Related Posts with Thumbnails
Showing posts with label போலி. Show all posts

படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்









நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவேழுத வாய்ப்பளித்த மூடநம்பிக்கை கொண்டவர்களை வைத்துப் பிழைக்கும் போலிகளுக்கு நன்றி :P

திருகோணமலையில் ஒரு 4 அல்லது 5 வயதுக் குழந்தை தெய்வத்தின் அவதாரம், சூனியம் எடுக்கிறது, மக்களின் குறை தீர்க்கிறது என்றெல்லாம் ஒரு விடயம் பரவலாகப் பரவியது அனைவரும் அறிந்த விடயம். இதைத் தொடர்ந்து மக்கள் பலர் அதிகாலையிலிருந்து வரிசையில் நின்று இக்குழந்தையிடம் குறைகளைச் சொல்வதும் அக்குழந்தை அவர்களின் வீட்டுக்குப்போய் குறிப்பிட்ட இடத்தில் குழிகிண்டச் சொல்லி அதில் ஏதோ மந்திரத் தகடு இருக்கிறது என்று சொல்லி அதை எடுத்துவிட்டால் அவர்களின் சூனியம் எடுக்கப்பட்டுவிடும் எனச் சொல்லி பணம் கறப்பதும் சில காலமாக நடந்துவருகிற விடயம்.

எனக்கு சில தினங்களுக்கு முன்னர் இதை நேரடியாகப் பார்க்கும் ஓர் வாய்ப்புக் கிடைத்தது. நண்பன் ஒருவனின் வீட்டில் அக்குழந்தை வருகிறது என்று கேள்விப்பட்டு அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அங்கே அந்தக்குழந்தை, குழந்தையில் தாய், தந்தை ஆகிய மூன்று பேர் வந்திருந்தனர். முதலில் குழந்தை வீட்டுக்கு வந்ததும் வீட்டு வாசலில் உள்ள படிக்கட்டுக்கு கொஞ்சம் முன்னால் ஒரு வட்டம் போட்டுக் காட்டி இங்கேதான் இருக்கு என்று கூறியது.

உடனே அவ்விடத்தில் ஒரு 3 அடிக்கு குழி கிண்டி அதில் கிடைத்த மண்ணை அரித்து, கழுவி, எஞ்சிய கற்களை கொட்டி அதில் ஏதும் தகடு இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தனர். இதைக் குழந்தை, குழந்தையின் பெற்றோர் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களையே அவதானித்தபடி அமர்ந்திருந்தேன். குழந்தை தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயின் முகத்தில் ஒரு பதற்றத்தை உணரமுடிந்தது.

கொஞ்சநேரம் கழித்து "ஆக்கள நோட்டம் விடாம வேலையப் பாருங்க" என்றார் அந்தக் குழந்தையின் தாய். நான் அவரை அவதானித்துக் கொண்டிருப்பதை உணர்திருப்பார்போலும்.

அன்று சுமார் 5 மணிநேரமாகத் தேடியும் ஒரு ஆணி கூடக் கிடைக்கவில்லை. பிறகு நாளை வருகிறோம் என்று கிளம்பிச் சென்று விட்டனர்.

பின்னர் மீண்டும் மறுநாள் வந்து அதே இடத்தில் இன்னும் கொஞ்சம் தோண்டச் சொன்னது அக்குழந்தை. மீண்டும் தோண்டி மண்ணை எடுத்து கழுவி, அரித்துப் பார்த்ததில் ஒரு தகடு அகப்பட்டது. அதை படக்கென்று தனது கையில் வாங்கிய குழந்தையின் தாய் "அந்தத் தகடு கிடந்த இடத்தைச் சுற்றியுள்ள மண்ணை எடுத்து கடலில் போடுங்க" என்றுவிட்டு தகட்டை நைசாக மடித்து உடைத்துவிட்டார்.

உடனே நண்பனின் வீட்டிலிருந்த ஒருவர் வந்து தகட்டை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு "இது நாங்கள் வீடு கட்டும் போடு வைத்த காவல்த் தகடு எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது" என்று சொல்ல, உடனே குழந்தையின் தாய் "இல்லை இது சூனியத்தகடுதான்" என்று சமாளிக்க ஆரம்பிக்க, அவர்களுக்குள் வாக்குவாதம் கொஞ்சம் முற்றிய நிலையில். "சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்த உங்களுக்குத் தெரியாதா?" என்று கோபமாக கதையை மாற்றி அவர் மீதே பழியைப் போட முயன்று, நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டு மூக்குடைபட்டு அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் போலிச் சூனியக் குழுவினர்.



