Related Posts with Thumbnails
Showing posts with label மொக்கை. Show all posts


#001
நண்பன் ஒருத்தன் லவ் செட் ஆகிட்டு மாப்புள எண்டான், நானும் Treat கேட்டன், அவன்ட வீட்டில இருந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் Busல கூட்டிட்டு போய், ஏதோ ஒரு மூலையில் இருந்த முனியாண்டி கடையில ஒரு glass பால் வாங்கித்தந்து Treatடா Enjoy எண்டான்.
இன்னிக்கு "லவ் எல்லாம் எப்பிடி மச்சி" எண்டு கேட்டா நான் உனக்கு பால் ஊத்தினன், அவள் எனக்கு சங்கு ஊதிட்டாள்டா எண்டுறான் =P
#WhattaCoincident #LoveMatter #LMAO

#002
இப்பிடித்தான் இன்னொரு நாள் இன்னொரு நண்பனோட படம் பாக்கப்போயிருந்தன். அவனுக்கு அடிக்கடி Call வந்திட்டே இருந்திச்சு,
"எடுத்துக் கதையன்டா" எண்டன்,
"இல்லடா, நேற்று முழுக்க நான் Call பண்ணினன் அவள் Answer பண்ணல, So இண்டைக்கு நான் Answer பண்ணமாட்டன்" எண்டான்.
என்ன கறுமமோ எண்டு பேசாம விட்டுட்டன்.
அப்பறம் கொஞ்ச நேரத்தால அவனுக்கு Call வரல போல, சீரியசா படம் பாத்திட்டு இருந்த என்னை சுரண்டி, "டேய் என்னடா Call பண்ணுறதை நிறுத்திட்டாள்" எண்டு கேக்கிறான்.
#அவ்வ்வ்

#003
நண்பனோட ஒருநாள் Roadல நடந்து போய்க்கொண்டிருந்தன், அப்ப அவனுக்கு அவன்ட Loverட இருந்து call வந்திச்சு, அப்ப என்னை 2அடி முன்னால போக சொல்லிட்டு கதைச்சிட்டு வந்து கொண்டிருந்தான். அது ஒரு கும்மிருட்டான பாதை, paymentல ஒரு கல்லு உடைஞ்சு இருந்தது, கீழ நல்ல ஆழமான கான். அப்ப அவன் கிட்ட வரும் வரை wait பண்ணி "டேய் கீழ பள்ளம் பாத்துவாடா" எண்டன். அவன் அதைக் கணக்கெடுக்காம கடலை போட்டுக்கொண்டே வந்தான், நான் திரும்பத் திரும்பக் கத்தினன், அப்ப அவனுடைய Loverக்கே அது கேட்டிருக்கும் போல என்ன சந்தம் எண்டு கேட்டிருக்கிறா, அதுக்கு அவன் சொன்ன பதில்.
"அது ரோட்டில யாரோ ஒரு பிச்சைக்காரன், நீ சொல்லு செல்லம்"
டேய் உன்னைய அந்தக் குழியில போட்டு புதைக்காம விட்டது என் தப்புத்தான்.

டிஸ்கி 1: யாவும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.
டிஸ்கி 2: டிஸ்கி 1ஐ நம்பிட்டீங்கதானே எல்லாரும் =P
Before Reading This Post

கேப்பைமாரித்தனம்
முன்னொரு காலத்தில் மாரி என்று ஒருவன் இருந்தான், அவன் இருக்கும் ஊரில் என்ன பிரச்சினை வந்தாலும் அதற்கு அவன்தான் காரணமாக இருக்கும். சின்னப் பிரச்சியையும் ஊதிப்பெரிதாக்கும் வல்லமை படைத்தவன். ஆனால் பிரச்சினைக்குக் காரணம் மாரிதான் என்று கண்டுபிடிக்கும் போது அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான். சின்ன இடைவெளியில் எப்படியாவது தப்பி விடுவான்.

அதற்குப் பிறகு அவனைப்போல யாராவது பிரச்சினையை உண்டாக்கிவிட்டு இடையில் தப்பி ஓடிவிட்டார்கள் என்றால் அதை அந்த ஊர் மக்கள் Gapல்மா(றி)ரித்தனம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே மருகி காலப்போகில் கேப்(பை)மாரித்தனம் என்று ஆகிவிட்டது.

மொள்ளைமாரித்தனம்
மேற்குறிப்பிட்ட அதே மாரி தனது சொந்த ஊரில் வழக்கம்போல பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி பக்கத்து ஊருக்குள் தஞ்சம் புகுந்தான். அங்கேயும் தனது தப்பியோடும் விளையாட்டுக்களை ஆரம்பித்த மாரி காலப்போக்கில் அங்கேயும் பிரபலமாகிவிட்டான். அங்கும் இதே போல பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு புலி போல் பதுங்கிப் பதுங்கி யார் கண்ணிலும் சிக்காமல் தப்பி விடுவான்.

