அன்று பதிவர்கள் அனைவரும் தலைவகரில் சந்தித்துக்கொண்டதும், ஐஸ் கிறீம் குடித்ததும் தெரிந்த விடயமே, ஆனால் சிதறல்கள் றமேஸ் அண்ணா போட்டோ கமண்ட் போடலயாடா? என்று என்னை உசுப்பேத்தி விட்டதால் இந்தப்பதிவு..:p வழக்கம்போல மொக்கைதான் என்பதால் யாரும் சீரியசா எடுக்கக்கூடாது.
மின்சார சபையும் தொழிநுட்ப முன்னேற்றமும்
நாங்கள் புதிய வீட்டுக்கு மாறி ஒருமாதம்தான் ஆகிறது. ஆனால் மாறிய முதல் தினமே வீட்டுக்காரர் அந்த வீட்டில் அதுவரை கட்டாமல் இருந்த மின்சார பில்லை கட்டி பில்லைக்கூட எங்களிடம் தந்திருந்தார். எனவே நாங்கள் வீடு மாறிய அந்த தினமே மின்சார சேவை வீட்டுக்கு வழங்கப்பட்டது.
மீண்டும் நேற்றைய தினம் திடீரென கரண்ட் போகவே ஏதோ திருத்துகிறார்கள் என்று நாங்கள் நினைத்திருக்க, வீட்டுக்கதவைத் தட்டிய மினடசார சபை ஊழியர். எங்கள் வீட்டு முகவரியை சரி பார்த்துவிட்டு உங்கள் முகவரியில் மின்சார பில் கட்டவில்லை என்பதால் மின் இணைப்பை துண்டித்து விட்டோம் என்றார். நாங்கள் எவ்வளவோ கூறியும் கேட்காத அந்த மனிதர் வீட்டுகாரரை எமது எஞ்ஜினியருடன் வந்து கதைக்க சொல்லுங்கள் என்றார்.
மின் துண்டிப்பவர் ஒருவர், மின் இணைப்பு வழங்குபவர் என்று இருப்பது வேலைப்பகிர்வுதான், ஆனால் இந்த இரண்டு பேருக்கும் ஒரு தொடாடபாடல் வசதிகூட இல்லையா அதுவும் ஒருமாதத்துக்குப்பிறகு.
****************************************************************************************
சரித்திரத்தின் சாதனை
நேற்றைய தினம் கிறிக்கற் போட்டி பார்க்காதவர்கள் கூட பார்த்திருப்பார்கள், அப்படி ஒரு ஆட்டம், நிதானம், பொறுமை, அதேவேளை அதிரடி, என்ன ஒரு ஆட்டம். நேறடறைய ஆட்டத்தின் அந்த 200வது ஓட்டத்தைக்கடந்த கணம் இன்னமும் கண்முன்னால் நிற்கிறது.
அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் தனிமனிதன் ஒருவர் பெற்ற அதிகஓட்டம், ஒரு மனிதன் பெற்ற அதிக பவுண்டரி(25) எனப்பலசாதனைகளை தன்வசப்படுத்தினார் சச்சின். இன்னும் ஒரு பதினாறு வயது ஒரு இளைஞன் போல விளையாடும் சச்சின் இன்னும்பத்து வருடங்கள் விளையாடினால் முன்னூறு அடித்தாலும் அடிப்பார். சரித்திரவீரர் சச்சினுக்கு தலைவணங்குகிறேன்.
நாங்கள் புதிய வீட்டுக்கு மாறி ஒருமாதம்தான் ஆகிறது. ஆனால் மாறிய முதல் தினமே வீட்டுக்காரர் அந்த வீட்டில் அதுவரை கட்டாமல் இருந்த மின்சார பில்லை கட்டி பில்லைக்கூட எங்களிடம் தந்திருந்தார். எனவே நாங்கள் வீடு மாறிய அந்த தினமே மின்சார சேவை வீட்டுக்கு வழங்கப்பட்டது.
மீண்டும் நேற்றைய தினம் திடீரென கரண்ட் போகவே ஏதோ திருத்துகிறார்கள் என்று நாங்கள் நினைத்திருக்க, வீட்டுக்கதவைத் தட்டிய மினடசார சபை ஊழியர். எங்கள் வீட்டு முகவரியை சரி பார்த்துவிட்டு உங்கள் முகவரியில் மின்சார பில் கட்டவில்லை என்பதால் மின் இணைப்பை துண்டித்து விட்டோம் என்றார். நாங்கள் எவ்வளவோ கூறியும் கேட்காத அந்த மனிதர் வீட்டுகாரரை எமது எஞ்ஜினியருடன் வந்து கதைக்க சொல்லுங்கள் என்றார்.
மின் துண்டிப்பவர் ஒருவர், மின் இணைப்பு வழங்குபவர் என்று இருப்பது வேலைப்பகிர்வுதான், ஆனால் இந்த இரண்டு பேருக்கும் ஒரு தொடாடபாடல் வசதிகூட இல்லையா அதுவும் ஒருமாதத்துக்குப்பிறகு.
