நீயும் நானும்
இமை தீண்டும் நேரம்
வாழும் காலம்
அழகாகும்...
புல் மீது வழியும் பனித்துளியே
பூவிலே உறங்கும் தேன் சுனையே
கனவிலே நுழையும் குளிர் நிலவே
அலை மோதி தோற்கும் கரைமணலே
முகில் தேடி அலையும் வானவில்லே
மழை வீழத் துடிக்கும் மலர் குடையே
விழி இரண்டில் விழுகிற பொழுது
மொழி மறந்து தவிக்குது மனசு
கண் இரண்டின் காந்தங்கள் கண்டு
கனவினிலே நான் மிதக்கின்றேன் சென்று
எனை சாய்த்து விடு
உனை ஊற்றி விடு
உன் வெட்கம் வேரறு!
எனை தூக்கிலிடு
இதழ் மோதி விடு
உன் முத்த வாளெடு!
நீயும் நானும்
இமை தீண்டும் நேரம்
வாழும் காலம்
அழகாகும்...
வானின் நீளம்
நம் காதல் வாழும்
எந்தன் வாழ்வும்
நிறமாகும்
புல் மீது வழியும் பனித்துளியே
பூவிலே உறங்கும் தேன் சுனையே
கனவிலே நுழையும் குளிர் நிலவே
அலை மோதி தோற்கும் கரைமணலே
முகில் தேடி அலையும் வானவில்லே
மழை வீழத் துடிக்கும் மலர் குடையே!
-Bavananthan
Music & Vocal: Honey Niagara
Lyrics: Bavananthan
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment