எது பதிவிடப்பட்டதோ,
அது நன்றாகவே பதிவிடப்பட்டது
எது பதிவிடப்படுகிறதோ,
அது நன்றாகவே பதிவிடப்படுகிறது
எது பதிவிடப்பட இருக்கிறதோ
அதுவும் நன்றாக பதிவிடப்படும்,
உன் பதிவில் யாரை நீ மொக்கை ஆக்காமல் விட்டாய்?
மைனஸ் வோட்டு வராமல் இருப்பதற்கு?
எதை நீ சீரியஸ் ஆக பதிவிட்டாய்,
உனக்கு பின்னூட்டம் வராமல் இருப்பதற்கு ?
எந்தப்பதிவுக்கு நீ வோட்டு போட்டாய்,
உனக்கு வோட்டு வரவில்லை என்று கவலைப்பட ?
எந்த பிரபலத்தை நீ மொக்கை போட்டாயோ,
அது இங்கிருந்தே போடப்பட்டது.
யாரை பற்றி நீ கேவலமாக பதிவிட்டாயோ
அது இங்கேயே பதிவிடப்பட்டது
எதை நீ இன்று பதிவிடுகிறாயோ
அது நாளை மற்றொருவரின் பதிவாக வரும்
மற்றொரு நாள் அது வேறொருவரின் பதிவாக வரும்
இதுவே பதிவுலக நியதியும்,
பதிவர்களின் படைப்பின் சாராம்சமும் ஆகும்.
Tweet
//உன் பதிவில் யாரை நீ மொக்கை ஆக்காமல் விட்டாய்?
மைனஸ் வோட்டு வராமல் இருப்பதற்கு?//
அசத்தல் அப்பு....
நல்ல கீதாசாரம் தான்....
வரிகளின் கோர்வை அற்புதம்....
வாழ்த்துக்கள் நண்பரே....