Related Posts with Thumbnails
ஒரு துறையில் சிறந்து அதில் உச்சத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து ஓய்வு பெறுவதில்லை மாறாக ஓய்வு பெற வைக்கப்படுகிறார்கள். ஒரு சிலரைத் தவிர பலருக்கு இந்த நிலைமைதான் ஏற்படுகிறது. உதாரணமாக கிறிக்கட்டில் துடுப்பாட்டத்தில் முதன்மை வீரராகத் திகழும் சச்சினையே ஓய்வு பெறவேண்டும் என்று கடந்த சில வருடங்களாகப் போராடி தற்போது அவர் ஒருநாள் போட்டிளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சமிந்த வாஸ், மாவன் அத்தப்பத்து போன்ற வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.

இதற்கு என்ன காரணம் என்று மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்டுடன் ஆராய்ந்து பார்க்கலாம்.


ஒரு சாதாரண மனிதனின் தேவைகள் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கிறார் மாஸ்லோ.

பௌதீகத் தேவைகள்
ஒரு சாதாரண மனிதனுக்கு முதலில் தேவை சுவாசிப்பதற்கு காற்று, உணவு, நீர், மற்றும் பாலியல் தேவைகள் போன்றன. இவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் போது அல்லது தடையின்றிக் கிடைக்கும் போது ஒரு மனிதன் அடுத்த கட்டம் நோக்கி நகருகிறான்.

பாதுகாப்புத் தேவைகள்
அடுத்த  கட்டமாக மனிதன் தனது உடல், வேலை, குடும்பம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்புத் தேடுகிறான். இந்தத் தேவைகளும் தடையின்றிக் கிடைக்கும் போது சமூகத் தேவைகளை நோக்கி ஒரு மனிதன் நகருகிறான்.

சமூகத் தேவைகள்
சமூகத்தில் நண்பர்கள், குடும்பம் என தனக்கென ஒரு சமூகத்தைத் தேடுகிறான். இவையும் பூர்த்தி செய்யப்படும் போது கௌரவத் தேவைகளை நோக்கி நகருகிறான். 

கௌரவத் தேவைகள்
இந்த நிலையில் மனிதன் தான் சமூகத்தில் மதிக்கப்படவேண்டும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான். தான் தெரிவு செய்த துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயல்கிறான். சமூக மதிப்பு, சமூக அங்கீகாரம், சாதனைகள் என்பன கிடைக்கும் போது தன்னலத் தேவைகளை நோக்கி நகர்கிறான்.

தன்னலத் தேவைகள்
கௌரவத் தேவைகளில் சாதனைகள், சமூக அங்கீகாரங்கள் மூலம் குறித்த துறையில் சிறந்து விளங்கும் மனிதனால் அதற்கு மேல் அத்துறையில் சாதிக்க முடியாது. அதுதான் கடைசி நிலை. அதாவது அவன் தெரிவு செய்த துறையில் அதற்கு மேல் அவனிடம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை.

உதாரணமாக நாம் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கும் அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உபயோகித்துப் பார்த்த பின்னர் அதை விட்டு வேறு கையடக்கத் தொலைபேசி வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா?
இந்த நிலை வரும் போது அவன் அந்துறையிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரே விடயத்தை திரும்பத் திரும்பச் செய்வது போன்ற சலிப்புத் தன்மை எமக்கு ஏற்பட்டுவிடும்.

ஒரு துறையில் உச்சத்தில் இருப்பவர்கள் மாஸ்லோவின் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதோடு தமது நிலைகளையும் அடிக்கடி பரிசிலனை செய்து கொண்டால் அத்துறையிலிருந்து துரத்தியடிக்கப்படாத குறையாக வெளியேறாமல். கௌரவமாக வெளியேலாம் என்பது என் கருத்து.

வடபோச்சே!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:07 AM | 3 பின்னூட்டங்கள்
bavan.info என்று பேரை வச்சுக்கிட்டு கொஞ்சமாவது informative ஆக எழுதவில்லை என்றால் அது அம்புட்டு நல்லா இருக்காது அதனால் கொஞ்சம் informative ஆக ஒரு பதிவு.

