Related Posts with Thumbnails

எச்சரிக்கை

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:08 AM | 0 பின்னூட்டங்கள்

மெளனத்தின் விளிம்பில் 
தள்ளாடிக் கொண்டிருக்கிறேன் 
எப்பொழுது வேண்டுமானாலும் 
கால் இடறி வீழலாம்! 


எருமையின் பொறுமையை
அதைக் கலைத்தவனிடம் 
கேட்டுப்பாருங்கள்! 


அது தனது முன்னங்காலை தேய்த்து
பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் 
தப்பித்து ஓடிவிடுங்கள்! 


-Bavananthan  | 21/06/2016

#PersonalDiary #LifeLessons

அச்சம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:51 PM | 0 பின்னூட்டங்கள்


அச்சம் அறுத்தெறிந்து
மிச்சம் அழித்தொழித்து
துச்சம் என விரைந்து
தூற முயலும் ஒரு மேகம்


என்னதான் முயன்றாலும்
முடிவில் மிஞ்சும் சிறு எச்சம்
அச்சத்தை மிச்சம் வைத்து
துணிவை துடைத்தெடுத்துச் செல்கிறது!


வீழ்ச்சியின் சூழ்ச்சி தாண்டி
மீழ்ச்சிக்குள் ஏதோவொரு ஈர்ப்பு விசை
இழுத்து விடுமென்ற நம்பிக்கையில்
நகர்கிறது வாழ்க்கை!


-Bavananthan (2016/10/17) 


விருட்சத்தின் உச்சத்தை
தொட்டுவிட்டு

ஓடிவந்து வேர் நுனியை
முத்தமிட்டு

ஒட்சிசன் வாயுக்களோடு
கலந்து பறந்து

புவியீர்ப்பை எதிர்க்கும் சிறகுகளின்
சூத்திரம் அறிந்து

வானவில்லின் அழகியல்
அறிந்து

மழைத்துளிக்குள் சிலநாள்
வசித்து

பெண் மண் இயற்கை
மேடு பள்ளம்
காதல் காமம் அன்பு
புரட்சி தாய்மை

அனைத்தையும்
திகட்டத் திகட்ட ரசிக்கும்
கவிஞர்கள் படைக்கும்
கவிதைகள் தினம்!
-Bavananthan (22/03/2017) 

இனி!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:36 AM | 0 பின்னூட்டங்கள்

வெறுமையின் வறுமையினை
வேரறுத்து வீசிவிட்டு
தனிமையின் தலையணைக்குள்
தலை புதைக்கும் நேரம்

பொறுமையின் உச்சங்கள்
விரக்தியின் எச்சங்கள்
அணைந்த சில சொச்சங்கள்
ஆங்காங்கே மிச்சங்கள்

எதைக் கொண்டு கட்டியும்
ஆறாத காயங்கள்
எனைக் கொண்டு முட்டியும்
சேராத தாயங்கள்

காரணம் தேடியோடி
தவிப்புடன் தோகையாடி
மயில்களும் மேகம் தேடி
மழையதன் மோகம் நாடி

மண் தொட்டு முத்தமிட்டு
முளை தேடி எச்சமிட்டு
தொலைகின்ற எனைத்தேடி
தொடர்கிறது பயணங்கள்!

இனி!
-Bavananthan (20.03.2016) 

காதல் ரோஜா

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:40 AM | 0 பின்னூட்டங்கள்
Photo Courtesy: Kabilan Vairamuthu

" காற்தடம் கூட பதியாமல்
நீ நடந்து சென்றதால்..
கடற்கரை மணலிலும்
ரோஜாக்கள் பூத்திருக்கின்றன.. "
- Bavananthan (2016)

வேட்டை

பதிவிட்டவர் Bavan | நேரம் 7:11 AM | 0 பின்னூட்டங்கள்


தாகம் தான் எடுத்ததோ!
மழை நாடி மலர்ந்ததோ!
இருளுக்குப் பயந்ததோ!
ஒளிதேடி மலர்ந்ததோ!
எவர் கூறி இணைந்ததோ
யார் கூறி பிரிந்ததோ!

உண்மைகள் தெரியாமல்
உலகத்தை உணராமல்
விரித்த வலையினிலே
விரும்பியே விழுந்ததோ!

தேன் திருடன் தன் உடலைக் கண்டதுண்டமாய் வெட்டி வீழ்த்தி
தேனினைக் கவர்ந்து செல்ல
ஏமாந்து போய்ப் பாவம்
கதறித்தான் அழுததோ!
கவலையில் கிடந்ததோ!

தேன் வேட்டைக்காரன் தன்
கால் பட்டு ஒட்டியதோர்
தன் சக ஏமாளியின்
மகரந்தத் துகள் கொண்டு
அதிகமாய் தேன் கொண்டு
மறுபடி மலருமோ! - தேன்
திகட்டிட கொடுக்குமோ!
தேன் திருடனைப் பிடிக்குமோ!
அல்லது...
தான் மறுபடி இறக்குமோ!

