நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக "உன்னைக் காலில் விழ வைக்கிறன் பாருடா" என்று சொன்னார். அந்த நேரத்தில் மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதை அவர்களால் திடீரென ஏன் விட்டுவிட முடியாமல் இருக்கிறது? என்ன காரணம்? என்று ஒரு விடயம் மனதில் தோன்றியது.
அதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில்லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை ஒரு கட்டத்துக்கு மேல் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த பின்னரும் ஒரு மனிதனால் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஒரு மனிதனின் உடலை 3 பகுதிகளை எடுத்துக் கொள்ளுவோம். கால், கை மற்றும் தலை. இந்த 3 பகுதிகளிடம் நாம் காட்டும் பாகுபாடுதான் இன்றைய சாதிக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்குகிறது.
இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால், கால்தான் உடலின் மற்றப்பகுதிகளையும் சேர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. கைகள்தான் பொருட்களைத் தூக்குதல் எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவுகிறது. தலை(மூளை) அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டளை வழங்கிவிட்டுப் பேசாமலிருக்கிறது. உதாரணமாகப் பார்த்தால் தெரியாமல் யார்மீதாவது கால் பட்டுவிட்டால் உடனே மன்னிப்புக் கேட்கிறோம், ஆனால் கை பட்டால் கேட்பதில்லை.
அதாவது உயர்ந்த தரமாக இருந்தால் அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்கள் நடக்க வேண்டும், மத்திய தரமாக இருந்தால் உயர் தரத்துக்குக் மட்டும் கீழ்ப்படிய வேண்டும், தாழ்ந்தவர் உயர்ந்த, மத்திய தரங்களைத் மதிக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். ஆக சாதிப்பிரிவினை மனிதர்களிடையே மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் உறுப்புகளுக்கிடையே கூடக் காணப்படுகிறது அல்லது அப்படி நம்மையறியாமலே சிறுவயதிலிருந்து பிழையான வழிகாட்டலில் வளர்ந்துவிட்டோம்.
ஆனால் மனிதர்களுக்கு சில விடயங்கள் புரிவதில்லை,உடல் முழுவதும் ஓடும் குருதி, நரம்புகள், எலும்புகள் அனைத்தும் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைக்கேற்றாற் போல பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதி சாதி என்று கையையோ காலையோ வெட்டிவிட்டாலும் உயிருடன் வாழலாம் ஆனால் காலையும் கையையும் வெட்டி வைத்துவிட்டு தலையை மட்டும் வெட்டிக் விட்டால் உடல் செத்துப் போய்விடும்.
அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது உடல் இயங்குவதற்காக வேலைகளைச் செய்யும் கையும் காலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது, ஆனால் கையோ காலோ சரி நாங்கள் உன்னுடன் வரவில்லை என்று தலையை வெட்டிவிட்டால் உடல் சாக வேண்டியதுதான். உடல் சாகக் கூடாது என்பதற்காக கையும் காலும் அமைதியாக இருக்கிறதே தவிர தலைக்குப் பயந்து இல்லை என்பதை உணர்வதில்லை.
தலையே போகிற விடயமென்றாலும் சாதிதான் முக்கியம் என்பார்கள், ஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்!
அதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில்லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை ஒரு கட்டத்துக்கு மேல் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த பின்னரும் ஒரு மனிதனால் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஒரு மனிதனின் உடலை 3 பகுதிகளை எடுத்துக் கொள்ளுவோம். கால், கை மற்றும் தலை. இந்த 3 பகுதிகளிடம் நாம் காட்டும் பாகுபாடுதான் இன்றைய சாதிக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்குகிறது.
இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால், கால்தான் உடலின் மற்றப்பகுதிகளையும் சேர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. கைகள்தான் பொருட்களைத் தூக்குதல் எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவுகிறது. தலை(மூளை) அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டளை வழங்கிவிட்டுப் பேசாமலிருக்கிறது. உதாரணமாகப் பார்த்தால் தெரியாமல் யார்மீதாவது கால் பட்டுவிட்டால் உடனே மன்னிப்புக் கேட்கிறோம், ஆனால் கை பட்டால் கேட்பதில்லை.
அதாவது உயர்ந்த தரமாக இருந்தால் அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்கள் நடக்க வேண்டும், மத்திய தரமாக இருந்தால் உயர் தரத்துக்குக் மட்டும் கீழ்ப்படிய வேண்டும், தாழ்ந்தவர் உயர்ந்த, மத்திய தரங்களைத் மதிக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். ஆக சாதிப்பிரிவினை மனிதர்களிடையே மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் உறுப்புகளுக்கிடையே கூடக் காணப்படுகிறது அல்லது அப்படி நம்மையறியாமலே சிறுவயதிலிருந்து பிழையான வழிகாட்டலில் வளர்ந்துவிட்டோம்.
ஆனால் மனிதர்களுக்கு சில விடயங்கள் புரிவதில்லை,உடல் முழுவதும் ஓடும் குருதி, நரம்புகள், எலும்புகள் அனைத்தும் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைக்கேற்றாற் போல பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதி சாதி என்று கையையோ காலையோ வெட்டிவிட்டாலும் உயிருடன் வாழலாம் ஆனால் காலையும் கையையும் வெட்டி வைத்துவிட்டு தலையை மட்டும் வெட்டிக் விட்டால் உடல் செத்துப் போய்விடும்.
அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது உடல் இயங்குவதற்காக வேலைகளைச் செய்யும் கையும் காலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது, ஆனால் கையோ காலோ சரி நாங்கள் உன்னுடன் வரவில்லை என்று தலையை வெட்டிவிட்டால் உடல் சாக வேண்டியதுதான். உடல் சாகக் கூடாது என்பதற்காக கையும் காலும் அமைதியாக இருக்கிறதே தவிர தலைக்குப் பயந்து இல்லை என்பதை உணர்வதில்லை.
தலையே போகிற விடயமென்றாலும் சாதிதான் முக்கியம் என்பார்கள், ஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்!