Related Posts with Thumbnails
Showing posts with label சிங்களம். Show all posts

செஞ்சுரி

இது எனது 100வது பதிவு. ஆரம்பத்தில் சுபாங்கன் அண்ணாவின் பதிவுகளில் தொடங்கிஅவரின் வலைப்பூ மூலம் பலரின் வலைப்பூக்களையும் வாசிக்கத்தொடங்கி நான் ஏன் எனக்கென்று ஒரு வலைப்பூ தொடங்கக்கூடாதென்று ஒருவாறு சுபாங்கன் அண்ணாவின் வழிகாட்டலுடன் பதிவுலகில் பிரவேசித்தவன் நான். அதன் பின்னர் மீ த பர்ஸ்ட் கன்கொன், வந்தியண்ணா, லோசன் அண்ணா, கெளபாய் மது அண்ணா, கீர்த்தி அக்கா பாலா அண்ணா, வரோ அண்ணா, கமல் அண்ணா, புல்லட் அண்ணா, சதீஸ் அண்ணாஈ வானம்பாடிகள் சார் ,ஆதிரை அண்ணா, உட்பட்ட பலர் (பெயர் குறிப்பிட மறந்தவர்கள் மன்னிக்கவும் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டால் பதிவு ரொம்ப நீண்டுவிடும்.) பின்னூட்டங்களில் எனக்கு அளித்த ஊக்கமும், தன்னம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

மேலும் போட்டோ கமண்ட் என்பது நான் மிகவும் விரும்பி வெளியிடும் பதிவு. பதிவுலகில் காலடியெடுத்து வைத்து சில பதிவுகள் இட்ட பிறகு என்ன பதிவு இடுவது என்று குழம்பி யோசித்து எனது குரு(:P) சுபாங்கன் அண்ணாவிடம் கேட்டபோது வலைமனை என்ற வலைப்பூவின் சுட்டியைத்தந்து இப்படி ஏதாவது ட்ரை பண்ணுடா என்றார். இப்படி ஆரம்பித்ததுதான் போட்டோ கமண்ட்ஸ். எனவே இதுவரை ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

36 - கும்மிக்கு சிங்களம் என்ன?
நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் கண்ட ஒரு போட்டோ கமண்ட்நோட்டை (NOTE) கன்கொன், ஆதிரை அண்ணா சுபா அண்ணா உட்பட சில பதிவுலக நண்பர்கள் சிலருக்கு PM அனுப்பியிருந்தேன். அதன்பின்னர் அது ஒரு வலைப்பதிவிலிருந்து பிரதி பண்ணப்பட்ட நோட் எனக்கு கூறி மூஞ்சிப்புத்தகத்தில் கும்மியை இனிதே ஆரம்பித்து வைத்தார் மீத பர்ஸ்ட் கன்கொன் மன்னிக்கவும் கிரிஷ்.(தனது பெயரை கன்கொன் என்பதிலிருந்து கிரிஷ் என மாற்றிப் போட்டால் வெளிநாட்டுக்கண்டோஸ் தருவதாக உறுதியளித்திருக்கிறார்). அதன்பின்னர் களத்தில் ஆதிரை அண்ணாவும் குதிக்க கும்மி களைகட்டியது.

இங்கு கும்மி ஓருபுறம் களை கட்டி ஒரு 7 PrivateMsgகளைக்கடந்திருக்கும், 
 "நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி...."
என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. 
 ஹலோ
மறுமுனையில் சுபா அண்ணா புல்டோசரின் டயருக்குப்பின்னால் இருந்து- என்னடா நடக்குது பேஸ்புக்கில?
ஒண்டுமில்ல சும்மா கும்மிறம் ஏன்?
டேய் படுபாவி, கீஈஈஈஈக்..... கீஈஈஈஈக் (கெட்டவார்த்தை) என்று காதில் ரத்தம் வரும் அளவுக்குத்திட்டிவிட்டு இங்கிலீஸ்ல கும்முங்கடா மொபைல்ல தமிழ் வராதில்ல என்றுவிட்டு போஃனை கட் பண்ணினார்..:p

8.30க்கு ஆரம்பித்த கும்மி தற்போது 12 மணியை அண்மிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பொங்கியெழுந்த ஆதிரை அண்ணா..
தம்பிங்களா...........
உந்தளவு மெசேஜ்ஜும் என் மொபைலுக்கு வருகுதப்பா... போதுமப்பா.

