Related Posts with Thumbnails
Showing posts with label tweets. Show all posts


|#001|
2005ம் ஆண்டு ஆங்கிலக் கொப்பியைப் புரட்டியபடி பழைய நினைவுகளில் பறந்துகொண்டிருந்த என்னை என்றோ தவறி கொப்பிக்குள் மாட்டி சிறைவாசம் அனுபவித்த பருத்திவிதை வெடித்துப் பறந்து நிகழ்காலத்துக் கொண்டுவந்தது

|#002|
வீதியில் செல்லும் போது பைக் ஓடிவந்த ஒருவர் ஸ்லிப்பாகி விழுந்தவிட்டார். தூக்கிவிடலாம் என்று போனேன் மது அருந்தியிருந்தார். போடாங்கொய்யால என்று அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டேன் =/

|#003|
எக்ஸாம்ல கேள்வி பேப்பரைப் பார்த்து நாம் அழுதா அது அவமானம்!! நம்மோட ஆன்சர் பேப்பரை ப்பார்த்து புரொஃபசர் அழுதா அது சரித்திரம் via

|#004|
Examல் bit அடிக்க பல முறைகளைக் கையாள முயன்று தோற்று கடைசியில் படித்து Exam எழுதிய நாள் இன்று #என்_வாழ்நாளில்_மற்றுமொரு கறுப்புதினம் :P

|#005|
கேக்கிறவன் கேனயனா இருந்தா செல்ஃபோனைக் கண்டுபிடிச்சது சேக்ஸ்பியர்னு சொல்லுவீங்களே! :P

|#006|
வருடப்பிறப்புக்கு மருத்துநீர் வைக்கிறது சம்பிரதாயம் மாதிரி, facebookல photo tag பண்றதும் சம்பிரதாயமா இருக்குமோ! #கொல்றாய்ங்களே

|#007|
"மனிதன் input deviceஆகப் பயன்படுத்தவேண்டிய வாயை output device ஆகப் பயன்படுத்துவதாலேயே பல பிரச்சினைகள் வருகிறது" #தத்துவம்மாதிரி :P

|#008|
யதார்த்தங்கள் பலவேளைகளில் பைத்தியக்காரத்தனமான கதைகள் என்று பெயர்சூட்டப்பட்டுவிடுகின்றன. #யதார்த்தம்

|#009|
காது வழியாக அப்படியே உடலுக்குள் ஊடுருவி நரம்புகளை சிலிர்க்க வைப்பதால் தான் வயலினை நரம்புக்கருவி என்கிறார்களோ?
|#010|
"LIFEஏ நம்மள SERIOUSசா எடுத்துக்கல நாம ஏன் LIFEஐ SERIOUSசா எடுத்துக்கணும்"

|#011|
தனிமையிலிருக்கும் போது 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலின் instrumental versionஐ கேட்டாலே போதும் பிறவிப்பலனை அடைந்துவிடலாம்

|#012|
எதையுமே அதிகாரமாச்சொன்னா யாருமே கேக்கமாட்டாங்க, இப்ப புரியுதா திருக்குறள் பாடமாக்கிறது ஏன் அம்புட்டு கஷ்டமா இருக்குன்னு =P

|#013|
பேஸ்புக் பார்த்துக் கொண்டு படிக்கலாம் but படித்துக்கொண்டு பேஸ்புக் பார்க்க முடியாது =P =P

|#014|
சில விடயங்களுக்குப் பயப்படுவதை விட ஒருமுறை அதனால் பாதிக்கப்படலாம். #இரவுநேரம்_சைக்கிளில்_வரும்போது_நாய்_துரத்திய_போது_யோசித்தது

|#015|
ஆண் ஒரு பெண்ணை துரத்திதுரத்தி காதலிக்கும் போது பெண்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று இப்போதுதான் புரியுது #நாய்_துரத்திய_எபட்டுல_வந்த_Tweet

|#016|
Violentடா இருக்கிறவனை நம்பினாலும் Silentடா இருக்கிறவனை நம்பாதே! #குரைக்கிற_நாய்_கடிக்காது #நாய்_துரத்திய_எஃபக்டு

|#017|
கனவு என்ற ஒன்று மட்டும் இல்லையெனறால் மனிதன் கிடைக்காமல் போனவற்றுக்காக வருத்தப்பட்டு வருத்தப்பட்டே செத்திருப்பான்.
|#018|
காதலிப்பவர்கள் தாங்கள்தான் உலகத்திலேயே busyஆக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள் #டேய் உங்களுக்கு வந்தா ரத்தம்,எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா







|#001|
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

|#002|
"ஏறும்போது எரிகின்றான்,இறங்கும்போது சிரிக்கின்றான் வாழும் நேரத்தில் வருகின்றான்,வறுமை வந்தால் பிரிகின்றான்" #கண்ணதாசன் #ஒருவன்மனதுஒன்பதடா

|#003|
எல்லா ஊரிலயும் பூனை 'மியாவ்' என்றுதான் கத்துது :p #கண்டுபிடிப்பு

|#004|
என்னதான் பேய்களில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பேய் படங்கள் பார்க்கும்போது கரண்ட்டி கட்டாகிபோனால் பயமாத்தான் இருக்கு :-O #அவ்வ #காஞ்சனா

|#005|
"இருளை மறைக்கும் ஒளியால் நிழலை மறைக்க முடிவதில்லை"

|#006|
"பாணின் ஓரத்துண்டுகள் போலிருக்கிறது நம்காதல், எப்போது வெட்டப்படுவோம் குப்பையிலாவது ஒன்று சேர" :P #கவிதைமாதிரி

|#007|
கடைவாயில் கடைசிப்பல்லு முளைக்கும் போது ஏற்படும் வலி காதல் தோல்வியின் போது ஏற்படும் வலியை விடக்கொடியது :P #ஐயோஅம்மா :'(

|#008|
செய்த தவறை ஏற்றுக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும், ஆனால் செய்யாத தவறை செய்ததாக ஏற்றுக்கொள்ள அதைவிட தைரியம் வேண்டும்.

