Related Posts with Thumbnails

அன்புள்ள சந்தியா - 04

பதிவிட்டவர் Bavan Monday, August 23, 2010 10 பின்னூட்டங்கள்
அன்புள்ள சந்தியா இப்போது அனைவரையும் போட்டுத்தாக்கிக்கொண்டிரக்கிறாள். சுபாங்கன் அண்ணா ஆரம்பித்த சந்தியா லோஷன் அண்ணாவிடம் போய் ஜனா அண்ணா வழியாக தற்போது என்னிடம்.
முன் பகுதிகளைப் படிக்காதவர்கள் அவற்றைப் படித்துவிட்டு தொடருங்கள்.
கதையின் முதற்பாகத்திற்கு இங்கே
இரண்டாம் பாகத்திற்கு இங்கே
மூன்றாம் பாகத்திற்கு இங்கே
TS PHOTO Love Story wip sss crop 9-1208 rha090_2843

நித்திரையில் கட்டிலிலிருந்து கீழே விழுந்தவன். கண்விழித்த போது வெளியே ஹாலில் பெரியம்மாவின் குடும்பத்தினரின் கலகலப்புக்குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரிலே தம்பி இவன் விழுந்ததைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். பாத்ரூமுக்குள் புகுந்து கதைவை அடைத்துக்கொண்டான்.
***
கதவை அடைத்தார் கண்டக்டர், பஸ் புறப்படத்தொடங்கியது. அதே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான். கை விரல்கள் நெற்றியை வருடிக்கொண்டிருந்தன, காதில் “அன்புள்ள சந்தியா.. என்று கார்த்திக் இவனுக்காக உருகிக்கொண்டிருந்தார்.

“அடடே தம்பி,
எங்கேயோ கேட்ட குரல், திரும்பினால் இவனுடன் பயணித்த 7க்கு 2 நியூமராலிஜி சொன்ன அதே மனிதர்.
“ஹலோ சேர், என்றான்
“கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கண்டுபிடிச்சீங்களா?
"கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை பரிசளித்தான்.
மீண்டும் சந்தியா அவனை அணைத்துக்கொண்டாள் கார்த்திக்கின் குரலில்..

கொழும்பின் வாகன இரைச்சல் அவனை எழுப்பிவிட்டிருந்தது. கார்த்திக் பட்டரி தீர்ந்து ஓய்வடுத்துக்கொண்டிருந்தார். கால்கள் அவனது ரூமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. முதன்முறையாக வீதியைக் கவனிப்பதை மறந்திருந்தான். பழக்கப்பட்ட வழியில் கால்கள் ரூமுக்கு கொண்டு சேர்த்தன. சந்தியாவுடன் மீண்டும் நினைவுகளைப் பகிர அலைபேசியை சார்ஜில் போட்டு ஒன் பண்ணியவனின் அலைபேசி விடாமல் கீச்சிட்டது
you have 5 missed calls from 077xxxxxxx

உடனே அவளுக்கு அழைப்பெடுத்தவனுக்கு “சுதா. என்ற அந்த மெல்லிய குரல் புத்துணர்ச்சியை அளித்தது.
“அழகுக்குக் காரணம் நான்தான் சண்டைபோடுகிறது உன் குரலும், கண்களும்” என்று ஏதேதோ கவிதைகள் மனதில் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. அனைத்தையும் மீறி “இயஸ் சந்தியா.. என்றான்.
“என்ன சுதா நீங்க நாளைக்கு கல்யாணம் நீங்க இன்னிக்கே வந்திருக்க வேணாமா? கொஞ்சலாகக் கேட்டாள்.
வீட்டு அட்ரசை வாங்கிக்கொண்டவன் உடனடியாக குளித்து, பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பியவனுக்கு சந்தியாவின் வீட்டை வாயில் வாழைமரங்கள் அடையாளம் காட்டிக்கொணடடிருந்தன. உள்ளே நுழைந்தவனின் கண்கள் அவளைத் தேடி அலை பாய்ந்துகொண்டிருந்தன. அதோ பிங்க் கலரில் ஆரஞ்சு போர்டரில் பட்டுச்சாரி, கையில் அதற்கு மட்சிங்காக வளையல்,மெல்லிய நெற்றிச்சுட்டி கையில் மெஹந்தி தேவதை போல் இல்லை இல்லை அதைவிட உயர்ந்த வார்த்தைகள் வேண்டும் அதை வர்ணிக்க… அப்பப்பா.. என்று கண்வெட்டாமல் பார்த்துக் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனை கூல்ரிங்ஸ் என்ற குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.
கூல்ரிங்சை பெற்றுக்கொண்டு நிமிர எதிரில் சந்தியா வந்து நிற்க சரியாக இருந்தது.
“ஹாய் சுதா.. அம்மா வரலயா?, இல்லை என்பது போல் தலையசைத்தான்.
“ஐ வோன்ட் டு இன்டடியூஸ் சம்ஒன் டு யு சுதா.. என்றவள், அவனது கையைப்பற்றி இழுத்துக்கொண்டு போனாள். பூக்களுக்கு இவ்வளவு பலமா என் முரட்டுக்கையையே இழுக்கிறதே? அதிசயித்தான். அவளது கையின் குளிர்ச்சி இவன் உடலை சூடாக்கிக்கொண்டிருந்தது. “என் உடல் எரிந்தாலும் பரவாயில்லை உன் கையை விட்டுவிடாதே” மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

