பகுதி –1 ஐப்படிக்க இங்கே சொடுக்குங்கள்
ஹரீசுக்கு மாவட்ட மட்ட கிறிக்கட் அணியில் இடம் கிடைத்தது. முதல் நாள் பயிற்சி. மைதானத்தில் வோர்ம் அப்புக்காக மற்ற அண்ணன்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு விசில் சத்தம்,
“கமோன் காய்ஸ்…” தேவா மாஸ்டர்.
ஒரு குற்ற உணர்ச்சியுடனேயே அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். அவள் அந்த சம்பவத்துக்குப்பிறகு இவனுடன் பேசியதே இல்லை. ஒரு வேளை இவரிடம் சொல்லியிருப்பாளோ? இவர் ஏன் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை? மனதுக்குள் பல ஊகிப்பு முட்கள் குத்திக் குடைந்துகொண்டிருந்தன. புல்டொஸ் பந்துக்கே மூன்று முறை விக்கெட்டைப் பறிகொடுத்தான்.
பயிற்சி முடிந்தது. தேவா மாஸ்டர் “தம்பி ஹரீஸ்…
நான்கு காலடிகளை வைப்பதற்குள் நாற்பது ஊகிப்பு முட்கள் மீண்டும் குடையத் தொடங்கின. “சேர்?”
“நாளைக்கு காலம வரேக்க வீட்டை வந்து பந்தை எடுத்துக்கொண்டு போக முடியுமோ”
“ஓம் சேர்”
மறுநாள் காலை, பழக்கப்படாத முகத்தைக்கண்ட லைக்கா குரைத்துத்தள்ளிக்கொண்டிருந்தது. ஹேய்..ஸ்ஸ்சு.. “தம்பி ஒரு நிமிசம் நிக்கட்டாம் வாறாராம்” தேவா மாஸ்டரின் மனைவி.
“சரி அன்ரி”
அவள் உள்ளே சென்றாள், இப்போது லைக்கா குரைப்பதை நிறுத்தியிருந்தது. லைக்காவைப்பார்த்து முறைத்தான், வவ் வவ் என்று குரைத்தான்.. அப்படிப்பல பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டான் அவள் வீட்டில் இருக்கிறாளா என்று அறிய. லைக்கா எஜமானுக்குக் கட்டுப்பட்டு வாலை ஆட்டிக்விட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடியது.
பீட்டர்சன் லேனால் திரும்பிய போது குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற போட்ட சடுன் பிரேக்கில் நிகழ்காலத்துக்குத்திரும்பியவனின் பைக் என்ஜின் நின்று போயிருந்தது. இரண்டு உதையில் மீண்டும் பைக் மைதானத்துக்கு பறந்தது.
“மச்சான் நீ பட்டிங்” என்றான் சந்தோஷ்.
சந்தோஷ் இவன்தான் பாடசாலைக்காலத்தில் இவனது எதிரணியில் விளையாடியவன். நல்ல பெளலர், பல்கலைக்கழக அணியில் ஒரே அணியில் விளையாடியவர்கள். இன்னும் சொல்லப்போனால் லாவண்யாவின் எதிர் வீட்டுக்காரன். லாவண்யாவின் வகுப்பு நேரங்கள் தொடக்கம் அவள் வீட்டுக்கு வெளியே வரும் நேரம் உள்ளே போகும் நேரம் என அனைத்தையும் அறிந்து சொல்லும் ஸ்பை இவன்தான். இப்போது தேவா மாஸ்டரின் மகள் யாழில் மெடிசின் முடிச்சு ஏதோ வெளிநாட்டுக்கு ட்ரெயினிங் போயிருக்கிறாளாம் என்று சந்தோஷின் அம்மா சொன்னதாக சந்தோஷ் அவனிடம் சொல்லியிருந்தான்.
கருமுகில்கள் சூழ்ந்து மைதானத்தில் மழையாக குதித்து விளையாட ஆரம்பித்திருந்தன. மைதானத்தில் கிடந்த அனைவரின் செல்பேசிகளை எடுத்துக்கொண்டு ஹரீஸ் பவிலியனுக்கு ஓடினான்.
“அடடா மழைடா அடை மழைடா..” ஹரீசின் கையிலிருந்த சந்தோஷின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது…
தொலைபேசி ஸ்கிரீனில்…
Lavanya calling..
+44 020 7xxx xxxx
சுபாங்கன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-3
கன்கொனின் நிலாக்காதல் பகுதி- 4
ஆதிரை அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-5
லோஷன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-6 Tweet
ம்ம் நல்லாயிருக்கு, கொஞ்சம் குறைவாக எழுதிவிட்டீர்களோ?
இனி என்ன நடக்க போகிறது என்பது சுபாங்கனிடம்தான் இருக்கிறது