****************************************************************************************
சரித்திரத்தின் சாதனை
நேற்றைய தினம் கிறிக்கற் போட்டி பார்க்காதவர்கள் கூட பார்த்திருப்பார்கள், அப்படி ஒரு ஆட்டம், நிதானம், பொறுமை, அதேவேளை அதிரடி, என்ன ஒரு ஆட்டம். நேறடறைய ஆட்டத்தின் அந்த 200வது ஓட்டத்தைக்கடந்த கணம் இன்னமும் கண்முன்னால் நிற்கிறது.
அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் தனிமனிதன் ஒருவர் பெற்ற அதிகஓட்டம், ஒரு மனிதன் பெற்ற அதிக பவுண்டரி(25) எனப்பலசாதனைகளை தன்வசப்படுத்தினார் சச்சின். இன்னும் ஒரு பதினாறு வயது ஒரு இளைஞன் போல விளையாடும் சச்சின் இன்னும்பத்து வருடங்கள் விளையாடினால் முன்னூறு அடித்தாலும் அடிப்பார். சரித்திரவீரர் சச்சினுக்கு தலைவணங்குகிறேன்.
****************************************************************************************
ஆங்கிலப்படம்
நேற்று முன்தினம் NATIONAL TREASURE BOOK OF SECRETS பார்த்தேன், ஏற்கனவே ஒரு முறை ஆரம்பம் மட்டும் பார்த்திருந்தேன், ஆனால் படத்தின் பெயரை மறந்து விட்டதால் கஷ்டப்பட்டு பெயரைக் கண்டு பிடி்த்துப்பார்த்தேன். என்ன ஒரு படம். தமிழ்ப்படங்கள் பக்கத்தில் நிற்க முடியாது.
தேசியபொக்கிஷங்களை தனக்குக் கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றைக் கண்டுபிடித்து அது எதிரிகள் கையில் கிடைப்பதைத் தடுப்பதுதான் கதை.கச்சிதமாக படமாகடகியிருக்கிறார்கள். இடையிடையே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகளும் வந்து போகின்றன.மொத்தத்தில் படம் கலக்கல்.
தமிழில் வழக்கமான காதல், கத்தரிக்காய் என்று படக்கதைகளை அதைச்சுற்றிச் சுற்றி எடுக்காமல் சற்று வித்தியாசமான இவ்வாறான படங்களையும் எடுத்தால் நல்லாயிருக்கும்.
ஆங்கிலப்படம்
நேற்று முன்தினம் NATIONAL TREASURE BOOK OF SECRETS பார்த்தேன், ஏற்கனவே ஒரு முறை ஆரம்பம் மட்டும் பார்த்திருந்தேன், ஆனால் படத்தின் பெயரை மறந்து விட்டதால் கஷ்டப்பட்டு பெயரைக் கண்டு பிடி்த்துப்பார்த்தேன். என்ன ஒரு படம். தமிழ்ப்படங்கள் பக்கத்தில் நிற்க முடியாது.
தேசியபொக்கிஷங்களை தனக்குக் கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றைக் கண்டுபிடித்து அது எதிரிகள் கையில் கிடைப்பதைத் தடுப்பதுதான் கதை.கச்சிதமாக படமாகடகியிருக்கிறார்கள். இடையிடையே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகளும் வந்து போகின்றன.மொத்தத்தில் படம் கலக்கல்.
தமிழில் வழக்கமான காதல், கத்தரிக்காய் என்று படக்கதைகளை அதைச்சுற்றிச் சுற்றி எடுக்காமல் சற்று வித்தியாசமான இவ்வாறான படங்களையும் எடுத்தால் நல்லாயிருக்கும்.
****************************************************************************************
கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அண்ணாவுக்கு அஞ்சலி
இலங்கையின் கலையுலகை தூக்கி நிறுத்திய கலைஞர்
ஸ்ரீதர் அண்ணாவின் இழப்பு இலங்கை கலையுலகால் ஈடு செய்யமுடியாதது. தனக்குள் இசை, நடிப்பு போன்ற பல கலைகளை கொண்ட கலைஞர். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
*************************************************************************
அஜித்=மனிதன்
அஜித் கலைரின் விழாவில் பேசிய பேச்சுக்குப்பிறகு ஜகுவார்தங்கம் அஜித் மீது பாய்ந்ததும், அஜித் இனி நடிக்கமுடியாது என்று செய்திகள் பரவியதும், அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில் அஜித் தமிழனா என்று கேட்டிருக்கிறார்களாம். இனி தான் இந்த விடயத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை, மீண்டும் மீண்டும்கதைத்தால்தானே விடயம் பூதாகாரமாகும் எனவே தான் இது பற்றிக் கதைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் அஜித். மீண்டும் தலைவணங்குகிறேன் அஜித் வாழ்க.
