
சிரமத்தை தானமும் செய் - சில
கலோரிகள் பொசுங்கிட வை
பல நோய்களை வருமுன்னே கா
உன் உடலின் வியர்வை களை
சேற்றாடும் மூடரினம்
வம்புக்கு உனை அழைத்தால்
உன் ஆடை கறைபட முன்
அதை விட்டு விலகியே செல்
அறிவினை வளர்த்திடவே
ஆயிரம் வழியிருந்தும்
புத்தியை கூர்விக்கும்
சொல்லாயுதம் துணை இருந்தும்
மூளையை மூத்திரமாய்
எங்கோ பெய்தொழித்த மூடரிடம்
வேடிக்கை வசைகளும் கேள்
வெக்கமின்றி சிரித்தும் வை!
வசை கொட்டி வம்பிழுத்து - உன்
தன்மானந்தனை உசுப்பி
வீரனின் நிலை உயர...