பக்கத்திலே இருக்கிறவன்... GF ஓ என்று கேட்கிறான்.
Feel பண்ண வையாதீங்கப்பா 




என்று கவலையாகச்சொல்ல நாம் எமது ஆய்வுக்குழுவை ஆதிரை அண்ணாவின் அலுவலகத்துக்கு அனுப்பினோம். அங்கே அலுவலகத்திலே ஆதிரை அண்ணா எழுந்து அலுவலகத்துக்கு வெளியே வந்து எதிரில் இருந்த ஒரு கடையில் கடைக்காரரை கெஞ்சிக்கூத்தாடி இரு தடிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் அலுவலகம் திரும்பினார். அதன் பிறகு பார்த்தால் திடிரேன அந்தத்தடிகளை ஒன்றோடு ஒன்று தட்டி மேலும் கீழும் குனிந்து நிமிர்ந்து காலைக் கையைத்தூக்கி ஆடத்தொடங்கினார். எதிரில் அவரின் சிங்கள நண்பர் அமர்ந்து மண்டையைப்பிய்த்துக்கொண்டிருந்தார். 

என்னடா இது என்று எமது ஆய்வுக்குழுவும் மண்டையைப்பிய்த்துக் கொண்டிருக்க ஆதிரை அண்ணாவின் மொபைலுக்கு வந்த செய்திகளைப்பார்த்து GIRL FRIENDடா? என்று கேட்ட நண்பருக்கு இல்லை அது கும்மி என்று விளங்கப்படுத்த ஆதிரைஅண்ணாக்கு கும்மிக்கு சிங்களம் தெரியாததால் அவர் ஆடி செயன்முறை விளக்கம் கொடுத்தாக ஆய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு 29 மசேஜ்களை கும்மி கடந்த நிலையில் 30வது வெற்றி மசேஜை சுபாங்கன் அண்ணா மனமுடைந்து போய் காலை 8.30 மணியிலிருந்து என்ன நடக்குதென்றே தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதாக ஆதங்கத்தை தெரிவிக்க இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி கன்கொன் சீச்சீ கிரிஷ் தான் ஒபாமாவுடன் கதைத்து இதற்கு சிறந்த தீர்வைப் பெற்றுத்தருகிறேன் என்று மீண்டும் கும்மியை ஆரம்பிக்க முயல..
சொல்லிப்போட்டேன்...
வீட்ட போக வெளிக்கிட்டு விட்டேன்.
என்ன எதுவாக இருந்தாலும் Gmail ஐப் பாவிக்கவும்.
பஸ் கொண்டக்டர் அந்தக் கேள்வியைக் கேட்டால், நான் தற்கொலைதான் பண்னனும் 

என்ற ஆதிரை அண்ணாவின் 36வது PMமுடன் ஆதிரை அண்ணாவின் உயிருக்கு உத்தரவாதமளிக்கும் நோக்கில் கும்மி சடாரென நிறுத்தப்பட்டது.

பி.கு - யாராவது கும்மிக்கு சிங்களம் என்ன என்று தெரிந்தால் சொல்லிட்டுப்போங்க? ஆதிரை அண்ணா அடிக்கடி ஆடிக்காட்டமுடியாதில்ல..


நடுச்சாமம் 6 மணி (அதிகாலை 9 மணிக்கு எழும்பும் எங்களுக்கு அது நடுச்சாமம் தானே..:p) நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


அந்தநேரம் அந்திநேரம் கண்பார்த்து........(ஹிஹி நம்ம ரிங்டோன்)


ஹலோ என்னடா சொல்லு....(தூக்கக்கலக்கத்துடன்)
டேய் வெளிக்கிட்டியா?
என்ன? எங்க??
டேய் காளிகோயில் தேர் வரலயா நீ?... ஓ... இதோ வெளிக்கிட்டன் நீ டக்கெண்டு வா..
சரிசரி... 6.30க்கு வருவன் ரெடியா இரு..
ok bye..