*************************************************************************
NO COMMENTS
நாம் எத்தனையோ விளையாடுக்கள் சின்ன வயதிலிருந்து விளையாடியிருப்போம். ஆனால் இலங்கையைப்பொறுத்தவரையில் சின்னவயதிலேயே இலங்கையின் உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல நானும் ஒரு கிறிக்கற் பைத்தியம். கிறிக்கற்தான் எனது ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலான விளையாட்டு.
நான் கொழும்பில்தான் கிறிக்கற்ரை விளையாட ஆரம்பித்தேன், எனது பிட்ச் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரு சுவர்களுக்கிடையே ஒரு 7, 7.5 அடி இருக்கும். விளையாடுபவ்களின் எண்ணிக்கை - 1 (நான் மட்டும்தான்).
பந்தை சுவருக்கு எறிவதும் அது திரும்பி வருவதற்குள்எறிந்த கை சீக்கிரமாக BATஐ பிடிக்க வேண்டும், பிடித்த மாத்திரத்தில் பந்து வந்துவிடும் அதை அடிக்க வேண்டும். என்ன ஒரு கலை அதுவும் பயிற்சியில் நேரம் செல்லச்செல்ல பந்து எறியும் வேகம், நாம் அடிக்கும் வேகம் ஆகியன அதிகரித்துக்கொண்டே போகும். முதல்நாள் பார்த்த போட்டியின் ஸ்கோர் அடிக்க வேண்டிய ஓவர் பந்து வீச்சாளர் பெயர் என்பவற்றையும் மனது கணக்குப்போட்டுக்கொண்டிருக்கும்.
இப்படி ஒரு நாள் மாலை கடைசிப்பந்துக்கு ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மின்னொளியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடித்த அடியில் அது ஆறு ஓட்டமா இல்லையா எண்டது வேறு கதை நான் ஒரே ஓட்டம் மேல்மாடிக்கு. ஆம் அடித்த அடியில் எதிரே உள்ள சுவரில் பட்ட பந்து நியூட்டனின் மூன்றாம் விதியுடன் திரும்ப வந்து என் தலைக்கு மே லே ஒளிர்ந்து கொண்டிருந்த டியூப் லைட்டைத் தாக்கியது. எனக்கு ஏதோ பூமாரிப்பொழிந்தது போல இருந்தது.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் அடியேன் எஸ்கேப். இங்கு எல்லாருக்கும் போல எனக்கும் விதிதான் விளையாடியது. (நியூட்டனின் 3ஆம் விதி..ஹிஹி)
அன்றுமுதல் இடம் மாற்றப்பட்டது. அடுத்த பிட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு அடி அகலம், உண்மையான் பிட்களின் அளவில் கால்வாசி அளவு வரும், இது வழக்கமாக பந்து வீச்சுப்பயிற்சிக்கு நான் பயன்படுத்தும் இடம், நியூட்டனின் சியால் இங்கு BATTINGகும் மாற்றப்பட்டது. இங்கும் விதி விளையாடியது (நியூட்டனல்ல) அது கொழும்பில் மின்வெட்டுக்காலம். எனவே எரிந்த சிமிலியை கழுவி எனது சிக்ஸ் எல்லையில் இருந்த ஒரு மேசையில் காயவைத்திருந்தார்கள். ஆனால் அன்று ஜயசூரிய நிலைத்து நின்று ஆடும் ஆட்டம். எனவே அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கவேண்டும் அப்படி அடித்து ஒரு அரைச்சதமும் போட்டாச்சு, அடுத்து அடித்த அடியில் "கிளிங் கொழுங் கிங்" என்று ஒரு சத்தம். என்னடா சத்தம்? ஏதோ உடைந்து விட்டது என்று மட்டும் தெரிந்தது. ஓடிப்போய்ப்பார்த்தால் கழுவிவைத்த சிமிலி சுக்குநூறாகக்கிடந்தது.
நான் கொழும்பில் படிக்கும் போது விடுமுறைக்க திருமலைக்கு வருவது வழக்கம். அப்போது ஒரு சமயம் எனது மச்சானும் திருமலைக்கு வந்திருந்தார். அங்கு பரந்து விரிந்த இடம் இருக்கும். கிறிக்கற், புட்பால் என எல்லாம் விளையாடலாம். அப்படித்தான் ஒரு நாள் கிறிக்கற் அது இது என்று விளையாடிக்களைத்து, புதிய விளையாட்டுத் தேடிய நேரம், மச்சான் சொன்னான் டேய் கிணறு கிண்டி விளையாடலாம் என்றான். சரியென்று ஓர் இடத்தில் கிண்டத் தொடங்கினோம். ஆனால் அந்த இடத்தில் வெயிலில் இருந்து கிணறு கிண்டியதைப் பார்த்து போய் நிழல்ல இருந்து விளையாடுங்கடா என்று அதட்டல் கேட்டது. சரியென, இடத்தை மாற்றி வீட்டுக்கருகில் ஒரு இடத்தில் கிண்டத்தொடங்கினோம்.
