Related Posts with Thumbnails

உறவு?

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:46 PM | 0 பின்னூட்டங்கள்


காட்டிலே தவம் கொண்டு
காவியில் உடை கொண்டு
ஏட்டிலே பொருள் கண்ட
ஏகாந்தத் துறவி சொன்னான்

பிரிவென்ன சேர்வென்ன
பிறப்பென்ன இறப்பென்ன
ஆதியென்ன அந்தமென்ன
நீயென்ன நானென்ன

கரைகின்ற நொடிகளிலே
பிரிவெல்லாம் ஆசை
விரைகின்ற மரணத்திலே
உறவெல்லாம் மாயை

கண்ணே தெரியாமல்
காதுக் கருவி மாட்டாமல்
கோலூன்றாக் கொடை பெற்ற
ஒரு கைப்பிடி கொள்ளெடுத்த தாத்தன் சொன்னான்

ஆறேழு தலைமுறை
பாத்தவன்டா நான்
ஊரையே உருவாக்கி
விட்டவன்டா நான்
ஊரெல்லாம் உறவெனக்கு
பாரெல்லாம் மகனிருக்கு

வெறிச்சோடிய வீட்டினிலே
தனிமைதான் துணையெனக்கு
வெதும்பிய கண்ணீரை
தூசென்று துடைத்துவிட்டு
கண்ணாடி முன் நின்று
என்னுறவு இதுவென்றான்

அலுத்துக் களைத்தாலும்
சலித்து வெறுத்தாலும்
தோள் கனக்கும் சுமையுடன்
ஓடிவந்த பெற்றோரை
உறவென்றால் என்னவென்று
கேட்க எத்தனிக்க

நேரமே தெரியாமல்
நெடுநேரம் ஓடுகின்றோம்
காசு பணம் வரவரவே - எம்
கடன்களெல்லாம் அடைக்க வேண்டும்

பிள்ளைக்கு சேர்த்து வைக்க
நிலுவையில் போட்டு வைக்க
என்று ஒரு பட்டியலை
படபடென நீட்டி வைக்க

எங்கே உம் தாய் தந்தை
என்று கேட்டதுமே
ஏதோ ஒரு இல்லத்தில்
மகிழ்ச்சியாய் இருக்கிறாராம்

மாதாந்தம் சந்தா மட்டும்
கச்சிதமாய் போகிறதாம்
நன்றி சொல்லி ஓடிவந்து வந்து
இளைப்பாறிய எத்தனிக்க

உறவுக்கு விடை தேடி
ஓயாமல் அலையிறியே
பேசாமல் பேஸ்புக்கை
திறந்து விட்டுப் போ என்றான்

நேரத்தை காசாக்கும்
மனிய இயந்திரத்தின்
மழலையே கடக்காத
தொழிநுட்பச் சிறுவண்டு

அப்பா அம்மாக்கு தெரியுமாடா
எண்டு கேட்டால்
ஆறு மாசமா அவர்களுடனேயே
அதிலதானே கதைக்கிறானாம்

அப்பா வர காலையாகும்
அம்மா வர மாலையாகும்
பிறந்த போது பாத்ததுக்கு
வடிவா இன்னும் பார்க்கலயாம்

வேலைக்கு செல்வியம்மா
தினமும் வருவாராம்
சாப்பாடு தண்ணியெல்லாம்
அவர்தான் தருவாராம்
அவர் மட்டுந்தான் தன்னோடு
அதிகம் பேசிப் பழகுவாராம்

உறவென்று இவனுக்கு
செல்வியம்மாவாவது இருக்கின்றா
அவவிண்ட மகனுக்கு அங்கே
என்ன நிலைமையோ!
-Bavananthan

காதல் உண்டோ?

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:09 PM | 2 பின்னூட்டங்கள்


கறுப்பு வெள்ளைப்
பூவும் உண்டோ?
அவள் கண்கள் போல
காந்தம் உண்டோ?

சிலிர்க்க வைக்கும்
முல்லை உண்டோ?
அவள் சிரித்து விட்டால்
உயிரும் உண்டோ?

காதல் வழியும்
மொழியும் உண்டோ?
அவள் அசையும் இதழில்
அமிர்தம் உண்டோ?

காற்றைக் காணும்
கண்கள் உண்டோ?
அவள் காணும் விழியில்
காதல் உண்டோ?
-Bavananthan <3

முரண்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:14 PM | 2 பின்னூட்டங்கள்


நாம்
வாகனம் கடக்கும்
பாதையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறோம்
வாகனம்
எம்மைக் கடக்கும் போதும்
அசையாமல் பேசிக்
கொண்டிருக்கிறோம்
இரண்டு தரம்
பயந்தடித்து எழுந்து
படபடத்து துடித்து
குதித்தெழுந்து ஓடி
மயிரிழையில்
உயிர் தப்பிய நாய்
ஓரமாகச் சென்று
படுக்கிறது
நாம் இன்னும்
வாகனம் கடக்கும்
பாதையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறோம்
-Bavananthan

மீள்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:07 PM | 0 பின்னூட்டங்கள்


"காற்றைக் கட்டுப்படுத்தக்
கற்றுக் கொண்ட பின்
வழிந்த மெழுகும்
கலைந்த புகையும்
அணைந்த நெருப்பும்
மீண்டும்
தலைகீழாய் ஓடி
ஒளிர்ந்து விடுமா?
என எதிர்பார்த்துத்
துடிக்கிறது மனது" 

தெரிவு!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:03 PM | 0 பின்னூட்டங்கள்

"எட்டி உதைந்து
கீழே விழுந்து
கழுத்து முறிந்து
சிறகு உடைந்து
முந்நூறு ரூபா குடிக்கு
மூவாயிரம் செலவழித்த பின்
உணர்ந்து கொண்டேன் என்றார்
குடிக்கக் கூடாதென்றா என்றேன்
இல்லை
தெரியாத வகை குடியை
தொடக்கூடாதென்று என்றார்"
-Bavananthan 

யாருமிங்கே அடிமை இல்லை
சாதி மத பேதமில்லை
உயர்வு தாழ்வு ஏதுமில்லை
சமத்துவமே எங்கள் கொள்கை
புள்ளிகளை நிறைத்துக் கொள்ள
ஏட்டில் மட்டும் எழுதினீரோ?

பட்டங்களை பதக்கங்களாய்
வாரி வாரி இறைத்து விட்டு - தம்
கடுகளவு கட்டங்களுள்
வாழ்கிறது ஒரு கூட்டம்

உக்காந்த இடத்திலேயே
திண்டு திண்டு வண்டி வைக்க
அதிகாலை வண்டியோடு
ஓடிப்போய் நொண்டி நிக்க

எதுக்கு இந்த நாய்ப் பிழைப்பு
என்றுதான் எழுத வந்தேன்
வண்டி குறைக்க எந்த நாயும்
ஓடியதாய் தகவலில்லை

மன்னிக்க நாய்க்குலமே
ஏதோ ஒரு பழக்கத்தில்
வாய் தவறிச் சொல்லிவிட்டேன்!

ஐஞ்சு கிலோ அரிசி மூட்டை
என்ட அம்மா தூக்கி வந்தால்
அம்மாண கடுப்பாகும் என்று சொன்ன வாய் இன்று

யாரோ ஒரு அம்மாதானே
கசக்கிப் பிழிஞ்சிடலாம்
கொஞ்ச சம்பளத்தில்
கோடி வேலை வாங்கிடலாம்

தூரமென்ன பாரமென்ன
எல்லாம் கிடையாது
பேசாமல் தூக்கிறியா? - என
துப்பித் தொலைக்கிறது
படிச்சதெல்லாம் என்னமோ
பயங்கர பி.எஃச்.டியாம்

ஒரு காதல் தோல்வி உண்டா
வேலை தேடி அலைந்ததுண்டா
பட்டினியை சுவைத்ததுண்டா
குடிகாரன் பக்கம் வர
கூட தூரம் போனதுண்டா

சகிப்புத்தன்மை மன அழுத்தம்
விரக்தி கவலை வேதனையை
புத்தகம் தாண்டி வேறெங்கும் வாழ்க்கையிலே கற்றதுண்டா

அனுபவ அறிவு என்றால்
அந்தப் புத்தகம் என்ன விலை
என்று கேட்பவனை
ஏசி என்ன செய்ய?

அவன் படிச்சதெல்லாம்
பயங்கரப் பி.ஃஎச்.டியாம்
மனிதாபிமானம் எல்லாம்
அவனுக்கு என்ன கூந்தலுக்கு?
-Bavananthan

தேடல்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:58 PM | 1 பின்னூட்டங்கள்


கேட்கலாமா வேண்டாமா?
கேட்டால் தருவாரா?
தருவதாய் சொன்னாரே?
சொன்னது போல் தருவாரா?

