தனுஷின் 3 படத்திலில் வெளிவரவிருக்கும் Why this kolaiveri di என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேன், ங்கொய்யால எங்கடா கேக்காம இருக்க விட்டீங்க.. இந்தப் பாட்டைக் கேட்கும் போது பாதத்திலிருந்து கொலைவெறி அப்பிடியே மேலே ஏறி கபாலத்திலிருக்கும் முடியெல்லாம் கத்தி போல் எழுந்து நின்று யாரையாவது குத்திக் கொல்லும் அளவுக்கு கொலைவெறியை தூண்டிவிடுகிறது.
yo boys i am singing song
soup song
flop song
தனுஷின் கரகரப்பான இனிமையான குரலில் அருமையான ஆரம்பிக்கும் பாடலில், பாடல் கேட்பவர்கள் குழம்பிவிடாமல் இருக்க தான் என்ன செய்யப்போகிறேன் என்று தனுஷ் முதலிலேயே கூறிவிடுவது சிறப்பு.
distance la மூணு மூணுமூணு color-u white-uwhite background night-u nigth-unight-u color-u black-u
அதன் பிறகு வரும் இந்த அர்த்தமுள்ள வரிகளைக் கேட்டுக் கேட்டு இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். இந்த சின்ன உருவத்துக்குள் இத்தனை அபாரமான கற்பனையா என்று. அதாவது வரப்போகும் தனது 3 என்ற திரைப்படம் கறுப்பு வெள்ளைப் படம், அதாவது வரலாற்றுக் கதையைச் சொல்லப்போகும் படம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
white skin-u girl-u கேளுகேளு hear-tu black-ueyes-u eyes-u meet-u meet-umy future dark
பக்கத்தில் நின்ற சுருதி ஹாசனின் பெயர் திடீரென மறந்து போனதும் உடனே அதையும் பாடல் வரிகளாக மாற்றி white skin-u girl-u கேளு என்று சமயோசிதமாக செயற்படுவதும் அவருக்கு அது கேட்காமல் போகவே ஆங்கிலத்தில் hear-tu என்று அழைக்கும் லாவகமும் black-u eyes-u என்று கண்ணில் கறுப்பு லென்ஸ் அணிந்திருப்பதால் பாட்டு வரி எழுதின பேப்பர்ல எழுத்து விளங்கல என்று சுருதிஹாசனிடம் சொல்வதும் சிறப்பு.
empty life-uகேளு கம்முlife reverse gear-u
அதன் பிறகு பாட்டுப் பாடும் போது மறுபுறம் கதைத்துக் கொண்டிருந்தவர்களை ஏய் வெத்து வேட்டுகளா, கம்முன்னு கேளுங்க எல்லாரும் இல்லாட்டி பாட்டை reverceல பாடுவேன் என்று பயமுறுத்துவதும் அதன் பின்னர்
this song for soup boys-uwe dont have choice-u
பாடலைக் கேட்டுக் கொண்டுடிருந்த பெண்களை கடுப்பாக்கும் விதமாக boysக்கு மட்டுமே இந்தப் பாட்டு உங்களுக்கில்லை என்று பிம்பிலிக்கி பிலாப்பி காட்டுவதும்
why this kolaveri kolaveri kolaveri diwhy this kolaveri kolaveri kolaveri diwhy this kolaveri kolaveri kolaveri diwhy this kolaveri kolaveri kolaveri di
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் தனுஷை கொலை வெறியுடன் துரத்த தனுஷ் Why this kolaiveri kolaiveri kolaiveri di என்று அதற்கும் பாடிக் கொண்டே எஸ்கேப்பாகி ஓடுவதும் போல பாடலை அமைத்திருப்பது தனுஷ் என்ற on the spot கவிஞரின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
வை திஸ் கொலவெறி???