|#009|
LOVE எங்கிறது ALARAM இருக்கிற மணிக்கூடு மாதிரி, அதுவும் தூங்காது, தூங்குறவனையும் தூங்கவிடாது

|#010|
ஒரு நாளில் அதிகம் நித்திரை செய்வதால் ஏற்படும் ஒரே ஒரு பிரச்சினை. சில விடயங்களை கனவா நனவா என்று கணிப்பிட முடியாமல் ஏற்படும் குழப்பம் தான் :P

|#011|
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல அம்மா பற்றிய பாடல்கள் மட்டும் எந்தக் காலகட்டத்தில் வந்திருந்தாலும் சரி மனதுக்குப் பிடித்துப்போகிறது.

|#012|
"அலையே சிற்றலையே கரை வந்துவந்து போகும் அலையே, என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால், நுரையாய் கரையும் அலையே"- ||#ரசனை

|#013|
ExamResults வரும்போது அடுத்த முறை நல்லாப் படிக்கணும் என்று எடுக்கப்படும் முடிவுகள்,அன்று இரவு வரும் நித்திரையுடனேயே கைவிடப்படுகின்றன :P
|#014|
பொதுவாக, காதலிப்பவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், காதலிக்காதவர்கள் சோம்பேறிகளாகவும், காதலில் தோற்றவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் :P
 
|#RT| 
கோபப்படுபவரிடம் தொடர்ந்து தன்மையாக கதைத்துப்பாருங்கள் . அந்த நாள் முழுதும் அவர் கோபப்பட்டதற்கு வருத்தப்படுவார் !

-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது

-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"
யாருக்கோ! :P

-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்

-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P

-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்

-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் :@

-08-
வரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு 

-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P

-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல
உன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.

-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.." 

-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D

-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P
2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்

-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"|| யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by

2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.

இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.


கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!

ருவீட்ஸ் || Tweets #009

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:45 PM | 2 பின்னூட்டங்கள்

-01-
நம்பிக்கைதுரோகம் மறக்கமுடியாததாம், SO பாடங்களையும் ஏதும் நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டா கஷ்டப்பட்டு படிக்கவேண்டியதில்லை :P

-02-
7ம் அறிவு பார்த்ததிலிருந்து ரோட்டில் எந்த நாயைப்பார்த்தாலும் பயமாயிருக்கு :P  

-03-
Exam முதல்நாள் படிக்க புத்தகத்தை திறப்பது, பிறந்தநாளுக்கு அடுத்தநாள் facebookஐ பார்ப்பது மாதிரி :P

-04-
மலை போல நம்பியிருக்கேன் நம்பியிருக்கேன்கிறாங்களே.. மண்சரிவு வந்தா என்ன பண்ணுவாங்க.. #டவுட்டு

-05-
ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருப்பதற்கு சிறந்த வழி ஒரு தடவை அதை மறப்பதுதான் #என்னாஅடி #அனுபவம்

-06-
WMPக்கு கூட நக்கல்ஸ் கூடிட்டு, நாளைய Assignment JAVA Codingகுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது "மயக்கமா கலக்கமா" பாட்ட போடுது :'(

-07-
"ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம். அது உள்ளிருந்து உடைக்கப்பட்டால், ஜனனம்" #படித்ததில்_பிடித்தது

-08-
The hardest thing ever in this world is answering to the childern's questions. How fast they asking questions.

-09-
"உன் வாழ்க்கை உன் கையில்" - "கையில்லாதவர்களுக்கும் வாழ்க்கை உண்டு" #முரண்பாடு

-10-
வாழ்க்கையின் தத்துவத்தை ஒளிந்து பிடித்து விளையாடும் போது அதிகம் அறிந்துகொள்ளலாம். #அனுபவம்

-11-
இன்செப்சன் படம் பாத்ததிலயிருந்து நடக்கிறதெல்லாம் கனவா நனவான்னே டவுட்டாக்கீதுபா..:-O #இன்செப்சனோபோஃபியா

-12-
என்னதான் ஜப்பான்காரன் கமராவைக் கண்டுபிடிச்சாலும், ZOOM button வேலை செய்யாட்டி அதுக்கு டிப்பெக்ஸ வச்சு வேலை செய்யவைக்கலாம்னு கண்டுபிடிச்சவன் தமிழன்டா

-13-
காலைக்கடன் முடிக்கப் போனாலும் பேஸ்புக்ல status போடுறாய்ங்கடா.. விட்டா சாவுறதுக்கு முதல் "I'm leaving this world" எண்டு போட்டாலும் போடுவாய்ங்க, வழக்கம்போல நாமளும் like பண்ணி ":P"ன்னுதான் comment அடிப்போம்


