
காட்டிலே தவம் கொண்டு
காவியில் உடை கொண்டு
ஏட்டிலே பொருள் கண்ட
ஏகாந்தத் துறவி சொன்னான்
பிரிவென்ன சேர்வென்ன
பிறப்பென்ன இறப்பென்ன
ஆதியென்ன அந்தமென்ன
நீயென்ன நானென்ன
கரைகின்ற நொடிகளிலே
பிரிவெல்லாம் ஆசை
விரைகின்ற மரணத்திலே
உறவெல்லாம் மாயை
கண்ணே தெரியாமல்
காதுக் கருவி மாட்டாமல்
கோலூன்றாக் கொடை பெற்ற
ஒரு கைப்பிடி கொள்ளெடுத்த தாத்தன் சொன்னான்
ஆறேழு தலைமுறை
பாத்தவன்டா நான்
ஊரையே உருவாக்கி
விட்டவன்டா நான்
ஊரெல்லாம் உறவெனக்கு
பாரெல்லாம் மகனிருக்கு
வெறிச்சோடிய...