-Bavananthan (27/01/2018)

மறுபிறவி கொள்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:50 PM | 0 பின்னூட்டங்கள்



நண்பா! 
போனவை போகட்டும்
விட்டுத் தள்ளு
புதியதாய் மலர்வதாய்
எண்ணிக் கொள்ளு

கால் தொடும் நுரைகளில்
நிலைத்ததேது
தளம்பல்கள் தழும்பல்ல
முட்டித் தள்ளு

மனமெங்கும் உருக்கும்
கனம் கொண்டு அமுக்கும்
கவலைகள் சிதைக்கும்
கதை வந்து புதைக்கும்

காரிருள் கருமையாய்
ஒட்டிக் கொள்ளும்
இடி வீழ்ந்து மனமெல்லாம்
நொருக்கித் தள்ளும்

விதியென்று எண்ணியே
விடச் சொல்லுவார்
சதியென்று சொல்லியும்
தொடச் சொல்லுவார்

நம்பகமானதை
கனவென்னுவாய் - அது
கனவாகிப் போகாதா
என எண்ணுவாய்

வாழ்க்கையோ யாரையும்
நம்பி இல்லை
வாழ்ந்திடக் கிடைத்ததோ
சிறிய எல்லை

ரணங்களை ஆற்றிட
காலம் வேண்டும்
கால் தொட்ட அலை காய
காற்று வேண்டும்

அனுபவம் ஒருவனை
ஆட்டி வைக்கும்
சரி பிழை வழி தடை
காட்டி வைக்கும்

ஆழ்ந்து நீ சிந்தித்து
ஆளுமை கொள்
உன் நிலை அறியாத
மூடரின் முன் - நீ
தொக்கி நிற்பதன்
காரணம் கேள்

வீழ்த்திய களைகளுக்கு
ஆயுள் வரை
தண்டனை அளித்திட
தைரியம் கொள்

உன் அனுபவப் பகிர்வுக்கு
நன்றியைச் சொல் - உனை
தடக்கிய தளம்பலை
மன்னித்து உய்

ஓர்மத்தை மனமெங்கும்
உருக்கி ஊற்று - உன்
இலக்கினை அடைந்திட
பாதை மாற்று
-Bavananthan 

களை

பதிவிட்டவர் Bavan | நேரம் 1:45 PM | 0 பின்னூட்டங்கள்

தாழமுக்கம் தந்த மழை
பருவக் காற்றால் வந்த மழை
சூறாவளி தந்த மழை
மண்வாசனை தந்த மழை

இப்படிப் பல மழை கண்டு
துளிர்த்தன பல மரங்கள்
அதனிடம் அடித்துப் பறிக்க
முளைத்தன சில களைகள்

மழைவிட்ட பின்னர் அங்கே
முளைவிட்ட களைகளை - தன்
கையடங்கும் கத்தியுடன்
கச்சிதமாய் பிடுங்கிடுவார்

முனை வளைந்த வில்லுக் கத்திப்
பிடியதனை அவர் பிடித்து
மண்ணைத் துளாவிக் கொண்டே
களை வேர் பிடித்து அறுத்தெறிவார்

களை பிடுங்கி கந்தையா
வந்து விட்டார் என்று சொன்னால்
தலை தூக்கும் களைகள் எல்லாம்
தரைக்குள்ளே சிரம் புதைக்கும்

"மெனக்கட்டு நீ பிடுங்கியென்ன
நாலு நாளில் வளந்திடுமே
அப்ப நீ என்ன செய்வாய்"
எண்டு நான் அவரைக் கேட்க

இறுக்கமான முகத்துடனே
மெதுவாய் எனைப் பார்த்தார்
புன்னகையாய் இருக்கும் - என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்

"களை பிடுங்கத் தொடங்கி விட்டால்
தொடர்ந்து பிடுங்க வேணும்
எடுத்த எடுப்பில எல்லாம்
ஒழிச்சு அழிக்க ஏலாது

வெட்ட வெட்டத் தளைக்கும் களை
பிடுங்கப் பிடுங்க வளரும் களை
தொடர்ந்து வளர விட்டால்
முட்காடாய் கிழிக்கும் களை
வளர்வது அதன் இயல்பு
அதுவாய் வளர்கிறது
அழிப்பது என் கடமை
அதை நான் செய்கின்றேன்" என்றார்

பாகுபாடு இல்லாமல்
கொட்டித் தீர்க்கும் மேகம் போல
அன்பை அனைவருக்கும்
அள்ளிக் கொடுத்திடுவோம்

சாதி மத பேதக் களை
சகுன மூட நம்பிக்கைக் களை
ஏழை பணக்காரக் களை - இந்தப்
பாகுபாட்டுக் களைகளெல்லாம்
சட்டென்று களைந்தெறிய
பட்டென்று அழியாது