பக்கத்தில் வந்தால்
படக்கென்று கேட்டிடலாம்
இதோ வந்து விட்டார்
இப்போதே கேட்டிடலாம்

எல்லாம் இருக்கட்டும்
எப்படித்தான் கேக்கிறது?
கேட்டால் விளங்குமா?
எப்படி விளக்கிறது?

போனால் போகட்டும்
பேசாமல் விட்டுடலாம்
ஐஞ்சு ரூபாய் மிச்சத்துக்கு
எதுக்கு இந்த திண்டாட்டம்

சேர்த்து வைத்திருந்தால்
பல நூறாய் சேர்ந்திருக்கும்
எத்தனை ஐந்து ரூபாய்
ஆவியாய் போயிருக்கும்!


செய்தேனா இல்லையா?
என்னவென்று தெரியவில்லை
செய்து விட்டாய் என்றார்
விளங்கவில்லை என்றேன்
அவருக்கது விளங்கவில்லை

என்னென்னவோ சொன்னார்
திட்டுறாரா கதைக்கிறாரா?
கோவமாக இருக்கிறாரா?
குரலே அப்படித்தானா?

பக்கத்திலே இன்னொரு
நாயும் குரைக்கிறது
யாருக்கு நான் என்ன செய்தேன்?
எதைத்தான் நான் மொழிபெயர்ப்பேன்!

திரும்பத் திரும்பக் கேட்டால்
கோட்சுக்கு போட்டிருவார்
கப்டன் விஜயகாந்த்
கடுப்பானாலும் பரவாயில்லை

மாத்தையாவையும் மன்னிப்பையும்
மாறி மாறிப் போட்டு வைப்பம்
போனால் போகுது
ஐநூறு ரூபாய் தானே

ஐநூறு ஐநூறாய் எத்தனை ஆயிரங்கள்
இப்பிடியே போனால் சில லட்சம் ஆகிடுமோ?
கணக்குப் போட்டுப் பார்த்தால்
கண்ணெல்லாம் இருட்டுதப்பா!

தண்டப்பணச் சீட்டில்
குற்றத்தின் பேரென்ன?
வாசிச்சுச் சொல்லி விட்டால்
கின்னஸில் பெயர் வருமோ?

வாயிருந்தும் ஊமைகளாய்
காதிருந்தும் செவிடுகளாய்
கண்ணிருந்தும் குருடுகளாய்
வட்டங்களுள் வாழ்ந்து கொண்டு

பேஸ்புக், ருவிட்டருக்குள்
வாள் வாளென்று கத்திவிட்டு
வாள் எடுத்து வீசியதாய் - அதை
வீரமென எண்ணி விட்டு
தேடிக் கொண்டிருக்கிறோம்
தேசிய ஒருமைப்பாட்டை!

கிடைத்தால் சொல்லுங்கள்
இல்லையேல் நில்லுங்கள்
இன்னுமொரு சமூக வலைக்குள்
தலை புதைப்போம் வாருங்கள்!
-Bavananthan



எதிரும் புதிருமாய்
அமரவும் இல்லை
ஏனோ தானோ என்ற
எண்ணமும் இல்லை
உள்ளுணர்வு எனை இழுத்து
சொல்லவும் இல்லை
பேரதிர்வில் மோதித்
தள்ளாடவும் இல்லை

மலை மோதி
நிலை மாறி
வீழவும் இல்லை

சிலை போல
அசைவின்றி
உறையவும் இல்லை

ஆனால்...

எல்லை தாண்டிய
பயங்கரவாதத்தை - உன்
கண் வில்லைகளை கொண்டு மட்டுமே
செய்து விடுகிறாய் நீ...! 
-Bavananthan

காதல் சுழல்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:08 PM | 0 பின்னூட்டங்கள்


பார்வைச் சுழலுக்குள்ளே
பகீரென்று ஈர்த்து விட்டு
ஈர்க்கின்ற கண் கொண்டு
கோர்த்து எனைக் கொன்று விட்டாய்!

கன்னத்தில் குழி வீழ
புதைகுழிக்குள் தள்ளி விட்டு
புன்னகை செய்து என்னை
புது உலகில் புரள விட்டாய்!