வடபோச்சே! என்ற டயலொக்கை வடிவேலு என்ற மாபெரும் நகைச்சுவை நடிகர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த டயலொக்கை நம்மில் பலர் ஏன் உபயோகப்படுத்திறோம் என்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம். ங்கொய்யால, oops, Thanks, Sorry போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகிப்போனது இந்த "வட போச்சே!".



வடபோச்சே! என்பதன் வரலாறு என்ன?
பாட்டி வடை சுட்ட கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பார் அப்போது ஒரு காக்கை வடையைக் களவெடுத்துக் கொண்டு போய்விட்டது. உடனே அந்தப் பாட்டி "ஐயோ வடபோச்சே!" என்றார். அதுதான் இன்று மருகி "வட போச்சே" என்று கூறப்படுகிறது.

வடபோச்சே Definition
ஏதாவது ஒரு முக்கிய விடயத்தை செய்துகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 சதவீதம் குறிப்பிட்ட விடயம் பூர்த்தியடைந்த பின்னர் தீடீரென ஏற்படும் ஒரு அசாதாரண நிலை காரணமாக அந்தக் குறிப்பட்ட விடயத்தை செய்து முடிக்க முடியாமல் போகும் அந்தக் கணப் பொழுதில் சொல்லப்படுவது "வட போச்சே" என்று அழைக்கப்படும்.

உதாரணமாகச் சச்சின் ஓய்வு பெறவே மாட்டார் என்று சச்சின் ரசிகர்கள் நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு வந்து பார்த்தால் அவர் ODIயிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார் உடனே பலரும் சொன்ன வார்த்தை "வடபோச்சே!".



வட போச்சே! பல்வேறு வயதுப்பிரிவினரிடையே பல்வேறு நிலைகளில் சொல்லப்படுகிறது.

குழந்தைகளிடையே அவர்கள் வடை முதல் பிஸ்கட் வரை எதையாவது சாப்பிடும் பொழுது அது கீழே விழுந்துவிட்டால். உடனே அவர்கள் கூறும் வார்த்தை "வட போச்சே!".

இளைஞர்களிடையே அதாவது யூத்துக்களிடையே, கம்பஸ் அல்லது  படிக்கும் இடங்களில் ஒரு பொண்ணு வந்து நன்றாகக் கதைத்துவிட்டு, கடைசியில் "Bye அண்ணா" என்று சொல்லும் போது அவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தை "வட போச்சே!".

அடுத்து குடும்பஸ்தர்களிடையே, நாளை பெற்றோல் அடிக்கலாம், நாளை குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு என்று செய்தி வரும் போது அவர்கள் சொல்லும் வார்த்தை "வட போச்சே!".

வயது முதிர்ந்தவர்களிடையே, அவர்கள் ஆசையாக மற்றவர்களுக்கத் தெரியாமல் ஆட்டையப் போட்டு ஒரு இனிப்புப் பண்டத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அதை பேரன் அடித்த பந்து தட்டி விடல் அல்லது சாப்பிடுவதை வீட்டில் மற்றவர்கள் பார்ப்பதால் சாப்பிட முடியாமல் போதல் போன்ற நேரங்களில் அவர்களால் சொல்லப்படுவது "வட போச்சே!".

கன்னம் ஸ்டைல் நடனத்தை என்னதான் PSY ஆடியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது கிறிஸ் கெயில் தான். அதே மாதிரி இந்த வடபோச்சே என்ற வார்த்தையை வடைசுட்ட பாட்டி சொல்லியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது என்னமோ வடிவேலுதான். ஆனால் அவரையும் நிஜவாழ்க்கையில் அரசியல் மேடையில் பேசியபின்னர் சுமார் ஒரு வருட காலமாக வீட்டிலேயே உக்கார்ந்திருக்கும் போது தினமும் சொல்ல வைத்துவிட்டது இந்த "வட போச்சே!".