களைகள் வரும் போது
களைந்து எறிந்திடுவோம்
நியாயமான கோபங்களுக்கு
ரெளத்திரத்தை காட்டிடுவோம்

ஏதோ ஒரு புள்ளியில் போய்
முற்றாய் அழியும் வரை
களைகள் களைவதை
இயல்பாய் வளர்த்தெடுப்போம்

அரிய தத்துவத்தை
அழகாய் சொல்லி - எந்தன்
மனக்களைகள் பிடுங்கி விட்டார்
களை பிடுங்கிக் கந்தையா!
-Bavananthan

அந்த ஒரு நாள்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:19 PM | 0 பின்னூட்டங்கள்

அந்த நாளுக்காக
நாம் அனைவரும்
காத்துக்கொண்டிருந்தோம்

அது கறுப்பு சரித்திரத்தில்
எழுதப்பட்ட வெள்ளை வரலாறு
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வழங்கப்படும் ஒரே வாய்ப்பு

மரணத்தின் வாயில் வரை
வரையப்பட்ட அடிமை சாசனத்தில்
விடுதலையை சுவாசிக்கக் கிடைத்த
ஒரேயொரு சந்தர்ப்பம்

பச்சை பச்சையாய் வார்க்கப்பட்ட
வயல் வெளிகள் - அதன்
இடைவெளிகளில் ஊடுருவும்
சூரியக் கதிர்கள்

காக்கையின் கூட்டில்
முட்டையிடக் காத்திருக்கும் குயில்
அந்நிய ஊடுருவலை அறிவிக்க
விடாது கானம் இசைக்கும் அணில்கள்

காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்
தென்னங்கீற்றோடு கீற்றாக
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு
வித்தை காட்டும் கிளிகள்

எறும்புகளின் ஊர்வலம்
சிலந்தியின் கட்டுமானம்
தும்பிகளின் சாகசம்
தேன்சொட்டின் இறகசையும் ஒலி

இயந்திரச் சிறையில்
அடைக்கப்பட்ட மூளைக்கு
சிறகடித்து பிரபஞ்சத்தை
பற்றக் கிடைத்த ஒற்றை வாய்ப்பு

நீரால் அணைத்து அழிக்கப்பட்ட ஞாயிறு
உயிர்த்து நீரை விட்டு இடறி
வெளியேறுவதைக் காணக் கிடைத்த
ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை அது

அதிகாலையிலேயே எழுந்து
அத்தனை சுதந்திர நீரையும்
திகட்டத் திகட்டப் பருக வேண்டுமென நினைத்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தால்

மணி பகல் பன்னிரெண்டைத் தாண்டியொருந்தது...!

விஞ்ஞானத்தின் துணை கொண்டு
காலம் கடக்க வழி செய்வோம்
அதுவரை ஒவ்வொரு நொடிகளையும்
வாழ்ந்து வாழ்ந்து இரசித்திருப்போம்.

-Bavananthan 


ஐயையோ ஐயையோ என்று
ஓடிவந்தார் பெருமான் அங்கிள்
என்னப்பா என்ன என்று
கேட்டு முடிப்பதற்குள்...

ஆயிரம் மத்தளங்கள்
அடம்பிடித்து மிரண்டாற்போல்
அத்தனை பொருட்களையும்
உதைந்தே நொருக்கி விட்டார்

மெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த
டியூப்லைட் இயக்கியையும்
என்னதான் செய்தாரோ
எரிந்து எரிந்து அணைகிறது

ஏனிந்த அவசரம் அங்கிள்
என்னதான் பிரச்சனை என்றேன்
அடேயப்பா அதையேன் கேட்டாய்
என்று எரிந்து கொண்டார்

சொல்லி முடிப்பதற்குள் - உம்
சோலி முடிஞ்சிடுமோ?
விளங்கிற மாதிரிக் கொஞ்சம்
விவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன் 

மைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு
அந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு
அந்தக் குளிருக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்
அந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்

வேர்க்காத ஊருக்குள்ள
வாழுகின்ற நீரெல்லாம்
குளித்தால்தான் என்ன
குளிக்காட்டித்தான் என்ன என்றேன்! 

அடேய் சின்னப் பொடியா
உனக்கு விளங்கியென்ன பயன்
என்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே!
சந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே!

திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்
இடிமுழங்கி முடியவில்லை
மழை கொஞ்சம் ஓய்ந்தாலும்
நீரோடி வடியவில்லை!

எந்த ஏரியாவில் குளித்துக்
கொண்டு இருக்கிறாரோ!
என்னென்ன பொருளெல்லாம் - அங்கே
உடைந்து நொருங்கியதோ!

மத்தளங்கள் இடி முழங்க
சிவபெருமான் குளிக்கிறாராம்
தாத்தா சொன்ன கதை

புனைவு என்று தெரிந்த பின்னும்
நினைவில் நிற்கும் கதை
தாழமுக்கம் இருக்கும் மட்டும்
வாழும் இந்தக் கதை!

-Bavananthan

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்