ஆனால் அங்கு கிண்டுவது கடினமாக இருந்ததால். கிண்டுவதற்கு ஆயுதம் தேட, கண்ணில் ஒரு அலவாங்கு பட்டது. அதை எடுத்து ஒரு குத்துதடதான் குத்தினேன். மெதுமெதுவாக தண்ணி வர ஆரம்பித்தது. ஆஹா... ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. என்று கத்தியபடி இருவரும். பெரியவர்களிடம் எதையோ சாதித்தது போல ஓட, ஓடி வந்து பார்த்தவர்கள் தண்ணி பைப் உடைந்துதான் தண்ணீர் வருகிறது எண்ட விடயம் அதுக்குப்பிறகுதான் எங்கள் கூர்மையான புத்திக்கு எட்டியது. இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம்.
நான் கொழும்பில்தான் கிறிக்கற்ரை விளையாட ஆரம்பித்தேன், எனது பிட்ச் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரு சுவர்களுக்கிடையே ஒரு 7, 7.5 அடி இருக்கும். விளையாடுபவ்களின் எண்ணிக்கை - 1 (நான் மட்டும்தான்).
பந்தை சுவருக்கு எறிவதும் அது திரும்பி வருவதற்குள்எறிந்த கை சீக்கிரமாக BATஐ பிடிக்க வேண்டும், பிடித்த மாத்திரத்தில் பந்து வந்துவிடும் அதை அடிக்க வேண்டும். என்ன ஒரு கலை அதுவும் பயிற்சியில் நேரம் செல்லச்செல்ல பந்து எறியும் வேகம், நாம் அடிக்கும் வேகம் ஆகியன அதிகரித்துக்கொண்டே போகும். முதல்நாள் பார்த்த போட்டியின் ஸ்கோர் அடிக்க வேண்டிய ஓவர் பந்து வீச்சாளர் பெயர் என்பவற்றையும் மனது கணக்குப்போட்டுக்கொண்டிருக்கும்.
இப்படி ஒரு நாள் மாலை கடைசிப்பந்துக்கு ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மின்னொளியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடித்த அடியில் அது ஆறு ஓட்டமா இல்லையா எண்டது வேறு கதை நான் ஒரே ஓட்டம் மேல்மாடிக்கு. ஆம் அடித்த அடியில் எதிரே உள்ள சுவரில் பட்ட பந்து நியூட்டனின் மூன்றாம் விதியுடன் திரும்ப வந்து என் தலைக்கு மே லே ஒளிர்ந்து கொண்டிருந்த டியூப் லைட்டைத் தாக்கியது. எனக்கு ஏதோ பூமாரிப்பொழிந்தது போல இருந்தது.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் அடியேன் எஸ்கேப். இங்கு எல்லாருக்கும் போல எனக்கும் விதிதான் விளையாடியது. (நியூட்டனின் 3ஆம் விதி..ஹிஹி)
அன்றுமுதல் இடம் மாற்றப்பட்டது. அடுத்த பிட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு அடி அகலம், உண்மையான் பிட்களின் அளவில் கால்வாசி அளவு வரும், இது வழக்கமாக பந்து வீச்சுப்பயிற்சிக்கு நான் பயன்படுத்தும் இடம், நியூட்டனின் சியால் இங்கு BATTINGகும் மாற்றப்பட்டது. இங்கும் விதி விளையாடியது (நியூட்டனல்ல) அது கொழும்பில் மின்வெட்டுக்காலம். எனவே எரிந்த சிமிலியை கழுவி எனது சிக்ஸ் எல்லையில் இருந்த ஒரு மேசையில் காயவைத்திருந்தார்கள். ஆனால் அன்று ஜயசூரிய நிலைத்து நின்று ஆடும் ஆட்டம். எனவே அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கவேண்டும் அப்படி அடித்து ஒரு அரைச்சதமும் போட்டாச்சு, அடுத்து அடித்த அடியில் "கிளிங் கொழுங் கிங்" என்று ஒரு சத்தம். என்னடா சத்தம்? ஏதோ உடைந்து விட்டது என்று மட்டும் தெரிந்தது. ஓடிப்போய்ப்பார்த்தால் கழுவிவைத்த சிமிலி சுக்குநூறாகக்கிடந்தது.
******
நான் கொழும்பில் படிக்கும் போது விடுமுறைக்க திருமலைக்கு வருவது வழக்கம். அப்போது ஒரு சமயம் எனது மச்சானும் திருமலைக்கு வந்திருந்தார். அங்கு பரந்து விரிந்த இடம் இருக்கும். கிறிக்கற், புட்பால் என எல்லாம் விளையாடலாம். அப்படித்தான் ஒரு நாள் கிறிக்கற் அது இது என்று விளையாடிக்களைத்து, புதிய விளையாட்டுத் தேடிய நேரம், மச்சான் சொன்னான் டேய் கிணறு கிண்டி விளையாடலாம் என்றான். சரியென்று ஓர் இடத்தில் கிண்டத் தொடங்கினோம். ஆனால் அந்த இடத்தில் வெயிலில் இருந்து கிணறு கிண்டியதைப் பார்த்து போய் நிழல்ல இருந்து விளையாடுங்கடா என்று அதட்டல் கேட்டது. சரியென, இடத்தை மாற்றி வீட்டுக்கருகில் ஒரு இடத்தில் கிண்டத்தொடங்கினோம்.