இப்போது நீங்களும் ஏதோ informative ஆக இருக்கும் என்று நினைத்து படிக்க வந்துவிட்டு இம்புட்டு மொக்கைப் பதிவா இருக்கே என்று நீங்களும் இப்போது சொல்லுவீர்கள் "வட போச்சே!" =P


Once Rajanikanth... 12/12/12 =P

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:54 PM | 0 பின்னூட்டங்கள்


 #01
Once Rajanikanth do his Science project in USA, Now that place is known as NASA =P
 #02
Once Rajanikanth hold the hand on a tower and now it is known as Pisa tower =P
  #03
Once Rajanikanth went for a horse ride in Korea, and Now it is known as Gangnam style =P
 #04
Once Rajanikanth checked that his pen is working or not and now it is known as Mona Lisa painting =P
  #05
Once Rajanikanth Made some mistakes while typing an essay on a computer, Now it is known as JAVA =P
  #06
Once Rajanikanth drop cigarette ash while walking, Now they are known as volcanoes =P


  #07
Once in his childhood Rajanikanth throws one of his felt out tooth in the air, Now it is known as The SUN =P
  #08
Once Rajanikanth appointed a kid as a Class leader and now he is known as Barak Obama =P
  #09
Once Rajanikanth Come home by walk after playing in beach, Now the place he walked known as Sahara desert =P
  #10
Once Rajnkanth Tear a calender paper and throw it out, Now it is known as Maayan calender =P
  #11
Once played Golf and lost a ball in the air,now it's known as Nibiru (Planet X) and its coming back to earth on 21st Dec =P
  #12
Once Rajanikanth celebrated Deepavali in Japan and now it is known as Atomic bomb attack in Hiroshima Nagasaki =P

Everything Happens For A Reason!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:53 AM | 4 பின்னூட்டங்கள்
 ரொம்பவே போரடிக்கும் பதிவு, சில நேரங்களில் சில மனிதர்களை சில அரசியல்களைப் பயன்படுத்தின்தான் டீல் பண்ண வேண்டும். அந்த சிலருக்கு மட்டும் =))

சில நேரங்களில் நாம் தினமும் காணுகின்ற சின்னச்சின்னப் பொருட்கள் கூட சில நேரத்தில் பெரிய தத்துவங்களை விளக்கிவிட்டுப் போய்விடும். அது நிறைய நாட்களாகவே அப்படித்தான் இருந்திருக்கும் ஆனால் சில அனுபவங்கள் கிடைக்கும் போது அது நமக்கு போதி மரமாகக்கூட மாறிவிடும்.

எங்கள் வகுப்பிலே சுவிட்ச் பெட்டி இருக்கிறது. எல்லா வகுப்பிலும் இருக்கிறதுதானே? அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதில் இருக்கிற முக்கிய விடயம் என்னவென்றால் அதில் இரண்டு சுவிட்ச்சுகளைப் போடக்கூடாது மீறிப் போட்டால் அந்தக் கட்டடத்துக்கே மின்சாரம் போய் விடும். இது நாங்கள் படிக்கப் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறது. இடையில் திருத்துவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்டாலும் சில நாட்களிலேயே பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறது. இது புதிதாக இருக்கும் போது இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏதோ இடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இப்படி மாறியிருக்க வேண்டும்.

இது அப்படி என்ன விடயத்தை விளக்கப் போகிறது?
இந்த சுவிட்சுகளை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

ஒன்று: நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும் காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பிர்கள், அல்லது மிகவும் கவலையாக இருந்த காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இதில் கவலையான நேரத்தில் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் கடைசிவரை எந்த விதமான திருத்தம் வந்தாலும் தங்கள் நிலையிலிருந்து மாறாமல் அப்படியேதான் இருப்பார்கள். அதாவது அந்த பழுதாய்ப் போன சுவிட்டகளைப் போல.

இதையே இன்னொரு விதமாகப் பார்த்தால்,
உங்களுக்கு சிலர் சந்தோஷமான கால கட்டத்தில் நல்ல நண்பர்களாகியிருப்பார்கள். ஆனால் நில காலங்களின் பின்னர் அவரின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும், வேண்டுமென்றே நடிப்பார்கள், என்ன பிரச்சினை என்று கேட்டாலும் சொல்லமாட்டார்கள், பின்னாலே போய் ஒரு சிலரிடம் அல்லது அவர்களின் மாற்றத்துக்குக் காரணமானவர்களிடம் எம்மைப்பற்றியே அவதூறாகப் பேசுவார்கள்.