எனவே அந்த ஊர் மக்களும்அதற்குப் பிறகு நமது மாரியைப் போல பிரச்சினை ஏற்படுத்திவிட்டு மெதுவாகத் தப்புபவர்களுக்கு மெல்ல(மாறி)மாரித்தனம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் மருகி மொள்ளமாரித்தனம் என்று அழைக்கப்படுகிறது.

After Reading This Post





பி.கு: ஒரு பதிவு எழுதணும்னா என்ன கேப்மாரித்தம் OR மொள்ளமாரித்தனமும் பண்ணலாம் தப்பில்ல =P

தலைவா =P

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:48 PM | 2 பின்னூட்டங்கள்
புரட்சி தமிழன் சத்யராஜின் நடிப்பில் முன்னணி நடிகர் விஜய் இணைந்து கலக்கியிருக்கும் தலைவா திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. (நம்புங்க பாஸ்)முதல்நாள் முதல் showவே படத்தைப் பார்க்கும் அரும்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததது. அண்மையில் நாகராஜ சோஜன் படத்தில் நடித்திருந்த சத்யராஜ், இந்த படத்தில் விஜயுடன் இணைந்திருப்பது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.

படத்தில் ஆரம்பத்திலிருந்தே சத்யராஜ் விஜயுடன் தொலைபேசியில் மட்டும் கதைப்பதாகக் காட்டப்பட்டு எப்பொழுது தனது திருமுகத்தை ரசிகர்களுக்கு முழுமையாகக் காட்டுவார் என்று ஏங்க வைத்திருக்கிறார் இயக்குனர். தான் மிகப்பெரிய நடனக் கலைஞராக இருந்தும் விஜய்க்கு மட்டும் நடனமாடுவதற்கு வாய்ப்புக்களை வழங்கி தான் கடைசிவரை நடனமாடாதது சத்யராஜின் பெருந்தன்மையைக் காட்டினாலும், அவரது உயிரினும் மேலான ரசிகர்களுக்கு அது ஏமாற்றமே.

விஜய் இந்தியாவுக்கு வந்து நீங்க யாரு? இதுவரைக்கும் மும்பையில என்ன செய்துக்கிட்டு இருந்தீங்க? ஏன் மறைந்து வாழுறீங்க என்று கேட்கும் காட்சிகளை இதுவரை யாருமே தமிழ் சினிமாவில், இல்லை இல்லை உலக சினிமாவில் ஏன் ரஜனிகாந் பாட்ஷா படத்தில் கூட வராத புதுமையான காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அமலாபால் விஜயை போலீசாக வந்து ஏமாற்றுவதும் கோடியில் ஒருவரால் மட்டுமே சிந்திக்கக் கூடிய ஒரு அபூர்வமாக சிந்தனை என்றே கூற வேண்டும்.

"ஒரு தடவை கையில கத்தி வந்திடிச்சுன்னா, ஒண்ணு காக்கும், இல்லை அழிக்கும்"

"இது ஒரு வழிப் பாதை"

போன்ற பஞ்ச் டயலாக்குகளை சத்யராஜ், விஜய், சந்தானம் என எல்லாரும் சொல்லுவதும் இயக்குனரின் தனித்துவத்தையும், ஹீரோ சத்யராஜின் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

"தலைவா தலைவா" என்ற பாடலில் தனது ஹீரோயிசத்தைக் வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பிலும் இடையில் "தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி" என்று வரிகளைத் திணித்து துணை சக நடிகர்களையும் சமமாகப் பார்த்த சத்யராஜை நினைத்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.

உலக சினிமா வரலாற்றிலேயே முதல் தடவையாக எந்த ஒரு படத்திலும் நாம் இதுவரை பார்த்திராதவாறு படத்தின் கதாநாயகனே இடையில் இறந்து போகிறமாதிரிக் காட்டப்படும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தின் ஹீரோ இடையிலே இறந்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று குண்டக்க மண்டக்க யோசித்து படமாக்கியிருக்கிறார்கள்.


தலைவா = IT'S A DO or DIE =P 

Post Moral: சுறா படத்தையே தைரியமாப் பாத்தவனுக்கு தலைவா ஒண்ணும் பெரிசில்லடா!





