ஆனால் அங்கு கிண்டுவது கடினமாக இருந்ததால். கிண்டுவதற்கு ஆயுதம் தேட, கண்ணில் ஒரு அலவாங்கு பட்டது. அதை எடுத்து ஒரு குத்துதடதான் குத்தினேன். மெதுமெதுவாக தண்ணி வர ஆரம்பித்தது. ஆஹா... ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. என்று கத்தியபடி இருவரும். பெரியவர்களிடம் எதையோ சாதித்தது போல ஓட, ஓடி வந்து பார்த்தவர்கள் தண்ணி பைப் உடைந்துதான் தண்ணீர் வருகிறது எண்ட விடயம் அதுக்குப்பிறகுதான் எங்கள் கூர்மையான புத்திக்கு எட்டியது. இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம்.
சோவாக் - அது பவுண்டரி சார்
முதலில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்சால் வெற்றியீட்டியது அனைவரும் அறிந்ததே, அதில் சிறப்பாகப் பந்து வீசிய ஹர்பஜனுக்கு என் வாழ்த்துக்கள். நேற்றைய போட்டியை பார்த்தவர்கள் கடைசிக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை காணத்தவறியிருக்கமாட்டீர்கள்.
சச்சினின் வீசிய பந்தை OFF திசையில் அடித்த அம்லாவின் பந்தைப்பிடிக்க முயற்சி எடுக்காத சேவாக் மெதுவாக ஓடிச் சென்றார், அப்பந்து அவர் எதிர்பார்த்தது போல பவுண்டரியை கடக்காமல் போகவே அதை காலால் பவுண்டரிக்குள் தட்டிவிட்டு நடுவருக்கு 4 ஓட்டம் எனச்சைகை காட்டினார், இச்சம்பவம் நகைப்பை ஏற்படுத்தினாலும் இவ்வாறு பல பவுண்டரிகளை கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் சட்டை செய்யாமல் போகட்டும் என்று விட்டுக்கொடுத்ததையும் காணக்கூடியதபக இருந்தது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் கடைசிவரை ஒரு கம்பீரத்துடன் இதுமாதிரியான விரும்பத்தகாத விடயங்களை இனியாவது இவர்கள் திருத்திக்கொள்ளலாம்.
இதை அவதானித்த நடுவர் தண்டனையாக 5 ஓட்டங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
***********************************************************************************************
அம்லா - சிங்கமே!!!
நேற்றைய போட்டியில் சிங்கமாக என் கண்ணில் பட்டவர் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா , என்ன ஒரு ஆட்டம் அதுவும் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்து கொண்டு போக அவர் கடைசிவரை மைதானத்தில் காத்த பொறுமை, நிதானம் பதிவை எழுதும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவர் அதிகமாக பந்துகளை டொட் பண்ணும் போது எரிச்சல்ப் பட்டிருக்கிறேன் நேற்று தான் ஏன் அப்படி என்று காட்டிவிட்டார் மனுசன்.
இரண்டு போட்டிகளில் மற்றும் தொடரில் சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற இவரை சிங்கம் என்று பாராட்டலாம், ஏனென்றால் சிங்கம் சிங்கிள் தான் அடிக்கும் அதுவும் சிங்கிளா நின்றுதான் அடிக்கும்.
நேற்று முன்தினம்கோவா படம் பார்த்தேன், அதிகம் இரட்டை அர்த்த வசனங்கள். 100% இளைஞர்களுக்கான படம். கட்டுப்பாடான கிராமத்தலிருந்து ஓடிப்போகும் இளைஞர்கள் பற்றிய கதை. படம் முழுவதும் காணப்படும் கவர்ச்சி சற்று நேரத்தில் பழகிப்போய் முகம் சுளிப்புக்குபெரிதாக இடம் கொடுக்கவில்லை. ஆனால் சென்னை 600028 போல எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மற்றது பிரேம் ஜீ அமரனுக்கு சுப்பிரமணியபுரம் பின்னணி இசை, வைபவ் ரெட்டிக்கு பழங்கப்படும் பின்னணி இசை என இசையில் கலக்கலையும், காமடியையும் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது, கடைசியில் சிம்பு வருவதுதான். அடஅடஅட என்னமா யோசிச்சிருக்காங்க, அதுவும் சிம்பு வந்த அந்த கடைசி சீன் கலக்கல்.
