அடி உதை அறுவடை செய்
அனைவர்க்கும் அறிமுகம் செய்
மிருகத்தை விதைச்சலும் செய்
பயிற்சியில் பலரையும் கொய்!
முதலையின் வாய் தொட முன்
அதை கண்களால் கழுவியே வை
காரியம் முடியும் வரை - அதன்
கல் மனம் கரைந்திடச் செய்
தலைமைகள் தவறிழைத்தால்
தாடைகள் தகருமென்றால்
குருத்துகள் வதை புரிந்தால் - இரு
விரல்களே சிதைக்குமன்றோ!
ஆலமாய் வளர்ந்திட்ட வேர் - இன்று
அழித்திட முளை விடுமே!
ஆழமாய் புதைத்து விட்டாய் - இனி
நீ விதைத்தை அறுவடை செய்!
-Bavananthan
அருமையான பதிவு
சிந்திக்கச் சுவையான வரிகள்