Related Posts with Thumbnails

மனிதனெனும் மரம்

பதிவிட்டவர் Bavan Thursday, January 7, 2010 16 பின்னூட்டங்கள்



முன்னொரு காலத்திலே ஒரு அப்பிள் மரம் இருந்தது, அந்த மரத்துடன் ஒரு சிறுவன் விளையாடுவது வழக்கம், அந்த மரத்திற்கும் இந்தச்சிறுவனை மிகவும் பிடிக்கும். அந்தச்சிறுவன் அம்மரத்தைச்சுற்றி ஓடி விளையாடுவான், மரத்தில் ஏறி அப்பிள் பழங்களை உண்ணுவான், பின் அந்த மரத்தடியிலேயே படுத்து உறங்குவான்.


சிலகாலங்களுக்குப்பிறகு அந்தச்சிறுவன் சற்று வளர்ந்தவனாய் மரத்திடம் வர, அந்த மரம் வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்கு உன்னுடன் மட்டும் விளையாடமுடியாது எனக்கு விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்று சிறுவன் கேட்டான்.


அதற்கு அந்த மரம் என்னிடம் பணமில்லை நீ வேண்டுமானால் என் பழங்களை விற்று, அதில் வரும் காசில் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொள் என்றது. உடனே சிறுவனும் மகிழ்ச்சியுடன் அனைத்துப் பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.


அதன்பின்னர் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை, வருடங்கள் உருண்டோடின, வாலிபனாக வளர்ந்திருந்த அந்தச்சிறுவன் மரத்திடம் வந்தான். உடனே வா வந்து என்னுடன் விளையாடு என்றது மரம். உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை நான் எனது குடும்பத்தைக்காப்பாற்றவேண்டும் அதற்கு உழைத்து பணம் திரட்ட வேண்டும் என்றான். நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் வேண்டும் நீ எனக்கு உதவி செய்வாயா? என்று கேட்டான்.


என்னிடம்இருப்பிடம் ஏதும் இல்லை நீ என் கிளைகளை வெட்டி வீடு அமைத்துக்கொள் என்றது மரம். உடனே அவனும் அனைத்துக்கிளைகளையும் வெட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டான்.


மீண்டும் சிலவருடங்களுக்குப்பிறகு மீண்டும் அவன் வந்தான், இப்போது முதியவனாக, மரமும் வழக்கம்போல வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்குவயதாகிவிட்டது, உன்னுடன் விளையாட முடியாது, நான் எனது முதுமைகாலத்தில் ஓய்வெடுக்க ஒரு படகு வேண்டும் என்றான்.


என்னிடம் ஏது படகு இதோ என் உடலைவெட்டி படகு செய்துகொள் என்றது மரம். அவனும் மரத்தைத்தறித்து படகு செய்து கொண்டான்.


மேலும் சிலகாலங்கள் உருண்டோடின மரக்குற்றிக்கருகில் ஒரு தள்ளாடித்தள்ளாடி (அந்தச்சிறுவன்தான்) முதியவர் வந்தார், உடனே அந்த மரம் தம்பி மன்னித்துவிடு என்னிடம் இப்போது தருவதற்கு எதுவுமில்லை என்றது மரம். அதற்கு அவன் எனக்கு நடந்து வந்தது மிகவும் களைப்பாக இருக்கிறது, ஓய்வெடுக்க இடம்வேண்டும் என்று அந்த மரக்குற்றியில் அமர்ந்துகொண்டான்



பின்குறிப்பு:மின்னஞசலில் வந்த கதை, மொழிபெயர்ப்புடன் பகிர்கிறேன் 

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    நல்லாருக்கு

  1. Unknown Says:

    அப்பன்...
    நல்லாயிருக்கு...
    இடக்கிடை சீரியஸ் பதிவராயும் மாறுறீங்கள் என?

    வாழ்த்துக்கள்...


    // Subankan said...
    நல்லாருக்கு //

    வந்திற்றாரய்யா வைபிரேசனு...
    எங்கய்யா இருக்கினீங்கள்?
    ஆளக் கண்டுபிடிக்கவே முடியிறதில்ல... ஆனா பின்னூட்டத்துக்கு ஓடிவந்திற்று ஆள்...

