பதிவிட்டவர்
Bavan
Sunday, May 22, 2011
-01-
ஒரு விடயம் தெரியாமலிருப்பதற்கும், தெரியாதது போல் நடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு
-02-
அழகு ஆபத்து இரண்டுக்கும் நூலளவுதான் வித்தியாசம் இல்லை இல்லை"அ"வைத்தவிர அனைத்துமே வித்தியாசம் அழகு screen server ஆபத்து wallpaper#பப்புமுத்து
-03-
படைப்பில் வந்தது ஒன்று பெளடரால் வந்தது ஒன்று கேசரை ஆட்டினா கலைந்து விடும் ஸ்கிறீன் சேவர் தண்ணிபட்டால் கலைந்து விடும் மேக்கப் #பப்புமுத்து
-04-
குவியமில்லாக் காட்சிபேழையாகளாகப்பிறக்கின்ற காதல்கள் மேக்கப்பில்லாக் காட்சிப்பேழைகளால் இறந்துவிடுகிறது #பப்புமுத்து
-05-
"வாழ்வே மாயம்" பாட்டுக்கேட்டால் எல்லாரும் முதலில் கேட்கும் கேள்வி - "இப்ப என்ன பிரச்சனை உனக்கு?" #அனுபவம்
-06-
ராசிகளைக் கண்டுபிடித்தவர் காடும்கடலும் சார்ந்த இடத்தில் பெட்டிக்கடைவச்சிருந்திருப்பாரோ? #கடகம் #துலாம் #சிம்ம்ம் #விருச்சிகம் #மேஷம் #மீனம்
-07-
எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி நம்ம குடும்பத்தையே காப்பாத்துமாம், சில வேளைகளில் எம்மை CLASSஐ விட்டு வெளியிலேயும் நிக்கவைக்கும்:P
-08-
சாவுறியா? ஒரு நாள் பாட்டுக்கேக்காம இருக்கிறியா என்று கேட்டால் சாவலாம்..:-)
-09-
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது #செத்தா_விண்வெளியில_போய்ச்சாகணும் :P
-10-
தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும
-11-
தவறை ஒருவர் சுட்டிக்காட்டும் போது மனம் அதை ஏற்பதுமில்லை, செய்த தவறை உணரும் போது தவறைத் திருத்திக்கொள்ள அவகாசம் இருப்பதுமில்லை.
-12-
தமிழ்ல கதைச்சா இவருதான் தமிழ வளர்க்கப்போறாராங்கிறாய்ங்க ENGல கதைச்சா 4ENG PAPERமேஞ்சிட்டுவந்து பிலிம் காட்டுறாங்கிறாய்ங்க#என்னவாழ்க்கடாஇது
-13-
எங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளைப்பூனை எலி பிடிப்பதற்காகக்கூட தன் நித்திரையை தியாகம் செய்வதில்லை #வெள்ளையா_இருக்கிறவன்_வேலை_செய்யமாட்டான்டா
-14-
ஏன் யாராவது LOVE பண்ணுகிறார்கள் என்றால் "காதலி"க்கிறான்/ள் என்கிறார்கள், "காதலன்"கிறான்/ள் என்று சொல்வதில்லை?? #பெண்ணாதிக்கம்?..:P #டவுட்டு
-15-
இரு மொழிகளை மாற்றி மாற்றிப் பேசுவதால் மூளை REFRESH அடைகிறதாம் #தங்கிலீஸ்_பேசுவோர்_சங்கம்..:P
ஹிஹி வாழ்வே மாயம் பாட்டு கூட கேக்க விடுறாங்க இல்லையா புள்ளையா?