*********************************************************
சுஜா(ஆ)தா
இப்போதுதான் புத்தகங்கள் பல படிக்கத்தொடங்கியிருக்கிறேன். முதலில் படித்தது சுஜாதாவின் "ஆ" குரல்கள் பற்றிய கதை, என்ன ஒரு எழுத்தாளர். ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்கத்தூண்டும் வகையில் இருக்கிறது. அடுத்து சுஜாதாவின் கொலையுதிர்காலம் படிக்க ஆசை, ஆனால் தேடிக்களைத்துவிட்டேன். யாராவது படிப்பதற்கு லிங் இருந்தால் பின்னூட்டத்தில் தந்துவிட்டுப்போங்கள்.
NO COMMENTS
முதலில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்சால் வெற்றியீட்டியது அனைவரும் அறிந்ததே, அதில் சிறப்பாகப் பந்து வீசிய ஹர்பஜனுக்கு என் வாழ்த்துக்கள். நேற்றைய போட்டியை பார்த்தவர்கள் கடைசிக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை காணத்தவறியிருக்கமாட்டீர்கள்.
சச்சினின் வீசிய பந்தை OFF திசையில் அடித்த அம்லாவின் பந்தைப்பிடிக்க முயற்சி எடுக்காத சேவாக் மெதுவாக ஓடிச் சென்றார், அப்பந்து அவர் எதிர்பார்த்தது போல பவுண்டரியை கடக்காமல் போகவே அதை காலால் பவுண்டரிக்குள் தட்டிவிட்டு நடுவருக்கு 4 ஓட்டம் எனச்சைகை காட்டினார், இச்சம்பவம் நகைப்பை ஏற்படுத்தினாலும் இவ்வாறு பல பவுண்டரிகளை கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் சட்டை செய்யாமல் போகட்டும் என்று விட்டுக்கொடுத்ததையும் காணக்கூடியதபக இருந்தது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் கடைசிவரை ஒரு கம்பீரத்துடன் இதுமாதிரியான விரும்பத்தகாத விடயங்களை இனியாவது இவர்கள் திருத்திக்கொள்ளலாம்.
இதை அவதானித்த நடுவர் தண்டனையாக 5 ஓட்டங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
***********************************************************************************************
அம்லா - சிங்கமே!!!
நேற்றைய போட்டியில் சிங்கமாக என் கண்ணில் பட்டவர் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா , என்ன ஒரு ஆட்டம் அதுவும் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்து கொண்டு போக அவர் கடைசிவரை மைதானத்தில் காத்த பொறுமை, நிதானம் பதிவை எழுதும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவர் அதிகமாக பந்துகளை டொட் பண்ணும் போது எரிச்சல்ப் பட்டிருக்கிறேன் நேற்று தான் ஏன் அப்படி என்று காட்டிவிட்டார் மனுசன்.
இரண்டு போட்டிகளில் மற்றும் தொடரில் சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற இவரை சிங்கம் என்று பாராட்டலாம், ஏனென்றால் சிங்கம் சிங்கிள் தான் அடிக்கும் அதுவும் சிங்கிளா நின்றுதான் அடிக்கும்.
****************************************************
கோவா
*******************************************
கோவா
நேற்று முன்தினம்கோவா படம் பார்த்தேன், அதிகம் இரட்டை அர்த்த வசனங்கள். 100% இளைஞர்களுக்கான படம். கட்டுப்பாடான கிராமத்தலிருந்து ஓடிப்போகும் இளைஞர்கள் பற்றிய கதை. படம் முழுவதும் காணப்படும் கவர்ச்சி சற்று நேரத்தில் பழகிப்போய் முகம் சுளிப்புக்குபெரிதாக இடம் கொடுக்கவில்லை. ஆனால் சென்னை 600028 போல எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மற்றது பிரேம் ஜீ அமரனுக்கு சுப்பிரமணியபுரம் பின்னணி இசை, வைபவ் ரெட்டிக்கு பழங்கப்படும் பின்னணி இசை என இசையில் கலக்கலையும், காமடியையும் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது, கடைசியில் சிம்பு வருவதுதான். அடஅடஅட என்னமா யோசிச்சிருக்காங்க, அதுவும் சிம்பு வந்த அந்த கடைசி சீன் கலக்கல்.
*********************************************************
*****************************************
சுஜா(ஆ)தா
இப்போதுதான் புத்தகங்கள் பல படிக்கத்தொடங்கியிருக்கிறேன். முதலில் படித்தது சுஜாதாவின் "ஆ" குரல்கள் பற்றிய கதை, என்ன ஒரு எழுத்தாளர். ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்கத்தூண்டும் வகையில் இருக்கிறது. அடுத்து சுஜாதாவின் கொலையுதிர்காலம் படிக்க ஆசை, ஆனால் தேடிக்களைத்துவிட்டேன். யாராவது படிப்பதற்கு லிங் இருந்தால் பின்னூட்டத்தில் தந்துவிட்டுப்போங்கள்.
