்றுத்தான் என்கண்ணில் பட்டது உடனே சில பிரபலங்களின் படங்களை போட்டுப்பார்த்தேன் எப்படி இருந்திச்சு தெரியுமா? அட நீங்களே பாருங்க

இருபது வருடங்களுக்குப்பிறகும் இலங்கையின் ஓப்பினிங் பாட்ஸ்மன் இவர்தானாம்

மிஸ்டர் கூல்(COOL)

மிஸ்டர் கிறிக்கற்

மிஸ்டர் டைமிங்

மிஸ்டர் ஸ்பின்

மிஸ்டர் கிளாஸ்(CLASS)

ஐயோ இது காவல்காரனின் கெட்டப் சேஞ்ச் இல்லைங்கோ...

இதுதான் கார்த்திக் சாரி சிம்பு, 

நயன்தாரா டுவென்டிநைன் தாராவாகும் போது

இருபது வருடத்துக்குப்பிறகு ஜெசி ஜெசி

இந்தப்படம் பதிவர் சுபாங்கன் அண்ணாவுக்கு சமர்ப்பணம்

NO COMMENTS

 பதினோரு பேரு ஆட்டம்
அதைப்பார்க்க ரசிகர் கூட்டம்
சிறீலங்கா ஜெயிச்சதால ஆடறன் புலியாட்டம்

காப்டன் இருவருக்கும் டாசுதான்டா முதலிலே
கோச்சர் சொன்னபடி தேர்வு செய்யணும் நொடியிலே
அரங்கமே அதிர வேணும் நீ அடிக்கும் அடியிலே
அம்பயர் அவுட்டுத்தந்தா வந்திடணும் வெளியிலே

ஜெயவர்தன ஆடி வரும் ஆட்டத்தையும் பார்ரா

டெஸ்டிலும் சிக்ஸர்களை அடிப்பார் இனி பெரேரா
பொறுமையா ஆடுவது சங்காவோட திறமை
ஜெயிச்சா அவருக்கில்ல சிறீலங்காவுக்கே பெருமை

ஓப்பினிங் ஆட்டத்திலே டில்லானு கிங்கு

பினிசிங்கில வைப்பாரு கப்புகெதர சங்கு
மலிங்க மத்தியூஸ் மென்டிஸ் ஆடும் தீவு
இவங்கெல்லாம் பொறந்தது எங்க இலங்கைத்தீவு

சிலிங்கா மலிங்காவின் பந்தைத்தடுப்பதாரு?

முரளி ஸ்பின்னில் அடிக்க முடியாதடா 4ரு
வயது வித்தியாசமின்றி ஆடும் அழகைப்பாரு
யாரு கப்டன்னாலும் நாங்கதான் இனி கிங்கு

அன்புடன்
உல்டாக்கவி
பவன்

I AM A BOWLER - நெஹ்ரா

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:07 AM | 16 பின்னூட்டங்கள்







செஞ்சுரி

இது எனது 100வது பதிவு. ஆரம்பத்தில் சுபாங்கன் அண்ணாவின் பதிவுகளில் தொடங்கிஅவரின் வலைப்பூ மூலம் பலரின் வலைப்பூக்களையும் வாசிக்கத்தொடங்கி நான் ஏன் எனக்கென்று ஒரு வலைப்பூ தொடங்கக்கூடாதென்று ஒருவாறு சுபாங்கன் அண்ணாவின் வழிகாட்டலுடன் பதிவுலகில் பிரவேசித்தவன் நான். அதன் பின்னர் மீ த பர்ஸ்ட் கன்கொன், வந்தியண்ணா, லோசன் அண்ணா, கெளபாய் மது அண்ணா, கீர்த்தி அக்கா பாலா அண்ணா, வரோ அண்ணா, கமல் அண்ணா, புல்லட் அண்ணா, சதீஸ் அண்ணாஈ வானம்பாடிகள் சார் ,ஆதிரை அண்ணா, உட்பட்ட பலர் (பெயர் குறிப்பிட மறந்தவர்கள் மன்னிக்கவும் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டால் பதிவு ரொம்ப நீண்டுவிடும்.) பின்னூட்டங்களில் எனக்கு அளித்த ஊக்கமும், தன்னம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