குவியங்கள் மாற்றாமல்
நிலைகுலையச் செய்து விடு!
கண்கொண்ட வதை போதும்
காதலைச் சொல்லி விடு! 
Bavananthan

விட்டால்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:03 AM | 0 பின்னூட்டங்கள்

மர்மங்கள் சூழ்ந்து விட்டால்
மடைத்தனங்கள் சேர்ந்து விட்டால்
கர்வத்தில் ஆழ்ந்து  விட்டால்
கடைசிவரை மூழ்கி விட்டால்

சல்லடைகள் தோன்றி விட்டால்
சகதியிலே வீழ்ந்து விட்டால்
சொல்லடிகள் தாங்கி விட்டால்
சோகம் வந்து தங்கி விட்டால்

பிறவியினை துஞ்சி விட்டால் துறவியினை மிஞ்சி விட்டால்
தலைக்கனமும் கழன்று விட்டால் 
தடுமாறி நின்று விட்டால்

எல்லைகளை நீக்கி விட்டால்
தொல்லைகளை நீங்கி விட்டால்
களை பெருகிக் கனத்தாலும்
துரோகங்களை எரித்து விட்டால்

ஆத்திரங்கள் அழித்து விட்டால்
காத்திரமாய் பழகி விட்டால்
முதுகுத்தோல் கிழிந்தாலும்
சிரித்துவிடப் பழகிவிட்டால்

தனிமையினை விரும்பி விட்டால்
சுயத்தை நம்பத் தொடங்கி விட்டால்
வட்டங்களை தூசு தட்டி
உடைத்தெறிந்து வந்து விட்டால்

அச்சங்களே இல்லாமல்
வாழ்ந்து விடப் பழகி விட்டால்
துச்சமென எதுவரினும்
துணிந்து மோதி வென்று விட்டால்

சிரித்தவன் முன் ஏறி வந்து
சிரம் உயற்றி நின்றி விட்டால்
சாதனையால் அவன் முகத்தில்
காறி உமிழ்ந்து விட்டால்

சரித்திரத்தில் உன் பெயரை 

செதுக்கி நீ வென்றுவிட்டால்

மாஸ்லோவின் கூம்பகத்தில் 

உச்சத்தை நீ தொட்டு விட்டால்

இன்னும் கொஞ்சம் கற்றுவிட
எண்ணம் கொண்டு எழுந்து விட்டால்
புதிதாக ஒன்றைத் தேடி
கற்றுவிட தொடங்கி விட்டால்

வாழ்க்கையில் மீண்டும் ஒரு
அத்தியாயம் தொடங்கி விட்டால்
அனுபவங்கள் அறைந்தாலும் அதை மறந்து தொலைத்து விட்டால்

மீண்டும் துரோகத்தில் இதயம் கிழிந்து விட்டால்
தோல்விகளில் கால் வழுக்கி கொடூரமாய் வீழ்ந்து விட்டால்

புதிய உலகத்துள் புரிந்து கொண்டு
நுழைந்து விட்டால்
மறுபடியும் இக்கவிதை
முதல் வரியில் தொடங்கி விட்டால்...!
-Bavananthan

காதல் உயிர்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:46 PM | 0 பின்னூட்டங்கள்



தறிகெட்டுத் திரிகின்ற
தலை கோதும் காற்றாக
உனைத்தேடி எங்கும்
நினைவோடுதே!
வெறி கொண்டு துடிக்கின்ற
முளை கொண்ட நாற்றாக
உனைச்சேர முடியாமல்
உயிர் வாடுதே!" 💔
-Bavananthan

மீண்டு-ம்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:44 PM | 0 பின்னூட்டங்கள்


மீண்டும் ஒரு காற்று
என்னுள் நுழைகிறதே!
பார்வைத்துளி பட்டு - என்
தேகம் சிலிர்க்கிறதே!
காதல் கதை கொண்டு
விழி ஊடே துளைக்கிறதே
நீங்கும் நொடி பார்த்து
என் நெஞ்சம் வலிக்கிறதே! 
-Bavananthan


"கவனத்தை ஈர்க்க
செயற்கையாய் கொட்டும்
உன் சிணுங்கலில்
கள் ஊறுதே!
வலம் இடமாக
வளைகின்ற பார்வை
ஒரு நொடி எனை
தாக்குதே!
விழித்திரை மோதி
வழிகின்ற விம்பம்
என் நினைவெங்கும்
உனை தோய்க்குதே!
ஊழியாய் வந்து
மோதிடும் கண்ணில்
என் சிந்தையும்
தள்ளாடுதே!"
Bavananthan 

#PersonalDiary - 01

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:36 PM | 0 பின்னூட்டங்கள்

02-06-2016 
தண்ணீர்க்காகம் அரை மணிநேரமாக இறகை விரித்துப் பிடித்து வெயிலில் உலர்த்தி விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே குதிக்கிறது! நானும் தான்!

