வெறுமையின் வறுமையினை
வேரறுத்து வீசிவிட்டு
தனிமையின் தலையணைக்குள்
தலை புதைக்கும் நேரம்
பொறுமையின் உச்சங்கள்
விரக்தியின் எச்சங்கள்
அணைந்த சில சொச்சங்கள்
ஆங்காங்கே மிச்சங்கள்
எதைக் கொண்டு கட்டியும்
ஆறாத காயங்கள்
எனைக் கொண்டு முட்டியும்
சேராத தாயங்கள்
காரணம் தேடியோடி
தவிப்புடன் தோகையாடி
மயில்களும் மேகம் தேடி
மழையதன் மோகம் நாடி
மண் தொட்டு முத்தமிட்டு
முளை தேடி எச்சமிட்டு
தொலைகின்ற எனைத்தேடி
தொடர்கிறது பயணங்கள்!
இனி!
-Bavananthan (20.03.2016)
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment