இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...ஸ்ஸ்ஸ்சப்பா...
இப்பிடியே போய்க்கிட்டிருந்தா இதுக்கொடு முடிவே கிடையாதா? எனவே இலங்கைப்பதிவர் சங்கத்துக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் வழங்கப்பட்டிருக்கு.
இனிமேல் எல்லாரும் சங்கத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் படிதான் நடக்கோணும். ங்கொய்யால இல்லாட்டி கும்பீபாகத்தில கம்பி எண்ணவேண்டியிருக்கும் சொல்லிட்டன்.
- முதலாவது ரூல்ஸ், சங்கத்து ரூல்ஸ் எல்லாத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கணும். இதுதான் முதலாவது முக்கிய ரூல்ஸ்.
- அடுத்து எல்லாருக்கும் பதிவர்களின் லிஸ்ட் கொடுக்கப்படும், நீங்க அண்டைக்கு சாப்பிட்டீங்களோ, வேலைக்குப் போனீங்களோ, பல்லுவிளக்கினீங்களோ எண்டெல்லாம் எங்களுக்கு கவலையில்ல, வாக்குப் போட்டே ஆகணும். போடத்தவறினால் 3 நாள் போட்டித்தடை மாதிரி ஏதாவது 3 நாள் பதிவுத்தடை வழங்கப்படும்..:P
- மூன்றாவது, எல்லாரும் கட்டாயம் பின்னூ(ஊ)ட்டம் ஊட்டியே ஆகணும். டெய்லி மில்க் சொக்கலேட்டில இருந்து, வடை வாழைப்பழம், முறுக்கு, வடை, அதிரசம், ஆப்பம், புட்டு, இடியப்பம், பிட்சா, பர்கர் சமோசா, ரோல்ஸ் எண்டு எதையாவது ஊட்டி ஊட்டச்சத்தை வழங்காமப் போகவே கூடாது..:P
- நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:P
- ஐந்தாவது, உங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கேலயோ அது உங்கட பிரச்சினை ஆனால் எல்லாப் பதிவையும் வரிக்கு வரி வாசிச்சே ஆகணும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பரீட்டை நடாத்தப்படும். அதற்கான கேள்விகள் அதிலிருந்தே போடப்படும். ஒசாமா செத்ததில இருந்து தமன்னாட நாய்க்குட்டி செத்தது வரைக்கும் பிங்கர் டிப்சில வச்சுப் பதில் சொல்லத்தயாரா இருக்கோணும்.
- கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.
- கடைசியா முக்கிய ரூல்ஸ் கிரியேட்டிவிட்டி இல்லாம யாராவது பதிவெழுதினீங்க, தொலைச்சுப்புடுவன் தொலைச்சு.எல்லாருக்கும் கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும், தேவையான அளவு வாங்கிக்கலாம்.
இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...//
வணக்கம் சகோ. இன்று தான் முதல் வருகை!
வாசலிலே நாயைக் கட்டி வைச்சு, நாய் கடிக்கும் கவனம் என்று எழுதி வைச்சிருக்கிறீங்க போல இருக்கு.
பயம் இன்றி உள்ளே இறங்கலாம் தானே.