Music: Roshan
Vocal: Kay Jay
Lyrics: Bavan
இதயத்தின் ஓசையும் செவியினில் தொலையுதே
முட்களில் சிக்கியே மனமெல்லாம் கிழியுதே
சிதறியே சிதறியே மனமெல்லாம் பறக்குதே
உதறியே ஊதறியே உலகெல்லாம் வெறுக்குதே
சமூகத்தின் சாட்டையும் என்னயே அறையுதே
காமுகனின் வேட்டையில் என் உயிர்நாடி குறையுதே
மேகம் அது அழுது அழுது வான்மது வெளிக்கும் - என்
கண்ணீரின் குளத்தினிலே கனத்த மனம் மிதக்கும்
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதென்று
எண்ணியவனும் இன்று மாய்ந்து விட்டானோ
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதன் தலை குனிந்தானோ!
இது நரிகளும் உலவுகின்ற காடு - நீ
நல்லவனை பொறி வைத்து தேடு
புற்களிலே பனித்துளி வீழும்- அது
சூரியப் பற்களிலே நொருங்கிச் சாகும்
கண்ணியம் கொண்டு
பெண்ணியம் கண்டு
வஞ்சகம் கொன்று
வாழ்பவன் உண்டோ
விண்ணகம் சென்ற
பாரதி மீண்டும்
மண்ணகம் வந்து
பிறப்பெடுப்பானோ
பிறந்ததும் கொன்று
பெண்களைத் தின்று
புசிக்கும் மிருகங்களை
வேரறுப்பானோ
சிறுமியின் குமரியின்
தேகத்தை உறுஞ்சி
யுவதியைக் கிழவியைக்
காமத்தில் விழுங்கி
புணர்ச்சியில் கலந்து
உணர்ச்சியில் சிதைந்து
பயிரோடு மேய்ந்து
உயிரோடு கொன்று
முட்டி முளைக்கும்
அரும்பினை அறுத்து
வெட்டித் தளைக்க முன்
வேரோடு தறித்து
விதிமுறை மாற்றி
விடைகளைத் தேடி
நெறிமுறை மாற்றி
நடைகளைக் கூட்டி
நடையிட முயலும்
மாந்தரை கண்டு
அடக்கி ஒடுக்கி
விதை விடும் முன்னே
களையெனப்பிடுங்கி
மாசினை விதைத்து
காசினைக் கொடுத்து
கனவுகள் புதைத்து
ஆறாத காயமளிப்பது முறையோ
காதலின் பெயரில்
கலவிகள் கொண்டு
மோதலின் பெயரில்
காதலைக் கொன்று
சிசுவுடன் பெண்ணின்
அழுகுரல் கண்ணின்
உவர்ப்பு நீர் உண்டு
தன்னுயிர் மென்று
ஈருயிர் கொல்லும்
அகோர சமாதி
காதல் மோதல் கலவி காமம்
வஞ்சகம் சூழ்ச்சி போட்டி பொறாமை
பேராசை மோகம் தேகம் சாபம்
கலாச்சாரம் கட்டுப்பாடு பண்பாடு முட்டாள்
பாகுபாடு குறைபாடு அறிவிலி அடிமை
அஞ்ஞானம் மெஞ்ஞானம் மடந்தை
விழியின் சோகம் மண்ணோடு போகும்
வலியின் தாகம் நெஞ்சோடு சேரும்
இந்தக் காயம் ஆறும் முன் ஓடிவிடு
உந்தன் மாய மான்களை விரட்டிவிடு
-Bavan