
விருட்சத்தின் உச்சத்தை
தொட்டுவிட்டு
ஓடிவந்து வேர் நுனியை
முத்தமிட்டு
ஒட்சிசன் வாயுக்களோடு
கலந்து பறந்து
புவியீர்ப்பை எதிர்க்கும் சிறகுகளின்
சூத்திரம் அறிந்து
வானவில்லின் அழகியல்
அறிந்து
மழைத்துளிக்குள் சிலநாள்
வசித்து
பெண் மண் இயற்கை
மேடு பள்ளம்
காதல் காமம் அன்பு
புரட்சி தாய்மை
அனைத்தையும்
திகட்டத் திகட்ட ரசிக்கும்
கவிஞர்கள் படைக்கும்
கவிதைகள் தினம்!
-Bavananthan (22/03/2017)&nbs...