Related Posts with Thumbnails

மனசெல்லாம் நிலா!!!

பதிவிட்டவர் Bavan Saturday, July 30, 2011 4 பின்னூட்டங்கள்

கிருஷ்ணா..
அவலாஞ்சி..
அங்க.. சாக்லட் ஃபாக்டரி இல்ல.. அங்க
கே(G)ற்று பக்கத்துல மாடு மாடுல்ல.....


ஒரு படத்தை விமர்சனங்கள் வர ஆரம்பிக்கும் முன்னமே பார்த்து விட வேண்டும், இல்லையேல் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எம் காதுகளுக்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். வழக்கமாக எந்தத்திரைப்படமாக இருந்தாலும் முதல் வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். ஆனால் வர முதலே பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளை மனதில் கிளறிவிட்டபடி வெளிவந்த படம்தான் தெய்வத்திருமகள். இதைப் பார்ப்பதற்கு இத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளக் காரணமாக இருந்து எனக்கு வகுப்பு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்.

எனது ஞாபகசக்திக்குத் தெரிந்து 10 வயதில் கரண்டில் விளையாடி வீட்டில் அடிவாங்கி அழுததுக்குப் பிறகு அழுததாக ஞாபமில்லை எனக்கு. எந்த விதமான கவலையாக இருந்தாலும் மனம் விட்டு அழுது பழக்கமில்லை. ஏன் மரண வீட்டில் மற்றவர்கள் அழுவதைப் பார்த்தால் கண்கலங்கும் என்பார்கள் எனக்கு அப்படிக்கூடு நடந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு சிட்டி ரோபோ மாதிரி இருப்பவன் நான். "நீ இந்தப் படத்தைப் பார்த்தால் கட்டாயம் அழுவாடா" என்று நண்பர்கள் முதல் பலர் சொல்லியிருந்தார்கள். நானும் சவாலாகப் " அதையும் பார்க்கலாம்டா" என்று சொல்லியிருந்தேன்.


ஊட்டியில் சொக்லெட் ஃபக்டரியில் வேலை செய்யும் மன வளர்ச்சி குறைந்த தந்தையும், அவரின் 5 வயது சுட்டிப் பொண்ணு நிலாவையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைதான் தெய்வ்திருமகள். படத்தில் ஆரம்பம் முதலே மனதை உறைய வைத்து கண்களில் நீர்கட்டவும் வைத்து அடுத்த கணமே கண்ணீருடன் சிரிக்கவும் வைத்து படம் கடைசிவரை கண்ணீர், சிரிப்பு, புன்னகை,மெளனம், சோகம், தவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மாறிமாறி காட்டியிருப்பது அருமை.

குறிப்பாக குழந்தை அழுதுகொண்டிருக்கும் போது அதைப் பார்த்தபடி விக்ரம் பேசாமல் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருப்பார். அப்போது ஒரு பெண், "குழந்தை அழுதுகிட்டிருக்கு ஒண்ணும் பண்ணாம சும்மா இருக்க" என்றதுக்கு அப்பாவியாக "என்ன பண்ணணும்" என்று கேட்ட காட்சியில் மனதில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல கனம்.

அது தவிர மேலே பார்த்து சொல்லு என்று அவ்வப்போது வரும் சிரிப்பை உண்டாக்கும் காட்சிகள், சந்தானத்தின் இயல்பான கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் ஆகியன எனது மனதைக் கவர்ந்தன.

அனைவருக்கும் போல அந்தக் கடைசி கோர்ட்டில் இடம் பெறும் பாசப்போராட்டம் என் மனதையும் உடைத்து கண்களில் கண்ணீரை வரவைத்த காட்சி.
"சிட்டி ரோபோ கெட்டப் பையன் நானே அழுதிட்டேன்னா பாருங்களேன்."


I AM SAM படத்தின் தழுவல் அது இது என சொல்லுபவர்களின் கவனத்திற்கு, என்னதான் தழுவலாக இருந்தால் என்ன? இப்படிப்பட்ட அருமையாக படத்தை தமிழில் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொள்வோம்.

கடை சியாக ஒரு முக்கியமான கேள்வி,

.

.

.

.

.

.


.

"நிலா எப்ப வரும்?"

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    :-)

  1. same tear bavan

  1. Anonymous Says:

    காப்பி அடித்து விட்டான், திருடி விட்டான் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அன்பர்களுக்கு,
    நான் 2 விஷங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
    1. முதலில் சொல்லுங்கள் எது திருட்டு.
    நாம் பாடசாலையில் பயிலும் கல்வி ஆசிரியரின் சொந்த புத்தியில் வருவாதா? யாரோ எழுதியதைதானே உமிழ்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குப்பெயர் திருட்டா?
    நாம் உண்ணும் உணவு அம்மாவின் சொந்த சிந்தனையில் வடித்ததா? ஏற்கனவே இருப்பதைதானே மாற்றி சமைக்கிறார் இது திருட்டா? இதுவரை சினிமாவில் காட்டாத விஷயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை பட்டால் அது பேராசை.
    2. deivaதிருமகள் என்று ஒரு படம் வாராமல்போய் இருந்தால் நம்மில் எந்தனை பேருக்கு I Am Sam பற்றி தெரிந்து இருக்கும். இன்று இதை திருட்டு என்று கதறிக்கொண்டு இருக்கும் 95% பேருக்கு, I Am Sam என்று ஒரு படம் வந்து இருப்பதே தெரிந்திருக்காது. உலகில் உள்ள நல்ல படங்களை பார்த்துவிட வேண்டும் சல்லடை போட்டு தேடும் உலகபட மேதாவிகளா நாம்?பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்கும் சாதாரண இரசிகர்கள்.
    இது ஒரு படத்தின் காப்பி என்பதை, நம் மக்கள் கண்டுபிடித்துவிட மாட்டார்கள் என என்னும் அளவிற்கு இயக்குனர் ஒன்றும் அறிவில்லாதவர் அல்ல. சொல்லப்போனால் உலகப்படம் என்ன உள்நாட்டிலேயே ஹிந்தியில் ஏற்கனவே எடுத்து விட்டார்கள். அதையும் மீறிதான் நமக்காக, நம் மொழியில், நம் இசையில், நம் சுவையில், நம் ரசனை மேம்பட இதைபோன்றதொறு படைப்பை அளித்திருக்கிறார். அமெரிக்காகாரன் பார்த்து காரி துப்புவதற்கோ, லண்டன் காரன் கெக்கலிப்பதற்கோ நாம் படம் எடுக்கவில்லை. ஒரு நல்ல படைப்பு தந்தால் பாராட்டுவதை விடுத்து எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து நக்கீரன் பரம்பரை என்பதை நிருபிப்பதில் நம் தமிழன் கில்லாடிதான்.

    prabhushankara@gmail.com

  1. Reverie Says:

    மறுபடி படிக்க தூண்டியது...பகிர்ந்ததற்கு நன்றி..

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (2) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (4) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (3) tweets (10) twitter (10) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (46) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (4) இசை (5) இதயம் (1) இலங்கை (19) உண்மை (13) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (6) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (104) காம்பீர் (1) கிரிக்கெட் (57) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (5) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (2) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (3) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (38) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (53) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (88) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (5) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்