-RT-

:எல்லாத் துறைகளிலும் நின்று நிலைக்க முடியாதவர்கள் தான் அறிவுரை என்ற பெயரில் விமர்சனம் செய்து மற்றவரை மட்டம் தட்ட எண்ணுகிறார்கள். #அவதானிப்பு

ருவீட்ஸ் || Tweets #008

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:11 AM | 11 பின்னூட்டங்கள்
-01-
காதலிக்கிறவன், காதில ஹெட்செட் மாட்டினவன், தண்ணியடிச்சவன் இந்த மூன்று பேருடனும் அவதானமாகத்தான் இருக்கணும் #அனுபவம்

-02-
இலங்கை நாடே கிறீஸ் டெவில் பீதியால் பற்றி எரிவதை கூட பொருட்படுத்தாது அவுஸ்ரேலியாவை இன்றைய போட்டியில் வென்றதானது இலங்கை அணியின் சுயநலப்போக்கை காட்டுகின்றது. -அவுஸ்ரேலிய ரசிகர்கள் (படித்துப் பிடித்துப் போய் உல்டா பண்ணியது) :P

-03-
சோகமாக இருப்பவர்களை பார்த்து சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளலாம்,ஆனால் சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்து சோகமாயிருக்க கற்றுக்கொள்ளமுடியாது

-04-
"நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பார்கள்." சில்_பிடித்தது

-05-
யாராவது எனக்கு கடிச்ச அப்பிள் ஒன்று வாங்கித்த்தாருங்கள், நான் கடிக்காத அப்பிள் வாங்கித்தர்றேன்..:P #டீலிங்கு

-06-
"தவறு செய்தவர்களுக்கே EGO இருக்கும் போது தவறே செய்யாதவர்களுக்கு EGO இருப்பதில் தவறே இல்லை"

-07-
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒரு வேளை நீ மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி இருக்கும் #படித்ததில்பிடித்தது

-08-
கோபத்தைக் குறைப்பதற்கு இலகுவான வழி, "எனக்கு கோபம் வராது" என்று அடிக்கடி சொல்லிச் கொள்வதுதான்.

-09-
எலிகளும் காதலிக்குமாம், அதனாலதானோ என்னமோ அதையும் வீடுகளில் எலிமருந்து வைத்துக் கொல்கிறார்கள்..:p

-10-
அட போங்கையா.. தத்துவங்கள் படிக்க/கேட்க வேணும்னா நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைப்படத்துவது கடினம்

 -11-
மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்கிறது நல்ல விடயம்தானே, SO சில விடயங்கள் வெளிப்படையாக பேசாமலிருப்பதே நல்லது

-12-
நடக்கும் போது straight fowardடாகத்தான் இருக்கணும், இல்லைன்னா accident ஆகிடும் #பிடரியில் கண் இல்லைத்தானே..:P

-13-
புரொஜெக்டரை தொடர்ந்து சிலமணிநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணீர் வருவதுண்டு,ஆனால் உடல்சிலிர்த்து அழுதது இன்றுதான்

-14-
உங்கள்மீது பொய்யாக சுமத்தப்படும் குற்றம், 4toshopல் உங்க படத்தை Edit பண்ணி உங்ககிட்டயேகாட்டுவதுபோல,பார்த்து சிரிச்சிட்டு போய்ட்டே இருக்கணும்

-15-
ஞாபகங்கள் முரண்பாடானவை. நீங்கள் மகிழ்வாயிருந்த தருணங்களை நினைக்கும் போது கண்ணீரையும், அழுத நேரங்களை நினைக்கும் போது மகிழ்வையும் தருகின்றன

-16-
பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P

ருவீட்ஸ் || Tweets #007

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:23 PM | 9 பின்னூட்டங்கள்
 
 -1-
காலம் கடந்த ஞானத்தை maturity என்று சொல்லலாமா? #டவுட்டு
-2-
ஆங்கிலப்பரீட்சையில் நாம் எழுதும் பதில்கள் புதுக்கவிதை மாதிரி, இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளாதீங்க #பின்குறிப்புINஎக்ஸாம்PAPER
-3-
கண்ணை முடு, மூக்கைப்பார், இப்போ கண்ணைத்திற... எழுந்து நில் கைகளைத்தூக்கு, இப்போ 2கால்களையும் தூக்கு..:P #நித்தியிசம்:P
-4-
ஒருவரை கோபப்படுத்த 2வழிகள்,1-அவரின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கலாம் 2-அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்
-5-
காதலிக்குறவங்க எல்லாரும் அரசியல்வாதிகள் மாதிரி, எந்த நேரத்தில என்ன செய்வாங்க,அதை எதுக்கு செய்யுறாங்கன்னே யாருக்குமே தெரியாது...:P
-6-
அபிராமி,கண்ணம்மா,சந்தியா,ரோஜா,அஞ்சலை,மல்லிகா,சிந்து,மாலினி,ரசிகா,நகுமா,ஊர்வசி,நிலா,செண்பகம்,தாமரை ஆகிய பெயர்களிளைக்காதலியின் பெயராகக் கொண்டவர்களுக்கு RINGTONE போடுவதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது..:P #ஆராய்ச்சி_முடிவு
-7-
ஒரே பாட்டில் பணக்காரனாகவும், ஒரே பாட்டில் அனைத்துப் பணத்தையும் செலவழிக்கவும் ரஜனியால் மட்டுமே முடியும். #சூப்பர்ஸ்டார்டா..!
-8-
தவறு செய்தவர்களே அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக கவலைப்படும் போது எந்தத்தவறுமே செய்யாத நான் என் மீது போலியாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எண்ணி கவலைப்படுவதிலோ, கோபப்படுவதிலோ எந்தத்தவறும் இல்லை
-9-
ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் 7 காதல் வருமாம், அது இதுதானா?1-அம்மா 2-அப்பா 3-சகோதரம் 4-நட்பு 5-காதலி 6-மனைவி 7-பிள்ளை #டவுட்டு

