என் முந்நாள் என்னவளே!
காதல் தீவிரவாதம்
அதில் இடைநழுவல்களுக்கு இடமில்லை
உன் மூச்சுத்தான் என் சுவாசம்
அதில் இளந்தென்றலுக்கு இடமில்லை
உன் பேச்சுத்தான் என் கீதம்
அதில் வேறு இசைகளுக்கு இடமில்லை
உன் நிழல்தான் என் நிஜம்
அதில் என் உருவத்துக்கு இடமில்லை
உன் தடம் தான் என் பாதை
அதில் வேறு பாதைகளுக்கு இடமில்லை
உன் மூச்சுத்தான் என் சுவாசம்
அதில் இளந்தென்றலுக்கு இடமில்லை
உன் பேச்சுத்தான் என் கீதம்
அதில் வேறு இசைகளுக்கு இடமில்லை
உன் நிழல்தான் என் நிஜம்
அதில் என் உருவத்துக்கு இடமில்லை
உன் தடம் தான் என் பாதை
அதில் வேறு பாதைகளுக்கு இடமில்லை
என் மனதுக்குள் எனக்கே
கல்லறை எழுப்பி
இதயத்தை துண்டு துண்டாய்
வெட்டி வீழ்த்தி
வெட்டி வீழ்த்தி
இரத்தம் சொட்டச் சொட்ட
ஓடிப்போகச் சொல்கிறாயே
ஓடிப்போகச் சொல்கிறாயே
கரைகடந்து போன பின்னர்
வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி
கடலில் தள்ளிவிடுகிறாயே
குளிர் பனித்துளியாய் இருந்த உன்னை
கடுஞ்சூரியனாய் மாற்றியது யார்?
சுகங்களை நீ அறிவாயா?
முதலாவது என்பதிலுள்ள
வலிகளை நீ அறிவாயா?
காட்டு யானையின் கால் பட்டு
உடைந்தகண்ணாடித் துகள்களாய்- காதலை
சில்லுசில்லாய் நொறுக்கிவிட்டாய்
வாரணம் கனக்கும் மனதுடன் நான்
ஓடிய பாதையெங்கும் - உன்
பெயரை உச்சரித்து இரத்தம்
உறைந்து போவதை நீ அறிவாயா
யதார்த்தம் என்ற பெயரில் சில
நிஜங்கள் பேசி - என்
உயிர் ஊசி பிடுங்கிவிட்டாய்
உயிர் ஊசி பிடுங்கிவிட்டாய்
பதிலுக்கு நிஜம் பேசி உன்
உயிரைப் புசிக்கமாட்டேன்
தயவு செய்து போய்விடு!