உங்கள் அபரிமிதமான நட்பின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்பதற்கான நீங்களும் ஏன்? எதற்கு? என்று எல்லாம் கேட்க மாட்டீர்கள். ஆனால் அவர்களை விட்டு விலகிவிட அல்லது அவர்களுடன் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவெடுப்பீர்கள். இதுதான் நாங்கள் எங்கள் வகுப்பில் இருக்கும் அந்த பழுதாய்ப் போன சுவிட்சுகளுக்கும் செய்தது. அந்த சுவிட்சுகளில் X அடையாளமிட்டு அதை இனி உபயோகிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். அவர் கவலைப்படுவார் அல்லது அவர் என்ன நினைப்பார் அபரிமிதமான நட்புக் கெட்டுவிடுமே என்றெல்லாம் யோசிக்கத்தேவையில்லை.
ஒரு சுவிட்சு ஒரு கட்டடத்தின் நடவடிக்கைகளையே சீர்குலைக்கின்றது என்றால் அதை பாவிப்பதை நிறுத்திவிடுங்கள், அல்லது அதை நீங்கிவிட்டு புதிய சுவிட்ச் ஒன்றைப் பொருத்தி விடுங்கள்.
அந்த பாவிக்காமல் விட்ட சுவிட்ச் நினைக்கலாம் நீங்கள் தன்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று, ஆனால் தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்துகொண்டால் அந்த சுவிட்சுக்குத் தெரியும் தனது மாற்றங்களும் தான் செய்த அரசியலால்தான் இப்போது உபயோகிக்கப்படாமல் இருக்கிறோம் என்பதும்.

படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.










 
எம் இனிய உலகமே
இன்றுடன் முடிந்தது உன்
மாயன் கலண்டர் கலகமே!

கவியரங்க மேடையிலோ
நீதான் கனல் கண்ணன்
இன்று முதல் நீயோ
வடிவேலுவின் அண்ணன்

பஸ் வண்டி கார் வண்டி
நீயொரு புகை வண்டி
இன்று முதல் நீயோ
வெறும் காய்கறி மண்டி

கிரிக்கெட்டில் நீயோ
சிங்கிள் ரன் சிங்கக்குட்டி
எனதருமை அர்ஜீன ரணதுங்கவே!

பீப்பீ ஊதி பீப்பீ ஊதி
பட்டம் பெற்றாய் பீப்பீமாமா
அடுப்பு ஊதி அடுப்பு ஊதி
கற்றுக்கொள் போட காப்பி மாமா

பார்ட்டி என்று வந்துவிட்டால்
நீதான் அதி(ல்)விஷேடம்
நிரூஜாவைக் கரம் பிடித்தாய்
அதுதான் உனக்கு இனி விஷேடம்

அதிகாரமையமே
ஆட்டம் கண்டதுவே!
உன் இதயத்தில் புதிதாக
அம்பொன்று துளைத்ததுவே!

நேற்றுவரை உன் வாழ்க்கையிலே கவிதை இருந்தது
இன்று முதல் உன் வாழ்க்கையே கவிதையாகிறது!

வாழ்த்துக்கள் மாலவன் அண்ணா, நிரூஜா அண்ணி
"எக்ஸாமைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா"
இதுதான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப்போகாத ஒரு பஞ்ச் டயலாக்.

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம். கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்லவேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்.

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் "நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை" என்று சொல்லுவார்கள். அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
க.பொ.த சாதாரண தரம் வரை நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்.

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும்போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது. அதாவது
  • What are the advantages of bla bla bla?
  • What are the disadvantages of bla bla?
  • Briefly explain the following?
  • Definitions
இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது. பாடமாக்கி எழுதினால் மட்டுமே இதுமாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது.


புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage,Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனாக்கேக்கிறார்கள். Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.
 வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வாற விசயத்தை அரைமணிநேரம் பாடமாக்கி எழுதணுமா? 
ப்படிக்கு 
ப்பாவி மாணவர்களுள் ஒருவன் =)

WHATEVER HAPPENS LIFE GOES ON...

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:26 PM | 0 பின்னூட்டங்கள்
பஸ்ஸில் தனிமையில் பயணிக்கும் போது, இரவு நேரத்தில் Laptop, Mobile எல்லாத்தையும் தூக்கி துரப் போட்டுவிட்டு கண்ணை மூடாமல் கண்ணை மூடியது போல உணரும் போது மனதில் தோன்றிய விடயங்கள் அடங்கிய பதிவு. சுவாரஸ்யமாக எதுவும் இருக்காது. சுய புலம்பல் மட்டுமே!