  1. நல்ல பதிவு. நானும் இந்த கதை வாசித்தேன்... மனிதனின் நடத்தையை அப்படியே காட்டுகின்றது. இன்று மனிதன் மரங்களிடம் மட்டுமல்ல சக மனிதரிடமும் மனிதமில்லாமல் தான் நடந்து கொள்கின்றான். என்று தான் மாறுமோ இந்த நிலை

    வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

  1. good one. thanks for sharing

  1. கதை நன்றாகவுள்ளது..

  1. வலைப்பதிவை மிகவும் அழகாகக வடிவமைத்துள்ளீர்கள்..

  1. கதை அருமைங்க.. அரும!! ஆனா.. எங்கயோ படிச்ச ஞாபகம்??

  1. மனிதர்களிற்கு உள்ள சிறந்த குணம் சுயநலம்,இல்லையா?
    சிறப்பு!தொடர்க!!

  1. Bavan Says:

    நன்றி சுபாங்கன் அண்ணா..;)

  1. Bavan Says:

    // கனககோபி said...
    அப்பன்...
    நல்லாயிருக்கு...
    இடக்கிடை சீரியஸ் பதிவராயும் மாறுறீங்கள் என?//

    நானும் சீரியஸ்பதிவர்..
    நானும் சீரியஸ்பதிவர்..
    நானும் சீரியஸ்பதிவர்..

    //வாழ்த்துக்கள்...//

    நன்றி அண்ணே..;)


    //வந்திற்றாரய்யா வைபிரேசனு...
    எங்கய்யா இருக்கினீங்கள்?
    ஆளக் கண்டுபிடிக்கவே முடியிறதில்ல... ஆனா பின்னூட்டத்துக்கு ஓடிவந்திற்று ஆள்//

    ஹீஹீ... வைபிரேசன் சுபாங்கன்.. நல்ல பெயர்..:p

  1. Bavan Says:

    /// ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
    நல்ல பதிவு. நானும் இந்த கதை வாசித்தேன்... மனிதனின் நடத்தையை அப்படியே காட்டுகின்றது. இன்று மனிதன் மரங்களிடம் மட்டுமல்ல சக மனிதரிடமும் மனிதமில்லாமல் தான் நடந்து கொள்கின்றான். என்று தான் மாறுமோ இந்த நிலை///

    என்னசெய்வது..ஹிம்ம்..

    //வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்//

    நன்றி அக்கா..;)
    நிச்சயமாக..

  1. Bavan Says:

    /// வானம்பாடிகள் said...
    good one. thanks for sharing///

    நன்றி வானம்பாடிகள்,வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Bavan Says:

    // முனைவர்.இரா.குணசீலன் said...
    கதை நன்றாகவுள்ளது.//

    நன்றி ..;)

    //வலைப்பதிவை மிகவும் அழகாகக வடிவமைத்துள்ளீர்கள்//

    நன்றி நன்றி..;)

  1. Bavan Says:

    /// கலையரசன் said...
    கதை அருமைங்க.. அரும!! ஆனா.. எங்கயோ படிச்ச ஞாபகம்??///

    ஆமாம் மின்னஞ்சலில் வந்த கதைதான் நன்றாக இருந்ததால் பகிர்ந்தேன்..;)

    நன்றி கலையரசன், வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Bavan Says:

    /// S.M.S.ரமேஷ் said...
    மனிதர்களிற்கு உள்ள சிறந்த குணம் சுயநலம்,இல்லையா?
    சிறப்பு!தொடர்க!!///

    ஹாஹா.. அதுசரி.. பொதுநலமாக வாழ்ந்தால் உனக்கு பைத்தியமா என்பார்கள்..

    நன்றி அண்ணா..;)

  1. இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாக விளங்குகிறது அண்ணா!!!!!
    மனிதன் ஒரு 100% சுயநலவாதி!!!!!!!!!!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்