இந்தக் குழந்தையை வைத்து இதுவரை திருகோணமலையில் அரைவாசி வீடுகளில் இதுமாதிரி சூனியம் எடுக்கிறேன் என்ற போர்வையில்  குழி கிண்டி தகடு எடுத்திருக்கிறார்கள்.

இல்லைத் தெரியாமத்தான் கேக்கிறன், இந்தக் குழந்தை வந்த பிறகு மட்டும் எப்பிடி எல்லா வீடுகளிலேயும் சூனியம், தகடு, மண்ணாங்கட்டி எல்லாம் மாட்டுப்படுகிறது?

ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்தமாதிரிப் போலிகளுக்குக் கொண்டாட்டம்தான்.கஷ்டம் வரும் போது யார் எவர் என்று பார்க்காமல் எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடுகிறார்கள்.

பி்கு - ஒரு வீட்டில் சூனியம் எடுக்கிறதுக்கு ஆரம்பத்ததில் 10000 ருபாய்கள் வாங்கியவர்கள் தற்போது கிட்டத்தட்ட 20000 ருபாய்கள் வாங்குகிறார்களாம் இந்தப் போலிச் சூனியக்குழுவினர்.
தான்தான் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் கல்கிபகவான் சாரயச்சாமியாரின் அம்பலங்கள் நேற்று சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ளன. இது பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டோம்.

ஏற்கனவே தெலுங்கு டிவி ஒன்றில் இவரது மன்னிக்கவும் இவனது அட்டூளியங்கள் வெளியானது, ஆனால் தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் அவை வெளியாகவில்லை. ஆனால் தற்போது சன்டிவியில் இதுபற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது பராட்டத்தக்கது. எனவே இதுபற்றி மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் மின்னஞ்சலில் வந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறேன். "மனம் திடமாக இருந்தால் மட்டும் பாருங்கள்."







மறதி - குட்டிக்கதை
ஒரு 65 வயது மூதாட்டிக்கு அனைத்து புதிய தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்து குழந்தை ஒன்றைப்பிறக்கச்செய்தனர். சிலநாட்களில் அவரும் தனது குழந்தையுடன் வீடு திரும்பினார்.


அவரின் குழந்தையை பார்க்க சில விருந்தாளிகள் வந்திருந்தனர். உடன அவர்களை வரவேற்று உபசரித்தார், சிறிது நேரத்தில்விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
"இல்லை, தேனீர் இருந்திவிட்டுப்பார்க்கலாம் என்று அனைவருக்கும் தேனீர் கொடுத்தார். தேனீர் குடித்து முடித்த பின்னர் மீண்டும் விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
இல்லை சிற்றுண்டி உண்ணுங்கள் பிறகு பார்க்கலாம், என்றார். சரியென சிற்றுண்டி உண்டுவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
மீண்டும் மூதாட்டியும் இல்லை கொஞ்சம் கொறுங்கள் பார்க்கலாம் என்றார்.


ஏன் உங்கள் குழந்தையை நாங்கள் பார்க்கக்கூடாதா? அதன் வளர்ச்சி அவ்வளவு முக்கியமா? நாங்கள் பார்த்தால் அது வளராதா? என்று சற்று கோபத்துடன் கேட்க, இல்லை குழந்தையை நீங்கள் பார்க்க வேண்டுமானால் அது அழவேண்டும் என்றார்.


உங்களை மாதிரியே விருந்தாளிகளும் குழப்பத்துடன் பார்க்க..


குழந்தையை எங்கேயோ வைத்துவிட்டேன், அது அழுதால்தான் கண்டு பிடிக்கலாம் என்றார்.


*********************************************

IPLலும் இலங்கை வீரர்களும்


3வது IPL போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு ஆதரவளித்து வருகிறேன். ஆனால் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியுஸ், பந்துவீச்சாளர்கள் மலிங்க மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.