***

திடீரென ஒருநாள் விழித்துப் பார்க்கும் போது கண்டது எல்லாம் கனவாகிப் போய் நாம் இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையுமே மீள நினைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். வாழ்க்கை என்பது ஒரு நேரான பாதையில் ஓடுவதைப் போன்றது. பலர் கூட ஓடி வருவார்கள் சிலர் இடையிடையே வரும் திருப்பங்களில் திரும்பிவிடுவார்கள். சிலர் இன்னுமொரு திருப்பத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார்கள். சிலர் இடையில் புதிதாக இணைந்து கொள்வார்கள். ஒரு சிலர் கடைசி வரை எம்முடனேயே ஓடி வருவார்கள். கடைசி வரை வருவார்கள் என்று நினைத்தவர்கள் கடைசிவரை வருவதுமில்லை. இடையிலேயே திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாரும் இடையிலே விலகிவிடுவதுமில்லை.

இங்கு வாழ்க்கைப் பாதை பிரியும் இடங்கள் அவரவர் நிலைகளைப் பொறுத்து வேறுபடும். பாடசாலைக் காலம், கல்லூரிக் காலம், வேலைக்குச் செல்லும் காலம், திருமணம் நடக்கும் காலம் என்று பொதுவாக வரையறுக்கலாம். பாடசாலை அல்லது கல்லூரியில் படிக்கும் காலங்களில் வரும் பிரிவுகள்தான் மிகுந்த கவலையை தருகிறது. ஏன் என்று அதை உற்று நோக்கிப் பார்த்தால் பாடசாலை அல்லது கல்லூரிக் காலங்களில் எமக்குக் கிடைத்தது அதிகம் அதனால் அந்தக் காலத்தை இழக்கும் போது இழப்பதும் அதிகம். அதற்குப் பிறகு கொஞ்சம் இயல்பிலிருந்து விலகி நடிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் போல் உணருகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் 11 வருடங்கள் படித்த பாடசாலையிலிருந்து திடீரென விலகிய போது நண்பர்கள், எமது பாடசாலை இசைக்குழுவில் இருந்த எனக்கான இடம், இன்றும் மெதுவாகச் செல்லும் 155 பஸ், பிறந்து வளர்ந்த இடம் இன்னும் சில விடயங்கள் என்று அனைத்தையும் இழக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு புதிய பாடசாலை, புதிய நண்பர்கள் புதிய இடம் என்று இன்னுமொரு பாதையில் ஓடவேண்டியிருந்தது. அதாவது கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறி வந்து உச்சியை எட்டும் போது யாரோ கீழே பிடித்துத் தள்ளிவிட்டு திரும்ப ஏறி வா என்று சொன்னது மாதிரியான ஒரு உணர்வு. ஆனால் தள்ளிவிட்டது நல்லதுக்குத்தான் என்று அன்றுதான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறை ஏறும் போதுதான் எத்தனை விடயங்களை பார்க்க, அனுபவிக்கத் தவறிவிட்டோம் என்று அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் "அடுத்தது என்ன?" என்ற ஒரு கேள்வி மனதில் மிகப்பெரிய கேள்விக்குறிடன் விடைக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு முறை எதையாவது எதிர்பார்த்து ஏதாவது முடிவுகளை எடுக்கும் போதும் அது "நீ யார்டா முடிவெடுக்க என்று" கைகொட்டிச் சிரிக்கும்.

ஆனால் இதுவரை கிடைத்த அனுபவங்கள் சகிப்புத்தன்னையை வளர்த்துக் கொள்வது எப்படி?, எதிர்பார்ப்புக்களை குறைப்பது எப்படி?, விமர்சனங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று கற்றுக் கொடுத்திருக்கிறது. தவிர பல நண்பர்களையும், எதிரிகளையும், சில மனிதர்களையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இன்னும் சம்பாதித்துக் கொடுக்கப் போகும் மனிதர்கள், நண்பர்கள், எதிரிகளுக்காகவும், அனுபவங்களுக்காகவும், அடுத்தது என்ன என்ற கேள்வியுடனும் காத்திருக்கிறேன்.
WHATEVER HAPPENS LIFE GOES ON... =)
படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும் =))


 







ALT+3

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:34 PM | 0 பின்னூட்டங்கள்
பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிக்கும் நாட்களில் புத்தகத்தைத் திறந்து 10வது நிமிடத்தில் தோன்றிய கவிதை(அப்படியும் சொல்லலாம் =P) இவை.இவற்றை உங்கள் காதலன்/காதலிக்குக் கொடுத்து உங்கள் காதல் FAIL ஆனால் அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.