-10-
5நிமிடம்தான் என்று ஆரம்பிக்கும் விளையாட்டுக்கள் 5மணிநேரமானாலும் முடிவதில்லை.அட்லீஸ்ட் 1/2 மணிநேரமாவது என்று ஆரம்பிக்கும் படிக்கும் முயற்சிகள் 5 நிமிடம் கூட தொடர்வதில்லை.

-11-
இணையம்,மொபைல்,உறவினர்கள்,வீடு,வாகனம்,தூசு,பஸ்,கவலை, எதுவுமில்லாமல் ஒருநாளாவது எங்காவது ஒரு அமைதியான இடத்தில் போய் இருக்கவேண்டும் #பேராசை

-12-
சோகமான தருணங்களை உணரவைக்க பல வார்த்தைகள் உண்டு, இன்பமான தருணங்களைச் உணரவைக்க ஒரே வழி அதை அனுபவித்து அறிவதுதான் #அனுபவம்

-13-
சொன்னதை செய்யணுமாம், சொல்லாததையும் செய்யணுமாம், bt சொன்ன சிலதைசெய்யவும் கூடாதாம், சொல்லாத சிலதையும் செய்யக்கூடாதாம் #போங்கடாஇந்தஅரசியல்புரியவேஇல்ல

-14-
யாரிலாவது கோபமிருப்பின்அவர்களை நினைத்து வெறுமனே பல்லை கடிப்பதை விட,வாயில் ஏதாவது உணவைப் போட்டுவிட்டுக் கடிக்கலாம். உடம்புக்கும் நல்லது :P

-15-
'முதன்முதலாக' என்ற வார்த்தைக்குள் தான் அதிக மகிழ்ச்சிகளும், சோகங்களும குடியிருக்கின்றன.

-16-
மானம் என்பதன் எதிர்ச்சொல் அவமானம் என்றால் டேய் என்பதன் எதிர்ச்சொல் ஏன் அடேய் என்று இருக்கக்கூடாது. #டவுட்டு..:P

-17-
பழையபாடல்களின்BGMகுதிரைவண்டியில் போவதுபோலவும், புதியபாடல்கள் விமானத்தில் போவதுபோலவும் எண்ணத்தையும்கொடுக்கிறது#அவதானிப்பு

-18-
தூக்கமில்லா இரவுகளில்தான் தத்துவங்கள் பிறக்கின்றன, உடனே அதை பக்கத்திலிருப்பவனுக்கு சொல்ல முற்படும்போது உதைகளும் பிறக்கின்றன..:P

-19-
தத்துவம் என்பதில் தத்=சிங்களத்தில் பல் என்று பொருள். து=துப்பு என்பதை குறிக்கிறது. வ(அ)ம்=மழலை மொழியில் சாப்பாடு என்று பொருள். ஆகவே 'பல்லு விளக்கிட்டு சாப்பிடு என்று பொருள் #தத்துவம்பற்றியதத்துவம் :P

-20-
"புதியது" என்ற ஆண்டாண்டு காலமாய் பயன்படுத்தப்படும் பழைய சொல் மட்டும் பழையதாக இருந்தாலும் புதியவற்றைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

-21-
உயர் அதிகாரி குடிகாரனாக இருந்தால்,அவனிடம் திட்டு வாங்குவதை விட அவனை அறைந்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் குடிகாரர்களுக்கு நீங்கள் அறைந்தது ஞாபகமிருக்கப்போவதில்லை..:P

-22-
மழை+ குளிர்+ பஸ்+ ஜன்னலோரசீட்+ இதமானகாற்று=சொர்க்கம் #அனுபவம்

-23-
தேவையானவற்றுடன் பிடிக்காத ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுவதில்லை,தேவையில்லாத ஒன்றுடன் தேவையான ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுகிறது
-RT-
:Facebook - வில்லங்கம் தானா தேடி வாற இடம் Twitter - நாங்களே வில்லங்கத்திட்ட போய் மாட்டுற இடம் :P

ருவீட்ஸ் || Tweets #006

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 3 பின்னூட்டங்கள்
 
 
 -1-
பஸ்கண்டக்டர் 2நாள்பழகிய பின் 3வது நாளிலிருந்து 12RSக்கு பதில்10RSதான் எடுக்கிறான் bt TICKETபோடுவதில்லைங்கிறது கூடுதல்தகவல் #கணக்குலவராதகாசு
-2-
எனக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்கல? & எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?, இரண்டுமே விரக்தியின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்விகள் 
-3-
காதல் எங்கிறது call மாதிரி answer பண்ணாட்டி missedcall ஆகிடும். BT நட்பு எங்கிறது SMS மாதிரி நாமளா அழிக்குற வரைக்கும் நம்மை விட்டு போகாது
-4-
காதல் என்பது சிகரட் புகை மாதிரி புகை பிடிக்கிறவனோட சேர்த்து பக்கத்துல இருக்கிறவனையும் பாதிக்கும்..:P
-5-
நேற்றுமுன்தினம் தாத்தா ரசித்தார்,நேற்று அப்பாரசித்தார்,இன்று நான்ரசிக்கிறேன்,நாளை மகன்ரசிப்பான்,நாளைமறுதினம் பேரனும் ரசிப்பான்
-6-
தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்
-7-
காதல் எங்கிறது குத்து song மாதிரி வந்த உடனே சூப்பரா இருக்கும் but மனசுல நிலைக்காது, ஆனால் நட்புங்கிறது இளையராஜாட melody மாதிரி என்றும் கூடுவே இருக்கும் #Evergreen 
-8-
தமது சுயத்தை சுத்தமானதாகக் காட்டிக்கொள்ள சொல்லப்படும் "எனக்கு சுயநலமில்லை" என்றவார்த்தையில்தான் சுயநலம் அதிகம்பொதிந்திருக்கிறது. #சுயநலம்
-9-
இளையராஜாவின் பாடல்களின் பின்னணிஇசையை மட்டும்கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.பாடலின் ரசனை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்கிறது

-10-
தத்துவம்=செமபஞ்ச், ஆங்கிலம்=பீட்டரு, சீரியஸ்=செமகாமடி, ஃபீலிங்ஸ்=பிலிம்காட்டுதல் காதல்=டைம்பாஸ், நண்பர்கள்=உலகம் #பெயர்மாற்றம்

-11-
வாழும்போது நமக்கு சாவுண்டு ஆனால் சாகும்போது நமக்கு வாழ்வில்லை. #என்னங்கடா_நியாயம்_இது

-12-
தேவையானவை தேவையானபோது தேவைக்கதிகமாகக் கிடைக்கும் போது தேவைப்பட்ட தேவையானவை கூட தேவையில்லாமல் போகின்றன. #தேவையா :P

-13-
ஒருவிடயத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றிஇழப்புக்களை பற்றி கவலைப்படாமல் செய்கிறோமோ அதான் நம்ம Passionனாம்,அப்ப எனது passion என்ன நித்திரையா?

-14-
தனக்குப்பிடித்ததை மட்டுமே செய்யும், வெளிப்படையாக இருப்பவர்களுக்கு பெயர் சுயநலவாதி என்றால், நானும் சுயநலவாதிதான்.

-15-
யாராவது என்னைக்கோபப்படுத்திவிட்டோமென்று மன்னிப்புக்கேட்டால்,நம்மளையும் கோபமெல்லாம வரும் ஆள் என்று நினைச்சிட்டாங்களே என்ற கவலைமேலிடுகிறது

-16-
ஒண்ணுமே இல்லாத விடயத்தை ஒண்ணுமே இல்லை என்று 100 Comment+150Likes போட்டபிறகு, சொல்லும் இடம் =FACEBOOK

-17-
யாருக்காகவும் தன்னிலை மாறாதிருத்தல் நல்லகொள்கைதான் ஆனால் எனது நடவடிக்கைகளால் ஒரு ஊரே பாதிக்கப்படும்போது மாறுவதில் தவறில்லை.

-18-
நான் நானாகத்தான் இருப்பேன் என்பதன் கருத்து நான் அனைத்திற்கும் முரண்பாடானவனென்பதல்ல

-19-
குற்றம் குற்றமெனஉணரப்படும்வரை குற்றம்குற்றமாகத் தெரிவதில்லைஆனால் குற்றத்தைகுற்றமெனஉணர்ந்தபின் குற்றத்தை குற்றமெனஉணராததுபோல்நடிப்பது குற்றமே

-20-
மேசையில் இருக்கும் பென்ட்ரைவை எடுத்து USBபோர்ட்டில் அடிக்க அரைமணிநேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்பவனே உண்மையான சோம்பேறி. (உ+ம் - நான்:P)

-21-
உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை 'என்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?'

-22-
முட்டாள்களின் முதல் ஆயுதமாகவும், அறிவாளிகளின் கடைசி ஆயுதமாகவும் இருக்கிறது கோபம் #படித்ததில்பிடித்தது

-23-
அறுகம்புல் போல நாம் வளர்த்த காதலை, எடுமைமாடு போல் உங்கப்பன் மேய்ந்துவிட்டுப் போனானே..:P #கேட்டதில்_பிடித்தது

-24-
தலையிலிருந்து அடிக்கடி முடி கொட்டிறத்துக்கு காரணம் என்னனு தெரியுமா? தலையிலே முடி இருக்கிறதுதான் #தத்துவம்

-25-
நண்பன் ஒருவனின் வீட்டு வாசலில் பெரிய சைசில் சாய்பாபா படம் மாட்டியிருக்கிறார்கள், திருஷ்டிக்காகவா? #சந்தேகம்