01-06-2016

வாழ்க்கையில ஒரு நாளில் அளவுக்கதிகமான பிரச்சனைகளை சந்தித்துக் களைக்கும் போது ஒரு இடைவிடாத சிரிப்பு ஒன்று முகத்தில் தோன்றி இருக்கும். அதுதான் ஜென் நிலை! 


30-05-2016
வழக்கமாகப் போகும் பாதைக்கு குறுக்கே திடீரென வெட்டப்பட்ட ஒரு பள்ளத்தில் முதல் நாள் சமநிலை குழம்பி விழுந்து எழுந்து சென்றிருப்போம்.அடுத்தநாள் அந்த இடத்தில் சற்றே மெதுவாகப் போய் அவதானமாகச் சென்றிருப்போம்.
அதற்குப் பின்னர் குழியில் விழாமல் விலகிச்செல்ல ஒரு வழியையோ அல்லது மாற்று வழியையோ கண்டுபிடித்து அதனூடாக சென்று இருப்போம்.
வெட்டப்படும் பல குழிகள், வழிகளைக் கற்றுக் கொடுக்கவே தவிர, வலிகளைக் கொடுக்க அல்ல!!!


11-05-2016
ஒரு structureக்குள் வட்டமடித்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூடத்தெரியாமல் தங்கள் வட்டம் சிறந்த வட்டம் என்று நினைப்பவர்களுக்கு, வட்டமே கீறாமல் வாழ்க்கையை வாழுகின்றவர்களின் நிலையை உணர்வது கடினம்தான்! என்ன தமது வரையறைகளைத் தாண்டி யோசிக்காத அவர்களின் நிலையை நினைத்து பரிதாபப்படுவதை விட எங்களால் வேறொன்றும் செய்ய முடியாது! 

உள்ளது! அல்லது!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:15 PM | 0 பின்னூட்டங்கள்

உள்ளது வேண்டின்
அல்லது தந்து
உள்ளதை மறைக்கும்
உலகமிது!
அல்லதை நாடி
உள்ளதை விட்டால்
அல்லதையும் மறுக்கும்
நரகமிது!
நாம்
உள்ளதும் இன்றி
அல்லதும் இன்றி
வெற்றிடம் தாங்கி
திரிகின்றோம்!
அவை
அல்லதும் வாங்கி
உள்ளதும் வாங்கி
முற்றிலும் தேக்க
தொலைகின்றோம்!
Bavananthan
(20-05-2016)

திரண்டு வந்த அலை ஒன்று
திசை மாறித் திரும்பியதோ!
முகில் வழிந்த துளி ஒன்று
வரும் வழியில் சிதறியதோ!

இரு விழிகள் வெறித்த திசை
குவியமின்றி கரைகிறதே!
கனங்கள் தாங்கும் மனம்
கதறி அழத்துடிக்கிறதே!

மீள்வதெல்லாம் கஷ்டமில்லை
துளி கூட அதற்கு இஷ்டமில்லை
வறண்ட அந்த வாழ்க்கையிலே
நினைவுகள் கூட பசுமையில்லை

பாதைகளில் விழுந்து உருண்டு
மேடு பள்ளங்களில் புரண்டு
பல இடம் தடம் மாறி
பைத்தியங்கள் சில தேறி

வெட்டி வீழ்ந்த இதயத்தின் 
துண்டுகளைப் பொறுக்கி
அனுபவ ஊசி கொண்டு
அதைத் கோர்த்து ஒன்றாக்கி

விரைந்தெழுந்து ஓடி வந்து
திரும்பி பார்க்கையிலே
ஒரே ஒரு கேள்வி மட்டும்
ஒற்றையாய் நிற்கிறது

நீ மட்டும் ஒரு நிமிடம்
திரும்பிப் பார்த்திருந்தால்
அத்தனை வாழ்க்கையுமே
அழகாகிப் போயிருக்கும்!
-Bavananthan

Untitled! Motivation song!

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:47 PM | 0 பின்னூட்டங்கள்

புது மேகம் தாண்டி நாம்
புதிய கரை காண்போமே
வலி கொண்ட வாழ்க்கை தாங்கி
விடியல் தேடிச் செல்வோமே!

கனம் கொண்ட நெஞ்சம் தான்
கண்ணீரில் கரைகிறதே அதன்
கவலைகள் தேங்கிட வீழ்ந்திட
விதையாய் மோதி வெல்வோமே!

வாழ்க்கை ஒற்றைக் கோடு
பல தடைகள் முட்டி மோது!
விழி ஈரம் காயும் போது
நீ காற்றின் மீது ஏறு!