பரீட்சைக்குப் படிக்கும் போது
எங்கிருந்தோ ஓடி வந்து
கண்ணுக்குகள் புகுந்துகொள்ளும்
அதிவேக தூக்கத்தின்
வேகத்தையும் முறையடித்து
கண்களுக்குள் புகுந்து
கனவாக வந்துவிடுகிறாய் நீ

உன்னிடம் காதலை சொல்ல -
நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்
இறுதிப் போட்டியில் தோற்கும்
இலங்கை அணி போல் ஆகிறதே
என்ன காரணம்?

தூக்கமும் பேஸ்புக்கும் போல
இருக்கும் நம் காதல்
எக்‌ஸாமும் தூக்கமும் போல்
சேர்வது எப்போது?

Crack file கிடைக்காத Software ஆக
தினம் தினம் தேய்ந்துகொண்டிருக்கிறேன்
Crack ஆக வருவாயா? இல்லை
Uninstall செய்துவிட்டுப் போவாயா?

#WT20 #MyReaction #Vikki #PhotoComments

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:22 AM | 0 பின்னூட்டங்கள்
பேஸ்புக்கில் நான் ஏற்கனவே பகிர்ந்த சில படங்களும் & கடைசிப்படமும்.
படங்களைக் கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்











படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்













சில பாடல்களைக் கேட்ட உடனேயே அடடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல் என்று மெய்சிலிர்த்துப் போய் அப்பிடியே மீண்டும் மீண்டும் வரிகளைக் கேட்கத் தூண்டும். அந்த வகையில் "ஓ மகசீயா.." பாடலுக்குப் பிறகு எனக்கு பிடித்துப் போன(கிட்டத்தட்ட பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்துப் போச்சோ என்று நினைக்க வைத்த) பாடல் கலியுகம் படத்தில் இடம்பெற்ற "அஜல உஜல மசாலா கம்பனி" என்ற பாடல். என்ன ஒரு தத்துவமான வரிகள், அதுவும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வித்தியாசமான கோணங்களில் அர்த்தங்களை அள்ளித் தெளித்து அப்படியே வயிறு வெடித்து பல்லு எல்லாம் கொட்டி, தாடைகளில் எல்லாம் வலியெடுக்கும் அளவுக்கு சிரிப்பை ச்சா சிந்தனையை தரும் பாடல்.

"வாழ்வு என்ன மாயமான வாழ்வுதானடா - உன்
ஆட்டமெல்லாம் முடிந்த பின்னே ஓட்டம் தானடா"

என்று வாழ்க்கை திருக்குறள் போல இரண்டு வரிகளில் தெளிவாகச் சொல்லிவிடுகிறது இந்த வரிகள். அதற்குப் பிறகு வரும் வரிகளின் அர்த்தம் தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரிகள்.

"அஜல உஜல மசாலா கம்பனி
பல்பலா ரஸ்கோலா பிஸ்கோத்துக் கம்பனி"

அதாவது அஜல உஜல என்ற மசாலா தயாரிக்கும் கம்பனியில் வேலை செய்யும் பற்பல ஊழியர்களுக்கு கோலாவும் பிஸ்கோத்தும் கொடுக்க வேண்டும். அதாவது இந்த வரிகளில் ஏழைகளுக்கு வேலை நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் மரண கானா விஜி.

வானத்தில தேவதை போல மனசில வச்சேன்
உள்ள ஓடும் உசிர நானும் கையில புடிச்சேன்
உன் மூக்கிலக்கீர முன்முத்து மூக்குத்தி மூளையைப் பிரட்டுது
டப்பா சோறு போல மனசு டான்சு ஆடுது

மரண கானா விஜியின் அற்புதமான குரலில், சலனமில்லாமல் ஆரம்பித்து மெதுவாக அழகாக நகர்ந்து வரும் பாடலின் அடுத்து வரும் இந்த வரிகள் இன்னும் சில காலங்களில் காதல் காவியங்களில் இடம்பிடித்து தமிழ் இலக்கிய உலகை உலுக்கி ஆட்டிப்படைக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

தேவதைகள் பூமிக்கு வருவதில்லை எனவே தேவதையை கவிஞர் மனதிலே வைத்துக் காதலிப்பதாகவும், நாடித்துடிப்பை அறிய வைத்தியர்கள் கையில் நாடி பிடித்துப் பார்ப்பதை கருத்தில் கொண்டு உள்ள ஓடும் உசிரை கையில புடிச்சேன் என்று சொல்லும் கற்பனை அபாரம்.

பெண்களின் மூக்குக்கும் மூக்குத்திக்கும் மூளைக்கும் ஆரம்ப எழுத்து மட்டுமல்ல ஆண்களின் மூளையைப் பிரட்டி யோசிக்க வைக்கக் கூடிய அற்புத ஆற்றல் இருக்கிறது என்பதை எதுகை மோனையுடன் சொல்லியிருப்பதும், சோற்று டப்பாவை கொண்டு செல்லும் போது டப்பாவுக்குள் இருக்கும் சோறு எப்படியெல்லாம் பாடுபடுமோ அப்படிப் பாடுபடுவதாகக் குறிப்பிடுவது வரை பிரமாதம்.

ஓட்ட மைதானத்தில வெளையுதடா நெல்லு
நீ சண்டை வந்தா எடுக்காதடா கல்லு
பீல் பண்ணாதடா லச்சை நான் காறி உமிழ்வேன் எச்சை
நீ சாராயத்தைக் குடிச்சா நான் சண்டையில புலி
சென்ரல் ஜெயில்ல அண்ணன் தம்பிக்கு குடுக்கிறான்டா கழி
கழியின்னா கெவரு இது கவர்மன்டு பவரு
அட என்னா தம்பி நிக்குற இடத்த விட்டு நவரு
கஞ்சித்தண்ணி புல்லாவுக்கு
பழக்கத்திலுள்ள பாப்பாவுக்கு ஊத்தினான்டா தேரு
மச்சான் அவ போறா அவ எனக்கு மொற
கையால விட்டேன் பாரு அறை
வாயில மூக்கில தள்ளப் போவுது நொரை
அது வரை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த பாடல் திடீரென்று வேகம் பிடித்து பள்ளத்தில் இறங்கிய பிரேக் இல்லாத சைக்கிள் போல வேகமாகச் செல்கிறது.

ஒவ்வொரு வரியும் ஆச்சரியங்களையும், வியப்பையும், மரண கானா என்ற பெயர் ஏன் தனக்கு வைக்கப்பட்டது என்பதையும் பாடலாசிரியர் காட்டுவதாகவும் அமைகிறது. இந்தப்பாடல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்து அனைவது தலையையும் பிய்த்துக் கொண்டு கட்டாயம் தெருத்தெருவாகஅலைய வைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. =P

உண்மையில் நடந்தது என்ன?
அன்று அதிகாலை 9 மணிக்கு 'ஈடா ஈடா ஈடா..' என்று ஃபோன் அடிக்க யார்ரா அது காலக்காத்தாலயே கொசுத்தொல்லை என்று சலித்துக் கொண்டே கண்ணை மூடிய படியே ஹலோ என்றேன். மறுமுனையில்

"மச்சி நான்தான்டா, இப்ப TRINCOல தான் வந்து நிக்குறன், Main Street Nation trust Bankல நிக்கிறன் வாறியாடா செட் ஆவம்" என்று ஒரு குரல்.

"சும்மா போ மச்சி, தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. நீ எங்க வீட்டுக்கு வாடா, என்றேன்

"டேய் எனக்கு இடம் எல்லாம் தெரியாதுடா, நீ வாடா. என்றான் நண்பன் மறுபடியும்.

இன்னாடாது வம்பாப் போச்சுன்னு சரி பத்து நிமிஷம் என்று ஃபோனைக் கட் பண்ணினேன்.