-26-
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பிற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை.- சைரஸ்

-27-
சில முக்கியமான விடயங்கள் நடந்தேறிய பின்னர் நாம் சொல்லும் டயலொக் -WHATEVER HAPPENS LIFE HAVE TO MOVE ON-

-28-
“இருள் இருள்” என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய் - கன்பூஷியஸ்-

-29-
நாங்கெல்லாம் கவனமாப்பாத்தா காதல் வரும் கடுப்பாப்பாத்தா கவிதை வரும் எப்புடி பஞ்ச்?..:p


-30-
கோபம் வந்தால் கண்ணாடியப்பாருங்க காமடியா இருக்கும்#அட்வைஸ்

ருவீட்ஸ் || Tweets #005

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:17 PM | 5 பின்னூட்டங்கள்
-01-
கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்றுவிடுமாம்..:P #மாணவர்கள்_கவனத்திற்கு
-02-
நல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம் #முரண்பாடு #சமுகம்
-03-
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. எனக்கு பிடித்துப்போகும் பாடல்களை தேடிப் பார்த்தால் கூடுதலாக வைரமுத்துதான் அதை எழுதியிருக்கிறார் :-))
-04-
மனிதன் கண்டுபிடித்த அற்புதமான போதை மருந்து = இசை
-05-
முடிவுதெரியாமல் முடிந்துபோகும் கனவுகளை மீட்டு முடிவை அறிவதற்கு ஓர் கருவி வேண்டும்.
-06-
5வருடங்களுக்குமுன் labல் நாம் படிப்பதற்காக உயிர்நீத்த தவளை இன்றும் அவ்வப்போது என்னால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது
-07-
குடை இல்லாமல் மழையில் நனைந்ததால் தான் பிறந்தது குடை, விடை தெரியாமல் EXAMHALLல் இருந்தால்தான் பிறக்கும் விடை#படிக்காமல்EXAMசெய்வோர்சங்கம்
-08-
ஆண்டவரில் "ஆண்" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P
-09-
நினைவாற்றலை கட்டுப்படுத்தும் மூளையை வைத்துக்கொண்டு இதயம்நினைக்கிறது என்று பொய்சொல்வதாலேயோ என்னமோ பலரது காதல் பஞ்சராகிப்போகிறது :P
-10-
Sklபடிக்கும்நேரம் FBயில் இதயம்பற்றிstatusபோடுவோர் இருந்திருந்தால் குருதிச்சுற்றோட்டத்தொகுதி பாடத்தில் சிறப்புத்தேர்ச்சியடைந்திருப்பேன்:P
-11-
முடிவெடுக்காமல் நேரத்தைக் கடத்திறதும், தப்பான முடிவெடுக்கிறதும் இரண்டும் ஒன்றுதான். Via film.
-12-
 சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிறதால தான் வாழ்க்கையோட உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்..:-)) via பசங்கFilm
-13-
 "சோதனை மேல் சோதனை & "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்பதிலுள்ள சுகமே தனி..:P
 -14-
 நாம் கீழே விழும் போது சந்தோஷப்பட்டா அது காதலி. சந்தோஷப்படுவதோடு TREATம் கேட்டா அவன் #நண்பேன்டா..
-15-
 தினமும் நித்திரைக்குப் போகிறோம்butஎப்ப தூங்கினோம்னு சரியான timeஐ எப்பிடி நம்மாளால கூறமுடியாதோ,அதே போல தினமும் classகு பேறோம் but எப்ப படிப்போம்னும் சொல்லமுடியாது
-RT-
  :வாழ்க்கையில் விதிகளை பின்பற்றும்போது வாழ்க்கை ஒழுங்காய்த்தான் இருக்கிறது. ஆனால் சந்தோசம் தொலைந்து போகிறது.!
 
 

ருவீட்ஸ் || Tweets #004

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:23 PM | 11 பின்னூட்டங்கள்


-01-
வெள்ளை மணிக்கூடு+மஞ்சள் செருப்பு+ரோஸ் டீ-சர்ட்+பச்சை டவுசர்+சீப்பு பாவிக்காத பரட்டைத் தலை +Headsetல் English பாட்டு= ஃபாசன் :P

-02-
Q:examஐக் கண்டுபிடிச்சவன் யாரு? A:இப்போ படித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் எதிரிதான் VIA By  

-03-
உன் வரவை எண்ணி எண்ணி தூக்கமின்றியே கழிகின்றன என் இரவுகள்- பரீட்சை #பப்புமுத்து

-04-
மரணத்தைக் காதலியுங்கள், கடைசிவரை உயிருடன் வாழ்வதற்கு..:P #உல்டா #பப்புமுத்து

-05-
புதுசாக Tweet அடிப்பதை விட, Retweet அடிப்பது இலகு. ரெண்டே கிளிக்தான்..:P #பேசிக்கலிஐஆம்எசோம்பேறி

-06-
சில வேளைகளில் எமது நல்ல குணங்கள் எம்மைக் கெட்டவர்களாகவும், கெட்டகுணங்கள் எம்மை நல்லவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. #முரண்பாடு

-07-
அளவுக்கதிகமா EXAMகு படிக்கிற STUDENTம்,அளவுக்கதிகமா கஷ்டமா EXAMவைக்கிற டீச்சரும் பைத்தியம் புடிக்காம மண்டயபோட்டதா சரித்திரமேஇல்ல