உன் வேட்கை தாங்கி ஓடு
வரும் நரிகள் வேட்டையாடு!
பழி தீர்க்கும் நேரம் பார்த்து
நீ பாதை நீங்கி தாக்கு!

வானோடு மழை நீங்கிப் போகலாம்
வேரோடு மரம் மாண்டு போகலாம்
நெஞ்சோடு கதை மோதி வீழலாம்
போராடு தினம் மீண்டு மோதலாம்
-Bavananthan

Music: Vidushan
Lyrics: Bavananthan


மோதுடா மோதுடா
துணிவிருந்தா மோதுடா!
பாருடா பாருடா
Trinco Hindu பாருடா

துணிவிருந்தா மோது
இல்லை தொடை நடுங்கி ஓடு
படை பலத்தை பாரு
இங்கு பாயும் புலி நூறு

எழுந்து ஆடு
விரைந்து ஓடு 
நிமிர்ந்து மோதி
விண்ணைத் தொட்டு விடு

வலிகள் வாங்கு
விழியில் தாங்கு
வழிகள் தேடி
வேரோடு அறு



திசைகள் பாரு
தெறிக்க ஆடு
அறைந்து மோதி
அச்சம் கொடுத்து விடு

அடிச்சு ஆடு
ஆறு நாலு
முறைச்சுப் பாத்தா
மோட்சம் கொடு

சோதனை எல்லாம்
வேதனை இல்லை
சாதனை என்று
விண்ணைத் தொடு!

வலி தொடும் தூரம்
விழிகளில் ஈரம்
விலகிட நீயும்
வாளை எடு!

விதை போல்
முட்டி மோதி
முளைத்துவிடு
அடியைப் பாரு இடியைப் பாரு
Trinco Hindu மோதிப் பாரு
வெறித்தனமா வேட்டையாடும்
வேங்கை நாங்க வேற யாரு

பாரு கண்ணுல வெறியை பாரு
போடப் போட அடியைப் பாரு
பேரைச் சொன்னா குலை நடுங்கும்

Trinco Hindu தாறுமாறு!
-Bavananthan



Music: Arunprasath
Vocal: Suthan , Erik Deoul Raj , Keerthi
Mixing & Mastering: Honey Niagara
Cinematography, Editing & Lyrics: Bavananthan
Creative Consultancy: Vivek Shan,Manoshanthan

உண்மை!

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:07 PM | 0 பின்னூட்டங்கள்

உண்மை சுடும்
குளிர்வது போலிருக்கும்
ஆனால் சுடும்

மெதுமெதுவாகச் சுடும்
பொய் எனும் தோலினை
உரிக்கும் வரை சுடும்

எத்தனை பட்டைகள்
நீ பொய் சேர்த்து வைத்தாயோ!
அத்தனை கவசங்களையும்
எரிக்கும் வரை சுடும்

சுடமுன் சிரித்த
சிரிப்புபையெல்லாம்
கதறிக் கதறி
அழவைக்கும் வரை சுடும்

சுட முன் நடித்த
நடிப்பையெல்லாம்
பதறப் பதற
துகிலுரிக்கும் வரை சுடும்

உண்மை சுடும்
ஆமையாகவே
நகர்ந்து சுடும்

உண்மை சுடும்
ஊமையாகவே
இருந்து சுடும்
-Bavananthan

மஞ்சள் கோடு!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:00 PM | 0 பின்னூட்டங்கள்


நேற்றைய இரவு கொஞ்சம்
நேரத்துக்கு படுத்திருந்தால்..
ஒவ்வொரு காலையிலும்
அங்கலாய்க்கும் விடயம் இது

சங்கரங்கள் களைக்காமல்
வேக எல்லை குலைக்காமல்
சிகப்புக் கோட்டை முந்துவது
சிரமான காரியந்தான்

கண்களை மூடாமல்
காற்றைக் கிழித்தபடி
சுட்டெரிக்கும் சூரியனை
முகத்தில் சுமந்தபடி

காவல் ஐயாவை
கடந்து ஓடவேண்டும்
வீதி விதிகளை
தெரிந்தே மீறவேண்டும்

ஓவர்டேக் எனும் பெயரில்
எதிர் வீதி கடப்பவனை
முட்டாமல் தவிர்ப்பதற்கு
மூலைக்குள் ஒதுங்கவேண்டும்

அவுடி வைத்திருந்தும்
அமரர் ஊர்தியாய் அதைச் செலுத்தும்
ஆசாமியை திட்டித் திட்டி
முந்தி முறுக்க வேண்டும்

