2006 ம் ஆண்டு பரீட்சை எழுதி முடிந்தவுடன் திருமலை பயணமானவன் நான். வழமை போல் விடுமுறைக்கு வந்திருக்கிறோம் மீண்டும் திரும்பிவிடலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் நடந்ததோ வேறு. பரீட்சை முடிவுகள் வர முன்னே இங்கு ஆரம்பித்த உயர்தர வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். கொழும்புக்கும் திருமலைக்கும் பல வித்தியாசங்களை உணர்தேன். அங்கு bus பயணம் இங்கு cycle பயணம்,மண் தரையுடன் கூடிய வகுப்புக்கள், தொடர்ச்சியாக வீசும் பலமான காற்று என பல.
இவ்வாறே சில காலங்கள் உருண்டோடின. ஒரு வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் இதோ வருகிறது ...... அதோ வருகிறது ...... என்ற இழுத்தடிப்பு இன்றி ஒரு நாள் இரவு திடீரென பரீட்சை முடிவுகள் வெளியானது .
அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் உயர் தரத்தில் சேர்வதக்கான நேர்முக தேர்வு. நேர்முக தேர்வு முடிந்து புறப்படும் போது ஒரு ஆசிரியர் "தம்பி school வரும்போது முடியை வெட்டிட்டு வாங்கோ என்றார். "ஆஹா ஆரம்பிச்சுடானுங்கடா" என்று மனதில் நினைத்தபடி வீடு வந்தேன்.
பாடசாலை முதல் நாள்....
புதிய பாடசாலை, புதிய சூழல், புதிய மாணவர்கள் சற்று பயத்துடன் உள்ளே நுழைந்தேன். மிகவும் மகிழ்சியாக பல மாணவர் கூட்டம் கதை பேசியபடி நின்று இருந்தது. ஒரு 4அடி மனிதர் அனைவரையும் அதட்டியபடி வந்துகொண்டு இருந்தார் உடனே அனைத்து மாணவர்களும் "குள்ளன் வாராண்டா" என்று கூறியபடி அனைவரும் line ல் நின்றார்கள். அவர் அந்த பாடசாலையின் Deputy Principal என்று பின்பு அறிந்து கொண்டேன்.
காலை கூட்டம் நடைபெற்று முடிந்ததும் எங்களை main hall இக்கு வருமாறு கூறி இருந்தனர்.நாங்கள் hall இக்கு சென்றுகொண்டு இருக்கும் போது அதே ஆசிரியர் தம்பி jeans ஐ மேல போடுங்கோ(low hip) என்றார். (இன்று எனக்கு மட்டுமல்ல )
-இன்னும் வரும் -
ha ha.............ei nala irukuda......itha ne trinco vantha kathai