புரட்சி தமிழன் சத்யராஜின் நடிப்பில் முன்னணி நடிகர் விஜய் இணைந்து கலக்கியிருக்கும் தலைவா திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. (நம்புங்க பாஸ்)முதல்நாள் முதல் showவே படத்தைப் பார்க்கும் அரும்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததது. அண்மையில் நாகராஜ சோஜன் படத்தில் நடித்திருந்த சத்யராஜ், இந்த படத்தில் விஜயுடன் இணைந்திருப்பது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.
படத்தில் ஆரம்பத்திலிருந்தே சத்யராஜ் விஜயுடன் தொலைபேசியில் மட்டும் கதைப்பதாகக் காட்டப்பட்டு எப்பொழுது தனது திருமுகத்தை ரசிகர்களுக்கு முழுமையாகக் காட்டுவார் என்று ஏங்க வைத்திருக்கிறார் இயக்குனர். தான் மிகப்பெரிய நடனக் கலைஞராக இருந்தும் விஜய்க்கு மட்டும் நடனமாடுவதற்கு வாய்ப்புக்களை வழங்கி தான் கடைசிவரை நடனமாடாதது சத்யராஜின் பெருந்தன்மையைக் காட்டினாலும், அவரது உயிரினும் மேலான ரசிகர்களுக்கு அது ஏமாற்றமே.
விஜய் இந்தியாவுக்கு வந்து நீங்க யாரு? இதுவரைக்கும் மும்பையில என்ன செய்துக்கிட்டு இருந்தீங்க? ஏன் மறைந்து வாழுறீங்க என்று கேட்கும் காட்சிகளை இதுவரை யாருமே தமிழ் சினிமாவில், இல்லை இல்லை உலக சினிமாவில் ஏன் ரஜனிகாந் பாட்ஷா படத்தில் கூட வராத புதுமையான காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அமலாபால் விஜயை போலீசாக வந்து ஏமாற்றுவதும் கோடியில் ஒருவரால் மட்டுமே சிந்திக்கக் கூடிய ஒரு அபூர்வமாக சிந்தனை என்றே கூற வேண்டும்.
போன்ற பஞ்ச் டயலாக்குகளை சத்யராஜ், விஜய், சந்தானம் என எல்லாரும் சொல்லுவதும் இயக்குனரின் தனித்துவத்தையும், ஹீரோ சத்யராஜின் பெருந்தன்மையையும் காட்டுகிறது.
"தலைவா தலைவா" என்ற பாடலில் தனது ஹீரோயிசத்தைக் வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பிலும் இடையில் "தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி" என்று வரிகளைத் திணித்து துணை சக நடிகர்களையும் சமமாகப் பார்த்த சத்யராஜை நினைத்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.
உலக சினிமா வரலாற்றிலேயே முதல் தடவையாக எந்த ஒரு படத்திலும் நாம் இதுவரை பார்த்திராதவாறு படத்தின் கதாநாயகனே இடையில் இறந்து போகிறமாதிரிக் காட்டப்படும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தின் ஹீரோ இடையிலே இறந்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று குண்டக்க மண்டக்க யோசித்து படமாக்கியிருக்கிறார்கள்.
தலைவா = IT'S A DO or DIE =P
Post Moral: சுறா படத்தையே தைரியமாப் பாத்தவனுக்கு தலைவா ஒண்ணும் பெரிசில்லடா!
படத்தில் ஆரம்பத்திலிருந்தே சத்யராஜ் விஜயுடன் தொலைபேசியில் மட்டும் கதைப்பதாகக் காட்டப்பட்டு எப்பொழுது தனது திருமுகத்தை ரசிகர்களுக்கு முழுமையாகக் காட்டுவார் என்று ஏங்க வைத்திருக்கிறார் இயக்குனர். தான் மிகப்பெரிய நடனக் கலைஞராக இருந்தும் விஜய்க்கு மட்டும் நடனமாடுவதற்கு வாய்ப்புக்களை வழங்கி தான் கடைசிவரை நடனமாடாதது சத்யராஜின் பெருந்தன்மையைக் காட்டினாலும், அவரது உயிரினும் மேலான ரசிகர்களுக்கு அது ஏமாற்றமே.
விஜய் இந்தியாவுக்கு வந்து நீங்க யாரு? இதுவரைக்கும் மும்பையில என்ன செய்துக்கிட்டு இருந்தீங்க? ஏன் மறைந்து வாழுறீங்க என்று கேட்கும் காட்சிகளை இதுவரை யாருமே தமிழ் சினிமாவில், இல்லை இல்லை உலக சினிமாவில் ஏன் ரஜனிகாந் பாட்ஷா படத்தில் கூட வராத புதுமையான காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அமலாபால் விஜயை போலீசாக வந்து ஏமாற்றுவதும் கோடியில் ஒருவரால் மட்டுமே சிந்திக்கக் கூடிய ஒரு அபூர்வமாக சிந்தனை என்றே கூற வேண்டும்.
"ஒரு தடவை கையில கத்தி வந்திடிச்சுன்னா, ஒண்ணு காக்கும், இல்லை அழிக்கும்"
"இது ஒரு வழிப் பாதை"
போன்ற பஞ்ச் டயலாக்குகளை சத்யராஜ், விஜய், சந்தானம் என எல்லாரும் சொல்லுவதும் இயக்குனரின் தனித்துவத்தையும், ஹீரோ சத்யராஜின் பெருந்தன்மையையும் காட்டுகிறது.
"தலைவா தலைவா" என்ற பாடலில் தனது ஹீரோயிசத்தைக் வெளிக்காட்டக் கிடைத்த வாய்ப்பிலும் இடையில் "தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி" என்று வரிகளைத் திணித்து துணை சக நடிகர்களையும் சமமாகப் பார்த்த சத்யராஜை நினைத்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.
உலக சினிமா வரலாற்றிலேயே முதல் தடவையாக எந்த ஒரு படத்திலும் நாம் இதுவரை பார்த்திராதவாறு படத்தின் கதாநாயகனே இடையில் இறந்து போகிறமாதிரிக் காட்டப்படும் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தின் ஹீரோ இடையிலே இறந்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று குண்டக்க மண்டக்க யோசித்து படமாக்கியிருக்கிறார்கள்.
தலைவா = IT'S A DO or DIE =P
Post Moral: சுறா படத்தையே தைரியமாப் பாத்தவனுக்கு தலைவா ஒண்ணும் பெரிசில்லடா!