எனக்கு 3 வயது இருக்கும் மொண்டோசரியில் படித்துக்கொண்டு இருந்த காலமாம், நான் எனது சித்தாபாவுடன்தான் மொண்டோசரி செல்வது வழக்கம். நானும் அழுதுகொண்டுதான் தினமும் மொண்டசரி செல்வேனாம், ஆனால் எனது சித்தப்பா பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சாமர்த்தியமாக மொண்டோசரியில் கொண்டுபோய் விட்டு விடுவார்.(நான் படித்த மொண்டோசரிக்கு போகும் வழியை தாண்டித்தான் எனது பாட்டி வீடு)
இப்படியாக தினமும் அழுதுகொண்டு மொண்டோசரிக்கு கிளம்பும் நான் திடீரென ஒருநாள் "இனி அழமாட்டேன்" என சபதம் எடுத்தேனாம், அதக்கு பிறகு அழுவதில்லாயாம்...
குறிப்பு: முன்று வருடங்களுக்கு முன்பு என் அந்த மொண்டோசரிக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது, அந்த மொண்டோசரி பிரின்சிபாலுக்கு எனது பெயரை சொன்னதும் சற்று நினைவு இருக்கிறது என்றார், உண்மையோ,பொய்யோ யாருக்கு தெரியும்.....ஹா...ஹா..
Tweet
என்ன சின்னதா இருக்கு..
பதிவுதான்!