Related Posts with Thumbnails


நாம் வாழ்க்கையை எப்படி எதிர்நோக்குகிறோமோ, அப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னதான் ஒரு மனிதன் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஏதாவது ஒரு குறை அல்லது கவலை குடிகொண்டுஇருக்கும். அண்மையில் வாசித்த ஒரு உளவியல் பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.

"நீங்கள் தனியாக கடற்கரையில், அலைகள் வந்து வந்து போவதைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?"

இக்கேள்விக்கு விடையை சொல்லிவிட்டு மேலே படியுங்கள். அதாவது நீங்கள் இந்தக்கேள்விக்கு என்ன விடை சொல்லியிருந்தீர்களோ, அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை எதிர் நோக்குகிறீர்கள் என்று அர்த்தம். இதே கேள்வியை நான் நண்பர்கள் சிலரிடமும் கேட்டுப் பார்த்தேன், சோகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி போன்று பல்வேறு விடைகள் சொன்னார்கள்.உண்மையில் பலருக்கு இது சரியாகவே அமைந்தது.

கிறிக்கட் போட்டி ஒன்றில் விளையாட முதல் கிறிக்கற் வீரர்கள் உஷ்ணப்படுத்தும் அப்பியாசங்களை செய்துகொள்வார்கள். அதற்குக்காரணம், திடீரென உடல் ஒரு செயலில் ஈடுபடும் போது தசைப்பிடிப்போ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அதற்கு உடலை இசைவாக்கிக் கொள்ள அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வர்கள்.


அது போலதான் இதுவரை மந்தமாக அல்லது ஒரு சுவாரஸ்யமற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான சூழல், நட்புவட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட நட்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை, அதன் காரணமாக நண்பர்களாகி ஒரு மாதங்கூடக் கடக்காத நிலையில் பலர் இன்று நட்பை முறித்துக் கொண்டு முகங்கொடுத்தும் பேசமுடியாமல் திரிவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அதற்குக் காரணம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கு இருப்பதில்லை. இவர்கள் சூழலில் எது நடந்தாலும் அது தமக்கு நடப்பதாக தம்மை அதற்குள் உள்வாங்கி யோசிப்பார்கள், விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நடக்கும் சம்பவங்களை தமக்காகவே நடப்பதாக உணர்த்த முற்படுவார்கள், எனவே தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை தமக்கே நடைபெறுவது போல உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும்.

நண்பர்களிடையே பிரச்சினைகள் வரும் போது முடிந்தளவு அதிகம் கோபமாக பேசாதீர்கள் அல்லது பேசாமலே இருங்கள். பேச்சுக்களில் ஆரம்பித்து முறிந்த கைகள் ஏராளம். இரண்டு நாட்களின் பின்னர் பேசும் போது கோபங்கள் ஆறிப்போயிருக்கும். நியாயம் யார்பக்கம் இருந்தாலும் தவறைச் சுட்டிக்காட்டுங்கள்.முக்கியமாக எதையுமே ஊகித்து முடிவெடுக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே சொல்லிவிடுவது நலம்.

முகத்துக்கு நேரே சில விடயங்களை சொல்லிவிடுவது இரு விடயங்களுக்கு நல்லது. 
-1-மனதில் எந்தப் பாரமும் இல்லை.
-2-நாம் முட்டாள்கள் இல்லை என்பது மற்றவருக்கு உணர்த்தப்படும்
-லோஷன்

கட்டாயம் சிலரை நண்பர்களாக வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்காக அவர்களுடன் கதைக்காமல் விடவேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. ஒரே விருப்பு வெறுப்புக்கள், ஒரே மாதிரியாக ஆர்வங்கள் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். எனவே ஒரே அலைவரிசையில் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களை சூழலுக்கேற்றவாறு இசைவாக்கப் பழகுங்கள்.


டிஸ்கி: கண்ணுக்கு முன்னால் நடக்கும் சில விடயங்களுக்கு பார்வையாளனாக இருந்து பார்த்ததால் எழுதப்பட்ட பதிவு இது. வேற எதுவுமில்லைங்கோ..:-)

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அனுபவத்தை சிந்தித்து உண்மையாக எழுதி இருக்கிறீர்கள்
    லேபிலில் குறிப்பிட்டிருப்பதைப் போல
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
    (நல்ல பதிவுக்கு எப்போதும் வாக்கு உண்டுதானே)

  1. Ramesh Says:

    அருமை. எழுத்து, உணர்வு, தேவையான பதிவு. இ.த. ப கள் முன்னணியானவர்கள் கட்டாயம் புரிந்திருப்பார்கள். உங்கள் ஏக்கம் புரிகிறது. வாழ்த்துக்கள் பவன்

  1. Unknown Says:

    அண்ணா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  1. Unknown Says:

    அண்ணா அருமையான பதிவு.

  1. யாரோ ஒரு நன்பர் ஆப்பு வச்சிட்டாரா???????

  1. :-)
    (நேரடியாகக் காணும்போது இப்பதிவிற்குரிய முழுமையான பின்னூட்டத்தை வழங்குகிறேன்)

  1. Bavan Says:

    Ramani,
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    றமேஸ் அண்ணே,
    யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்ட பதிவல்ல..:-)
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    M.Shanmugan,

    நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    Mohamed Faaique,

    :-)
    டிஸ்கியில் குறிப்பிட்டிருக்கிறேன், பார்வையாளனாக மட்டும் இருந்து எழுதிய பதிவு எண்டு.. யாரும் ஆப்பு வைக்கலியே..:-)

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    கன்கொன்,

    சந்திப்போம்..:-)
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்