முதுகுப்புறத்தை காட்டி அரட்டையில் ஈடுபட்டிருந்த அந்த மனிதரைத் அழைத்தாள் திரும்பியவர் சுதாவைக் கண்டதும்…

“ஹலோ தம்பி வட் எ சப்ரைஸ்..” என்ன ஆச்சர்யம் அதே பேரூந்து மனிதர்.
“ஹலோ சேர், கண்டுபிடித்துவிட்டேன் கடவுள் இருக்கிறார்” என்றான்
அவருக்குப் பின்னால் இருந்த சிவா weds மஹதி என்ற போர்ட் சுதாவின் கண்களை அலங்கரித்துக்கொண்டிருந்தன.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அடேய்....
    அந்த ஹரீஷ் எண்ட பெயரை விட மாட்டீங்களா?
    அவ்வ்வ்வ்....

    *************
    ஆகா...
    தொடர்கதையா அலையுறாங்களே இப்பவெல்லாம்....
    நடக்கட்டும் நடக்கட்டும்...

    கதை நல்லாத்தான் இருக்கு, அடுத்தது யார் எழுதுறது? :-)

  1. // பூக்களுக்கு இவ்வளவு பலமா என் முரட்டுக்கையையே இழுக்கிறதே? அதிசயித்தான். அவளது கையின் குளிர்ச்சி இவன் உடலை சூடாக்கிக்கொண்டிருந்தது. “என் உடல் எரிந்தாலும் பரவாயில்லை உன் கையை விட்டுவிடாதே” மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.//

    ரசித்தேன்

    almost கதையையும் முடித்து விட்டீர்கள். அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  1. சில வரிகள் கவிதை :)
    ரசித்தேன்..
    ஹரீஷ் படாதபாடு படுகிறான்..

    //
    கன்கொன் || Kangon said...
    அடேய்....
    அந்த ஹரீஷ் எண்ட பெயரை விட மாட்டீங்களா?
    அவ்வ்வ்வ்...//
    இதுக்காக சொல்லவில்லை ;)




    ஆனாலும் விடமாட்டீங்களே சந்தியாவை அவனுக்குத் தான் என்று ஆக்கிடுவீன்களே?

    மீண்டும் நான் வரணும் போல இருக்கே.. ;)
    ஐ மீன் பகுதி ஐந்துக்கு ;)

  1. thiyaa Says:

    ஆகா...
    super

  1. Jana Says:

    நேற்று வாசித்துவிட்டு பெரிய குழப்பத்தில் இருந்தேன். எங்கயிருந்து இந்த ஹரிஸ், மஹதி வந்தார்கள் என்று? சந்தியா இத்துடன் நிக்காது போல இருக்கே!!! அடுத்த அடுத்த பகுதிகளை வரைய அனுதினனும், மதிசுதாவும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றமை தெரியுது.

  1. Bavan Says:

    கன்கொன்,
    தர்ஷன்,
    லோஷன் அண்ணா,
    தியாவின் பேனா,
    சுபா அண்ணா,
    ஜனா அண்ணா,

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    முக்கியமான ஒரு விடயம் நிலாக்காதல் கதையில் வந்த ஹரீஸ் என்ற பெயரை சுதா என்ற பெயருக்குப்பதிலாக தவறுதலாகப் பயப்படுத்தி எழுதி மீண்டும் உடனடினாகத் திருத்தியிருக்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்..:)

  1. கன்கொன்,
    தர்ஷன்,
    லோஷன் அண்ணா,
    தியாவின் பேனா,
    சுபா அண்ணா,
    ஜனா அண்ணா,

    மற்றும் பவன் எல்லோரும் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என் பதிவுக்கும் வந்து வாழ்த்து சொல்லுங்கோவன்..
    கவிதைபோல உள்ள உங்கள் குடும்பத்தில்
    நானும் ஒருவார்த்தை ஆகலாமா?

  1. அன்புள்ள சந்தியா இங்கே தொடர்கிறாள்

    http://anuthinan0.blogspot.com/2010/08/05.html

  1. பவன் இன்று தான் பார்க்க முடிந்தது.. அருமை வாழ்த்துக்கள்...... நான் எழுதிய கதையை போட்டால் எனக்கு நிச்சயம் பதிவர்கள் எல்லாம சேர்ந்து மரணதண்டனை கொடுத்து விடுவார்கள். ஆனால் அதிரடி திருப்பங்கள் இருக்கிறது...... பாகம் -5 பார்க்கணும் வரட்டுமா?

  1. அப்பாடி இந்த சந்தியா படு மோசமப்பா...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்