கூடித்திரிந்த காலங்கள்
ஆடித்திரிந்த நேரங்கள்
பாடித்திருந்த கானங்கள்
வாடி இருந்த நிமிடங்கள்
கோடிகோடியாய்க் கொடுத்தாலும்
மீட்க முடியாத தருணங்கள்
அன்டோ அவனிற்காய்
வார்த்தைளைத் தேடித் தெரிந்தெடுத்து
கண்களில் நீரோடு
கவி எழுதத் தொடங்குகிறேன்
ஒன்பதாம் ஆண்டில்
ஒருவனாய் உள்நுழைந்தாய்
இனிமையான பேச்சால் - எம்
இதயங்களில் குடிகொண்டாய்
கணனியைக் கரம்பிடித்தாய்
கிறிக்கெட்டைக் காதலித்தாய்
நட்பினால் எம்மனதில்
நங்கூரமாய் இடம்பிடித்தாய்
நட்புக்காக அன்டோவா
அன்டோவுக்காக நட்பா
நட்பே ஒரு நிமிடம்
நடுங்கித் தலைசொறியும்
கடுஞ்சொல் பேசி உன்னைக்
கண்டதில்லை யாரும்
எம்மனதில் இனிமையாய் - உன்
நினைவுகள் என்றும் வாழும்
காலயந்திரம் கண்டுபிடித்து
உன்னை மீட்போம் என்ற நம்பிக்கையில்
கவிதையை முடிக்கிறேன்
கண்ணீரை இன்னும் வடிக்கிறேன்
ம்ம்.. வருத்தம் தான்.