மேலும் போட்டோ கமண்ட் என்பது நான் மிகவும் விரும்பி வெளியிடும் பதிவு. பதிவுலகில் காலடியெடுத்து வைத்து சில பதிவுகள் இட்ட பிறகு என்ன பதிவு இடுவது என்று குழம்பி யோசித்து எனது குரு(:P) சுபாங்கன் அண்ணாவிடம் கேட்டபோது வலைமனை என்ற வலைப்பூவின் சுட்டியைத்தந்து இப்படி ஏதாவது ட்ரை பண்ணுடா என்றார். இப்படி ஆரம்பித்ததுதான் போட்டோ கமண்ட்ஸ். எனவே இதுவரை ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

36 - கும்மிக்கு சிங்களம் என்ன?
நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் கண்ட ஒரு போட்டோ கமண்ட்நோட்டை (NOTE) கன்கொன், ஆதிரை அண்ணா சுபா அண்ணா உட்பட சில பதிவுலக நண்பர்கள் சிலருக்கு PM அனுப்பியிருந்தேன். அதன்பின்னர் அது ஒரு வலைப்பதிவிலிருந்து பிரதி பண்ணப்பட்ட நோட் எனக்கு கூறி மூஞ்சிப்புத்தகத்தில் கும்மியை இனிதே ஆரம்பித்து வைத்தார் மீத பர்ஸ்ட் கன்கொன் மன்னிக்கவும் கிரிஷ்.(தனது பெயரை கன்கொன் என்பதிலிருந்து கிரிஷ் என மாற்றிப் போட்டால் வெளிநாட்டுக்கண்டோஸ் தருவதாக உறுதியளித்திருக்கிறார்). அதன்பின்னர் களத்தில் ஆதிரை அண்ணாவும் குதிக்க கும்மி களைகட்டியது.

இங்கு கும்மி ஓருபுறம் களை கட்டி ஒரு 7 PrivateMsgகளைக்கடந்திருக்கும், 
 "நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி...."
என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. 
 ஹலோ
மறுமுனையில் சுபா அண்ணா புல்டோசரின் டயருக்குப்பின்னால் இருந்து- என்னடா நடக்குது பேஸ்புக்கில?
ஒண்டுமில்ல சும்மா கும்மிறம் ஏன்?
டேய் படுபாவி, கீஈஈஈஈக்..... கீஈஈஈஈக் (கெட்டவார்த்தை) என்று காதில் ரத்தம் வரும் அளவுக்குத்திட்டிவிட்டு இங்கிலீஸ்ல கும்முங்கடா மொபைல்ல தமிழ் வராதில்ல என்றுவிட்டு போஃனை கட் பண்ணினார்..:p

8.30க்கு ஆரம்பித்த கும்மி தற்போது 12 மணியை அண்மிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பொங்கியெழுந்த ஆதிரை அண்ணா..
தம்பிங்களா...........
உந்தளவு மெசேஜ்ஜும் என் மொபைலுக்கு வருகுதப்பா... போதுமப்பா.

பக்கத்திலே இருக்கிறவன்... GF ஓ என்று கேட்கிறான்.
Feel பண்ண வையாதீங்கப்பா 




என்று கவலையாகச்சொல்ல நாம் எமது ஆய்வுக்குழுவை ஆதிரை அண்ணாவின் அலுவலகத்துக்கு அனுப்பினோம். அங்கே அலுவலகத்திலே ஆதிரை அண்ணா எழுந்து அலுவலகத்துக்கு வெளியே வந்து எதிரில் இருந்த ஒரு கடையில் கடைக்காரரை கெஞ்சிக்கூத்தாடி இரு தடிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் அலுவலகம் திரும்பினார். அதன் பிறகு பார்த்தால் திடிரேன அந்தத்தடிகளை ஒன்றோடு ஒன்று தட்டி மேலும் கீழும் குனிந்து நிமிர்ந்து காலைக் கையைத்தூக்கி ஆடத்தொடங்கினார். எதிரில் அவரின் சிங்கள நண்பர் அமர்ந்து மண்டையைப்பிய்த்துக்கொண்டிருந்தார். 