*******

10 நிமிடங்களின் பின்னர் (அதாவது 35 நிமிடங்களின் பின்)

இது திருகோணமலையில் நேஷன் ட்ரஸ்ட் வங்கி திறப்புவிழாவாம், அதற்குத்தன்னை அழைத்ததாகவும், அதனாலேதான் தான் வந்ததாகவும், நண்பன் சொன்னான். ஓகே மச்சான் அப்பறம் கை எப்பிடி இருக்கு என்று கேட்டேன், உடனே கடுப்பாகி, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

அதன் பிறகு விவிஎஸ் லக்ஸ்மன் ஓய்வு அறிவிக்கப் போவதாக சொன்னான், எப்ப அறிவிக்கப் போறானோ தெரியல முதல் அசாட் ராஃப், ஆன்ரியா வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். அதன் பிறகு "இண்டைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மச்சி, கோவிக்காத அடுத்த முறை வீட்டுக்கு இன்வைட் பண்ணுறன்" எண்டு சொல்லிட்டு நான் விடைபெற்று வந்திட்டேன்.

கற்பனையில் நடந்தது என்ன?

அன்று சங்கா Nations trust Bank திறப்பு விழாவுக்கு வருவதாக கேள்விப்பட்ட உடனேயே அடித்துப் பிடித்து ஓடிப்போய் Bank வாசலில் நின்று கொண்டோம். ஆனால் அங்கே ஏற்கனவே கூட்டம் அலை மோதியது. வெளியெ நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து உள்ளே முட்டி மோதி நுழைந்தால் சங்கா சாப்பிடப் போய்விட்டார்  என்றார்கள்.

காத்திருந்து பார்க்கலாம் என்று பார்த்தால் பாங்க் ஊழியர்கள் ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே Account திறக்க வேண்டும் என்று சொல்லி form வாங்கி கையில் வைத்துக் கொண்டோம். சங்கா வர அரைமணி நேரத்துக்கு மே ஆகும் போல் தெரியவே, Account formமில் பின் பக்கத்தில் பின்வருமாறு எழுதி வைத்திருந்தோம்.

சங்கா வந்ததும் உடனடியாக அதைத் தூக்கிக் காட்டி போட்டோ எடுக்க வேண்டும் சங்கா என்று கேட்க உடனடியாக கட்டாயம் எடுப்போம் வெளியே வாருங்கள் என்று எங்களை அழைத்துக் போய் ரசிகர்கள் அனைவரையும் நான்கு நான்கு பேராக அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம். அப்போதுதாக் புரிந்தது சங்கா எப்பயுமே 4க்கு ட்ரை பண்ணுவதால் தான் அடிக்கடி 100, 200 என்று அடிக்கிறார் என்று...

டிஸ்கி: பதிவில் SUBTITLE எல்லாம் சரியாகத்தான் போடப்பட்டுள்ளது =P
வாய மூடி சும்மா இருடா!
ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை சலிக்கும் வரை திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்துவிடுவேன். அந்த வகையில் சமீபகாலமாக கேட்கும் பாடல் முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா..."

வாய மூடி சும்மா இருடா என்று ஆரம்பிக்க இது ஏதோ வை திஸ் கொலைவெறி மாதிரிப் பாடல் என்று நினைத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப்பிறகு ஆலாப் ராஜுவின் குரவில் வரும் மதன் கார்க்கியின் வரிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொண்டு அப்பிடியே கண்ணை மூடி வேறு உலகத்துக்குத் தூக்கிப் போய்விடுகிறது.

"கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!"
 என்பதில் தொடங்கி நேற்று இன்று நாளை என்று காதலைப் பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம். அதுவும் ஆலாப் ராஜுவின் குரலில் கோர்வையாக வந்து விழும் வரிகள் மனதுக்க இதம்.

"என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?"

என்னமோ ஏதோவிலிருந்து மதன் கார்க்கியின் வரிகளுக்கு ரசிகனாகிப் போனேன். இன்னும் புதிதுபுதிதாய் ரசிக்க வைக்கிறார். இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரிகள்
"கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!"
தலைவா யு ஆர் கிரேட்!!!

*************
விதி (குறும்படம்)


எனது நண்பர்களின் முயற்சியில் உருவான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்திரைப்படம். பார்த்து உங்கள் கருத்துங்களை அவர்களுப்பு வழங்குங்கள்.

No Comments =P



Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்