காதல் காந்த அலைகளையும்
கிடப்பிலே போட்டு விட்டு
சில அழகிய கவிதைகளை
கடைக்கண்ணோடு கடக்க வேண்டும்

அவசரம் என்றாலே
ஆயிரம் பிரச்சனைகள்
அதனால் என் வாயில்
பொன்மொழி அர்ச்சனைகள்

இன்றும் அப்படித்தான்
இயல்பாய் இன்னொரு நாள்
வேகமுள் ஓடிச் சென்று
எழுபதைத் தொட்டிருக்கும்

காலபகவானும் தன்
சுற்றைக் குறைக்கவில்லை
எனது சக்கரமும்
அவனுக்கு சளைத்ததில்லை

சடுதியாய் ஏதோ ஒன்று
என்னில் மோதியது
நிலை குலைந்து
என் ஆடை பற்றித் தொங்கியது

வேகமாய் போகும் என்னை
மெதுவாகச் சொன்னது போல்
போ போ என்றாலும்
போகாமல் தங்கியது

தட்டிவிடக் கை எடுத்தால்
வேகம் குறைந்து விடும்
சிகப்புக் கோடு வந்து - என்
சம்பளத்தை வெட்டி விடும்

எழுபது நாற்பதாச்சு
இன்னும் அது இரங்கவில்லை
என்னதான் வேணும் என்று
சத்தமிட எத்தனித்தேன்

அழகாய் கண் உருட்டி
மெதுவாய் பார்த்துவிட்டு
கைகளால் காற்றுக்கு
கவசம் பூட்டியது

என்னவென்று கேட்டிடலாம்
இனியும் பொறுமையில்லை
இடது பக்க சமிஞ்ஞையுடன்
மெதுவாய் நிறுத்திவிட்டேன்

அசுரக்காற்றின் அழுத்தமில்லை
என்று அது அறிந்ததுமே
மெல்லிய தன் கவசத்தை
மெல்ல இறக்கியது

எட்டிப் பார்த்துவிட்டு
ஏதோ சொல்லி விட்டு
வண்ணச்சிறகடித்து பறந்தது - அந்த
மஞ்சள் கோட்டு வண்ணாத்திப்பூச்சி!
-Bavananthan

கவனத்தை ஈர்க்க
செயற்கையாய் கொட்டும்
உன் சிணுங்கலில்
கள் ஊறுதே!

வலம் இடமாக
வளைகின்ற பார்வை
ஒரு நொடி எனை
தாக்குதே!

விழித்திரை மோதி
வழிகின்ற விம்பம்
என் நினைவெங்கும்
உனை தோய்க்குதே!

ஊழியாய் வந்து
மோதிடும் கண்ணில்
என் சிந்தையும்
தள்ளாடுதே!
-Bavananthan


வளைந்த பாதைக்கெல்லாம்
வாய்க்கரிசி போட்டு விட்டு
நுழைந்து நுழைந்து நான்
உன்னருகில் வந்து விட்டேன்

முட்டிய மூச்சு சென்று
ஒட்சிசனை எட்டும் முன்னர்
காதலை சொல்லி விட
காற்றிலே கவி படித்தேன்

உன்
கண்கள் எங்கோ உருள
விரல்கள் ஏனோ மிரள
கோபமா சாந்தமா என
தெரியாமல் நான் தவிக்க

உன் கண்கள்
நான் கண்டேன்
என்னை நீ
காணவில்லை

ஆத்திரமோ விரக்தியோ
வெட்கமோ பயமோ
மகிழ்ச்சியோ கவலையோ
அனைத்தும் சேர்ந்த
ஒரு அழகியலின் உச்சமோ!

கடுகளவும் சிதறாமல்
என் காதல் சேர்ந்திருக்கும்
கட்டாயம் பதில் தேடி
உனக்குள்ளே அலைந்திருக்கும்

எங்கேயோ பார்த்தபடி
காரணங்கள் தேடாதே!
காது கேட்காது என்று
எனை தள்ளி ஓடாதே!

இல்லை என்று
சொல்வதென்றால்
இப்போதே சொல்லிவிடு!