என்னடா இது என்று எமது ஆய்வுக்குழுவும் மண்டையைப்பிய்த்துக் கொண்டிருக்க ஆதிரை அண்ணாவின் மொபைலுக்கு வந்த செய்திகளைப்பார்த்து GIRL FRIENDடா? என்று கேட்ட நண்பருக்கு இல்லை அது கும்மி என்று விளங்கப்படுத்த ஆதிரைஅண்ணாக்கு கும்மிக்கு சிங்களம் தெரியாததால் அவர் ஆடி செயன்முறை விளக்கம் கொடுத்தாக ஆய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு 29 மசேஜ்களை கும்மி கடந்த நிலையில் 30வது வெற்றி மசேஜை சுபாங்கன் அண்ணா மனமுடைந்து போய் காலை 8.30 மணியிலிருந்து என்ன நடக்குதென்றே தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதாக ஆதங்கத்தை தெரிவிக்க இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி கன்கொன் சீச்சீ கிரிஷ் தான் ஒபாமாவுடன் கதைத்து இதற்கு சிறந்த தீர்வைப் பெற்றுத்தருகிறேன் என்று மீண்டும் கும்மியை ஆரம்பிக்க முயல..
சொல்லிப்போட்டேன்...
வீட்ட போக வெளிக்கிட்டு விட்டேன்.
என்ன எதுவாக இருந்தாலும் Gmail ஐப் பாவிக்கவும்.
பஸ் கொண்டக்டர் அந்தக் கேள்வியைக் கேட்டால், நான் தற்கொலைதான் பண்னனும் 

என்ற ஆதிரை அண்ணாவின் 36வது PMமுடன் ஆதிரை அண்ணாவின் உயிருக்கு உத்தரவாதமளிக்கும் நோக்கில் கும்மி சடாரென நிறுத்தப்பட்டது.

பி.கு - யாராவது கும்மிக்கு சிங்களம் என்ன என்று தெரிந்தால் சொல்லிட்டுப்போங்க? ஆதிரை அண்ணா அடிக்கடி ஆடிக்காட்டமுடியாதில்ல..


வைகைப்புயல் வடிவேலுவின் சிறப்பான நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் "சுறா" படத்தை இன்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆரம்பத்திலேயே கடலுக்குள்ளிருந்து கையைக்கூப்பிய படியே ஒருவர் வெளியே வருவதும், நாம் அவர் ஹீரோ வடிவேலுதான் என்று நினைத்துப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒருவரும் எதிர்பாராத விதமாக ஹீரோ வடிவேலுவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயை காட்டி புதிதாக ஒரு முயற்சியை எடுத்திருக்கும் இயக்குனரை எப்படிப்பாராட்டுவதென்று தெரியவில்லை. 