நேற்றைய சென்னையுடனான போட்டியின் வெற்றிக்கு முதல் மூன்று ஓவர்களிலேயே மூன்று விக்கட்டுகளைச்சாய்த்து சமிந்தவாஸ் டெக்கன் சார்ஜசின் வெற்றிக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.


தவிர முரளிதரனும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இலங்கை அணியில் மத்தியூசைத் தவிர மற்ற ஒருவரும் அண்மைய போட்டிகளில் இலங்கை சார்பில் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது. இனியாவது இலங்கை கிறிக்கற் இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்புமா? பார்க்கலாம்.



*********************************************



விண்ணைத்தாண்டி வருவாயா



மூன்று முறை பார்த்துவிட்டேன். A.R.ரஹ்மானை எப்பிடிப்பாராட்டுறதோ தெரியவில்லை. அப்பப்பா என்ன ஒரு இசை, படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களையும் ஆராய்ந்து இசையமைத்திருக்கிறார்கள்.

உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன். அதுதவிர பக்கா காதல் கதை. படமாக்கப்பட்ட விதம், சலிப்புத்தட்டாத கதையோட்டம், அடிக்கடி பேசப்படும் ஆங்கில வார்த்தை என அனைத்தும் அற்புதம். இடைவேளை விடாமல் படத்தை போட்டிருக்கலாம். அடுத்தகெளதம் மேனன் படத்துக்கு நான் முதல் SHOWக்கு போவதென்று முடிவுபண்ணிவிட்டேன்

சிம்புவைக்கு அடுத்து எனக்கு படத்தில் பிடித்த கதாபாத்திரம் காக்க காக்க காமராமேன் என்று சிம்புவுன் கூடவே வரும் கணேஷ். தலைவர் சிரிக்காம சாதாரணமா கதைச்சாலே சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் அவர் "உஸ்ஸ்...." என்று விடும் பெருமூச்சைப்பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்ததுதான் மிச்சம்.

இன்னும் எத்தனை தடவையும் படத்தைப்பார்க்க நான் தயார், யாராவது போகிறீர்களா? போனா சொல்லுங்க அடியேனும் வருகிறேன்.



*********************************************
சாமியார் சிரிப்பு சாமியார்


அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவையடுத்து ஆசாமி நித்தியானந்தா தலைமறைவாகி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அண்மையில் அவரின் சீடர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஆசாமி நித்தியின் வலதுகை பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு "I CAN'T SPECULATE ANYTHING" என்று கூறிக்கொண்டிருந்தார். பிறகு ஏன் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார்களோ. 45 நிமிட நேரம்தான் மாநாடு என்று கூறியவர்கள், மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை தெரிவித்துக்கொண்டிருந்தமையும், வீடியோ போடுகிறேன் என்று கூறி 5 நிமிடங்களை வீணடித்து கடைசிவரை வீடியோ போடாமல் விட்டும் அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முயற்சியெடுத்தததும் 45 நிமிடம் முடிய ஆள விடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகியதும் சிரிப்பை வரவழைத்தது.


இதுதான் இப்படியென்றால் நேற்று ஆசாமி நித்தியானந்தா தான் ரஞ்சிதாவுடன் வெளியான வீடியோவில் பாலியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தாராம். ஐயோ இது உலக நடிப்புடா சாமி...





*********************************************
NO COMMENTS



போலிச்சாமிகளின் பற்றிய பல பதிவுகள் செய்திகள் வந்து அவர்களின் பெயர்கள் நாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்? அது அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் ராதையும் போல விளையாடினார்கள் அப்படி இப்படி பல கதைகள் அதை மக்களும் நம்பி நித்தியானந்தா நல்லவர் தெய்வம் என்று இன்றுவரை நம்பும்கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.


போலிகள் பிழைத்துக்கொள்வதற்கான காரணம்?
இந்தப்போலிச்சாமிகளுக்குப்பின்னால் ஒவ்வொரு ஊடகம் இருப்பது போல தோன்றுகிறது. அண்மையில் போதை கொடுத்து மாட்டிய கல்கிபகவான், நித்தியானந்தா உட்பட இருவர் ஒரே தினத்தில் மாட்டுப்பட்டனர். ஆனால் நித்தியானந்தாவின் வீடியோவை மட்டும் அரைமணிக்கொருதடவை போட்டுக்காட்டிய ஊடகங்கள், அதைவிடப்பாரதூரமான விடயத்தில் மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை? 


வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு போதை கொடுத்து அவர்களை வெறியாட்டம் ஆடவிட்டு ரசித்த பகவானை ஏன் காட்டவில்லை. மாறாக அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. பத்திரிகைகளில் கூட அவர்கள் மாட்டுப்படும் வரை முழுப்பக்கத்தில் வந்த விளம்பரங்கள் மாட்டிய பின்னர் அவர் கெட்டவர் என்ற செய்தி அரைப்பக்கம் கூட பிடிக்கவில்லை.


மக்கள் ஏமாறக்காரணம்?
பிரச்சினைகள் இல்லாத யாரும் உலகத்தில் இருக்கமுடியாது. பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் உதிக்கும் உடனே அங்கு போகிறவன் அவர்களின் மாடமாளிகைகள், அமைதியான சூழல் ஆகியவற்றைப் பார்த்து சுருக்கமாகச் சொன்னால் மூழளச்சலவை (BRAIN WASH) பண்ணப்படுகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியவனிடம் சென்று உடனே அதை விடு என்றால் விடமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடவைக்க வேண்டும். அது போலதான் மக்களையும் மாற்ற வேண்டும். 


வலைப்பதிவெழுதுவதால் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்ய முடியாத எதையும் நாம் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை ஆனால் நண்பனை விட எதிரி எம்மை அவதானித்துக்கொண்டிருப்பான், எனவே நமது வலைப்பதிவை நித்தியானந்தாவையோ, பகவானையோ பின்பற்றும் ஒருவன் படித்துத் திருந்தத்தேவையில்லை, படித்தால் மட்டும் போதும் அதுவே அவன் மனதில் மக்கள் நமக்கு எதிரிகளாகிவிட்டனர் என்று ஒரு பயத்தை உருவாக்கும்.


ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். 


ஒரு சிறுவன் அம்மா அங்கே சுனாமியடித்து 1000 பேர் பலியாம் என்கிறான், அதற்கு அம்மா போடா பொய் சொல்லாதே, இல்லை அம்மா பேப்பரில் போட்டிருக்கிறார்கள் என்கிறான். பத்திரிகை மக்களிடையே பிரபல்யம் அடைந்த அளவுக்கு வலைப்பதிவு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. தொலைக்காட்சியில் அழுகை நாடகங்களையும் குடும்பநாடகங்களையும் போடும் நாடகங்கள்தொலைக்காட்சி சேவைகள் இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ? ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.


நினைத்தவுடம் மாறு என்றால் மாறமாட்டார்கள் கொஞ்சம் கோஞ்சமாக மாற்ற வேண்டும், அதற்கு ஊடகங்கள் அனைத்தும் உதவவேண்டும். 
ஏற்கனவே நான் பதிவிட்ட இந்தப்பதிவை மீள்பதிவிட்டிருக்கிறேன், ஆசாமி நித்தியானந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். தன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் பதிலளிக்கிறார்


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..  

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....




கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்




ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

****************************************************








போலி போலி போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. நேற்றிரவு 8.30 சன் செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கும். யாருமே பெரிதும் எதிர்பார்க்காத சாமியார் ஒருத்தர் மாட்டுப்பட்டார். நித்தியமும் ஆனந்தமாக இருக்க வேண்டும், கதவைத்திறவுங்கள் காற்று வரட்டும் என்றவருக்கு கதவைத்திறந்தால் ஊடகங்களின் கமராவும் வரும் என்று தெரியவில்லைப்போலும்.


இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார் கண்டுபிடிப்பது? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா? 


கட்டாயம் இல்லை, இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான், இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான், இன்னொருத்தன் மஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புகிறார்கள், காசை வாரி இறைப்பார்கள். அவன் ஏன் கதவைத்திறக்கச் சொல்லுறான் உங்களிடமிருந்து அப்பதானே கொள்ளையடிக்கலாம். இவர்களை மக்கள் நம்பக்காரணம் ஒன்றே ஒன்று இவர்களின் பேச்சு, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். ஆனந்தம் என்பான், வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.


புத்தர், யுசு, நபிகள் இப்படியும் மகான்கள் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை,மாலைபோடும் நிகழ்வு நடத்தவில்லை, ஏன் தாங்கள் அவதாரம் என்றோ கூறவோ மஜிக்கோ ஒன்றுமே செய்யவில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள்.


அவர்களின் வழியில் வருகிறேன், நான் சாமி என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது. இப்படி எத்தனையோ பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளை சனம் போகத்தானே செய்யுது. அரசாங்கம் இருக்குத்தானே போலீஸ் இருக்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாத படி மேலிடத்து அதிகாரிகள் போலீசின் கைகளை கட்டிப்போடுகிறார்கள், அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்ற பயம்.


இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல...


எருமை தெரியுமா?
முன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...



ஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார், 

அவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு
எருமை தெரியுமா? எனக்கேட்க......

மக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.

கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்
************************************************************************************
வைத்தியசாலைகள் வாழ்க

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).


உடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது "எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்?" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.


என்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)




************************************************************************************
வாழ்த்துக்கள்









நேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


************************************************************************************

திரிசாவுக்கு கல்யாணம்

இவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீ
இணைப்பாவனையாளர்கள் யாருமே இந்தப் பேஸ்புக்கை பாவிக்காமல் இருந்திருக்கமுடியாது. ஒரு சமுக தளமாகக்காணப்படும் இது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இங்கே சிறியவர்முதல் பெரியவர் கட்டுண்டு கிடக்கின்றனர். FARM VILLA, BARN BUDDY, CAFE WORLD போன்ற எக்கச்சக்க விளையாட்டுக்கள், அதுமட்டுமன்றி இலவசமாக செலவில்லாமல் பரிசு கூட வழங்கலாம். இப்படியான வசதிகள் பல காணப்படுவதாலேதான். இது அதிகமாக எல்லோராலும் விரும்பப்படுகிறதோ என்னாவொ 



ஆனால் பேஸ்புக் இப்போது பேஃக் புக்(FAKE) ஆகிக்கொண்டு செல்கிறது என்றுகூறினால் பிழையில்லை. ஹக்கிங் செய்வதும் மிக இலகுவாக்கப்பட்டிருக்கிறது. பலர் எப்படி ஹக் பண்ணுவது என்று விளக்கம் கொடுத்து வீடியோ கூட வெளியிட்டுள்ளனர். 


எமது STATUS UPDATEகளுக்கு இரகசியத்தன்மை(privacy) வழங்கும் பேஸ்புக் இதற்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதுமட்டுமன்றி பாவனையாளர்களுக்கே APPLICATIONனளை உருவாக்கும் வசதியை இது வழங்குவதால் பேஸ்புக் வைரஸ் பரப்புவது இலகுவாகிவிட்டது. தற்போது புதிதாக பேஸ்புக்கில் காணப்படும் வீடியோ அரட்டை(VIDEO CHATTING) முலம் வைரஸ் பரப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட நண்பர்கள் கூறினார்கள்.



நேரடியாகக்கண்ட பேஸ்புக் வைரஸ்
நான் எனது நண்பர்கள் சிலரை ஒரு லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். வழமையாக முஞ்சிப்புத்தக அரட்டையில் உள்ளோரின் பகுதியில் அந்த லிஸ்ட்டில் உள்ளோர் வேறாகவும் மற்ற நண்பர்கள் வேறாகவும் காட்டப்படும். ஆனால் அன்று இரண்டு இடங்களிலும் ஒரே நண்பரின் பெயரைக்காட்டியது. நான்கூட ஒருமுறை பேஸ்புக்கால் அறிவுறுத்தப்பட்டேன். 


ஆனால் பேஸ்புக் அறிவுறுத்தல் என்ற பெயரில் சில வேளைகளில் வைரசும் தாக்கலாம். எனவே பேஸ்புக் பாவனையாளர்கள் தேவையற்ற குழுமங்களில் சேருவதையோ, தெரியாத நபர்களை நண்பர்குழுமத்தில் இணைப்பதையோ தவிர்த்துக்கொண்டால் உங்கள் பேஸ்புக்கை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளலாமே தவிர இதுவரை எந்தத் தீர்வையும் எடுக்காத பேஸ்புக் நிர்வாகம் இதற்கு இனியும் எந்தவித தீர்வையும் எடுக்கப்போவதில்லை.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்