கவனத்தை ஈர்க்க
செயற்கையாய் கொட்டும்
உன் சிணுங்கலில்
கள் ஊறுதே!
வலம் இடமாக
வளைகின்ற பார்வை
ஒரு நொடி எனை
தாக்குதே!
விழித்திரை மோதி
வழிகின்ற விம்பம்
என் நினைவெங்கும்
உனை தோய்க்குதே!
ஊழியாய் வந்து
மோதிடும் கண்ணில்
என் சிந்தையும்
தள்ளாடுதே!
-Bavananthan
அருமையான கவிதை.