-08-
காதலில் தோல்வியடைந்தவர்கள் அதை FBகில் எழுதி அலப்பறையைக் கொடுக்கிறார்கள் என்றால்,அவர்கள் உண்மையில் FBஐதான் காதலிக்கிறார்கள் #ஆய்வுமுடிவு :P

-09-
உண்மையைச் சொல்லும்போது சற்றுப் பொய்யாகிவிடுமோ என்ற பயமும், பொய் சொல்லும்போது சற்று உண்மையாகிவிடுமொ என்ற பயமும் இருக்கத்தான்செய்கிறது

-10-
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மதிப்பெண் வருகையிலும் மறக்காது கண்மணியே #எக்ஸாம் #உல்டா #பப்புமுத்து

-11-
அடுத்த நாள் எக்ஸாமுக்கு முதல் நாள் இரவு படிக்கிறவன்தான்டா உண்மையான ஸ்டூடண்டு..:P #உண்மையான_ஸ்டூடண்டு

-12-
கம்பிமத்தாப்பு கண்ணு வண்ண மத்தாப்பு பொண்ணு #அப்ப பத்தவச்சா வெடிச்சிருமாம்,வைரமுத்து எங்கயோ போய்ட்டாருய்யா:P

-13-
எக்ஸாமை மட்டும் ருவிட்டரில் வைத்திருந்தால் சிம்பிளா ரீருவிட் பண்ணிட்டுப் போயிருக்கலாம்.

-14-
எக்ஸாம் supervisor நமதுமொழி தெரியாதவராக இருந்துவிட்டால்,பக்கத்தில் உள்ளவனிடம் விடைகேட்டாலும்,timeகேட்டேன் என்று சமாளித்துவிடலாம்


-RT-
Naveen Kumar :காதலையும் இதயத்தையும் இணைக்கும் அலப்பறைக்கு அளவில்லையா ? உங்க காதலி இதயத்த வேற ஒருத்திக்கு பொருத்திவிட்டா அவள காதலிப்பீங்களா?

ருவீட்ஸ் || Tweets #003

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:21 PM | 12 பின்னூட்டங்கள்

-01-
சுத்திவளைச்சுப் பேசுபவர்கள்,சுத்திவளைச்சுப்பேச வரலயென்று சொல்லிச்சொல்லி சுத்திவளைச்சுப்பேசவராத விடயத்தையும் சுத்திவளைச்சுப்பேசிவிடுவார்கள்

-02-
முன்பெல்லாம் கடுப்பாகினா காத்திரமான பதிவு வரும், இப்ப கடுப்பாகினா மொக்கைப் பதிவுதான் வருது..:P #அனுபவம்

-03-
பொறுத்தார் பூமி ஆழ்வார், பொங்கினார் காடு ஆழ்வார். || பூமி=Batting || காடு = Fielding :P

-04-
இரவு தூங்கி காலையில் விழிப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அதிகாலையில் தூங்கி பகலில் எழும்பணும் அவன்தான்டா யூத்து..:P
-05-
பரீட்சை நெருங்கும் நாட்களில் மட்டும் 24 மணிநேரமும் நித்திரை செய்யக்கூடிய சக்தி வந்துவிடுகிறது.
-06-
பொதுநலமாக இருந்து கெட்டபெயர் எடுப்பதைவிட, சில விடயங்களில் சுயநலவாதிகளாக இருந்துவிடுவது நல்லது.

-07-
தோல்வியை காதலிக்க கற்றுகொள், இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு #படித்ததில்_பிடித்தது

-08-
தமிழ் விளக்க கஷ்டப்படும் பல விடயங்களை ஆங்கிலம் இலகுவாக விளக்கிவிடுகிறது. #அனுபவம்

-09-
காதல் கவிதை எழுதிறவங்கெல்லாம் இதயத்தைக் காணல காணல என்று எழுதுறாங்களே, அது என்ன Item? ஜோதிகா இட்லிக்கு ஊத்தி சாப்பிடுறதா? #டவுட்டு
-RT-
ஒரு அழகான பெண்ணை சந்தித்ததிலிருந்து அவள் ஒரு பேய் என்று கண்டுணரும் தருணம் வரையிலான சுவாரசிய இடைவெளியே காதல்! -


ருவிட்ஸ் || Tweets #002

பதிவிட்டவர் Bavan | நேரம் 3:37 PM | 6 பின்னூட்டங்கள்

-01-
சிலரின் உண்மை முகத்தை அறிந்ததும், நேரடியாகவே சொல்லிவிட்டு விலகிவிடுவது சிறந்தது. தேவையற்ற மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம்.
 -02-
"எங்கேயும் காதல்..விழிகளில்" பாடலை headsetல் கேட்டபடி பார்க்கும் போது உலகம் ரொம்ப அழகாகத் தெரிகிறது. Real lifeலயும் BGM இருந்திருக்கலாம்


-03-
நண்பர்களை நக்கலடிக்கும் போது அது அவரைக் காயப்படுத்துவதாகவோ, கவலையடையச் செய்வதாகவோ உணர்ந்தால் உடனே மன்னிப்புக் கேட்டுவிடுவது நலம் #அனுபவம்