IPL 6 Final - Photo Comments =P

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:06 AM | 1 பின்னூட்டங்கள்






(படங்கள் தெளிவில்லாவிட்டால் படங்களைக் கிளிக் பண்ணிப் பெரிதாக்கிப் பார்க்கவும்)

MORAL OF THE POST: 
"சினிமாவில மாட்டுப்படாம நடிக்கிறவனுக்கு FILM FARE AWARD, IPLல மாட்டுப்படாம நடிக்கிறவனுக்கு FAIR PLAY AWARD" =P










Virat Kohli Trolled + Others #IPL

பதிவிட்டவர் Bavan | நேரம் 5:16 PM | 0 பின்னூட்டங்கள்













Cricket Photo comments + Others

பதிவிட்டவர் Bavan | நேரம் 7:33 PM | 0 பின்னூட்டங்கள்





NO Comments



வடபோச்சே!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:07 AM | 3 பின்னூட்டங்கள்
bavan.info என்று பேரை வச்சுக்கிட்டு கொஞ்சமாவது informative ஆக எழுதவில்லை என்றால் அது அம்புட்டு நல்லா இருக்காது அதனால் கொஞ்சம் informative ஆக ஒரு பதிவு.

வடபோச்சே! என்ற டயலொக்கை வடிவேலு என்ற மாபெரும் நகைச்சுவை நடிகர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த டயலொக்கை நம்மில் பலர் ஏன் உபயோகப்படுத்திறோம் என்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம். ங்கொய்யால, oops, Thanks, Sorry போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகிப்போனது இந்த "வட போச்சே!".



வடபோச்சே! என்பதன் வரலாறு என்ன?
பாட்டி வடை சுட்ட கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பார் அப்போது ஒரு காக்கை வடையைக் களவெடுத்துக் கொண்டு போய்விட்டது. உடனே அந்தப் பாட்டி "ஐயோ வடபோச்சே!" என்றார். அதுதான் இன்று மருகி "வட போச்சே" என்று கூறப்படுகிறது.

வடபோச்சே Definition
ஏதாவது ஒரு முக்கிய விடயத்தை செய்துகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 சதவீதம் குறிப்பிட்ட விடயம் பூர்த்தியடைந்த பின்னர் தீடீரென ஏற்படும் ஒரு அசாதாரண நிலை காரணமாக அந்தக் குறிப்பட்ட விடயத்தை செய்து முடிக்க முடியாமல் போகும் அந்தக் கணப் பொழுதில் சொல்லப்படுவது "வட போச்சே" என்று அழைக்கப்படும்.

உதாரணமாகச் சச்சின் ஓய்வு பெறவே மாட்டார் என்று சச்சின் ரசிகர்கள் நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு வந்து பார்த்தால் அவர் ODIயிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார் உடனே பலரும் சொன்ன வார்த்தை "வடபோச்சே!".



வட போச்சே! பல்வேறு வயதுப்பிரிவினரிடையே பல்வேறு நிலைகளில் சொல்லப்படுகிறது.

குழந்தைகளிடையே அவர்கள் வடை முதல் பிஸ்கட் வரை எதையாவது சாப்பிடும் பொழுது அது கீழே விழுந்துவிட்டால். உடனே அவர்கள் கூறும் வார்த்தை "வட போச்சே!".

இளைஞர்களிடையே அதாவது யூத்துக்களிடையே, கம்பஸ் அல்லது  படிக்கும் இடங்களில் ஒரு பொண்ணு வந்து நன்றாகக் கதைத்துவிட்டு, கடைசியில் "Bye அண்ணா" என்று சொல்லும் போது அவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தை "வட போச்சே!".

அடுத்து குடும்பஸ்தர்களிடையே, நாளை பெற்றோல் அடிக்கலாம், நாளை குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு என்று செய்தி வரும் போது அவர்கள் சொல்லும் வார்த்தை "வட போச்சே!".

வயது முதிர்ந்தவர்களிடையே, அவர்கள் ஆசையாக மற்றவர்களுக்கத் தெரியாமல் ஆட்டையப் போட்டு ஒரு இனிப்புப் பண்டத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அதை பேரன் அடித்த பந்து தட்டி விடல் அல்லது சாப்பிடுவதை வீட்டில் மற்றவர்கள் பார்ப்பதால் சாப்பிட முடியாமல் போதல் போன்ற நேரங்களில் அவர்களால் சொல்லப்படுவது "வட போச்சே!".

கன்னம் ஸ்டைல் நடனத்தை என்னதான் PSY ஆடியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது கிறிஸ் கெயில் தான். அதே மாதிரி இந்த வடபோச்சே என்ற வார்த்தையை வடைசுட்ட பாட்டி சொல்லியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது என்னமோ வடிவேலுதான். ஆனால் அவரையும் நிஜவாழ்க்கையில் அரசியல் மேடையில் பேசியபின்னர் சுமார் ஒரு வருட காலமாக வீட்டிலேயே உக்கார்ந்திருக்கும் போது தினமும் சொல்ல வைத்துவிட்டது இந்த "வட போச்சே!".

இப்போது நீங்களும் ஏதோ informative ஆக இருக்கும் என்று நினைத்து படிக்க வந்துவிட்டு இம்புட்டு மொக்கைப் பதிவா இருக்கே என்று நீங்களும் இப்போது சொல்லுவீர்கள் "வட போச்சே!" =P


படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.










Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்