கெளதம் ஓடிக்கொண்டிருந்த FORD கார் மாவனெல்லவை அண்மித்துக் கொண்டிருந்தது. கருமுகில்களில் கதிரவனைக் கடூளியச்சிறைவைத்து குளிர்மையை பரப்பிக்கொண்டிருந்த இதமான குளிர் காலநிலைக்கு மயங்கி முன்சீட்டைச் சரித்துவிட்டபடி இரண்டுகைகளாலும் வயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள் வர்ஷா. பாதி திறந்திருந்த கார்க்கண்ணாடிக்குள்ளிலிருந்து வந்து கொண்டிருந்த மெல்லிய காற்று அவளின் தலைமுடியை தொட்டு குளிர்காய்ந்துகொண்டிருந்தது. அப்போதுதான் தூற ஆரம்பித்திருந்த மழையும் காற்றோடு போட்டி போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட ஆரம்பிக்க, சிணுங்கிக்கொண்டே எழும்பியவளின் பார்வையைப் புரிந்து கொண்ட கெளதம் கார்க்கண்ணாடியை முழுவதுமாக மூடிவிட்டு, மழைகுளிரின் பிடியில் அகப்பட்டுத் தூங்கிவிடாமல் இருக்க வீதியில் கவனத்தைச் செலுத்திய படி இடது கையால் ரேடியோவைப் போட்டான் கெளதம்,
“சன்சைன் அப்பார்ட்மண்டில் ஒரு பெண் கொடுரமாகக் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார், கொட்டாஞ்சேனைப் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஜெனி, வயது 26 எனவும் அறியவந்துள்ளது……..”
என இரைந்துகொண்டிருந்த வானொலிச் செய்தியைக் கேட்டதும் கீரீச்ச்ச்… என்ற சத்தத்துடன் அண்மையிலேயே சர்வீஸ் செய்யப்பட்டிருந்த காரை நிறுத்தியவனுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. திடீரென அடிக்கப்பட்ட பிரேக்கில் தூங்கிக்கொண்டிருந்த வர்ஷா முன்னாலிருந்த டாஸ்போர்டில் முட்டிய தலையை தடவிக்கொண்டு உடனடியாக எழுந்தாள். தூங்கிச்சோர்ந்த கண்களுக்குள் ஒரு பதற்றம் குடிகொண்டிருந்தது. கெளதமின் இவ்வாறான கலவரக்கண்களைக் இதுவரை அவள் பார்த்ததில்லை.
“என்னங்க ஆச்சு?
கேள்விக்கு பதிலின்றி வாகனத்தை மீண்டும் ஓட்டத்தொடங்கினான். வீடுவரும்வரை fordடின் என்ஜின் மட்டுமே உறுமிக்கொண்டிருந்தது.
காலிவீதியின் Seaவியூவில் அமைந்திருந்த அழகிய கல்யாணப்பரிசாகக் கிடைத்த மாடி வீட்டின் பிரம்மாண்டமான கறுப்புக் கதவு திறக்க, Ford கொஞ்சம் அதிகரித்த உறுமலுடன் உள்ளே சென்று ஓய்வடைந்தது. வர்ஷா களைப்பு மிகுதியில் வீட்டுக்குச் சென்றதும் போய்ப் படுத்துக்கொண்டாள். கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்ட கெளதம் கைப்பேசி பட்டன்களை விரல்புதைத்துக்கொண்டிருந்தான்.
*************
பச்சைக்கம்பளம் விரிக்கப்பட்ட மேசையில் பேனாமூடி, ஹெயார்கிளிப், தலைமுடி, கைப்பேசி, ஜெனியின் போட்டோ, சம்பவ இடத்திலிருந்த இரத்தத்துளிகளின் போட்டோக்கள், சிகரட் துண்டு, G என்று பென்டன் இடப்பட்ட செயின். அனைத்தையும் வைத்து யோசித்துக் கொண்டிருந்தார் இன்பெக்டர்.
“மே ஐ கம் இன் சேர், கான்ஸ்டபிளின் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தவர், வாய்யா போன் நம்பர் விசியம் என்னாச்சு?
“நேத்து ஈவினிங் 5 மணிக்குப் பிறகு அந்த போன்லயிருந்து ஒரே நம்பருக்கு 3 அவுட்கோயிங் மட்டும் போயிருக்கு சார், அது ஒரு தடவை ஆன்சர் ஆகியிருக்கு கடைசி ரெண்டு தடவையும் நோ ஆன்சர்னு வந்திருக்கு. கோல் ஆன்சரான நம்பர் சேகர் எங்கிற பேர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கு சார். என்று சொல்லிமுடிக்க தொலைபேசி அலறியது.
“ஹலோ Kotahena Polic station,
“சார் நான் கான்டபிள் கதிர்வேலு பேசிறன், பீச்ல ஒரு மேடர் சார்.
“ஓகே நீ அங்கயே இரு உடனே வாறன்.
பீச்சில் இறந்து கிடந்தவனின் கழுத்தில் K.Segar, Software developer. என்று எழுதப்பட்ட அடையாள அட்டை குருதிக்கறையுடன் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.
எனக்குப்பிறகு இக்கதையை பதிவர் சதீஷ் தொடருவார்
கொலைக்காற்று பாகம் - 04
கொலைக்காற்று பாகம் - 05
கொலைக்காற்று பாகம் - 06
சுடசோறு எனக்கு.