ஒருவாறு 7.15க்கு வந்தவன் என்னையும் ஏற்றிக்கொண்டு காளிகோயிலுக்குச்சென்றான். அங்கே கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு கோயிலுக்குப் போகலாம் என்று கோயில் வீதியில் காலடி வைத்தால் கமகம என ஒரு வாசனை, என்னடான்னு பார்த்தா யாரோ மப்பும் மந்தாரமுமாக அடித்த வெயிலும் பட்டுத்தெறித்துக் கண்ணைக்குத்தும் அளவுக்கு மினுமினுப்பான சாறியுடன் ஒரு அம்மணி வந்து இறங்குகிறார். 
ஹச்சும்....
வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த சென்ட் வாசனை முக்கில் ஏறி, தாங்கமுடியாமல் தும்மிய நண்பனின் தும்மல் கலைத்தது.


அங்கு ஒரு சிங்கள இளைஞர் தண்ணீர்ப்பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழகூரில் பூத்தவளே.... என்று கர்ணகொடூரமாகப்பாடி பெண்களுக்கு நக்கலடித்துக்கொண்டிருந்தார்


அங்கே மூன்று தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இன்னும் சாமி வெளியே வரவில்லை. சரி இருக்கிற கூட்டத்தைப்பார்த்தால் இப்போதைக்கு உள்ளே போக முடியாது. அன்னதான மண்டபப்பக்கம் சற்று காத்தோட்டமாக இருக்கவே அங்கே போய் உட்கார்ந்தோம்.(தேர் சுத்தின பிறகுதான் சாப்பாடு போடுவாங்க...:p)
என்னா கூட்டம் என்னா கூட்டம்...அவ்வ்


அங்கு இளம்வயதினர், என்போன்ற பச்சிளம்பாலகர்கள், நடுத்தர வயதினர் என பலரும் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. நகைக்கடை விளம்பரத்தில் வரும் சினேகா கூடப்போட்டிராத அளவுக்கு நகைகள் போட்டிருந்தனர், பளபளக்கும் ஆடைகள், அட இதுகூடப்பரவாயில்லை அவர்கள் யாரென்றுகூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கலர்கலராகப் பல பெளடர்களை கொண்டு முகத்தை மூன்று இஞ்ச் பெரிதாக்கக்காட்டியிருந்தனர்.(ஹீஹீ மேக்கப்புங்க..) மனதுக்குள் பாடிக்கொண்டேன் ஒரு கூடை சன்லைட் ஒருகூடை மூன்லைட்..


அன்று முதன்முறையாக கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்.ஆனால் கடவுளுக்கு என்மீது கோபமோ, அல்லது மழைபெய்தால் மேக்கப் போட்டவர்கள் எல்லாரும் மழையில் நனைந்து கலைந்த மேக்கப்புடன் கோயிலுக்குள் ஓடிவந்துவிட்டால் கடவுள் தன்நிலை என்னவாகும் என்று பயந்தாரோ தெரியல கடைசிவரை மழைபெய்யவில்லை.


ஆனால் சூரியன் மழைபெய்து மேக்கப் கலையும் கொடுமையை சற்று தாமதமாக வேறுவிதமாகச் செய்தாலும் கச்சிதமாக செய்தார். நான் கோயிலுக்கு போகும் போது பார்த்த யாரையும் திரும்பி வரும்போது காணவில்லை, அடித்த வெயிலில் மூன்று இஞ்ச் மெலிந்த முகத்துடன் பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர் ஹீஹீ மேக்கப் கலைஞ்சிடிச்சுப்பா.


திரும்பிவரும்போது அதே சிங்கள இளைஞர் பாடிக்கொண்டிருந்தார் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்