அன்புள்ள சுபாங்கா,
இதுவரை உனக்கு நான்
எந்தCALLலும் எடுத்ததில்லை.
MISSED CALL மட்டுந்தான்
MISSED CALL என்பது
செல்லில் காசில்லாதவனின்
தன்னை அழைக்கச்சொல்லிக்
கொடுக்கும் சிக்னல்
உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.
என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்
பொதுவாக வாழ்த்துக்கள்
அதிகாலையில்தான்
சொல்லப்பட்டிருக்குமே தவிர
இப்படி காரிரவில் இல்லை
பரிசு மழைகளால்
களித்துக் களைத்த உனக்கு
நிம்மதியான காரிருள் சூள்
நள்ளிரவில் இவ் வாழ்த்து மடல்
உணர்ச்சியின் உறுமல்களும்
கீழே கொஞ்சம் காதலும் நிறைந்த
உன் சிறுகதைகள் எங்கே?
உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை!
அதனால் ஆபத்தானவை!
உன் ஆபத்துக்கள் எங்கே?
வடிவேலுவுடன் சேர்ந்த
பார்த்தீபன் போல்
கவுண்டருடன் சேர்ந்த
செந்தில் போல்
மரணச்சிரிப்புக்குரிய
உன் மொக்கைகள் எங்கே?
காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிடும் காதல் மன்னன் நீயாம்
சாவகச்சேரி சாட்சி சொல்கிறது
பரீட்சைக்குப் படித்திருப்பாயோ
தெரியாது ஆனால்
சுஜாதாவின் கதைகளை பாடமாக்கி
வைத்திருக்கும் நடமாடும் லைபிரரி நீ
பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி
போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது
ஆமர்வீதி சந்தியை
விட்டுவெளியே வா.
உன் ATM கார்ட்டை
வெளியேற்று
உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும்
எமக்கு பிட்சாவை ஓடர் செய்
வழக்கம் போல் இதுக்கும்
சிமைலி போட்டு ஏமாற்றி விடாதே
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சின்னமாமா..!
-பப்புமுத்து
வாழ்த்துக்கள் சின்ன மாமா
கவிதை அழகு