-04-
வெளிப்படையாக இருப்பது வெளிப்படையாக தெரியும்படி வெளிப்படையாக இருப்பவர்கள்தான் உண்மையில் வெளிப்படையாக இருக்கிறார்கள் #வெளிப்படை

-05-
நண்பர்களின் மரணம் ஜீரணித்துக் கொள்ளமுடியாதது.சிலவேளைகளில் சிலர் எதிரியாக,பிடிக்காதவர்களாக இருந்திருக்கலாமென்று தோன்றகிறது

-06-
அழகு, திறமை,கல்வி, விளையாட்டு, நல்ல பண்பு,தலைக்கனம் இல்லாமை எல்லாம் இருப்பவர்களுக்கு ஆயுள் மட்டும் குறைவாக இருக்கிறது #உண்மை
-07-

"மதிப்பெண்" என்பதில் "பெண்" இருப்பதாலோ என்னமோ அது பெண்களுக்கு மட்டும் அதிகமாக வருகிறது..:P

-08-
வகுப்பறைகளில் குழப்படிகாரப் பொடியங்கள் குழப்படி செய்யாமல் இருக்க ருவிட்டர் உதவுகிறது #கடைசி_பெஞ்சிலிருந்து_ருவிட்டடிப்போர்_சங்கம்

-09-
பச்சைக்குழந்தை, பச்சைப்பொய், பச்சைத்தண்ணி இதுவெல்லாம் பச்சையாவே இருக்கிறதில்லையே பிறகு ஏன் அந்தப் பச்சை #டவுட்டு

-10-
வெட்டியாய் இருக்கிறோம் என்று சொல்லி சொல்லியே வெட்டியாய் இருப்பவர்கள் வெட்டியாய் இல்லாமல் போய் விடுகிறார்கள் #வெட்டி


ருவிட்ஸ் || Tweets #001

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:45 AM | 21 பின்னூட்டங்கள்

-01-

ஒரு விடயம் தெரியாமலிருப்பதற்கும், தெரியாதது போல் நடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு
 -02-
அழகு ஆபத்து இரண்டுக்கும் நூலளவுதான் வித்தியாசம் இல்லை இல்லை"அ"வைத்தவிர அனைத்துமே வித்தியாசம் அழகு screen server ஆபத்து wallpaper#பப்புமுத்து
-03-
படைப்பில் வந்தது ஒன்று பெளடரால் வந்தது ஒன்று கேசரை ஆட்டினா கலைந்து விடும் ஸ்கிறீன் சேவர் தண்ணிபட்டால் கலைந்து விடும் மேக்கப் #பப்புமுத்து
-04-
குவியமில்லாக் காட்சிபேழையாகளாகப்பிறக்கின்ற காதல்கள் மேக்கப்பில்லாக் காட்சிப்பேழைகளால் இறந்துவிடுகிறது #பப்புமுத்து
-05-
"வாழ்வே மாயம்" பாட்டுக்கேட்டால் எல்லாரும் முதலில் கேட்கும் கேள்வி - "இப்ப என்ன பிரச்சனை உனக்கு?" #அனுபவம்
-06-
ராசிகளைக் கண்டுபிடித்தவர் காடும்கடலும் சார்ந்த இடத்தில் பெட்டிக்கடைவச்சிருந்திருப்பாரோ? #கடகம் #துலாம் #சிம்ம்ம் #விருச்சிகம் #மேஷம் #மீனம்
 -07-
எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி நம்ம குடும்பத்தையே காப்பாத்துமாம், சில வேளைகளில் எம்மை CLASSஐ விட்டு வெளியிலேயும் நிக்கவைக்கும்:P
-08-
சாவுறியா? ஒரு நாள் பாட்டுக்கேக்காம இருக்கிறியா என்று கேட்டால் சாவலாம்..:-)
 -09-
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது #செத்தா_விண்வெளியில_போய்ச்சாகணும் :P
-10-
தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும
-11-
தவறை ஒருவர் சுட்டிக்காட்டும் போது மனம் அதை ஏற்பதுமில்லை, செய்த தவறை உணரும் போது தவறைத் திருத்திக்கொள்ள அவகாசம் இருப்பதுமில்லை.
-12-
தமிழ்ல கதைச்சா இவருதான் தமிழ வளர்க்கப்போறாராங்கிறாய்ங்க ENGல கதைச்சா 4ENG PAPERமேஞ்சிட்டுவந்து பிலிம் காட்டுறாங்கிறாய்ங்க#என்னவாழ்க்கடாஇது
-13-
எங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளைப்பூனை எலி பிடிப்பதற்காகக்கூட தன் நித்திரையை தியாகம் செய்வதில்லை #வெள்ளையா_இருக்கிறவன்_வேலை_செய்யமாட்டான்டா
-14-
ஏன் யாராவது LOVE பண்ணுகிறார்கள் என்றால் "காதலி"க்கிறான்/ள் என்கிறார்கள், "காதலன்"கிறான்/ள் என்று சொல்வதில்லை?? #பெண்ணாதிக்கம்?..:P #டவுட்டு
-15-
 இரு மொழிகளை மாற்றி மாற்றிப் பேசுவதால் மூளை REFRESH அடைகிறதாம் #தங்கிலீஸ்_பேசுவோர்_சங்கம்..:P



Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்