*******************************************************
*****************************************
நடுவரைப்பாருங்கள்
கண்கள் கூசுகிறது, சற்று குளிர்வது போல உணர்கிறேன்.கண்களைத்திறந்து பார்க்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. கட்டடங்கள் கூட இல்லை. என்ன நடந்தது கொஞ்சநேரத்துக்கு முதல் ஆம் ஹாஹாஹா.... நான் பிழைத்துவிட்டேனா? பூமியைத்தாக்கிய விண்கல் என்னைத்தாக்கவில்லை, எல்லோரும் இறந்து விட்டனரா, நான் மட்டும் பிழைத்துவிட்டேனா? இனம்புரியாத மகிழ்ச்சி. 2012ஆம் ஆண்டு உலக அழிவிலிருந்து தப்பிவிட்டேன், நான் மட்டும்தான் தப்பியவனா? இந்த உலகிற்கே நான்தான் இப்போது சொந்தக்காரனா?
"அடச்சீ என்ன மனிதனடா நீ உலகத்தில் உள்ள அனைவருமே அழிந்து விட்டனர், நீ பிழைத்தது உனக்கு மகிழ்ச்சியா?" மனச்சாட்சி எனக்குள் குமுறுகிறது. சரி முடிந்தது முடிந்து விட்டது. கணனிக்கு முன் உட்கார்ந்து கார்பிளாக்ஸ் சாப்பிட்ட எனக்கு இன்று பழங்குடியினர் போல மரங்களில் உள்ள பழங்கள், இலைகளைச் சாப்பிட்டு பசியாற்ற வேண்டிய நிலை. சிலநாட்கள் இப்படியே கடந்தது. முதுகு வலியும் சற்றுக்குறைய எழுந்து நடக்கத்தொடங்கினேன். கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் வழியெங்கும் பிணங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்கும் வாகனங்கள் செத்துப்போன கரப்பான் பூச்சிபோல கவிழ்ந்து கிடக்கிறது.
யாரது? அவரா அது? அவனுக்கென்ன மரியாதை அது அவனா? அங்கே கொட்டில் அமைத்து என்னசெய்கிறான்? அட இங்கு குட்டிக் குட்டி உருவங்கள் வேறு இருக்கின்றனவே? ஆம் அந்தக் குட்டி உருவங்கள் இதுவரை செய்திகளிலும் படங்களிலும் பார்த்த ஏலியன்கள்தான், அவை எப்படி இவனுடன், அட யாரிந்த இவன் என்கிறீர்களா? காவி உடை, கையில் கமண்டலம் ஆம் இவன் அந்தப்போலிச்சாமியே தான். ஏலியன்களுடன் என்ன செய்கிறான், சற்றுகிட்டப்போய்ப்பார்க்கலாம் என்று போகிறேன், மனம் படபடக்கிறது.ஏதோ மந்திரம் சொல்கிறான், அவையும் (ஏலியன்களும்) சொல்கின்றன, அவனின் காலில் விழுந்து வணங்குகின்றன.
திடீரென டிஜிட்டல் பதாகைகளுடன் மைக் போட்டுக் கத்தியபடி ஒரு ஏலியன்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. நடுவில் ஒருத்தர் மட்டும் வித்தியாசமாகக் காணப்படுகிறார், ஆம் அந்த அரசியல்வாதிதான், இவனும் பிழைத்துக் கொண்டானா? என்ன கொடுமை இது, நல்லவர்கள் யாருமே பிழைக்கவில்லையா? மீண்டும் மனச்சாட்சி குமுறுகிறது, கவலை தொற்றிக்கொள்கிறது. மீண்டும் இப்படியொரு சமூகத்தில் வாழவேண்டுமா?
நீண்ட நேர நடைப்பயணம், கால்கள் கடுக்கிறது நிலத்தில் அமர்ந்து விட்டேன், களைப்பு மிகுதியால் கையை நில்த்தில் ஊன்றுகிறேன், அங்கே கையில் தட்டுப்பட்டது ஒரு மடிக்கணனி எடுத்துப்பார்க்கிறேன் வேலை செய்கிறது, அட வயர்லஸ் இன்டர் நெட் கூட வேலை செய்கிறது. அட உடனடியாக மடிக்கணனியில் அந்தப்போலிச்சாமி, அரசியல் போன்ற விடயங்களைப்பதிவிடவேண்டும் ஆனால் அந்த ஏலியன்களுக்கு எந்தமொழி தெரியுமோ? உடனடியாக யோசனை தோன்றுகிறது அவர்கள் பற்றிய வீடியோககளை பதிவிடுகிறேன், ஆம் என்னதான் உலகம் அழிவு ஏற்பட்டாலும் இப்படி ஒருசிலர் தப்பித்துக்கொண்டால் மனிதனென்ன எந்த உயிரினமும்,ஏலியன்களும் கூட அடிமையாகும் அவர்களுக்கு.
பி.கு - உலகம் அழியுதோ இல்லையோ அழிக்கப்பட வேண்டிய மூட நம்பிக்கையை அழிப்போம்.
