புது மேகம் தாண்டி நாம்
புதிய கரை காண்போமே
வலி கொண்ட வாழ்க்கை தாங்கி
விடியல் தேடிச் செல்வோமே!
கனம் கொண்ட நெஞ்சம் தான்
கண்ணீரில் கரைகிறதே அதன்
கவலைகள் தேங்கிட வீழ்ந்திட
விதையாய் மோதி வெல்வோமே!
வாழ்க்கை ஒற்றைக் கோடு
பல தடைகள் முட்டி மோது!
விழி ஈரம் காயும் போது
நீ காற்றின் மீது ஏறு!
உன் வேட்கை தாங்கி ஓடு
வரும் நரிகள் வேட்டையாடு!
பழி தீர்க்கும் நேரம் பார்த்து
நீ பாதை நீங்கி தாக்கு!
வானோடு மழை நீங்கிப் போகலாம்
வேரோடு மரம் மாண்டு போகலாம்
நெஞ்சோடு கதை மோதி வீழலாம்
போராடு தினம் மீண்டு மோதலாம்
-Bavananthan
Music: Vidushan
Lyrics: Bavananthan...

மோதுடா மோதுடா
துணிவிருந்தா
மோதுடா!
பாருடா பாருடா
Trinco Hindu பாருடா
துணிவிருந்தா
மோது
இல்லை தொடை
நடுங்கி ஓடு
படை பலத்தை பாரு
இங்கு பாயும்
புலி நூறு
எழுந்து ஆடு
விரைந்து
ஓடு
நிமிர்ந்து மோதி
விண்ணைத் தொட்டு
விடு
வலிகள் வாங்கு
விழியில் தாங்கு
வழிகள் தேடி
வேரோடு அறு
திசைகள் பாரு
தெறிக்க ஆடு
அறைந்து மோதி
அச்சம் கொடுத்து
விடு
அடிச்சு ஆடு
ஆறு நாலு
முறைச்சுப்
பாத்தா
மோட்சம் கொடு
சோதனை எல்லாம்...

உண்மை சுடும்
குளிர்வது போலிருக்கும்
ஆனால் சுடும்
மெதுமெதுவாகச் சுடும்
பொய் எனும் தோலினை
உரிக்கும் வரை சுடும்
எத்தனை பட்டைகள்
நீ பொய் சேர்த்து வைத்தாயோ!
அத்தனை கவசங்களையும்
எரிக்கும் வரை சுடும்
சுடமுன் சிரித்த
சிரிப்புபையெல்லாம்
கதறிக் கதறி
அழவைக்கும் வரை சுடும்
சுட முன் நடித்த
நடிப்பையெல்லாம்
பதறப் பதற
துகிலுரிக்கும் வரை சுடும்
உண்மை சுடும்
ஆமையாகவே
நகர்ந்து சுடும்
உண்மை சுடும்
ஊமையாகவே
இருந்து சுடும்
-Bavanantha...

நேற்றைய இரவு கொஞ்சம்
நேரத்துக்கு படுத்திருந்தால்..
ஒவ்வொரு காலையிலும்
அங்கலாய்க்கும் விடயம் இது
சங்கரங்கள் களைக்காமல்
வேக எல்லை குலைக்காமல்
சிகப்புக் கோட்டை முந்துவது
சிரமான காரியந்தான்
கண்களை மூடாமல்
காற்றைக் கிழித்தபடி
சுட்டெரிக்கும் சூரியனை
முகத்தில் சுமந்தபடி
காவல் ஐயாவை
கடந்து ஓடவேண்டும்
வீதி விதிகளை
தெரிந்தே மீறவேண்டும்
ஓவர்டேக் எனும் பெயரில்
எதிர் வீதி கடப்பவனை
முட்டாமல் தவிர்ப்பதற்கு
மூலைக்குள் ஒதுங்கவேண்டும்
அவுடி வைத்திருந்தும்
அமரர்...