அதன் பின்னர் படகுப்போட்டிக்கு இல்லாத மீசையை முறுக்கியபடி கிளம்பும் வடிவேலுவை ஊரே சேர்ந்து வாழ்த்தி அழைத்துக்கொண்டு செல்வதும் அவர்களுக்கு வடிவேலு தனது மீன்பிடி வலையை விற்று ஆளுக்கு 50 ருபா கொடுப்பதும் அவரின் இரக்க குணத்தைப்பறைசாற்றும் காட்சிகளாக அமைந்துள்ளன. ஆனால் வழக்கமாக தனது படங்களில் மீசையை வரைந்து வரும் வடிவேலு இந்தப்படத்தில் கெட்டப் சேஞ்ச் பண்ணி மீசை வரையாமல் வருகிறார். அதன் பின்னர் நாய்க்குட்டி இறந்தமைக்காக தற்கொலை செய்ய கடலுக்கு வரும் தமன்னா மீது வடிவேலு காதல் கொள்வதும் ஆனால் தமன்னா விஜயைத்தான் காதலிக்கிறார் என்று தெரிந்து வடிவேலு தனது காதலை மனதுக்குள்ளேயே போட்டு பூட்டுப்போட்டுப் பூட்டி சாவியைக்கடலுக்குள் எறிந்திருப்பதும் தியாகத்துக்கு அச்சாணி போடும் காட்சிகளாக அமைந்திருக்கிறது. 

அடுத்ததாக தான் காதலித்த காதலி தன்னிடமே வந்து விஜயைத் தான் காதலிப்பாதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டபோது, நட்புக்காக தனது UMBRELLA என்ற பெயருக்கு ஏற்றாற் போல் மனதைக் குடையாக விரித்து உதவுவது குறிப்பிடத்தக்கது. விஜய்க்காக ஏணி தூக்கிக் கொண்டு போவதும், அதன் பின்னர் அவரைத் தேடி வரும் ஒரு கொலைக் கைதிக்குகூட டீ(TEA), சிகரட் என எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் அவரது இளகிய மனதைக் காட்டுவதாக உள்ளன.

கடைசியில் தனது நண்பனைக்காப்பாற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் கஞ்சா கொண்டு போய் வைப்பது அவரது புத்திசாலித்தனத்தை பறைசாற்றியுள்ளது. ஆனால் தமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படியான ஒரு படம் இனி வருமா என்பது சந்தேகம்தான், ஏனெனில் இந்தளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. படத்தின் தலைப்பைக்கூட அம்பிரல்லா என்று வைக்காமல் சுறா என்று ஹீரோவின் நண்பர் கதாபாத்திரத்தின் பெயரைவைத்து அது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அதுதவிர ஹீரோவுக்கு ஒரு பாட்டுக்கூட இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது, இன்னுமொரு வித்தியாசமான விடயம். அதுவும் அந்த துணை நடிகர் வரும் அந்த டூயட் பாட்டு கர்னாடக சங்கீதத்தையும், வெஸ்டேர்னையும் கலந்து அப்பிடியே கானாவுக்குள் தொட்டுத் தொட்டு வரும் இடங்கள் அற்புதம். ஒரு தடவை அந்த "நான் நடந்தால் அதிரடி" பாடலைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

சுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+அம்பிரல்லா +:P
பாபாவால் புள்ளி பெற்ற மாணவன்
கடந்தமுறை யாழ் போயிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான மனிதரை சந்தித்தேன். சந்தித்த நேரம் தொலைக்காட்சியில் நித்தியானந்தா சுவாமியின் கமராமேன் லெனினின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உடனே அவர் தானும் இந்த சாமியாரால் இல்லை இல்லை சாமியாரின் ஒரு தீவிர பக்தரால் தானும் பாதிக்கப்பட்டதாக சொன்னார். அட என்ன என்று அவரின் பக்கம் திரும்பி உட்கார்ந்தோம். 


தான் 10 ஆம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் தான் படித்த ஆசிரியர் ஒரு சாய் பாபா பக்தராம். தினமும் அவரது பாடவேளைக்கு முன்னர் பாபாவை மனதில் தியானம் செய்யவேண்டும் என்பது அவரின் ஆசானின் கட்டளை. எனவே அன்றும் இடைவேளைக்கு முதல் பாடவேளை அவருடையதாம். எனவே அனைவரும் தியானம் செய்வதற்காக கண்ணை மூட (ஆசிரியர் உட்பட) இவரைத்தவிர அனைத்து மாணவர்களும் ஓடிவிட்டார்களாம். அன்று முதல் தனது பாசத்துக்குரிய சீடனாக இவரை ஆக்கிக்கொண்டாராம் அந்த ஆசிரியர். அதன் பின்னர் சாய்பாபா பஜனைக்கு வா, அங்கே அந்த பூசை நடக்கிறது வா என்று சரியான தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தாராம் ஆசிரியர். இவரும் சரியென்று போக இவருக்கு அவரது பாடத்தில் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றதாம்.


அதன் பிறகு O/L பரீட்சைகள் நெருங்கும் சமயத்தில்கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு போக விடாமல் அவர் பஜனை, பூசை என்று இவரை அழைத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்து களைத்துப்போன இவரது பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் இது பற்றி முறையிட்ட பின்னர் அந்தப்பிரச்சினை குறைந்தாலும் அதன் பின்னர் அவரின் பாடத்தில் அந்த நண்பருக்கு 40ஐத் தாண்டவில்லையாம்.


*************************************************


எல்லா இடத்திலயும் தேடிட்டேன் கிடைக்கவேயில்ல


சமீபகாலமாக இலங்கையின் பல பதிவர்கள் எழுதுவது தடாலடியாகக் குறைந்து விட்டது. ஒரு சில பதிவர்களை அவ்வப்போது பதிவிட்டுக்கொண்டிருந்தாலும், பழைய போர்மில் யாரையும் காணமுடியவில்லை. அண்மையில் யோ அண்ணா குறிப்பிட்டது போல பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முதலும் அதற்குப்பிறகும்தான் பதிவர்களின் பதிவுகளை அடிக்கடி காணமுடிகிறது. எனவே இந்த வருடத்தில் உத்தியோக பூர்வ சந்திப்புகள் ஒன்று கூட இதுவரை நடைபெறாத நிலையில் காணாமல் போன பதிவர்களை கண்டுபிடிக்க நாம் ஏன் மீண்டும் சந்திக்கக்கூடாது?


*************************************************
யாரந்தத் திருடன்

அண்மைக்காலமாக யாரோ ஒருவர் வலைப்பதிவர்களை அதுவும் இலங்கை வலைப்பதிவர்களின் ஈ-மெயில், மூஞ்சிப்புத்தகம் என அனைத்துயும் ஹக் பண்ணிவருகின்றார். அவர் என்ன நோக்கோடு இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை. அண்மையில் ஆடுகளம் என்ற பெயரில் தனது வலைப்பூவை இயக்கிவந்த அனுதினனின் இரண்டு வலைப்பூக்கள், நேற்று யோ வொய்ஸ் யோகா அண்ணாவினுடையது. நாளை யாரோ? இதற்கு யாராவது ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் சிறந்தது என்று நம்புகிறேன்.

*************************************************
வயசு கூட.. வயசு குறைய..

தற்போது T20 உலகக்கிண்ண காலம். IPLலில் இருந்து தொடர்ந்து நடைபெறும் T20 போட்டிகள் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான விடயம் இம்முறை T20யில் விளையாடும் வயது மூத்த வீரர் இலங்கையின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய 40 வருடங்கள் 274 நாட்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். இவருக்கு பெரிதாக போட்யில்லாத நிலையில். வயது குறைந்த வீரர்கள் இருவர் காணப்படுகிறார்கள். ஒருவர் பாகிஸ்தானின் மொஹமட் அமீர்(18 வருடங்கள் 5 நாட்கள்), மற்றையவர் ஆஃப்கானிஸ்தானின் மொஹமட் சஹ்சாட்(18 வருடங்கள் 260 நாட்கள்), ஆனால் நாட்கள் அடிப்படையில் மொஹமம் அமீர் இந்த போட்டித்தொடரின் வயது குறைந்த வீரராகக் காணப்படுகிறார். 

போட்டோ கமண்ட்ஸ்






Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்