அதற்கு முன்னர்
மூச்சு முட்ட முத்தமிட்டு
கொன்றுவிடு!
-Bavananthan 

Untitled Song | பெண்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:29 AM | 0 பின்னூட்டங்கள்
Music: Roshan
Vocal: Kay Jay
Lyrics: Bavan

இதயத்தின் ஓசையும் செவியினில் தொலையுதே
முட்களில் சிக்கியே மனமெல்லாம் கிழியுதே
சிதறியே சிதறியே மனமெல்லாம் பறக்குதே
உதறியே ஊதறியே உலகெல்லாம் வெறுக்குதே

சமூகத்தின் சாட்டையும் என்னயே அறையுதே
காமுகனின் வேட்டையில் என் உயிர்நாடி குறையுதே

மேகம் அது அழுது அழுது வான்மது வெளிக்கும் - என்
கண்ணீரின் குளத்தினிலே கனத்த மனம் மிதக்கும்

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதென்று
எண்ணியவனும் இன்று மாய்ந்து விட்டானோ
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதன் தலை குனிந்தானோ!

இது நரிகளும் உலவுகின்ற காடு - நீ
நல்லவனை பொறி வைத்து தேடு
புற்களிலே பனித்துளி வீழும்- அது
சூரியப் பற்களிலே நொருங்கிச் சாகும்

கண்ணியம் கொண்டு
பெண்ணியம் கண்டு
வஞ்சகம் கொன்று
வாழ்பவன் உண்டோ

விண்ணகம் சென்ற
பாரதி மீண்டும்
மண்ணகம் வந்து
பிறப்பெடுப்பானோ

பிறந்ததும் கொன்று
பெண்களைத் தின்று
புசிக்கும் மிருகங்களை
வேரறுப்பானோ

சிறுமியின் குமரியின்
தேகத்தை உறுஞ்சி
யுவதியைக் கிழவியைக்
காமத்தில் விழுங்கி
புணர்ச்சியில் கலந்து
உணர்ச்சியில் சிதைந்து

பயிரோடு மேய்ந்து
உயிரோடு கொன்று
முட்டி முளைக்கும்
அரும்பினை அறுத்து
வெட்டித் தளைக்க முன்
வேரோடு தறித்து


விதிமுறை மாற்றி
விடைகளைத் தேடி
நெறிமுறை மாற்றி
நடைகளைக் கூட்டி
நடையிட முயலும்

மாந்தரை கண்டு
அடக்கி ஒடுக்கி
விதை விடும் முன்னே
களையெனப்பிடுங்கி

மாசினை விதைத்து
காசினைக் கொடுத்து
கனவுகள் புதைத்து
ஆறாத காயமளிப்பது முறையோ

காதலின் பெயரில்
கலவிகள் கொண்டு
மோதலின் பெயரில்
காதலைக் கொன்று
சிசுவுடன் பெண்ணின்
அழுகுரல் கண்ணின்
உவர்ப்பு நீர் உண்டு
தன்னுயிர் மென்று
ஈருயிர் கொல்லும்
அகோர சமாதி


காதல் மோதல் கலவி காமம்
வஞ்சகம் சூழ்ச்சி போட்டி பொறாமை
பேராசை மோகம் தேகம் சாபம்
கலாச்சாரம் கட்டுப்பாடு பண்பாடு  முட்டாள்
பாகுபாடு குறைபாடு அறிவிலி அடிமை
அஞ்ஞானம் மெஞ்ஞானம் மடந்தை

விழியின் சோகம் மண்ணோடு போகும்
வலியின் தாகம் நெஞ்சோடு சேரும்
இந்தக் காயம் ஆறும் முன் ஓடிவிடு
உந்தன் மாய மான்களை விரட்டிவிடு
-Bavan
Music: ArunPrasath
Lyrics: Bavananthan
Vocal:


விழியோரம் துளி நீரும்
விரல் மோதி விழுகிறதே
கலைத்தாயின் கருவறையில்
புது மொட்டு தவழ்கிறதே

கனவுகள் பல கொண்டு
பிறக்கின்ற சிறு வண்டு
கடலில் போய் கலந்திடுமே

வானிலே உயிர்கொண்டு
மலையிலே நிலை கொண்டு
திரை மோதி இறந்திடுமே

இருப்பது சில காலம்
இயற்கையின் விதி கூறும்
இறப்பில் போய் இணைந்திடுமே

இருக்கிற வரை நீளும்
இறுதியில் நிலை மாறும்
மண்ணில் போய் மடிந்திடுமே

பூக்களும் ஒரு நாளில்
பிறக்குது மறு நாளில்
மண் மேல் உரமாகிடுமே

நம்பிக்கை வேரூன்று
தெளிவுடன் காலூன்று
உன் வெற்றி நிச்சயமே

கதைகள் பல சொல்லி
விதைகள் பல கிள்ளி
கதை வந்து தாக்கிடுமே

நீராய் உரு மாறு
வேராய் தினம் ஊறு
மண் மோதி முளைத்து விடு
-Bavan

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்