-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது
-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"யாருக்கோ! :P#damnTrue#Annamalai
-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்
-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P
-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P
-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்
-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம்#fail :@
-08-
-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P
-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லஉன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.
-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.."
-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D
-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்
-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"||@madhankarky யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))#Nanban
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by@vairamuthu
2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.
இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.
கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!
கிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.
இவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.
நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...
கிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.
முன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.
இத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.
இவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.
நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...
கிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.
முன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.
இத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.