நீங்க எல்லாரும் ஆவலா எதிர்பார்த்து இருக்கும் வேட்டைக்காரன் கதை
அம்பலமாகிவிட்டது, இந்த முறையாவது ரசிகர்களை ஏமாற்றாம
கதையை முதல்லையே சொல்லி இருக்குறாங்க...கதையை
வாசிச்சுட்டு நல்லா இருந்த படத்தை பார்க்க சொல்லுராங்க.....
இதோ கதை.......
நம்ம ஹீரோ போக்கிரிதனமா கில்லி விளையாடிட்டு இருக்குறார் அப்போது போது அவர் ப்ரியமுடன் வளர்த்த அவரின் அன்புக்காதலி குருவியை எதிரிகள் பிளைட்டுல கடத்திட்டு போறாங்க, அத பிடிக்க அவர் ஹை ஜம்ப், லாங் ஜம்ப், த்ரிபுள் ஜம்ப் என்று எல்லா ஜம்ப்பும் பாயுறார், அப்புடி பாஞ்சும் பிடிக்க முடியாம போகுது. வானத்துல இருந்து தொபுக்கடீர் என்று பெரிய பாறைல விழுந்தும் அவருக்கு சின்ன காயம் கூட வரல...
உடனே தன்னோட வில்லையும்,FRIENDSஐயும் கூட்டிட்டு வேட்டையாட புறப்படுகிறார், அவர் காட்டுக்குள்ள ஒரு அழகான பூவ பார்த்து அதை தன் காதலிக்காக பூவே உனக்காக என்று சொல்லி பூவ பறிக்குறார், அதை ஒரு காட்டு புலி பாத்துருது, அப்பதாங்க introduction song "புலி உறுமுது" பாட்டு வருது....
அந்த பாட்டு முடியும் போது அவர் புலிய நேருக்குநேர் சந்திக்கிறார்.
அப்ப அங்க பெரிய பைட் நடக்கும் என்று தப்புகணக்கு போட்டுறாதீங்க..அந்த புலியிடம் தனது பிளாஸ்பாக்ஐ சொல்லுராரு(அழுதுகொண்டே ) அவர் அழுறத பார்த்து அவரின் காதலுக்கு மரியாதையை கண்டு வியந்து அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்குது அந்த புலி...
மதுரைல வாங்கின திருப்பாச்சி அரிவாள தீட்டிடு வந்த அவர், வழில பசிதாங்க முடியாம மரத்துல ஏறி பழத்த வெட்டுகிறார். அவர் பழம் வெட்டுறத பார்த்த ஒரு கரடி அவர பார்த்து ஒரு வில்லன் லுக்கு விடுது, அங்க தாங்க ஆரம்பிக்குது முதல் பைட்டு, டைரக்டர் அந்த இடத்துல வைக்கிறார் பாருங்க பாட்டு "நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட...."னு....
அப்போ அந்த கரடி அவர பார்த்து ஒரு கேள்வி கேக்குது,
உடனையே அவர் திரும்பியும் அழ ஆரம்பிகுறாருங்க, என்ன பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்டனு விஜய் நெஞ்சினிலே அடிச்சு அடிச்சு அழுவுராருங்க. இவர் கதறி அழுறத பார்த்த கரடி இவர சமாதானப்படுத்த வந்து தலைய தடவுதுங்க..அப்போ வருதுங்க இந்த பாட்டு "என் உச்சி மண்டைல கிர்ர் என்குது......"
இப்படி இவங்களிடம் இருந்து தப்பிச்ச விஜய் காட்டுக்குள்ள இருக்குற திருமலைல ஏறிட்டு இருக்குறார் அசதி தாங்க முடியாம ஒரு இடத்துல தூங்கிராருங்க அப்போ அவர் அவரோட காதலியோட "கரிகாலன் கால போல" என்று கனவுல டூயட் பாடுகிறார் ....அப்போ திடீர்னு அவருக்கு சாக் அடிக்குதுங்க அப்போ கண் முழிச்சு பார்த்தா.....முன்னாடி போலிஸுகாரர், வேற யாரு அழகிய தமிழ் மகன் நம்ம பிரபு சார் தான்...............................
"காட்டுக்குள்ள போய் கரடியும், புலியும் அடிச்சது நீதானே......"நம்ம பிரபு சார் மிரட்டுகிறார்......அதுக்கு விஜய் சொன்ன பதில் ....................
குறிப்பு: முதல் படத்துல இருக்குறது கரடியா, நாயான்னு ஒரு சின்ன டவுட்டு but சைசுல பெருசா இருந்ததால கரடின்னு போட்டு இருக்கன், அது நாயா இருந்தா நாய்ன்னு வாசிங்க.....ஹீ..ஹீ...ஹீ...
*******************************************************************************
இவர்ட கைல உள்ள பேப்பர் ஐ பாருங்க...ஹீ...ஹீ...ஹீ....
*******************************************************************************
டைரக்டெர்களுக்கு ஒரு நற்ச்செய்தி ........
தங்களுக்கு சம்பளத்த தவிர காஸ்டியூமா ஒரு டவல் தந்தா போதும் நாங்க நடிக்கிறோம் என்று இவங்கெல்லாம் உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம், எனவே காஸ்டியூம் செலவு குறைஞ்சிருக்குறதால டைரக்டெர்கள் சந்தோசமா இருக்காங்களாம்.......ஹீ...ஹீ...ஹீ....
*******************************************************************************
உலகநாயகனுக்கு இன்று பிறந்தநாள்......
இன்று தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலகநாயகன் கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
*******************************************************************************
சிலபல வேலைகளுக்காக ஒரு 20 நாள் சுற்றுலா செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு பெரும்பாலும் பதிவிட முடியாது என்பதை அறியத்தருகிறேன்......
:-)