காதலர்தினத்தையொட்டி காதல் கவிதை எழுத முடியாமல் கஸ்டப்படும் நம்ம பதிவரி ஒருத்தர் கடவுளைக் கும்பிடுகிறார் உடனே நான் கவிதை எழுதித்தருகிறேன் என்று கூறி வரும் பதிவுக்கடவுளின் புலமையைச் சோதிக்க பதிவர் பல கேள்விகளை திருவிளையாடல் ஸ்டைலில் கேட்கிறார்...
பிரிக்கமுடியாதது என்னவோ? - கோபியும் ருவிட்டரும்
பிரியக்கூடாதது? - மொக்கையும் கும்மியும்
சேர்ந்தே இருப்பது? - வந்தியும் இளமையும்
சேராதிருப்பது? - யோவும் நேரமும்
சொல்லக்கூடாதது? - அனானிக்கு பதில்
சொல்லக்கூடியது? - பின்னூட்டத்துக்கு நன்றி
வரக்கூடாதது? - சீரியஸ் சந்தேகம்
வரவேண்டியது? - மொக்கையான சந்தேகம்
அடிக்கக்கூடாதது? - பதிவில் காப்பி(copy)
அடிக்கவேண்டியது? - காப்பியடிப்பவன் மண்டையில்
வேண்டக்கூடாதது? - மைனஸ் வோட்டு
வேண்டப்படுவது? - ஓட்டும் பின்னூட்டமும்
எழுதக்கூடாதது? - அரசியல் உண்மைகள்
எழுதவேண்டியது? - மொக்கையும் சிரிப்பும்
பார்க்கக்கூடாதது? - மொக்கையில் லாஜிக்
பார்த்து ரசிப்பது? - போட்டோவும் கமெண்ட்சும்
பதிவில் சிறந்தது? - காமடி, மொக்கை, கும்மி
கும்மியென்பது? - கொலைவெறித்தாக்குதல்
கமண்டுக்கு? - கன்கொன்
கடிக்கு? - அப்ரிடி
முடிக்கு? - சுபாங்கன்
வெடிக்கு? - புல்லட்
கதைக்கு? - ஆதிரை
கருத்துக்கு? - பாலா
கவிதைக்கு? - கீர்த்தி
காதலுக்கு? - அனுதினன்
பதிவுக்கு? - நான்
பதிலுக்கு? - நீ
இவரது அறிவைப்பார்த்து வியந்த அந்தப்பதிவர் பதிவுக்கடவுளிடம் கவிதை எழுதி வாங்கிக்கொண்டு காதலியைத்தேடிப் போகிறார்.
காதலர்தினம் வருகிறது, எனவே காதலர்தினத்துக்க தயாராகும் இளைஞன் ஒருவன் காதலைச் சொல்வதிலிருந்து சொல்லிமுடிக்கும் வரை என்னென்ன செய்கிறான் பாருங்கள்...
காதலிக்கும் பெண்ணைப்பார்த்து காதல் வந்ததும்
காதலர் தினத்துக்க ஒரு வாரத்துக்கு முதல்
காதலர் தினத்துக்கு மூன்று நாட்களுக்கு முதல்
காதலர் தினத்துக்கு முதல்நாள்- பயந்திருக்கும் காதலர் கோயிலுக்குப்போய் அலகு குத்தி வேண்டிக்கிறார் அங்க அவரின் நண்பர் ஒரு பாட்டுப்படிக்கிறார்
கவலைப்படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்திருப்பா காதலைத்தான் சேத்துவைப்பா...
காதலர் தினத்தன்று காதலைச்சொல்லும் போது
காதலி சரி என்று முடிவைக் கூறும்போது
அடுத்த காதலர் தினத்தன்று அந்தக்காதலனின் நிலை
காதலி நெக்லஸ் வாங்கித்தராத காதலனை
என்று திட்டிவிட்டுப் பிரிந்துவிட அதற்கு அடுத்த காதலர்தினத்தில் அதே காதலனின் நிலை
ScriptNetSL நிறுவனமானது திருகோணமலையில் Digital Film Making தொடர்பான ஒரு முழுமையான பயிற்சி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சிப்பட்டறையானது Camera, Editing, Scriptwriting, Direction உட்பட Digital Film Making தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 14.02.2010 அன்று காலை 9.00 தொடக்கம் நண்பகல் 12.30 வரை
இல 102 தபாற் கந்தோர் வீதி திருகோணமலையில் -Near UNHCR Office- நடத்தப்படவுள்ளது.
Digital Film Making தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்வோர் 18 – 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்விற்கு வருகை தரவுள்ளோர் முன்கூட்டியே தொலைபேசி மூலம் தங்களது நேர்முகத்தேர்வு நேரத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
பயிற்சிப்பட்டறைக்கான பயிலுனர்கள் நேர்முகத்தேர்வின் மூலமே தெரிவு செய்யப்படுவர்.
மேலதிக தகவல்களுக்கு
0115624300
kriap@yahoo.com